“விறலியே, உன் நாட்டியக்கலை சிறந்தது என்பதை அறிந்தோம். ஆனால், உங்கள் நாட்டில் போர்க் கலை தெரிந்தோர் இருக்கின்றனரா? என்று அரசன் கேட்டார்,
அதற்கு விறலி , “கேளும் எங்க நாட்டிலே தினவெடுத்த தோளுடைய வீரர் பலர். அவர்கள் அடிபட்ட பாம்பு போல் சீறி எதிர்க்கும் ஆற்றலுடையோர். அவர்கள் மட்டுமா?
பொது இடத்தில் கட்டி தொங்கவிடப் பட்டிருக்கின்ற மணியில் காற்றானது மோதியடிக்க, அதனால் எழுகின்ற ஒலியைப் போர் ஒலி என்று, பூரித்துப் போருக்குப் புறப்படும் எங்கள் மன்னனும் இருக்கிறான்.
போதுமா?” என்றார் விறலி.
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்