கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 6, 2016
பார்வையிட்டோர்: 11,070 
 

“இராமாயி, கதவை நல்லா முடிக்கோ!, யாரு கதவைத் தட்டினாலும் திறக்காதே!” எச்சரித்து கதவைச் சாத்தினான் நல்லக்கண்ணு

”ஏனுங்கோ, அமாவாசை இருட்டுல எங்கே போறீங்க?”

”அமாவாசை இருட்டுதானே, நம்ம தொழிலுக்கு தோதா இருக்கும், அதான், சந்திரபுரிக்கு போறேன், அங்க போனா ஏதாச்சும் தேறும்” எனக் கிளம்பினான்.

”ஏன்தான் இந்த திருட்டு தொழிலோ, வேற ஏதாச்சிலும் தொழில் செஞ்சு புழைச்சா, கவரைதயா இருக்கும், அதவிட்டுட்டு, திருடி புழைக்கிற ஒன்னையக் கட்டிக்கிட்டு” புலம்ப புலம்ப கிளம்பி விட்டான் நல்லக்கண்ணு.

சந்திரபுரியில், நல்ல கும்மிருட்டு, டார்ச் லைட்டித்து, ஒவ்வொரு வீடாய் நோட்டமிட்டான்.

ஒரு வீட்டின் பின் கதவு திறந்திருந்த்து, ஆகா ”நமக்கு தோதா போச்சு”என்றபடியே பக்கத்தில் போனவன் அந்த வீட்டுத் தலைவன் வெளியே வ, சட்டென்று புதரில் ஒளிந்து கொண்டான்..

”ராசாத்தி, முன்கதவு, பின்கதவு எல்லாத்தையும் நல்லா முடிக்கோ,, இந்த அமாவாசை இருட்டுதான் நம்ம தொழிலுக்கு தோது . அதனால, சூரியபுரிக்கு போறேன், அங்க, ஏதாச்சும் தேறும், என்றான் அந்த வீட்டுத் தலைவன்..

… ”ஆஉறா! நம்ம வீட்டுப் பின்கதவு திறந்திருந்தா…? பயம் மேலிட தன் சொந்த ஊரான சூரியபுரிக்கு நடையை எட்டிப்போட்டான் நல்லக்கண்ணு.

– குங்குமம் 2-9-2016 இதழில் வெளியானது

Print Friendly, PDF & Email

பகடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

சதிவிரதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *