
சிறுகதைகள் இணைய தளத்தை பார்வையிட்டமைக்கு நன்றி.
உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தயவு செய்து பதிவு செய்யவும்.
உங்கள் கருத்துகளை என்றும் வரவேற்கிறோம். நன்றி.
தள ஆசிரியர் மேற்பார்வை இட்ட பின்னரே உங்கள் கருத்துகளை காண முடியும்.
உங்கள் கருத்துகளை பதிவு பண்ணாமல் இருக்க தள ஆசிரியர்க்கு உரிமை உண்டு.
Once you post a comment, it will visible only after moderator review the comment and approve it.
Moderator have rights not to publish any comment which are inappropriate.
220 entries.
Sirukathaigal.com is an extraordinary website to read short stories and am finding it really useful. A small suggestion - please have login feature so that we can track the stories we have read and can avoid reading the same stories again. Thank you
இப்போதாவது என் கண் கண்டதே. மெத்த மகிழ்ச்சி. இது போன்றதொரு உற்சாகம் தரும் வெப்சைட்டை காண்பதற்கு. எழுதுபவரும், அதனைப் படிப்போரும் பயன் பெற இத்தனை வாய்ப்புகளா!! வியந்து போனேன். எழுதி வைத்திருக்கும் சிறு கதைகளை உங்கள் மூலமாக வெளியிட விழைகிறேன்.
வாசிப்பவர்களுக்கு மட்டுமின்றி எழுதுபவர்களுக்கும் புத்துணர்சியை தருகிறது சிறுகதை.காம். நூறுகதைகள் எழுதி சாதனை செய்தவர்களைப் போல் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என ஆவல் உள்ளது. அதை நோக்கியே எழுத்தாளர்களின் முயற்சிகளும் இருக்கிறது.சிறுகதை இலக்கியம் வளர கதைக்களம் முயல்வது பாராட்டுக்குரியது.நன்றி!
டிசம்பர் 2022க்குப்பிறகு சிறுகதைகள்.காம் தளத்தை இப்போதுதான் பார்வையிடுகிறேன். சிறப்பான மாற்றங்களைக் காண்கிறேன். வாழ்த்துகள்!
என் கதைகளில் பெரும்பாலானவை தங்கள் இணையதளத்தில் ஒரே இடத்தில் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு மறுபிரசுரம் செய்யப்பட்டு இருப்பதைக் காணும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சில கதைகள் 1989-1990ல் கணையாழி சிற்றிதழில் பிரசுரம் ஆனவை. பெரும்பாலான கதைகள் 2020-22 காலங்களில் சொல்வனம், திண்ணை போன்ற இணைய இதழ்களில் பிரசுரம் ஆனவை. ஒரு கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு சாஹித்ய அகாடமியால் வெளியிடப்பட்டது. இவை எல்லாவற்றையும் சிறுகதைகள் தளத்தில் மறுபதிப்பு செய்து வைத்திருப்பதற்கு மிகவும் நன்றி.
இன்னொரு மகிழ்ச்சி தரும் விஷயம் நீங்கள் வடிவமைத்திருக்கும் முறை -- design features. மேலும், கதைப்பதிவு நாள், பார்வையிட்டோர் மதிப்பீடு, ஒப்புகை, அச்சிடவும் மற்றும் கையடக்க ஆவண வடிவமைப்பில் பதிவிறக்கவும் வசதி இவை அனைத்தும் கவனமாகச் செய்யப்பட்டு இணையதளத்தின் மதிப்பைக் கூட்டுகின்றன.
கதாசிரியர்கள் சுயவிவரம் பகுதியில் எப்படிப் பதிவிடுவது? உங்களுக்கு மின்னஞ்சல் இணைப்பாக அனுப்ப வேண்டுமா?
மீண்டும் வாழ்த்துகளும் நன்றிகளும்!
என் கதைகளில் பெரும்பாலானவை தங்கள் இணையதளத்தில் ஒரே இடத்தில் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு மறுபிரசுரம் செய்யப்பட்டு இருப்பதைக் காணும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சில கதைகள் 1989-1990ல் கணையாழி சிற்றிதழில் பிரசுரம் ஆனவை. பெரும்பாலான கதைகள் 2020-22 காலங்களில் சொல்வனம், திண்ணை போன்ற இணைய இதழ்களில் பிரசுரம் ஆனவை. ஒரு கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு சாஹித்ய அகாடமியால் வெளியிடப்பட்டது. இவை எல்லாவற்றையும் சிறுகதைகள் தளத்தில் மறுபதிப்பு செய்து வைத்திருப்பதற்கு மிகவும் நன்றி.
இன்னொரு மகிழ்ச்சி தரும் விஷயம் நீங்கள் வடிவமைத்திருக்கும் முறை -- design features. மேலும், கதைப்பதிவு நாள், பார்வையிட்டோர் மதிப்பீடு, ஒப்புகை, அச்சிடவும் மற்றும் கையடக்க ஆவண வடிவமைப்பில் பதிவிறக்கவும் வசதி இவை அனைத்தும் கவனமாகச் செய்யப்பட்டு இணையதளத்தின் மதிப்பைக் கூட்டுகின்றன.
கதாசிரியர்கள் சுயவிவரம் பகுதியில் எப்படிப் பதிவிடுவது? உங்களுக்கு மின்னஞ்சல் இணைப்பாக அனுப்ப வேண்டுமா?
மீண்டும் வாழ்த்துகளும் நன்றிகளும்!
'சிறுகதைப் பற்றி' என்று எழுதுவது தவறு.
'சிறுகதை' பற்றி என்று எழுதவேண்டும்.
'குறிப்பிட்ட சிறுகதையை'ப்' பற்றி எழுதலாம்.
'சிறுகதை' பற்றி என்று எழுதவேண்டும்.
'குறிப்பிட்ட சிறுகதையை'ப்' பற்றி எழுதலாம்.
மனதில் சுயமாகத் தோன்றும் எண்ணங்களையும், அனுபவங்கள் மூலம் கிடைக்கும் நிகழ்வுகளையும் என் போன்ற சிலர் எழுத்துகள் வழியாக அல்லது சின்னச்சின்ன கற்பனைகளும் சிறுகதைகள் ஆக வெளியிட எண்ணுகிறார்கள். ஆனால் பல்லாயிரக்கணக்கான எழுத்தாளர்கள் இருக்கும்போது என் எழுத்தை யார் ஊக்குவிப்பார்கள், யார் அங்கீகாரம் செய்து வெளியிட முனைவார்கள் என்ற அச்சம் இருந்தது உண்மை. ஆனால் சிறுகதைகள்.காம் என்ற இந்த இணையதளம் இந்த தயக்கத்தை எளிதாக வெளியேற்றி என்னை ஊக்குவித்து, என்னுடைய கதைகளை பிரசுரம் செய்தமைக்கு கோடானுகோடி நன்றிகள். என்னைப்போன்ற பல புதிய, அறிமுக சிறுகதை எழுத்தாளர்களை மிகவும் உற்சாகப்படுத்தி அவர்களின் அந்த திறமையை வெளிக்கொணர்வதற்கு நல்ல உந்துதல் தருகிறது 'சிறுகதை.காம்' தளம். அவர்கள் மேன்மேலும் புகழ் அடையவும், இப்பணி சிறப்பாக அமைய, பல வெற்றிகள் காண்பதற்கு நான் இறைவனை மனமார வேண்டுகிறேன். மீண்டும் நன்றிகள் பல.🙏
நன்றி.
வெகு ஜன இதழ்கள் புறக்கணித்த காலங்களில் சிற்றிதழ்களே கை கொடுத்தன. சன்மானம் எதிர் பாராமல் சிற்றிதழுக்கான வளர்ச்சியில் பங்கெடுத்து சிறுகதைகள் பதிவு செய்து குறைந்த பட்ச படைப்பாளனாக அறியவரும் எனை போன்ற எழுத்தாளனுக்கு சிறுகதைகள்.காம் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்பது ஒரு வரப்பிரசாதம்தான். மகிழ்கிறேன்!
கதைகள் பெரு இதழிலோ, சிற்றிதழ்களிலோ பிரசுரம் கண்டாலும் பின் காகிதத்திலேயே உறைந்து போகிறது.அலமாரியில் தூசு படிந்து போகும்,இப்போதெல்லாம் கதைகள் அச்சுஅசலாக இணையத்தில் மின்னுகிறது. எப்போதும் எக் கணமும் உயிர்புடன் வைத்திருக்கிறது. வாசகனை வா! வா! வென அழைத்துக் கொண்டே இருக்கிறது. அப்படி நல்ல காட்சியாக சாட்சியாக சிறுகதைகள்.காம் இருக்கிறது, பாராடலுக்கு உரியது!
சிறுகதைகள் .காம் இணையதளத்தின் சேவையை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. எனது ஒவ்வொரு கதையும் இந்த இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் பொழுது என்னுள் அத்தனை மகிழ்ச்சி. தள ஆசிரியரின் சேவைக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன். சிறப்பான தளம்.
சிறுகதைகள்.காம்..இந்த இணையதளத்தின் பணியின் சிறப்பு அளவிட முடியாத ஒன்று. எவ்வளவோ, என் போன்ற மனிதர்கள், மனதில் உருவாகும் பல நல்ல கருத்துக்களை எழுத்து வடிவில் வெளிப்படுத்த வேண்டும் என எண்ணினாலும், அவைகளை ஆதரிக்க, மேலும் ஊக்குவிக்க, பல உதவிகள் தேவை இக்காலத்தில். ஆனால் எளிய முறையில், புதிய எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தி அவர்கள் மூலம் பல நல்ல கதைகள், கட்டுரைகளை வெளிக்கொண்டு வருவதற்கு இவர்கள் தரும் ஆதரவை கண்டு பிரமிக்கிறேன். உங்கள் பெருமை மேலும் உயர, கடவுளை வேண்டுகிறேன். நீங்கள் எனக்களித்த ஊக்கத்தை என்றும் மறவேன். நன்றி!
புதிய முகமாக அறிமுகமானாலும் எனது எழுத்தாக்கத்திற்கு உதவிய இத்தளத்திற்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்.
I wrote novels
மிகச்சிறப்பு.
அனைவருக்கும் வணக்கம்,
நாம் சிறுகதைகளுக்குக் கருத்துரை (comment) எழுதி பிரசுரித்தப் பின்னர், அதன் தொடர்ச்சியாக வரும் கருத்துரைகளைக் குறித்து நமக்கு மின்னஞ்சல் அறிவிப்பு கிடைத்தால் சிறப்பாக இருக்கும்.
ஏனென்றால் நாம் எழுதும் அதே சிறுகதைக்கு மற்றவர்கள் கருத்துரைகள் எழுதி இருக்கிறார்களா என்பதைப் பார்க்க மீண்டும் மீண்டும் அந்தக் கதையைத் தேட வேண்டியதாக உள்ளது. இதுவே மின்னஞ்சலில் தானியங்கி முறையில் நமக்கு அந்தத் தகவல் வந்து விழுமேயானால் உதவியாக இருக்கும்.
நன்றி
நாம் சிறுகதைகளுக்குக் கருத்துரை (comment) எழுதி பிரசுரித்தப் பின்னர், அதன் தொடர்ச்சியாக வரும் கருத்துரைகளைக் குறித்து நமக்கு மின்னஞ்சல் அறிவிப்பு கிடைத்தால் சிறப்பாக இருக்கும்.
ஏனென்றால் நாம் எழுதும் அதே சிறுகதைக்கு மற்றவர்கள் கருத்துரைகள் எழுதி இருக்கிறார்களா என்பதைப் பார்க்க மீண்டும் மீண்டும் அந்தக் கதையைத் தேட வேண்டியதாக உள்ளது. இதுவே மின்னஞ்சலில் தானியங்கி முறையில் நமக்கு அந்தத் தகவல் வந்து விழுமேயானால் உதவியாக இருக்கும்.
நன்றி
போட்டிகள் நிறைந்த இக்காலகட்டத்தில் புதிய எழுத்தாளர்களுக்கு இத்தளம் ஊக்கத்தை கொடுக்கிறது. அது மேலும் அவர்களை செம்மைப் படுத்த உதவும். உங்கள் தொண்டு வளர்க.
வணக்கம் நான் எழுதிய சிறுகதைகளை எப்படி பதிவு செய்வது
1. கதாசிரியர்களின் பெயர்களை அகரவரிசையில் பட்டியல் / நிரல் இலக்கமிடும் முறையை மாற்றவேண்டாம்.
2. கதாசிரியர்களுக்கு அவர்களின் எந்த எந்தக்கதைகள் இங்கே தரவேற்றப்பட்டுள்ளன என்பதை ஒரே முறையில்/ கிளிக்கில் காணும் வசதிவேண்டும். நன்றி
2. கதாசிரியர்களுக்கு அவர்களின் எந்த எந்தக்கதைகள் இங்கே தரவேற்றப்பட்டுள்ளன என்பதை ஒரே முறையில்/ கிளிக்கில் காணும் வசதிவேண்டும். நன்றி
வணக்கம்.
நான் சிறுகதைகள் எழுதிவருகிறேன். சிறுகதைகள் தளத்திற்கு புதியவள். ஆடியோ கதைகளும் கூற விரும்புகிறேன். தொடர் கதை எழுதலாமா?
நன்றி.
நான் சிறுகதைகள் எழுதிவருகிறேன். சிறுகதைகள் தளத்திற்கு புதியவள். ஆடியோ கதைகளும் கூற விரும்புகிறேன். தொடர் கதை எழுதலாமா?
நன்றி.
திரு.பொன்.குலேந்திரன் அவர்கள் இயற்கை எய்துவிட்டதாக செய்தி வந்துள்ளது. அவரின் குடும்பத்தாருக்கு நம் வலைத்தளத்தின் அனுதாபங்களை தெரிவித்து கொள்வோமே.
சிறந்த எழுத்தாளர், அறிவியல் பூர்வமான விசயங்களை சொல்வதில் மிகவும் வல்லவர்.அவர்து ஆன்மா சாந்தியடையட்டும்.
சிறந்த எழுத்தாளர், அறிவியல் பூர்வமான விசயங்களை சொல்வதில் மிகவும் வல்லவர்.அவர்து ஆன்மா சாந்தியடையட்டும்.