“ஏம்மா, கூடையிலே என்ன?”
“கத்திரிக்காய்! நீ வாங்கமாட்டே.”
“ஏன் நான் வாங்கமாட்டேன்?”
“விசை ஒரு ரூபா சொன்னால் நாலணாவுக்குக் கேட்பியே மகராஜி.”
“பின்னே நீ கேட்டபடியே கொடுத்துடக் கொட்டியா வைத்திருக்கிறது இங்கே? விலையைச் சொல்லு.”"
“அதான் சொன்னேனே?”
“கூடையை இறக்கு முன்னே? பிஞ்சோ முத்தலோ? நல்ல இளசாக இருக்குமா?”
“எவ்வளவு வேணும்?”
“எனக்கு ஒரு ரெண்டு விசை வேணும். அதைப் பற்றி என்ன?”
“அப்புறம் நீ வம்பு பண்ணுவே, பத்து பலம் போதும்னு.”
“அட! நான் வாங்குகிறேனா இல்லையா பாரேன். கூடையை இறக்கு கீழே.”
“கூடையை இறக்குவதிருக்கட்டும். விலையைக் கேளுங்க முன்னே.”
“இதோ பார். இன்னைக்கு வெட்டியாப் பேசிப் பேரம் பண்ணப் போவதில்லை. பருப்பைக்கூடக் கொதிக்கப் போட்டுவிட்டேன். நீயாக நியாயமாக ஒரு விலையைச் கொடுத்துவிடு. உன் வயத்திலே நான் அடிக்கவில்லை.”
“துட்டு இன்னிக்கே கொடுத்டுவாயில்லையா?”
“அடப் பெரிய மகாத் துட்டு? உன் கிட்டே எத்தனை தடவை கடன் சொல்லியிருக்கிறேன்?”
“அதில்லம்மா, பத்து ரூபா நோட்டு ஒண்ணை வச்சிட்டுக் காட்டிக்கிட்டேயிருப்பியே மாசக் கணக்காக?”
“அந்த இடக்குப் பேச்செல்லாம் பேசாதே. நான் கெட்ட கோபக்காரி. ஆமாம் நல்ல தராசுதானே வெச்சிருக்கே?”
“அதெல்லாம் ஞாயமாயிருக்கும். விலையைச் சொல்லுங்க நேரமாவுது.”
“அட, எனக்கு மட்டும் ஆகலியா நேரம்? காயைப் பார்த்தில்லே விலையைக் கேக்கணும்? அதென்ன அது உன் கழுத்திலே புதுப் பாஷன்லே என்னவோ போட்டிட்டிருக்கே?”
“அதுங்களா? அது என் வீட்டுக்காரரு செய்துபோட்டது?”
“இவ்வளவு நல்லா இருக்கிறதே வேலைப்பாடு. தங்கம்தானே?”
“அதென்ன அப்படிக் கேட்டுட்டேயே அம்மா? பாடுபட்டு ஒழைச்சிச் சம்பாதித்ததில பண்ணிப் போட்டுகிட்டுது அம்மா. அசலுத் தங்கம்? மூணரைப் பவுன் ஆச்சே?”
“கோவுச்சுக்காதே. கஷ்டப்பட்டு நீ ஏமாந்து விட்டாயோ என்று கேட்டேன். நேரே சொல்லிப் பண்ணினாயா? இல்லே கடையிலே ‘ரெடிமேடா’ வாங்கினாயா? கூலி எவ்வளவு தந்தே? பார்க்க வெகு லட்சணமாக இருக்கிறதே.”
“கடையிலே ரெடிமேடாகத்தான் வாங்கியாந்தார்.”
கடைபேர்கூட அப்போ போட்டிருக்குமே? எங்கே கொஞ்சம் கழட்டேன்தான் பார்ப்போம். நான்கூட இந்தப் பேஷன்லே ஒன்று செய்து கொள்ளணும்ணு ஆசையாயிருக்கிறது. கடை பேரு என்ன சொன்னே?
“என்னவோ சொன்னாரு?”
“கழட்டேன் பார்ப்போம்.”
(காய்கறிக்காரி, கூடையைத் தலையிலிருந்து கீழே இறக்கி வைத்துவிட்டுக் கழுத்திலிருந்த சங்கிலியைக் கழட்டி எடுத்து நீட்டுகிறாள்.)
“சரி, சரி. கூடையைத் தூக்கு! இது என்ன ஒரே சொத்தலும் பூச்சியுமாக இருக்கிறதே? நீ வீசை நாலணாவுக்குக் கொடுத்தால்கூட நான் வாங்கத் தயாராக இல்லை. இந்தக் காயைத் தலைமேல் வைத்துக்கொண்டுதான் கீழே இறக்க மாட்டேன் விலை பேசாமல் என்றாயா? நாளைக்கு நல்ல காயாகக் கொண்டுவா, ஒரு வீசை வாங்கிக்கொள்கிறேன்.”
(கதவைச் சாத்துகிறாள் எஜமானியம்மாள்.)
தொடர்புடைய சிறுகதைகள்
இப்போதெலலாம் கல்யாண வீடுகளுக்குப் போனால் முன் மாதிரி 'பந்திக்கு முந்திக்கோ' என்று அநாகரிகமாக விழுந்தடித்தவாறு ஒருத்தர்மேல ஒருத்தர் இடித்துக் கொண்டு, மியூஸிகல் சேரில் இடம் பிடிப்பதுபோல் டைனிங் ஹாலில் காலி நாற்காலியை நோக்கிப் பாயவேண்டிய அவசியமே இல்லை. முதலில் சாப்பிட்ட எச்சில் ...
மேலும் கதையை படிக்க...
அப்புசாமி பாத்ரூம் விளக்கை மறந்துபோய் அணைக்காமல் வந்து விட்டார். மனைவி சீதே கோபமாக பாத்ரூம் பல்பை கழற்றிவிட்டாள். மறுதினம் அப்புசாமி தெரு வாசலில் குளிக்கத் தொடங்கினார். காரணம் கேட்டவர்களுக்கு, ''அவளால் சூரியனைக் கழற்றி எறிய முடியாதே'' என்றார்.
====================
ஓட்டலுக்குச் சென்ற அப்புசாமி வெயிட்டரைக் ...
மேலும் கதையை படிக்க...
அப்புசாமிக்கு அவசரமாக மூன்று கூடை அழுகல் தக்காளியும், இரண்டு கூடை அழுகல் முட்டையும், ஒரு கூடை காது அறுந்த செருப்புகளும் தேவைப்பட்டன.
மாம்பலத்தின் கசகச காய் மார்க்கெட்டில் தக்காளி செல்வரங்கத்தின் ஹோல்ஸேல் தக்காளி மண்டியில் பேரம் செய்து கொண்டிருந்தார்.
"நல்லா அழுகியிருக்கணும் கூடைக்கு அஞ்சு, ...
மேலும் கதையை படிக்க...
பக்கத்து வீட்டில் ஒரு புரொபசர் இருந்தார். புரொபசர்னா புரொபசரே அல்ல; அசிஸ்டென்ட் லெக்சரர் & ஒரு தனியார் கல்லூரியில்! சென்னையிலிருந்து ரெண்டு பஸ் பிடித்து, ரெண்டு மணி நேரம் பிரயாணம் செய்தால், அவரோட காலேஜ் இருக்கிற கிராமம் தெரியும். அப்புறம் பொடி ...
மேலும் கதையை படிக்க...
டிகாக்ஷன் போடுவது அப்படி ஒன்றும் பெரியதொரு காரியமல்ல என்று நினைத்துக் கொண்டிருந்தேன் - அந்தச் சந்தர்ப்பம் வரும் வரையில்.
மனைவி பாத்ரூமில் வழுக்கி விழுந்து கணுக்காலில் லேசான (அவள் பாஷையில் பயங்கரமான) வலி. வெறும் ஸ்டெரெய்ன்தான் - இரண்டு நாள் ரெஸ்ட்டாக ...
மேலும் கதையை படிக்க...
யார் வேண்டுமானாலும் விழலாம். நான்கூட சமீபத்தில் விழுந்தேன். பூமிக்கு ஆகர்ஷண சக்தி அதாவது ஈர்ப்பு சக்தி உள்ளவரை விழுவதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் - நமக்கு அந்தப் பாக்கியம் கிடைக்குமோ கிடைக்காதோ என்று அவசரம் வேண்டாம். முந்துதல் வேண்டாம். அவரவர் ...
மேலும் கதையை படிக்க...
அப்புசாமிக்கு அபூர்வமாகத்தான் டெலிபோன் கால் வரும் அந்த அபூர்வத்தையும் சீதாப்பாட்டி அவரிடம் சொல்ல மறந்து விடுவாள்.
இரண்டு நாள் கழித்துச் சாவகாசமாக, 'உங்களை யாரோ டெலிபோனிலே டே பி·போர் யெஸ்டர் டே கூப்பிட்டாங்க. சொல்ல மறந்து விட்டேன்,' என்று மேட்டர் ஆ·ப் ·பேக்டாகச் ...
மேலும் கதையை படிக்க...
கீழ் வானில் பெளர்ணமி சந்திரன் சோளா பட்டூரா மாதிரிப் பெரிசாகக் காட்சி தந்தது. நட்சத்திரங்களே சென்னா, நீலவானமே அவைகளை ஏந்தும் பிளேட். அழுக்கு மேகமே லாலா கடை சப்ளையர், ஆனால் அப்புசாமி காளிதாச மனோநிலையில் இல்லாததால் சந்திரனை ரசிக்காமல் மொட்டை மாடியிலிருந்து ...
மேலும் கதையை படிக்க...
ஒரு மாபெரும் பொறுப்பை சீதாப்பாட்டி அப்புசாமியிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக உள்ளே படுத்திருந்தாள்.
ஆடி மாசம் என்றாலே சீதாப்பாட்டிக்கு ஓர் அலர்ஜி. விடியற்காலையிலே ஒலிபெருக்கி மூலம் எல்.ஆர்.ஈஸ்வரி, வீரமணி, வீரமணி ஜூனியர், மகாநதி ஷோபனா, மீரா கிருஷ்ணா, தேவி போன்றவர்களின் பக்திப்பாடல்கள் 'ரொய்ங்ங்ங் ' ...
மேலும் கதையை படிக்க...
அப்புசாமி கோபாவேசமாகக் கத்தினார்: "சரிதான் போடா! பெரிய சந்தன வீரப்பன் இவுரு! உன் மாட்டை அவுத்து விட்டுடுறேன் பார். அப்பத்தாண்டா உனக்கு புத்தி வரும்."
பால்கார நாதமுனி, மாட்டுக்கு 'சத்தக்' என்று ஊசி போட்டான்.
பால்காரர்கள் இரண்டு வகை. பருத்திக் கொட்டை வைத்துச் சில ...
மேலும் கதையை படிக்க...
அப்புசாமி குட்டிக் கதைகள்
அப்புசாமியும் அழகிப் போட்டியும்
புரொபசர் சகல சந்தேக நிவாரணி!
விழுந்தபின் மனமே, விசனம் கொள்ளாதே..
ஒரு ராதையும் ஒரு ராவணனும் அப்புசாமியும்.
சீதாப்பாட்டி விட்ட சவால்!