திண்டுக்கல்லில் பெரிய இடத்துத் திருமணம்; பூப் பல்லக்கு அலங்காரம்; ஊர்வலம் வருகிறது.
மதுரைப் பொன்னுசாமிப்பிள்ளை நாயனம். பைரவி ராகம் ஆலாபரணம் பண்ணிக்கொண்டிருக்கிறார். பெருங் கூட்டம் கூடிவிட்டது. எல்லோரும் அந்த இசையின்பத்திலே தோய்ந்துதிளைக்கின்றனர்.
அந் நேரம் அந்தக் கும்பலை விலக்கி கையிலே பூமாலையை எடுத்துக்கொண்டு ஒருவர் வேகமாக உள்ளே நுழைந்தார். ஒத்து ஊதிக்கொண்டு பக்கத்தில் நின்றவருக்கு மாலையைப் போட்டார். எல்லாரும், ‘என்னங்க’ யாருக்கு மாலையைப் போட்டிங்க’ என்று கேட்க.
அவர் ‘மதுரை பொன்னுசாமிக்கு’ தான் என்றார்.
அவர்கள், ‘அவரல்ல, இவர்தான் பொன்னுசாமி’ என்று சுட்டிக்காட்டிச் சொன்னதும் -
வந்தவர். ‘இவரைவிட அவர் நல்லா வாசித்தாரே’– என்றார்.
‘எப்படி ஐயா கண்டீர்கள்’ – என வியந்து கேட்க மாலை போட்டவர்,
‘இவர் விட்டுவிட்டு ஊதுகிறார்?
‘அவர் விடாமல் ஊதுகிறாரே’
- என்று சொன்னார்.
அறுபது ஆண்டுகட்கு முன்பே -
நம்மில் சிலர் இசையைச் சுவைத்த அழகு இது -
- அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை
தொடர்புடைய சிறுகதைகள்
படிப்பறிவில்லாதவர் சட்டசபைத் தேர்தலில் நின்றார். வெற்றி பெற்றார். மந்திரியாகவும் ஆனார்.
அந்த ஊர்ப் பொதுமக்கள் மிகவும் மகிழ்ந்தனர் தங்கள் பள்ளிக்கூடக் கட்டிடத் திறப்பு விழாவிற்கு அவரை அழைத்தார்கள். அவரும் இசைந்துவிட்டார். ஆனால் அங்கே என்ன பேசுவது என்பது தெரியவில்லை.
தன் செயலரைக் கூப்பிட்டார்; பேசவேண்டிய ...
மேலும் கதையை படிக்க...
செவிடன் ஒருவன் நோயாளியைப் பார்க்கப் போகிறான். போகும்போதே அவனுக்கு ஒரு யோசனை. நோயாளி சொல்வது நம் காதில் விழாதே அவன் என்ன சொல்வான், அதற்கு நாம் என்ன சொல்வது என்று தானே சிந்தித்தான்.
முதலில் நாம் போனதும் நோயாளியை, ‘நோய் எப்படி இருக்கிறது’ ...
மேலும் கதையை படிக்க...
மழைக்காகப் பயந்து மரத்தடியில் ஒதுங்கி நின்றது ஒரு குரங்கு.
அப்போது அம் மரத்தில் கூடு கட்டிக்கொண்டு வாழ்ந்துவரும் தூக்கணாங் குருவி, குரங்கைப் பார்த்து, “அண்ணே, நீ உருவத்தில் மனிதனைப் போலவே இருக்கிறாயே, உன் கை கால்களை உபயோகித்து ஒறு நல்ல குடிசை உனக்காகக் ...
மேலும் கதையை படிக்க...
தமிழ்நாட்டிலுள்ள ஒரு சிற்றுாரிலிருந்து ஒரு குடியானவன் பம்பாய் பார்க்கப் போயிருந்தான். ஊர் முழுவதும் சுற்றிப்பார்த்தான். மாலையில் கடற்கரையைப் பார்க்கப் போனான்.
அங்கே, கடற்கரையில் ஒரு சிறுபையன் அலையை நோக்கி வேகமாக ஒடுவதும், தண்ணிரைக் கண்டதும் பின்வாங்குவதும் பிறகு அலையிலேயே காலை வைத்துக் கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
தமிழ் எழுத்துக்களில் ‘ழ’ - என்னும் எழுத்து தமிழுக்குச் சிறப்பு தருவது.
தமிழ் மொழியைத் தவிர, பிற எந்த மொழியிலும் ‘ழ’ என்று உச்சரிக்கக்கூடிய எழுத்து கிடையாது. அதனால் புலவர் பெருமக்கள் ல, ள என்ற எழுத்துக்களோடு இதனைச் ‘சிறப்பு ழகரம்’ என்றே ...
மேலும் கதையை படிக்க...
மேலை நாட்டிலே எழுத்தாளன் ஒருவன்—அவன் நூல்கள் மிக வேகமாகப் பரவின. எல்லோரும் படிக்க விரும்பினர். அவனுக்குப் புகழ் மேலும் மேலும் ஓங்கியது.
இத்தனைக்கும் அவன் ஒரு படிப்பாளியும் அல்லன்: பட்டதாரியும் அல்லன்; எழுத்தாளனுமல்லன்; பேச்சாளலுமல்லன்; ஒரு குதிரை வண்டி ஒட்டுபவன்.
பத்திரிகை நிருபர்கள் அவனிடம் ...
மேலும் கதையை படிக்க...
சிந்தனை ஒரு செல்வம். மக்கள் சிந்திக்கக் கற்றக்கொள்ளவேண்டும். சிந்திக்கத் தெரியாதவன் வறுமை வாய்ப் பட்டவனே! இறைவன் அருளை அடையவும் சிந்தனை தேவை என்பதை நன்கு அறிந்த ஒருவர் இப்படிக் கதறுகிறார் -
‘இறைவா, உன்னை சிந்தித்தறியேன். அரைக்க மும் தரிசித்தறியேன். ஒருநாளும் வந்தித்தறியேன், ...
மேலும் கதையை படிக்க...
ஒரு கிழவன் தான் தேடிய சிறு பொருளைத் தானும் உண்ணாமல், பிறர்க்கும் வழங்காமல் பொன்கட்டியாக, பொரிவிளங்காயளவு உருட்டி, அடுக்குப் பானை இருக்கும் இடத்தின் அடியில் புதைத்து வைத்திருந்தான்.
அவன் மக்களிடமும்கூட இதைச் சொல்லி வைக்கவில்லை. சொன்னால் சொத்துப் பறிபோய்விடும் என்பது அவன் கருத்து.
திடீரென ...
மேலும் கதையை படிக்க...
செட்டியாரின் கடையிலே தெரியாமல் ஒரு வடையை எடுத்துக்கொண்டு போனது காகம்.
மரத்தில் இருந்துகொண்டே அதைத் தின்னத் தொடங்கியபோது ஒரு நரி பார்த்துவிட்டது.
நரி - "காக்கா காக்கா - உன் குரல் எவ்வளவு அழகாக - இனிமையாக இருக்கிறது, ஒரு பாட்டுப் பாடேன்” என்றது.
காகம் ...
மேலும் கதையை படிக்க...
தன் உடன் பிறந்தவனுக்கு மந்திரி பதவி கொடுக்கும் படி அரசனை வற்புறுத்திக் கொண்டிருந்தாள் அவன் மனைவி. அரசனும், அரண்மனையில் இருந்தபடியே தன் மைத்துனரை வரச்சொல்லி உரையாடிக்கொண்டிருந்தான்.
அப்போது வீதியில் ஏதோ வண்டிச் சத்தம் கேட்கவே, அரசன் ஏதோ யோசனை செய்து, உடனே தன் ...
மேலும் கதையை படிக்க...
பொன்னும் பொரி விளங்காயும்