கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,078 
 

‘இந்தப் பெருசுக ரெண்டும் ஒத்துமையா இருந்தா நமக்குத்தான் ஆபத்து. சண்டை மூட்டி விடணும்…’ – சமந்தா செயலில் இறங்கினாள். ‘‘சேலைக்குப் பதிலா நைட்டி யூஸ் பண்ணுங்க அத்தே. உங்க உடம்புக்கு அது ரொம்ப அழகா இருக்கும். என்கிட்ட ரெண்டு புது நைட்டி இருக்கு. தர்றேன்… இப்பவே போட்டுக்கங்க…’’ மாமியார் யோசிக்கும் முன்பே நைட்டிகளை எடுத்துக் கொடுத்தாள்.

அடுத்த ஐந்தாம் நிமிடம் சமந்தா மாமனார் முன்… ‘‘மாமா, அத்தை பண்ற கூத்தைப் பாருங்க… இந்த வயசில போய் நைட்டி போட்டுக்கிட்டுத் திரியிறாங்க…’’
கேட்டதுமே ‘விருட்’டென எழுந்தார் பெரியவர். ‘ஏன்டி… உனக்கென்ன கொமரின்னு நெனைப்பா? ஒழுங்கா லட்சணமா சேலையைக் கட்டுடீ!’ எனப் பெரியவர் சீறப்போறார்… ‘அதெல்லாம் முடியாது. நான் காலத்துக்கு ஏத்தாப்புலதான் இருப்பேன்’ என மாமியார் அடம்பிடிக்கப் போறார்… பார்க்கலாம் வேடிக்கையை என சமந்தா ஆர்வமாக பின்னாலேயே போனாள்.

அட இதென்ன… வெட்கத்தோடு நின்ற மாமியாரின் அருகில் போனவர், ‘‘அய்…! உனக்கு நைட்டி சூப்பரா இருக்கு வடிவு. இனி டெய்லி நைட்டியே யூஸ் பண்ணு! இன்னைக்கே அஞ்சாறு நைட்டி வாங்கிட்டு வந்துடறேன்!’’ என்றார். சமந்தா நொந்து போனாள்.

– மார்ச் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *