ஒரு துளி விஷம் போதுமடி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 5,684 
 

இனியும் பொறுக்க முடியாது. என்னை மன்னித்துவிடு சந்தியா.

இனியும் உன் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்க முடியாது.

என் சூழ்நிலை தெரிந்தும் ஏன் உன்னால் எனக்காக இறங்கி வர முடியவில்லை?

இத்தனை நாட்கள் உனக்காக விட்டு வைத்த உயிர் இன்று பிரிய போகிறது.

நீ அழுவாய் என்று தெரியும். நீ துடிதுடிப்பாய் என்றும் தெரியும்.

ஆனால் என்னால் முடியாது. முடியவே முடியாது சந்தியா.

இதோ என் கைகளில் இருக்கிறது விஷ பாட்டில்.

விஷத்தின் கசப்பு தெரியாமலிருக்க நேற்று நீ செய்த இனிப்புடன் கலக்கிறேன்.

விஷம் கலந்த இனிப்பை படுக்கை அறையின் கட்டிலுக்கடியில் வைத்துவிட்டேன்.
இன்றுடன் முடிந்தது அந்த சுண்டெலியின் கதை.

இத்துடன் முடிந்தது இக்கதை!

– Thursday, February 7, 2008

Print Friendly, PDF & Email

யார் முதல்வன்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

தவிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)