முக்கியமான கூட்டத்தில் கலந்து கொள்ளவும்.
நம்மை அழிக்க திட்டம் போடுகிறார்கள். அதை கிள்ளியெறிய வேண்டும். ஆலோசனைகள் அள்ளி வழங்க தவறாமல் வரவும்.
பிட் நோட்டிஸ் விநியோகிக்கப்பட்டது.
கூட்டம் நடத்தும் அரங்கில் நாற்காலிகள் போடப்பட்டிருந்த து. தலைமை விருந்தினராக “டெங்கு மன்ன ன்64-ஆம் கொசு” கம்பீரமாக மூக்கை முன்னால் துருத்தி கொண்டு அமர்ந்திருக்கிறார்.
“உறிம், ஆலோசனைகளை அள்ளி வழங்குக” என்று ஆணை பிறப்பிக்கிறார்.
“இதுதான் நமக்கு சரியான காலம், மழைக்காலத்தில்தான் நம்மினத்தைப் பெருக்கி கொள்ள முடியும், சந்தர்ப்பத்தை வீணாக்கி விட கூடாது. எனவே நாம் எல்லோரும், மழைப்பெருகி வெள்ளமாக வர வேண்டும். அப்படி வந்தால்தான், அங்காங்கே தேங்கி நிற்கும் வாய்ப்புள்ளதால், இனப்பெருக்கத்திற்கு ஆதரவாய் இருக்கும்” என்றது.
இரண்டாவது எழுந்த அது ” மழைப் பெருகினால் மட்டும் போதாது, அங்காங்கே குண்டும் குழியுமாக இருந்தால்தான், அதில் தண்ணீர் தேங்க வாய்ப்பு ஏற்படும். ஆகையால், தொலைபேசி ஊழியர்கள், மின்சார ஊழியர்கள், கேபிள் புதைப்பவர்களுக்கு ஆதரவாக அவர்களை கடிக்காமல், மற்றவரை கடிக்கலாம், இரத்த த்தைக் குடிக்கலாம் “ என்றது.
மூன்றாவது எழுந்த அது ” இப்போதுள்ள சூழ்நிலையில் யாரும் நம்மைக் கண்டு கொள்ள மாட்டார்கள். ஒரு பக்கம் அரசியல் பிரச்சினை, வியாபாரிகளுக்கோ ஜி.எஸ்.டி பிரச்சினை, இல்லத்தரசிகளுக்கோ, டி.வி சீரியல் பிரச்சினை, சினிமா கார ர்களுக்கு “மெர்சலான“ மிரட்டல் பிரச்சினை, ஆண்களுக்கு எல்லாமே பிரச்சினை, ஆதலால் நம்மை பெருக்கி கொள்ள, ”நம்மை ..நாமே” முன்னிறுத்தி முன்னேறுவோம், “வாழ்க கொசு ராஜ்யம்” என்று கோஷமிட்டு அமர்ந்தது.
இப்படி ஒவ்வொன்றாய் கருத்து கூற, கடைசியில் ஒரு கொசு எழுந்திருக்க முடியாமல் தள்ளாடியவாறே… மயக்க நிலையில்… “என்ன நியாயமிது, மண்ணென்னெய் தட்டுப்பாடு இருக்கும் போது அதை மருந்தில் கலந்து என் மீது அடிக்கிறார்கள். ஆதலால் என் மீது மண்ணென்னை தெளித்தவர்கள் மீது கொ.ஆ.பரிபாலன சட்டத்தின்படி அவர்களிடமிருந்து விளக்கம் பெற நோட்டிஸ் அனுப்ப வேண்டும் என்றது.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த “டெங்கு மன்ன்ன் 64-ம் கொசு“ “பலே, நீங்கள் தான் என் தளபதிகள், நம் ராஜ்யம் வளரட்டும், நமது எல்லைகளை பெருக்கி, நம் சந்ததியரை பெருக்குவோம். என்று வீரமுழக்கப்பட்ட போது… “மாநகராட்சியின் “டெங்கு ஒழிப்பு“ வாகனத்தின் மருந்து புகை அந்த அரங்கில் உள்ளே புகுந்த தில்…….“டெங்கு மன்ன்ன் 64-ஆம் கொசு” மயக்கமுற்றது.
மண்ணென்னெய்க்கு மயக்கமான” கொசுவார்” தெளிவாகி அரங்கத்தை விட்டு பறந்து….. மாநகராட்சி வாகன ஓட்டுநரின் இருக்கைக்கு கீழே சாம்ராஜ்யத்தை துவங்கியது. இனிமேல் அதுதான் “டெங்கு மன்னன் 65-ம் கொசு” என்று தன்னை அறிவித்து கொண்டது.
தொடர்புடைய சிறுகதைகள்
இராகவனுக்கு…அந்த போர்ஷனைக் காலி செய்வதற்கு.மனசே ஒப்பவில்லை. ஆனால், வீட்டின் உரிமையாளர், “வெளிநாட்டிலிருந்து அவர் பையன் வருவதாகவும், அவனுக்கு அந்த போர்ஷனை ஒதுக்கி தரப்போவதாகவும்” சொன்னார்.
ஆனால், அதில் உண்மை துளியுமில்லை, காரணம் மாடியிலேயே வசதியாக நான்கைந்து அறைகள் விசாலமாக இருக்கின்றன. தம்மை காலி ...
மேலும் கதையை படிக்க...
“எங்க குடும்பம் ரொம்ப பெரிசுங்க நான் “அவளை” இருபத்து நாலுமணி நேரமும் தொட்டுக்கிட்டே இருக்கணும் நினைக்கிறேன், ஆனா அவ படுத்துற பாடு இருக்கே, ஆதாங்க என்னால தாங்க முடியல!
“நான் அவளைத் தொடும் அடுத்த நொடியில்… என்னிடமிருந்து விலகி ஓடிறாள்“
இருங்க அவள் பேரைச் ...
மேலும் கதையை படிக்க...
”புளியமரத்துக்கிட்டா போனா, ஆவி புடிச்சிக்கும்-ன்னு” சின்ன வயசில அம்மா சொன்னது அப்படியே மனசுல ஆழமா பதிஞ்சதல, புளியமர பக்கமே போக்கூடாது-ன்னு வைராக்கியமாய் இருந்த புண்ணியகோட்டிக்கு வந்த து சோதனை!
”பேய் காற்றுடன், பேய் மழையும் சுழற்றியடிக்க அவனின் வைராக்கியம் மழையில் கரைந்து வேறுவழியில்லாமல் ...
மேலும் கதையை படிக்க...
தொழிலதிபர் சிவக்கொழுந்துவுக்கு போன் கால்கள் வந்தவண்ணம் இருந்தன. நாட்டின் சிறந்த தொழிலதிபர் விருது அவருக்கு அறிவிக்கப்பட்டிரந்த்து. நான்கு பேரோடு ஆரம்பித்த கம்பெனி….இன்று நாடெங்கும் ஏராளமான கிளைகள். பாக்கி இல்லாமல், ஏமாற்றாமல் வரி செலுத்துவதில் இவருடைய நிறுவனம் நம்பர் ஒன்னாக இருந்து வருகிறது.
பரிசு ...
மேலும் கதையை படிக்க...
கதை கேளுங்கள்: பொறுப்பு
சரியாய் ஆறுமணிக்கு வந்தவிடுவதாக பொறுப்பாய் சொன்ன ஜோஸ்வா, இன்னமும் வரவில்லை! இன்று அவனது காதலுக்கு பச்சைக்கொடி காட்டுவதாக ஜாடையாய்க் கூறியும் அவன் வராத்து, அவன்மீது நம்பிக்கை இழக்கச் செய்ததுடன், பொறப்பில்லாதவன் எனவும் நினைக்க வேண்டியதாயிற்று ஜானுவிற்கு.
மணி ஏழாகிவிட்டிருந்த்து. ஒரு ...
மேலும் கதையை படிக்க...
“கொஞ்சம் தடுமாறித்தான் போனான் கனேஷ்.. அவனுடைய சர்வீஸில் இதுவரை திக்குமுக்காடியதில்லை. ஆனால் இன்றோ…” தலையைப் பிய்த்துக் கொள்வது போல இருந்தது அவனுக்கு.
பிரபல தொழிலதிபர் மரணம்தான் அவனை அலைக்கழித்தது. தொழிலதிபர் மரணத்துக்கும்…இவனுக்கும் என்ன தொடர்பு.. ”யாரோ கேட்பது புரிகிறது. கனேஷ் பிரபல துப்பறியும் ...
மேலும் கதையை படிக்க...
“அந்த தெரு கடைக்கோடியில் உள்ள ஒரு குட்டிச்சுவரில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள் பதின்மவயது பையன்கள். அந்த ஆறு பேர்களில் முத்துமாணிக்கமும் இருந்தான்.
“இன்னைக்கு மழை வரமாதிரி இருக்குடா” என்றான்
“மழை வராதுடா….இது பாலுவின் பதில்… அந்த கூட்டத்தில் இருவருமே எதிரெதினாவர்கள். முத்துமாணிக்கம் பாசீட்டீவ்வா ...
மேலும் கதையை படிக்க...
என்னடா, ”ஒன் முகம் இப்படி ஜொலிக்கிறதே” என கேட்டான் ஆனந்தன். ”டேய் ஸ்மார்ட் போன் ரூபாய் இருநூற்று ஐம்பதுக்கு வந்துவிட்டதே, அதான், இவ்வளவு சந்தோஷம். நம்மள மாதிரி நடுத்தர மக்களுக்கு நல்லதுதானே” என்றான் சந்தோஷ்.
அடப்போடா, ”நீயும். ஒன் ஸ்மார்ட் போனும்” என ...
மேலும் கதையை படிக்க...
சங்கரன் முகம் மகிழ்ச்சியில் திளைத்தது. அதைவிட குட்டிப்பொண்ணு சர்மிளா முகமோ அதைவிட பிரகாசமாய் இருந்தது. அவருக்கு சரி. சர்மிளாவுக்கு என்ன?மீனுவுக்கு முகத்தில் பயம் ஒட்டிக் கொண்டது.காரணம், மாமியாருக்கு... மாமியார் வருவதாய் தகவல்மாமியாரே குடைச்சல்., இதில் மாமியாருக்கு மாமியாரா, ஐயோ வேண்டவே வேண்டாம் ...
மேலும் கதையை படிக்க...
“உஷாரய்யா….உஷாரு” என்னைய காட்டிக் கொடுத்திட மாட்டியே” அலைபேசியில் கெஞ்சுகிற குரலில் மன்றாடிக் கொண்டிருந்தார்.
”தலைவரே!, கவலைப்படாதீங்க, என் உசிரே போனாலும், ஒங்களைக் காட்டிக் கொடுத்திட மாட்டேன்”
“ ரொம்பவும் நன்றி தம்பி! அப்புறம் நான் கொடுத்து வைச்ச அத்தனை மூட்டையும் மாத்தியாச்சா! பத்திரமா இருக்கா” ...
மேலும் கதையை படிக்க...
20 ரூபா மொபைலும் 200 ரூபா தண்ணீரும்!
டெங்கு மன்னன் 64-ம் கொசு ராஜ்யம் கதையினை தளத்தில் பதிவிட்டு ஊக்கப்படுத்துவதற்கு மிக்க நன்றி. இளம் எழுத்தாளர்கள் தங்களை மெருகேற்றி கொள்ள உதவும் அருமையான தளமாக இருப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்