எங்கள் வீட்டிற்கு நேர் பின் பக்கத்து வீட்டுப் பொன்னம்மாவுக்கு நிறைய சிநேகிதிகள். காலையில் இருந்து அவர்கள் வீட்டில் யாராவது வந்து விசாரித்துக் கொண்டே இருந்தார்கள்.
“ எப்ப பிரவம் ஆச்சு?…”
“ இன்று காலையில் தான்!…”
“ ஆச்சரியமா இருக்கே…. ஒரே பிரசவத்தில் மூன்றா?…..”
“ ஆமாம்! தேவி….எல்லாம் சுகப் பிரசவம்….மூன்றும் நல்லா இருக்கு!..”
“எத்தனை ஆண்?..எத்தனை பெண்?…”
“இரண்டு ஆண்!…ஒரு பெண்!…”
“ கொஞ்ச நாளைக்கு நிறைய பால் கொடுங்க!..”
“நீங்க சொல்லனுமா அக்கா!………….தேவையான அளவு கொடுத்துக் கொண்டுதானிருக்கிறேன்!…”
“ நிம்மிக்கு ஒரே பிரசவத்தில் மூன்று…..அதுவும் சுகப் பிரசவம் என்று கேட்கும் பொழுது ரொம்ப சந்தோஷமா இருக்கு!…”
“இதென்ன தேவி அதிசயம்?….எங்க பெரியப்பா வீட்டு ‘அம்மு’வுக்கு ஒரே பிரசவத்தில் ஐந்தாக்கும்!..”
அந்த நேரம் பார்த்து ‘வள்..வள்’ ‘கீச்…கீச்’ என்று சத்தம் வந்தது!
அப்பொழுது தான் பொன்னம்மா வீட்டு நாயை அவர்கள் ‘நிம்மி’ என்று கூப்பிடுவது என் நினைவுக்கு வந்தது!
- மார்ச் 2015
தொடர்புடைய சிறுகதைகள்
அரசு ஆய்வுக் கூடம் ஒன்றில் உயர் அதிகாரி சத்திய சீலன். அவர் மனைவி சித்ரலேகா ஒரு கல்லூரி பேராசிரியை. அவர்களுடைய ஒரே மகள் ஐஸ்வரியாவுக்கு பத்து வயசுதான் ஆகிறது. சுட்டிப் பெண். நினைத்ததை ‘பட்’ டென்று கேட்டு விடும் சுபாவம் அவளுடையது!
அவளுக்கு ...
மேலும் கதையை படிக்க...
பிரபல வாரப் பத்திரிகையின் நிருபர், காவல் துறை தேடிக் கொண்டிருந்த மோசடிக் கம்பெனி விளம்பரங்களில் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும்படி பல டி.வி. விளம்பரங்களில் நடித்த அந்த நடிகையிடம் பேட்டி எடுத்தார்.
“ மேடம்!...கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாயை பொது மக்களிடம் ஏமாற்றி மோசடி ...
மேலும் கதையை படிக்க...
சூலூர் சுகுமாரனுக்கு சினிமா என்றால் உயிர்! அவனுக்கு நிறைய சினிமாச் செய்திகள் தெரியும் பிலிம் நியூஸ் ஆனந்தனைப் போல!
எதைப் பற்றி பேசினாலும், அதை சினிமாவோடு தொடர்பு படுத்தித் தான் பேசுவான்.
நடிகர் சிவக்குமார், சூர்யா, கார்த்தி, டைரக்டர் மணிவண்ணன் எல்லோருமே இந்த சூலூர் ...
மேலும் கதையை படிக்க...
விஷ்ணு காந்த் சிங்கத்தின் வாயை கைளால் பிளப்பது போன்ற பதினாறு அடி கட் அவுட்டுகள் நாற்சந்தி, முச்சந்தியில் நின்று நாட்டு மக்கள் அனைவரையும் ஆவலோடு எதிர் பார்க்க வைத்த படம் ‘அடலேறு!’ அதன் ஹீரோ விஷ்ணு காந்தே தயாரிப்பாளரும் கூட.
விஷ்னு காந்த்க்காக ...
மேலும் கதையை படிக்க...
“ இன்னைக்கு....ஞாயிற்றுக் கிழமை….சரியா ஒன்பது மணிக்கு நீங்களும், உங்க அருமைப் பொண்ணும் டைனிங் டேபிளில் வந்து உட்கார்ந்திடுவீங்க!...நான் அதற்குள் சிக்கன் குழம்பு, வறுவல், இட்லி, தோசை எல்லாம் தயார் செய்ய வேண்டாமா?...சீக்கிரமா போய் ‘லெக் பீஸா’ நீங்களே பார்த்து.... இளங்கறியா வாங்கிட்டு ...
மேலும் கதையை படிக்க...
விஷ்ணு காந்த் அழைக்கிறார்! – ஒரு பக்க கதை
சமயம் பார்த்து அடிக்கணும்