ஒரு ரூபாய் எங்கே போச்சு!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: June 23, 2020
பார்வையிட்டோர்: 31,708 
 

ராமும் சோமுவும் மிகவும் நெருங்கிய நண்பர்கள்.இருவரும் ஒரே பள்ளிக் கூடத்தில் எட்டாவது படித்து வந்தார்கள்.இருவரும் பள்ளிகூடத்திலே கால் பந்து விளையாடிக் கொண்டு வந்தார்கள்.இருவரும் மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

ராமு தான் அந்தப் பள்ளிகூடத்தின் Goal keeper.

சனிக் கிழமை,ஞாயிற்றுக் கிழமை மாலை வேளையில் அவர்கள் இருவரும் காலி யாக இருந்த கார்பரேஷன் மைதானத்தில் இருந்த கால் பந்து மைதானத்தில் கால் பந்து ஆடிப் பழகி வருவார்கள்.சோமு பல கோணங்களில் நின்றுக் கொண்டு கால் பத்தை உதைப்பான்.ராமு அந்த பத்து goal க்குள் போகாம தடுத்து வருவான்.

அவர்கள் இடம் இருந்த கால் பந்து ரொம்ப கிழிந்துப் போய் விடவே இருவரும் ஒரு புது கால் பந்து வாங்க நினைத்தார்கள்.

சோமு “ராமு,நாம ஒரு புது கால் பந்து வாங்கிக் கிட்டு விளாயாடி வரலாமா” என்று கேட்டதும் சோமு ஒத்துக் கொண்டான்.

சோமு வீட்டுக்கு வந்து அவன் அம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடி இருபத்தி ஐஞ்சு ரூபாய் வாங்கிக் கொண்டு வந்தான்.ராமுவும் அதே போல அவன் அம்மாவிடம் கெஞ்சி க் கூத்தாடி இருபத்தி ஐஞ்சு ரூபாய் வாங்கிக் கொண்டு வந்தான்.

இருவரும் தங்களிடம் இருபத்தி ஐஞ்சு ரூபாய் இருப்பதை சொன்னார்கள்.

உடனே சோமு ராமுவைப் பார்த்து “ராமு,இங்கே நீ உடல் பயிறிசி பண்ணிகிட்டே இரு.நான் கடைக்குப் போய் ஒரு புது கால் பந்தை வாங்கிக் கிட்டு வறேன்.உன் கிட்டே இருக்கிற இருபத்தி ஐஞ்சு ரூபாயைக் குடு” என்று கேட்டதும் ராமு தன்னிடம் இருந்த இருபத்தி ஐஞ்சு ரூபாயை சோமுவிடம் கொடுத்தான். ராமு கொடுத்த பணத்தை எடுத்துக் கொண்டு சோமு கடை வீதிக்குப் போனான்.

ராமு மைதானத்தில் உடல் பயிற்சி பண்ணிக் கொண்டு இருந்தான்.

கால் பந்து விற்கும் கடையில் கடைக்காரரைப் பார்த்து “ஒரு கால் பந்து என்ன விலைங்க” என்று சோமு கேட்டான்.

அந்தக் கடைக்காரர் “ஒரு கால் பந்து நாப்பத்தி ஐஞ்சு” என்று சொன்னதும் சோமு தன்னிடம் இருந்த மொத்த பணமான ஐம்பது ரூபாயை அவரிடம் கொடுத்தான்.

உடனே கடைகாரர் அந்த பணத்தை வாங்கிக் கொண்டு சோமுவிடம் ஒரு புது கால் பந்தைக் கொடுத்து விட்டு,மீதி சில்லரையான ஐந்து ரூபாய்க்கு மூன்று ஒரு ரூபாய் நாணயங்களையும்,நான்கு அரை ரூபாய் நாணயங்களையும் கொடுத்தார்.

சோமு புது கால் பந்தை ஒரு கையில் வாங்கிக் கொண்டு, மற்ற ஒரு கையிலே கடைக்காரர் கொடுத்த சில்லரையையும் வாங்கிக் கொண்டு கடையை விட்டு வெளியே வந்தான்.சோமு கண்ணில் அங்கே பிச்சை எடுத்துக் கொண்டு இருந்த ஒரு வயசான பிச்சைக்கார அம்மாவைப் பார்த்ததும் அவன் ரொம்ப பரிதாப் பட்டு அந்த அம்மாவுக்கு ரெண்டு ரூபாய் பிச்சைப் போட்டான்.

சோமு சந்தோஷப் பட்டுக் கொண்டே கால் பந்து மைதானத்துக்கு வந்து ராமு இடம் புது கால் பந்தைக் காட்டி “ராமு,நான் நம்ம ரெண்டு பேர் பணமும் சேத்து மொத்தம் ஐம்பது ரூபாய் எடுத்துக் கிட்டுப் போனேன் இல்லையா.இந்த புது கால் பந்து விலை நாப்பத்தி ஐஞ்சு ரூபாய்.நான் புது பந்தை வாங்கிக் கிட்டு வெளியே வந்தப்ப ஒரு வயசான பிச்சைக்கார அம்மாவைப் பாத்தேன்.அந்த பிச்சைக்கார அம்மாவே பாக்க ரொம்ப பரிதாபமா இருந்திச்சு.அவங்களுக்கு நான் ரெண்டு ரூபாய் பிச்சைப் போட்டேன். ரெண்டு சேந்து நாப்பத்தி ஏழு ரூபா ஆச்சு.மீதி மூனு ரூபா.இந்தா உனக்கு ஒன்னரை ரூபா.நான் எனக்கு ஒன்னரை ரூபாயை வச்சிக்கிடறேன்” என்று சொல்லி ராமுவுக்கு ஒன்னரை ரூபாயைக் கொடுத்து விட்டு மீதி பணத்தை கவனிக்காமல் தன் பாக்கெட்டில் இருந்த சில்லரையுடன் போட்டுக் கொண்டான்.

சோமு கொடுத்த ஒன்னரை ரூபாயை வாங்கி தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான் ராமு.

சோமு கால் பந்தை பல கோணங்களில் இருந்து உதைக்க,ராமு அந்த பந்து ‘Goal Post’க்குள் போகாம தடுத்து பழகி வந்தான்.இரண்டு மணி நேரம் ஆடின பிறகு இருட்டி விடவே இருவரும் சந்தோஷமாக வீட்டுக்கு வந்தார்கள்.

வீட்டுக்கு வந்த ராமு சோமு சொன்ன கணக்கை சரிப் பார்த்தான்.

‘நான் சோமு கிட்டே 25 ஐஞ்சு ரூபா குடுத்தேன்.சோமு எனக்கு மீதி ஒன்னரை ரூபாய் குடுத்தான்.அப்போ பந்துக்கு நான் செலவு பண்ணது இருபத்தி மூனறை ரூபா. அதே போலத் தான் சோமுவும் பந்துக்கு இருபத்தி மூனறை ரூபா தான் செலவு பண்ணி இருப்பான்.ரெண்டும் சேந்து 47 ஏழு ரூபாய் ஆவுது.பிச்சைக் காரிக்கு 2 ரூபாய் பிச்சைப் போட்டான் சோமு.எல்லாம் சேந்து 49 ரூபாய் தானே ஆவுது.மீதி ஒரு ரூபாய் இருக்கணுமே.சரி, நாளைக்கு நாம சோமுவே கேக்கலாம்’ என்று நினைத்துக் கொண்டு சாப்பிட்டு விட்டு படுத்துக் கொண்டான்.

அடுத்த நாள் ராமு சோமுவைப் பார்த்த போது “சோமு, நான் கேக்கறேன்னு என்னே தப்பா எடுத்துக்காதே…” என்று சொல்லி முடிக்கவில்லை “ நான் உன்னுடைய ‘பெஸ்ட் ·ப்ரெண்டாச்சே’.நான் உன்னே தப்பா எடுத்தக்கவே மாட்டேன்.நீ என்னே ¨தா¢யமா கேளு ராமு” என்று சொன்னான்.

உடனே ராமு “நான் உன் கிட்டே 25 ரூபா குடுத்தேன்.நீ எனக்கு மீதி ஒன்னரை ரூபாய் குடுத்தே.அப்போ நான் பந்துக்கு செலவு பண்ணினது இருபத்தி மூனறை ரூபாய். நீ பந்துக்கு செலவு பண்ணனதும் இருபத்தி மூனறை ரூபாய் தான்.ரெண்டும் சேந்து 47 ரூபாய் ஆவுது.நீ பிச்சைக்காரிக்கு 2 ரூபாய் போட்டே.மொத்தம் 49 ஒன்பது ரூபாய் தானே ஆவுது.மீதி ஒரு ரூபாய் எங்கே போச்சு” என்று கேட்டதும் சோமு அசந்து விட்டான்.

உடனே சோமு, ராமு சொன்னதைப் போலவே கணக்குப் போட்டுப் பார்த்தான். அவனுக்கும் அந்த ‘ஒரு ரூபாய் எங்கே போச்சு’ என்று தெரியவில்லை.

எப்படிங்க கணக்கிலே ஒரு ரூபாய் குறையுது!!!!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *