“சே…ஏன் இப்படி எட்டு கிலோமீட்டர் ரெண்டு மூட்டைகளை கைநோக சுமந்துகிட்டு வந்து கொடுத்துட்டு,ஒரு வாய் டீக்கூட குடிக்காம ,சொல்லாம கொள்ளாம ஒடனும்…அவளுகிட்ட எவ்வளவு சங்கதி மனசுவிட்டு பேசனும்னு நினைச்சேன் ..ஓடிப்போயிட்டாளே…செல்போனில் தொடர்பு கொண்டாள் ..எதிர்முனை பிஸி என்றது.அவள் மனம் நோக ஏதும் சொன்னோமா நினைவை பின்னோக்கிசெலுத்தினாள்.
பிரபல தொலைக்காட்சியில் ‘சண்டையில்லா சன்டே சமையல்’நிகழ்ச்சி ஒ ளிபரப்பாகிக் கொண்டிருந்தது.நோட்டும் கையுமாக அமர்ந்து ரெசிபிக்களை குறிப்பெடுத்தக்கொண்டிருந்தாள் ராதா.
மார்க்கெட்டுக்கு போயிருக்குற கணவன் வந்ததும் சுடச்சுட சமைக்கச்சொல்லி ஒருபிடிபிடிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்க,சரியாக காலிங்பெல் ஒலித்தது .
கதவு திறந்தாள்,நின்றது அவளது பால்ய சிநேகிதி வாணி.!,கிராமத்திலிருந்து வந்திருந்தாள்.
இரண்டு பை நிறைய சுமந்துவந்ததை புடலை,அவரை,பீர்க்கை,காவளி என கடைபரப்பினாள் வாணி.
‘இதையெல்லாம் ஏன்டி சுமந்துகிட்டு திரியற இதையெல்லாம் இங்க யார் சாப்பிடறா.நாங்க இப்ப சாப்பிடறதை எல்லாம் கிராமத்துல உள்ளநீங்க கற்பனை கூட பண்ண முடியாது ?’_ஏளனமாக சொல்லியபடியே ‘இருடி டீ போட்டு எடுத்து வரேன் என்று அடுக்களைக்கு சென்றாள் ராதா.
அடுத்த ஐந்தாவது நிமிடங்களில் அவள் டீக்குவளையோடு கூடத்துக்கு வந்த போது வாணியைக்காணவில்லை..’எங்க போனா இவ ..சொல்லாம போற ரகமில்லியே..யோசனையோடு அவளது செல்போனுக்கு தொடர்பு கொண்டாள்.’தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக’அறிவித்தது.
அடச்சே சலிப்புடன் ரெசிபி நோட்டை எடுத்தவள் வாணி ஓடியதன் காரணம் புரிபட வீடே அதிர சிரித்தாள்.ரெசிபி நோட்டில் ‘கோழி சூப் ‘என்பதற்கு பதிலாக ‘தோழி சூப் ‘என்று தவறுதலாம தலைப்பு கொடுத்திருந்தாள்.
தொடர்புடைய சிறுகதைகள்
"வளரு..வளரு..!"..
குழந்தைகளுக்கு சிக்கெடுத்து தலைவாரிக் கொண்டிருந்த வளர்மதிக்கு குழைந்து இழையோடும் அந்தக்குரல் யாருடையது என்பது தெரியாமல் இல்லை.
அதிகாலையில் வீட்டை விட்டு கிளம்புபவன்,இரவு வீடு திரும்புகையில் ...ஒருநாள் கூட இப்படி அன்பொழுக கூப்பிட்டதில்லை.
யோசனையோடு தாழ்ப்பாளை விலக்கியவள் "என்ன மாமா.!..இந்நேரமே திரும்பிட்ட..பொழப்புக்கு போகலியா.?"என்றாள்.
"இல்ல..வளர்,பொழப்புக்குதான் போனேன்.தலைவரு தர்மலிங்கம் ...
மேலும் கதையை படிக்க...
அவன் பொட்டுப்பொட்டாய் நெற்றியில் துளிர்த்த வியர்வையை அழுத்தித் துடைத்தான்.
அடர்ந்த புதராய் வளர்ந்து செம்பட்டை பாரித்த மீசையில் வழிந்த வியர்வை,வெடித்து பிளவுபட்டிருந்த உதடுகள் வழியாக ஊடுருவி உப்புக்கரித்தது.
அவனுக்கு அந்த சுவை புதிது...அந்த சூழ்நிலை புதிது..இப்போதும் கண்கள் இருட்டத்தான் செய்கிறது...ஆனால் அது நியாயமான பசி ...
மேலும் கதையை படிக்க...
'ஆற்றங்கரை மேட்டினிலே....அசைந்து நிற்கும் நாணலது காற்றடித்தால் சாய்வதில்லை'...காரைக்கால் பண்பலையில் டி.எம்.எஸ் குரல் கசிய...தானும் சேர்ந்து பாடியபடியே சமையலில் ஈடுபட்டிருந்தாள் சரசு.
பாதியிலேயே பாடலை நிறுத்தி விட்டு அறிவிப்பாளர் "நேயர்களே..ஒரு முக்கிய அறிவிப்பு...நாகப்பட்டினத்துக்கு வடகிழக்கே இருநூற்றைம்பது கிலோமீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு ...
மேலும் கதையை படிக்க...
"நீங்க பண்ணிட்டு வந்து நிக்கிற காரியம் உங்களுக்கே நல்லாயிருக்கா.?இருபத்திரெண்டு வருச காலமாச்சு..நான் இந்த வீட்டுக்கு மருமகளா வந்து..!..இத்தனை வருசமும் குடியும் குடித்தனமுமாகத்தான் இருக்கீங்க...ஆனா இவ்வளவு காலமா இல்லாம இப்ப ஊர்வம்பு வாசல்தேடி வந்து நிக்குது...அக்கம் பக்கம் இளக்காரமா பார்க்கறாங்க ...என்ன பண்ணீங்க ...
மேலும் கதையை படிக்க...
"எலேய்..துரை!என்ன பழம்டா வச்சிருக்கே?கன்னல் இல்லாம கொஞ்சம் கொண்டாடா.."பழவண்டிக்காரனை ஏவியவர்,குதப்பிய வெற்றிலை எச்சிலை ஓரமாய் உமிழ்ந்தபடியே அடுத்த அதட்டல் உத்தரவை தேநீர் கடைக்காரனுக்கு போட்டார் ஏட்டு ராகவன்.."ஏய்..யாருய்யா அது..கடைப்பையன்கிட்ட ஒரு கிளாஸ் பச்சத்தண்ணீய கொடுத்தனுப்பு".
சைடு ஸ்டாண்ட் போட்டு நிறுத்தப்பட்டிருந்த புல்லட்டில் சாய்ந்தபடியே கடைப்பையன் ...
மேலும் கதையை படிக்க...
"வணக்கம்..வருண்.!..எப்ப சென்னையிலிருந்து வந்தாப்ல...என்ன 'சினிபீல்டு'ல நுழைஞ்சிட்டீங்களா.!?நாங்களும் தியேட்டர்ல கலர்கலரா பேப்பர் துகள்களை பறக்கவிட்டுகிட்டு..எங்க ஊரு இயக்குனர் தந்த படைப்புன்னு காலரை தூக்கிவிட்டு அலைய ஆசைப்பட மாட்டோமா.!?"என்றான் டைலர் சிவா.
"என்னப்பா செய்யறது..எட்டு வருசமா போராடற எங்க மாமாவே இப்பதான் கையில'ஸ்கிரிப்ட்'டோட கம்பெனி கம்பெனியா ...
மேலும் கதையை படிக்க...
"ஆண்டவா...இன்னைக்கும் கால்வயித்து கஞ்சிக்கு பங்கம் வராம பக்கத்துணையா இருந்து காப்பாத்துப்பா..!"வானத்தை பார்த்து கும்பிட்டபடியே கோணிப்பையை கக்கத்தில் இடுக்கியபடியே நடந்தார் நடேசன்.
நாலு மா சொந்த வயலை சொத்தாக கொண்ட சிறுவிவசாயி அவர்.ஆண்டவன் புண்ணியத்தில் 'தின அறுவடை'யில் அரைவயிற்று கஞ்சி குடிக்க வழிகோலியது அவரது ...
மேலும் கதையை படிக்க...
"ஐயா,இது போலீஸ் ஸ்டேஷனுங்களா...எம்மவனை காப்பாத்துங்கய்யா...'வெட்டியா ஊரை சுத்திசுத்திவர்றீயே..படிப்புக்கேத்த வேலை கிடைக்கிற வரைக்கும் கிடைக்குற வேலைக்கு போயேன்'னு சத்தம் போட்டேன்..அதுக்காக கோவிச்சிகிட்டு 200அடி உயர செல்போன் டவர்ல ஏறி கீழே விழுந்து சாகப்போறேன்னு அடம் பண்றான்...உடனே கிளம்பி வாங்கய்யா"பதட்டத்தில் அதற்கு மேல் வார்த்தை ...
மேலும் கதையை படிக்க...
முதலிரவு அறை.
பால் சொம்பேந்திய திருவாரூர் தேரை தோழி பொக்லைன்கள் நெட்டி அறைக்குள் தள்ளி விட்டு கதவை வெளிப்பக்கம் சாத்துகின்றன.
பால் சொம்பை கையில் கொடுத்துவிட்டு கால் தொட்டு வணங்குதல் இல்லை.சற்று தள்ளியே அமர்ந்து கை வீணையை மீட்டக்கொடுத்துவிட்டு உச்சி சிலிர்க்க காலால் தரையில் ...
மேலும் கதையை படிக்க...
"என்னப்பா...வந்துடுவாங்களா..?..நான் வேற பள்ளிவாசலுக்கு தொழுக போகனுமே..."பரூக் மரைக்காயரின் கேள்விக்கு பதிலளிக்க அவகாசமின்றி வீதியில் இறங்கி ஓடினார் பண்ணையாள்சவுரிமுத்து.
இன்னும் சிலநாட்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.அதன் பொருட்டு வாக்குகேட்டு வரும் வேட்பாளரை வரவேற்க நாட்டாமையின் பண்ணை வீட்டில் குழுமியிருந்தார்கள் அனைவரும்.
"ஐயா..வேற்பாளர் வந்துகிட்டிருக்காருங்க..தெரு முனையில் ...
மேலும் கதையை படிக்க...