“டாக்டர் பசுபதி. பிரசித்திபெற்ற நரம்பியல் நிபுணரின் வருகைக்காக அந்த அந்த முதியோர் இல்லம் தயாராக இருந்தது.
“ரொம்ப கைராசி டாக்டராம்..”
“நோயாளிகளை ரொம்ப அக்கரையோட கவனிப்பாராம்…”
“அவரோட பிஸி ஷெட்யூல்ல நம்ம இல்லத்துக்கு வாரம் ஒருநாள் சேவை செய்ய வர்றது நம்ம அதிர்ஷ்டம்.”
இல்லம் முழுதும் இதே பேச்சு.
டாக்டர் வந்தார்.
சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே கைகூப்பி வரவேற்ற முதியோர் இல்லத் தலைவி சுலோச்சனாவை பார்த்ததும் புருவம் உயர்த்தினார்.
டாக்டர் வருகைக்கு முன்பே வந்திருந்த நடமாடும் ஆய்வகம் கொடுத்த ரிப்போர்டுகளைப் பார்த்தார்.
நோ ஷுகர், நோ பீ பி, நோ கொலஸ்ட்ரால்…
மூவ்மெண்ட் இல்லாமையால் சுரந்திருந்த பாதங்களை இரண்டு கைகளாலும் தொட்டார். சீரியஸ் இஷ்யூஸ் இல்லை..எக்ஸசைஸ்லயே குணப்படுத்திடலாம். “உட்கார்ந்தபடியே கால் கட்டைவிரலால் வலதுபுறம் 25 ரவுண்டு இடது புறம் 25 ரவுண்டு போடுங்க..” என்றார்.
ஓகே டாக்டர். நான் எக்ஸசைஸ் முடிக்கறேன். அதுக்குள்ளே நீங்க லஞ்ச் முடிச்சி வந்துடுங்களேன்.’’
“நோ…நீங்க எக்ஸசைஸ் முடிச்சாதான் நான் சாப்பிடுவேன்.”
“….”
“ஓய்வு பெற்ற ஆரம்பப்பள்ளி ஆசிரியையான நீங்க கணக்குப் பாடம் நடத்திட்டு நீங்க குறிப்பிட்ட எக்ஸசைஸ் முடிச்சாதான் சாப்பிடுவேன்னு சொல்லி முடிக்கவைத்து எங்களை புகழேணியில் ஏற்றிய உங்க குணம் உங்க மாணவனான எனக்கு மட்டும் இருக்காதா டீச்சர்…?” என்றார் டாக்டர்.