எஸ்.கண்ணன்
இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார்.
முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது ‘தாக்கம்’ சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. ‘புலன் விசாரணை’ 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது.
ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது ‘மனிதர்களில் ஒரு மனிதன்’ பரிசு பெற்றது. 2016 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கோவை மாவட்டக்கிளை நடத்திய மாநில அளவிலான சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய ‘ஊடுபயிர்’ தேர்வாகிப் பிரசுரமானது.
வானதி பிரசுரம், சென்னை இவரது மூன்று சிறுகதைத் தொகுப்புகளான ‘முதன் முதலாய் ஒரு கடிதம்’, ‘திசை மாறிய எண்ணங்கள்’ மற்றும் ‘தேடல்’ ஆகியவற்றை வெளியிட்டுள்ளது.
Leemeer Publishers & Distributors, Chennai இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகளையும், ஒரு நாவலையும் e-book வடிவத்தில் விற்பனைக்கு வைத்துள்ளது.
சிறுகதைகள்.காம் இணையதளத்தில் நூறு கதைகள் எழுதிய முதல் கதாசிரியர் என்பதில் இவருக்கு மிகுந்த பெருமை.
இவரது மின்னஞ்சல் skannan15754@gmail.com
இவரது கைப்பேசி இலக்கம்: 9901 445599