“அய்யோ! இப்போ பி.வி.ஆறுமுகம் க்ளாஸ்டா”
“பேப்பர் கொடுப்பானா?”
“இன்னும் திருத்தி இருக்க மாட்டான். அவன்கிட்ட ட்யூஷன் போற பசங்க பேப்பரை மட்டும் திருத்திட்டானாம்”
“அங்கப்பனுக்கு தொண்ணூத்தி நாலு மார்க்”
“நமக்கு எல்லாம் நாப்பது அம்பதுதாண்டா போடுவான்”
“வவுறன் வந்துட்டான். யாரையாச்சும் கூப்ட்டு மொத்துவான் பாரு”
“வணக்கம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அய்யா”
“ம்ம்..உக்காருங்க”
“நேத்து நடத்துன வெப்பவியல் படிச்சுட்டு வந்தீங்களா? எதாச்சும் சந்தேகம் இருக்கா?”
“சந்தேகமே இல்லைன்னா நான் கேள்வி கேட்பேன்”
“சார் எனக்கு டவுட்”
“என்னடா?”
“சார், எந்தப் பொருளுமே சூடு பண்ணினா இளகித்தானே போகும்? இரும்பு கூட உருகி போகுது. அப்புறம் ஏன் சார் மண்ணுல செய்யற சட்டி பானை மட்டும் சூடு பண்ணினா கெட்டி ஆகுது”
“பக்கதுல வா”
”பசங்களா இங்க கவனிங்க. நடேசனுக்கு ஒரு சந்தேகம். திரும்பி நின்னு பசங்களை பார்த்து சத்தமா கேளு”
“தங்கம் இரும்பு எல்லாம் சூடு பண்ணினா உருகிப் போகுது, மண் சட்டி மட்டும் ஏன் சூடு பண்ணினா இறுகி போகுது?”
“யாருக்காச்சும் பதில் தெரியுமா?”
“………..”
“ட்யூசன் படிக்கிறயா?”
“இல்ல சார்”
“ஆமா சார் படிக்கறான்…பொய் சொல்லுறான்.. அவங்க வீட்டுக்கு பக்கத்துலேயே ஒரு அண்ணன்கிட்ட ட்யூஷனுக்கு போறான் சார்”
”நாயே, பொய் சொல்லுறியா?”
“சார் சார்…காது வலிக்குது சார்…வலிக்குது சார்…வேற பக்கம் ட்யூஷன் போனா நீங்க அடிப்பீங்கன்னுதான் சார் பொய் சொன்னேன்”
“இப்போ மட்டும் அடிக்க மாட்டேனா?”
“வலிக்குது சார்…சார்..கிள்ளாதீங்க சார்”
“வாத்தியாருக்குத் தெரியுதான்னு செக் பண்ணிட்டு வான்னு சொன்னானா உங்க ட்யூஷன் அண்ணன்?”
“இல்ல சார்..நானேதான் கேட்டேன்”
“இனிமே கேட்க மாட்டேன் சார்…விடுங்க சார்…சார்..சார்..சார்”
“என்ன ஆறுமுகம் வீட்டுக்கு கிளம்பாம டீச்சர்ஸ் ரூம்லேயே உக்காந்துட்டு இருக்கீங்க?”
“கிளம்போணும். ஒரு சின்ன சந்தேகம் கந்தசாமி. மண்பாண்டங்கள் ஏன் சூடு செய்யும் போது இறுகிப் போவுது?.”
“எனக்குத் தெரியலைங்க. செக் பண்ணனும்”
“என்ன திடீர்ன்னு சந்தேகம்? பசங்க கேட்டாங்களா?”
“அப்படியெல்லாம் இல்லீங்க கந்து…இன்னைக்கு வண்டியில வரும் போது சந்தேகம் வந்துச்சு”
“நாளைக்கு தேடி பார்க்கிறேன்”
“ஆறுமுகன் கிள்ளுனது வலிக்குதாடா நடேசா?”
“ச்சே ச்சே அதெல்லாம் இல்ல. வவுறன் டிவிஎஸ் 50யோட பெட்ரோல் டேங்க்ல சர்க்கரையை போட்டுட்டேன். இன்னைக்கு சாயந்திரம் அவனுக்குத்தான் கால் வலிக்கும்”
- ஜூலை 2, 2012
தொடர்புடைய சிறுகதைகள்
மூன்று நாள் தாடியோடு அலுவலகம் வந்திருந்த ரங்கநாதனுக்கு அவனது மேலாளர் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. இன்ப அதிர்ச்சிதான். இரண்டு வார காலத்திற்கு ரங்கநாதன் ஃப்ரான்ஸ் போய் வர வேண்டுமாம். கேட்ட வினாடியில் இதயம் உச்சந்தலைக்கும் அடிவயிற்றுக்கும் குத்தாட்டம் போட்டது. அத்தனை குஜால்களுக்கும் ...
மேலும் கதையை படிக்க...
நிகில் இன்று காலையிலிருந்து நிலத்தில் கால்படாமல் திரிந்து கொண்டிருக்கிறான். உங்களுக்கும் எனக்கும் அது சிம்பிள் காரணம்தான் ஆனால் நிகிலுக்கு அது அத்தனை சந்தோஷம் தரக்கூடிய காரணம். வேறொன்றுமில்லை, நிகிலின் மனைவி ஊருக்குப் போகிறாளாம். பதினைந்து நாட்களுக்கு அவள் ஊரில் இருக்கப் போவதில்லை. ...
மேலும் கதையை படிக்க...
அலுவலகத்தை விட்டு கிளம்பும் போதுதான் மின்னஞ்சல் வந்திருந்தது. அடுத்த நாள் காலையில் மேனஜருடன் மீட்டிங். மேனஜருக்கு இது வாடிக்கையாகிவிட்டது. மறுநாள் காலை சரியாக ஒன்பது மணிக்கு மீட்டிங் என்று முந்தின நாள் மாலை ஏழு மணிக்கு மின்னஞ்சலை அனுப்புவார். ஏழு மணிக்கு ...
மேலும் கதையை படிக்க...
ஆலாந்துறை நஞ்சப்பன் படு பிரபலம் ஆகிவிட்டார். தனக்கு பிடிக்கவில்லையெனில் யாரை வேண்டுமானாலும் கொன்றுவிடுவார் என்பது முதற்காரணம். பில்லி சூனியத்தில் அவரை அடிக்க சுற்றுவட்டாரத்தில் ஆள் இல்லை என்பது இரண்டாவது காரணம்.
நாற்பது வயது. நெடு உருவம். கறுத்த தேகம். ரெட்டை மாடு பூட்டப்பட்ட ...
மேலும் கதையை படிக்க...
சொக்கநாதன் என்று பெயர் வைத்ததற்கு பதிலாக தூக்கநாதன் என்று வைத்திருக்கலாம். அரசு அலுவலர்களே கூட அவ்வப்போது வந்து டிப்ஸ் கேட்டுச் செல்லலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு சொக்கநாதன் தூக்கத்தில் நிபுணராக ஆகியிருந்தான். படுத்தால் தூக்கம், படித்தால் தூக்கம் என்றிருந்தால் பிரச்சினையில்லை. நின்று ...
மேலும் கதையை படிக்க...
"பெங்களுர்ல இருந்து நேரா வந்துட்டீங்களா?"
"ஆமாங்க"
"நேரத்திலேயேவா?"
"வந்து ஒரு மணி நேரம் இருக்கும்"
"ம்ம்ம்"
"ரவி அண்ணனோட ஆபிஸ் எங்க இருக்கு?"
"ஈரோடு கலெக்டர் ஆபிஸ்க்குள்ளங்க"
"பி.டபிள்யூ.டியில்தானே இருக்காரு"
"ம்ம்...ட்ராஃப்ட்ஸ்மேன்"
"கோயமுத்தூர்ல இருந்து தினமும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸில் போய்ட்டு வந்துடுவார்ன்னு சொன்னாங்க"
"ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து பைக்ல வீட்டுக்கு வந்துடுவாரு"
"அவிநாசியில் இருந்தாங்களே"
"ஆமாங்க...கோயமுத்தூரில் புது ...
மேலும் கதையை படிக்க...
“ஹலோ”
“சேஷாத்ரி இருக்காருங்களா?”
“ஆமா...பேசறேன்..நீங்க?”
“ஸ்டேஷன்ல இருந்து பேசறோம். உங்க பையன் பாலாஜியை இங்க வெச்சிருக்கோம் வந்து கூட்டிட்டு போங்க”
“எந்த ஸ்டேஷன்? எதுக்கு சார்”
“எஸ்.ஐ நேர்ல பேசணும்ன்னு சொல்லுறாரு வாங்க சார்”
“சார் நாங்க நல்ல ஃபேமிலி”
“அதை இங்க வந்து சொல்லுங்க சார்”
“ஹலோ...சார்...சார்”
***
“என்னங்க ஆச்சு?”
”உம்பையனை போலீஸ் ஸ்டேஷனுக்கு ...
மேலும் கதையை படிக்க...
உங்களுக்கு சில்வியா பிளாத் பற்றித் தெரியுமா? எனக்கு ஷோபனாவைத் தெரியும் வரை சில்வியா பிளாத் தெரியாது. ஷோபனாவை எப்படித் தெரியும் என்பதும் சொல்ல வேண்டிய விஷயம்தான். அருண்ஜவர்லால் எனது முக்கியமான நண்பர்களில் ஒருவர். ஜவகர்லால் இல்லை-ஜவர்லால். என்னோடு வேலூரில் படித்தவர். தற்பொழுது, ...
மேலும் கதையை படிக்க...
தன் வீட்டில் இருக்கும் கழுதை பேசுகிறது என்று சின்னான் சொன்ன போது ஊருக்குள் யாரும் நம்பவில்லை. யார்தான் நம்புவார்கள்? ஆனால் பாருங்கள் கிளி பேசுகிறது மைனா பேசுகிறது என்று சொன்னால் நம்புபவர்கள் கழுதை பேசுகிறது என்பதை நம்பாதது ஆச்சரியம்தான். நம்பிக்கை இழக்காத ...
மேலும் கதையை படிக்க...
ஃபாத்திமா பாபு வாசித்த செய்தி தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த போது தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அசோக்கை வாரியணைத்து எடுத்து வந்தார்கள். அசோக் ஆறாம் வகுப்பு முடித்து ஏழாம் வகுப்பிற்கு போவதற்காக காத்திருந்திருந்தவன். சித்திரை மாதத்தின் ஒரு முன்னிரவில் வீட்டிற்கு முன்பாக மிதிவண்டி ...
மேலும் கதையை படிக்க...
குஜால் தேசத்தில் சிக்கிக் கொண்ட ரங்கநாதன்