வள்ளிக்குக் கணவன் முயற்சி பிடிக்கவில்லை. நகைகளை இழக்க மனமில்லை.
”என்னங்க ! கீழ் வீடே வெளிப் பூச்சுப் பூசாமல் அரையும் குறையுமாய் வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். இப்ப போய் இருக்கிற நகைகளை வித்து வங்கியில கடன் வாங்கி மாடி கட்றதுக்கு முயற்சி செய்யிறது நியாயமா ?” கேட்டாள்.
”பேசாம இரு தடுக்காதே !” குணா மறுத்தான்.
”தடுக்கலை. வீண் சிரமம். மேலும் மேலும் கடன். ஆறுமாசத்துக்குள்ளே மாடி கட்றாங்களேன்னு நம் சாதி சனத்துக்கெல்லாம் நம் மேல் பொறாமை, கண்ணு. எல்லாத்தையும் நான் யோசனை செய்துதான் சொல்றேன்.”
”நானும் எல்லாத்தையும் யோசிச்சுதான் செய்யிறேன்.”
”என்ன யோசனை ?. எதுவாய் இருந்தாலும் கட்டின பொண்டாட்டிக்கிட்ட ஒரு வார்த்தைக் கலந்து செய்யுங்க. பின்னால பிரச்சனை வராம இருக்க அது நல்லது.”
”சரி சொல்றேன். இன்னைய சூழ்நிலையில புறநகர்ல ஒத்தையாய் வீடிருந்து குடும்பம் தனிச்சிருக்கிறது கஷ்டம். நாம வேலைக்குப் போய் வீட்டுக்குக் காவலாய் என் அம்மா இருக்கிறதும் பாதுகாப்பில்லே. கொள்ளைக்காரன்கள் வயசானவங்களைத்தான் முதல்ல குறி வைச்சுத் தாக்குறான்கள். மேலும் ஒரு அவசர அவசியத்துக்கு எல்லாரும் கிளம்பி வீட்டைப் பூட்டிப் போட்டுப் போறது வீட்டைக் கொள்ளைக்காரன்கள் கையில குடுத்துட்டுப் போறதுக்குச் சமம். நாம மாடி கட்டி ஒரு குடும்பத்தைக் குடி வைத்தால் வீடு, நமக்கு மொத்தத்துக்கும் பாதுகாப்பு. ஒருத்தருக்கொருத்தர் துணை.” முடித்தான்.
கணவன் யோசனைப் பிடித்திருக்க, ”சரிங்க” முழுமனதாய்ச் சம்மதித்தாள் வள்ளி.
தொடர்புடைய சிறுகதைகள்
மலர்ந்தும் மலராத காலைப் பொழுது 5.15 மணி அளவில் தன்னந்தனியே ஒரு ஆள் ஆஆஆஆ......வென்று ஒரு நாள் இரண்டு நாளில்லை. ஒருவார காலமாய்....ஓலம் விட்டுக் கொண்டிருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும். நீங்கள் என்ன நினைப்பீர்களோ.... அதேதான் எனக்கும்.
எனக்கு வயது 63. மூன்றாண்டுகளுக்கு ...
மேலும் கதையை படிக்க...
நான் அலுவலகத்தில் வேலையாய் இருக்கும்போது கைபேசி அழைத்தது.
எடுத்தேன்.
"அண்ணே..."- என் உடன் பிறந்த தங்கை.
"என்ன அருணா..?"
"அங்கே என் மாமியார் வாதங்களா...?"
"எங்கே...?"
"உன் வீட்டுக்கு ..."
"என் வீட்டுக்கா...?!"
"ஆமாம் !"
"ஏன்..?"
"கோபம். உன் வீட்டுக்கு வர்றேன்னு கிளம்பினாங்க...''
"யார்கிட்ட கோபம்...?"
"சட்டைத் துவைச்சுப் போடலைன்னு காலையில மாமா என்னைத் திட்டுச்சி. இவங்க ...
மேலும் கதையை படிக்க...
இரவு எடுத்த முடிவின்படி வழக்கமாக வடக்கே செல்லும் அதிகாலை 5.30 மணி நடைப்பழக்கத்தைத் தெற்கேத் திருப்பினேன்.
அதனைத் தொடர்ந்து, 'இன்றைக்கு யார் மக்கள் அலட்சியத்தால் வீணாக வெளியேறும் குடிநீர், சாலை விளக்குகளை அணைப்பார்கள் ?' கேள்வியும் எழுந்து என்னோடு வந்தது.
நான் நடை பயணம் ...
மேலும் கதையை படிக்க...
சோதிட சிகாமணி. .. ஸ்ரீலஸ்ரீ மார்க்கண்டேயன் தன் முன் பணிவாக வந்தமர்ந்த இளைஞனைக் உற்றுப் பார்த்தார்.
"பேர் சுரேஷ் !"அமர்ந்தவன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.
"அப்புறம். .?"
"வயசு 30. அரசாங்க வேலை. எழுத்தர் பணி. மாசம் முப்பதாயிரம் சம்பளம். மனைவி , ஒரு பொண்ணு, புள்ளைன்னு ...
மேலும் கதையை படிக்க...
கலகலப்பாய் இருக்க வேண்டிய வீடு நிசப்தம். மயான அமைதி . எல்லோர் முகங்களிலும் கலவரம். மணப் பெண்ணான சிம்ரனுக்குள் தீவிர யோசனை.
எல்லாம் மாப்பிளையாக வந்த திவாகர் போட்ட போடு. அவன் இப்படி எல்லோரையும் கதிகலங்க வைப்பானென்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
எல்லாம் சிறிது நேரத்திற்கு ...
மேலும் கதையை படிக்க...
சுரேஷ் ஒரு முடிவிற்கு வந்தவனாய் துணிக்கடையில் ஏறி..... பையுடன் இறங்கினான்.
வீட்டிற்கு வந்ததும், ''நாளை உனக்கு என் பிறந்த நாள் பரிசு !'' மனைவியிடம் நீட்டினான்.
மலர்ச்சியுடன் வாங்கிப் பிரித்த பவிஷா முகம் சுருங்கியது.
''என்னங்க...! புடவையா ?'' பரிதாபமாகப் பார்த்தாள்.
''ஆமாம். ஏன் கட்டிக்க மாட்டியா ...
மேலும் கதையை படிக்க...
மத்திய அரசு தணிக்கை அதிகாரி ராஜசேகரன் அறையிலிருந்தபடி ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். கண்ணுக்குக் குளிர்ச்சியாய் வெளியே பச்சைப்பசேல் காடு. அப்படியே வீட்டைச் சுற்றி அச்சு அசலாய் ராணுவ வீரர்;கள் போல் ஏ.கே. 47, பைனாக்குலருடன் தீவிரவாதிகள் காவல்.
இங்கு வந்து இன்றோடு ...
மேலும் கதையை படிக்க...
இருபது வருடங்களாக பாரீசில் வேலை பார்க்கும் எனது மைத்துனன் வருடா வருடம் மகர ஜோதிக்கு ஐயப்பன் மலைக்கு வருவான். வரும்போது கூடவே துணைக்கு ஒரு ஆளையும் இழுத்து வருவான்.
இரண்டு வருடங்களுக்கு முன் இரண்டு வெள்ளைக்காரர்களை அழைத்து வந்தான். சென்ற வரும் ஒரு ...
மேலும் கதையை படிக்க...
தன்னுடைய வீட்டிற்கு நேர் எதிர்வீட்டில் நான்கு நாட்களுக்கு முன்பு அந்த அழகான தம்பதிகள் குடி வந்ததிலிருந்தே தன் மனைவி சுஜாதாவிடம் ஒரு மௌனமான மாற்றம் மறைவாக இருப்பதை கண்டான் கல்யாணம்.
அது மட்டுமல்லாமல் அவர்கள் வரும் வரை இந்த வீட்டைப் பற்றியும், குளியலறை, ...
மேலும் கதையை படிக்க...
நான் வீடு வந்து சேர்ந்த வெகு நேரத்திற்குப் பிறகு இரவு ஏழு மணி சுமாருக்கு... சொல்லவா கூடாதா என்கிற நீண்ட போராட்டத் தயக்கத்தில் ‘‘ என்னங்க...! ‘‘ மெல்ல அழைத்தாள் என் மனைவி இந்திரா.
‘‘ என்ன...?‘‘ பக்கத்தில் வந்தவளைத் திரும்பி பார்த்தேன். ...
மேலும் கதையை படிக்க...
நேர்மையின் நிறம் சிகப்பு….!
பெண்டாட்டிக்குப் பயந்தவன்