சிங்கை மா.இளங்கண்ணன்

 

1938இல் சிங்கப்பூரில் பிறந்தார். இவருடைய  தாயார் சிங்கப்பூரில் பிறந்தவர். தந்தை தமிழ் நாட்டில் பிறந்தவர். கலைமகள் தொடக்கப் பள்ளியில் கல்வியைத் தொடங்கிய இவர் இண்டர்மீடியட் வரை படித்தார். பின்னர் தகவல் கலை அமைச்சில் தமிழ்ச் தட்டச்சராக அரசுப் பணியில் சேர்ந்து 30 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஓய்வு பெற்றார்.

இவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் பாலகிருட்டிணன். பரிதிமாற்கலைஞர்     (சூரியநாராயண சாஸ்திரி) மறைமலையடிகளைப் பின்பற்றி இளங்கண்ணன் என்று பெயரை தமிழ்ப் படுத்தி கதை கட்டுரைகள் எழுதினார்.

தாய் தந்தையர் மாயாண்டியம்பலம், பொன்னம்மாள், தநதை வழி பாட்டன் பாட்டி ஆறுமுகம், கருப்பாயி, தாய் வழிப் பாட்டி, பாட்டன் நாகம்மாள் முத்தையா ஆகியோர் இவருக்கு இலக்கிய அறிவை ஊட்டியவர்கள்.

1967ஆம் ஆண்டு எழுதத் தொடங்கிய இவரின் முதல் படைப்பான தீவிலி எனும் சிறுகதை தமிழ் முரசில் வெளியானது. அதனைத் தொடர்ந்து சிறுகதை, நாவல் ஆகிய துறைகளில் கவனம் செலுத்தி நூற்றுக்கணக்கான சிறுகதைகளை எழுதியுள்ளார்.

பெற்ற பரிசுகள் / விருதுகள்

  • 1982-தென் கிழக்கு ஆசிய எழுத்தாளர்கள் விருது
  • 1999 – தமிழவேள் விருது
  • 2004 – சிங்கப்பூர் இலக்கிய பரிசு.
  • 2005 – அரசாங்கத்தின் கலாசார விருது
  • 2013 – கரிகாலன் விருது

எழுதி வெளியிட்டுள்ள நூல்கள்:

  1. குருவிக் கோட்டம் – 2011
  2. பொருத்தம், கன்னிகாதானம், எங்கே போய்விடும் காலம்? – 2006
  3. சிங்கை மா இளங்கண்ணனின் சிறுகதைகள்  1, 2 – 2006
  4. சுற்றிப்பார்க்க வந்தவர் – 2004
  5. கண்ணில் தெரியுது வானம் – 2004
  6. இலட்சியங்களின் ஊனங்கள் – 2001
  7. தூண்டில் மீன் – 2001
  8. நினைவுகளின் கோலங்கள் – 1999
  9. உணர்வின் முடிச்சுகள் – 1993
  10. வைகறை பூக்கள் – 1990
  11. கோடுகள் ஓவியங்கள் ஆகின்றன – 1978
  12. சிங்கப்பூர் இலக்கியகளம் சிறுகதைகள் – 1977
  13. குங்குமக் கன்னத்தில் – 1977
  14. அலைகள் – 1976
  15. வழி பிறந்தது – 1975

அமைப்புகளில் வகித்த / வகிக்கும் பொறுப்புகள்:

இவர் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *