”ஹலோ! இது ராஜா ராமனா?”
மறுமுனையில் ராஜாராமன். ”ஆமாம், நீங்க?’
”நான் ராகம் ஆஸ்பத்திரியிருந்து டாக்டர் சம்பத், நீங்கள் வயிற்றுல ஒரு வித்தியாசமான வலின்னு வந்து மருந்து மாத்திரை வாங்கிட்டுப் போனீங்களே, சரியாயிட்டுதா?”
”நூறு சதவீதம் சரியாயிட்டுது. நினைவு வெச்சு கேட்டது ரொம்ப சந்தோஷமா இருக்குது டாக்டர்” என்று சம்பாஷனையை முடித்தார்
ராஜாராமன்.
நர்ஸ் வில்லி, டாக்டரைக் கேட்டாள். ”ஏன் டாக்டர் அந்த பேஷண்ட் மேல் என்ன அவ்வளவு அக்கறை…போன் போட்டெல்லாம் விசாரிக்கிறீங்க?’
‘அக்கறையெல்லாம் ஒண்ணும் இல்லை. எனக்கும் அதே வலி இருக்குது. புதுசா ஒரு சில மருந்து மாத்திரையை அவருக்கு கொடுத்து டெஸ்ட்
பண்ணினேன். அவருக்கு குணம் கிடைச்சா அதை நானும் எடுத்துக்கலாமுன்னு இருந்தேன். அதுக்காகத்தான் இந்த விசாரிப்பு..!
– வி.சகிதா முருகள் (10-10-12)