கேள்வி-பதில்

 

சிறுகதையை நான் எப்படி அனுப்புவது?

  • முதலில், கதையின் உரிமையை தக்க நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள். அந்த உரிமையை எங்களுக்கு மாற்றி எழுதி தர வேண்டியது இல்லை.
  • சிறுகதைகள் தள செயல்பாடுகள், உரிமைகள், மற்றும் கோட்பாடுகள் அனைத்தையும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.
  • மின்னஞ்சல் வழியாக உங்கள் கதையை அனுப்பவும். மறக்காமல் எழுத்தாளர் பெயர், கதை தலைப்பு மற்றும் தொடர்ப்பு கொள்ள வேண்டிய முகவரி ஆகியவற்றை குறிப்பிடுங்கள்.
  • இதற்கு முன்பு ஏதேனும் புத்தகத்திலோ அல்லது வலைபடிவதிலோ உங்கள் படைப்புகள் பிரசுரிக்கப்பட்டு இருந்தால், அதனை குறிப்பிடவும்.

என்னுடைய கதை பத்திரிகையில் வெளிவந்துள்ளது, ஆனால் என்னிடம் அக்கதையின் போட்டோ/ஸ்கேன் இமேஜ் மட்டுமே உள்ளது?

  • நீங்கள் அந்த போட்டோ/ஸ்கேன் இமேஜ் பைலை எங்களுடைய ஈமெயில் முகவரிக்கு அனுப்புங்கள்.
  • நாங்கள் அந்த படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றிவிடுவோம்.
  • போட்டோ இமேஜ் தெளிவாக வாக்கியங்கள் படிக்க கூடிய வகையில் இருத்தல் வேண்டும்.

சிறுகதைகள் வலைதளத்தின் குறிக்கோள் என்ன?

  • சிறுகதைகளுக்கு மட்டும் ஒருதளத்தை வழங்கவும்.
  • எல்லோரும் படித்து மகிழும்படி உயர்ந்த தரத்துடன் வழங்கவும்.
  • எளிதான தேடுதல் வசதியுடன் வழங்கவும்.
  • பல்வேறு வகையாக தொகுக்கப்பட்டு வாசகர்களுக்கு வழங்கவும்.
  • நிறைய வாசகர்களுக்கு சென்று அடையும் வாய்ப்பை வழங்கவும்.

சிறுகதைகள் வலைதளத்தின் சிறப்புகள் என்ன?

  • எழுத்தாளர்களை பற்றி அறிந்து கொள்ள தனி பகுதி.
  • சிறப்பு கதை பகுதியில் உங்கள் கதை இடம் பெற வாய்ப்பு.
  • சிறந்த வகையில் உங்கள் கதை தொகுப்பதால், நிறைய வாசகரிடம் உங்கள் கதை சென்றடைய வாய்ப்பு.
  • பிரிண்ட் செய்து படிக்கும் வசதி.
  • கதையை வாசகர் விருப்பபடி வரிசை படுத்துதல்.
  • Facebook, Twitter, Telegram, Instagram, Tumblr போன்ற சோஸியல் மீடியா வழியாக வாசகர்களுக்கு சிறுகதையை சேர்ப்பது.
  • செய்திமடல் மூலமாக வாசகர்களை கதைகள் படிக்க வைத்தல்.
  • YouTube வழியாக உங்கள் கதையை ஒலிவடிவத்தில் கேட்கும் வாய்ப்பு.
  • மற்றும் பல..

சிறுகதைகள் தளத்தை ஒரு நாளில் தோராயமாக 1200-1600 வாசகர்கள் பார்வையிடுகிறார்கள்.

சிறுகதைகள் வலைதளத்தை பற்றி விகடன் மற்றும் குங்குமம் இதழ்களில் பாராட்டி எழுதி உள்ளனர்.

புதிய எழுத்தாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா?

  • இந்த வலையின் முக்கிய நோக்கமே புதிய எழுதாளர்களுக்கு தளம் அமைத்து கொடுப்பது தான்.
  • உங்களின் கதை தரத்தை மட்டுமே எங்கள் ஆய்வு குழு மதிப்பிடும். இருந்தாலும், நீங்கள் மற்ற கதை எழுத்தாளர்களுடன் போட்டியட வேண்டி இருக்கும்.
  • அதனால், உங்கள் கதையின் தரத்தை ஒன்றுக்கு இரண்டு முறை ஆய்வு செய்யவும்.

நான் அனுப்பிய கதை சிறுகதைகள் தளத்தில் பிரசுரம் ஆகி உள்ளதா என்பதை அறிவது எப்படி?

  • உங்களுக்கு ஈமெயில் வழியாக தெரிவிக்கப்படும்.
  • கதையை பதிவு பண்ணாமல் இருக்க தள ஆசிரியர்க்கு உரிமை உண்டு.
  • கதையாசிரியர் பகுதில் உங்கள் பெயர் இணைக்கப்படும்.

நான் அனுப்பும் கதையின் தொகுப்பு அவசியம் தானா?

சிறுகதைகள்.காமில் ஒவ்வொரு முறையும் ஒரு எழுத்தாளர் ஒரு கதையை வெளியிடும் போது, ​​அந்தக் கதை வெளியிடப்படும் கதைத்தொகுப்புத் தேர்ந்தெடுக்க வேண்டும். பல கதைகள் பல வகைகளாகப் பொருந்தினாலும், ஆசிரியர் தேர்ந்தெடுக்கும் முதன்மைப் பகுப்பு அதன் முக்கிய கருப்பொருள் அல்லது உள்ளடக்கத்தைப் பிரதிபலிக்க வேண்டும். ஒவ்வொரு கதைக்கான தொகுப்பும் கதையாசிரியரின் பெயருடன் காட்டப்படும். நீங்கள் அனுப்பாத பட்சத்தில் நாங்களே அதனை தேர்வு செய்ய வேண்டி இருக்கும்.

ஒரு கதை தவறான தொகுப்பில் இருந்தால் என்ன செய்வது?

நீங்கள் படித்த ஒரு கதை தவறான பிரிவில் இருப்பதாக நீங்கள் நம்பினால், எங்களுடைய ஈமெயில் முகவரிக்கு தெரியப்படுத்தவும். எல்லா அறிக்கைகளையும் நாங்கள் மதிப்பாய்வு செய்கிறோம், ஆனால் வேறு வகைக்கு எந்த உள்ளடக்கம் கதையை மிகவும் பொருத்தமானதாக மாற்றுகிறது என்பது குறித்த குறிப்பிட்ட விரிவான தகவலுடன் கூடிய அறிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கதை எத்தனை வாக்கியத்துடன் இருக்க வேண்டும்?

  • இத்தளம் சிறுகதைகளுக்கு மட்டுமே.
  • எந்த ஒரு விதிமுறை இல்லை, ஆசிரியரின் கற்பனைக்கு உட்பட்டது.

வலைபதிவில் கதையை பிரசுரிப்பதால் எழுத்தாளரின் உரிமை பாதுகாக்கப்படுமா?

  • எழுத்தாளர்கள் முறைப்படி உரிமையை பதிவு செய்து இருந்தால், எந்த ஒரு பிரச்சனையும் எழாது.
  • இத்தளம் அத்தகைய பாதுகாப்பை தர இயலாது.
  • நீங்கள் ஒரு வக்கீலை பார்த்து பேசுவது நல்லது.

ஏதேனும் சந்தேகம் இருந்தால் யாரை தொடர்ப்பு கொள்வது?

  • கேள்வி, பதில் மற்றும் பிற பகுதிகளை நன்றாக படித்து விட்டு, இன்னும் சந்தேகம் இருந்தால், எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
  • எங்களுடைய மின்னஞ்சல் முகவரி: sirukathaigal@outlook.com.