பாரதப் போர் நடந்து கொண்டிருந்த நேரம் அது… அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் இடையே நடந்த யுத்தத்தில், தேரிலிருந்த படியே அர்ஜுனன் ஓர் அம்பை எடுத்து கர்ணனது தேர் மீது எய்தான்.
அந்த அம்பின் வீரியத்தால், கர்ணனது தேர் சற்று நிலைகுலைந்து, நான்கு அடி பின்னோக்கி நகர்ந்தது. இதனால், கோபமுற்றான் கர்ணன். மறு கணம் அவன் ஆக்ரோஷத்துடன் அம்பு ஒன்றை எடுத்து அர்ஜுனனின் தேர் மீது எய்தான். அதனால் அர்ஜுனனின் தேர் ஓர் அடி பின்வாங் கியது.
அப்போது அர்ஜுனன் அருகிலிருந்த கண்ணனிடம் பெருமிதம் பொங்க, ‘‘பார்த் தாயா கிருஷ்ணா… நான் எய்த ஒரே அம்பு, கர்ணனின் தேரை நான்கு அடி பின்னோக்கி நகர்த்தி விட்டது. ஆனால், பதிலுக்கு அவன் எய்த அம்பு, எனது தேரை ஒரே அடி மட்டுமே பின்னுக்கு நகர்த்தியது!’’ என்றான்.
அவசரமாக அவனை இடைமறித்த கண்ணபிரான், ‘‘அர்ஜுனா… இதை நீ பெருமைக்குரிய செயலாகக் கருதுகிறாயா?’’
கண்ணபிரானது குரலில் பொதிந் திருந்த ஏளனத்தைக் கவனித்தான் அர்ஜு னன்.
‘‘கண்டிப்பாக! அதி லென்ன சந்தேகம்?’’ _ சற்று உஷ்ணமாகவே கேட்டான் அவன்.
மறு கணம் வாய் விட்டுச் சிரித்தார் கண்ணபிரான். எரிச் சலுற்றான் அர்ஜுனன்.
‘‘கிருஷ்ணா, ஏன் சிரிக் கிறாய்?’’
‘‘உனது அறியாமையை எண்ணி…’’ _ கண்ண பிரான் அமைதியாகக் கூறினார்.
‘‘அறியாமையா?’’
‘‘ஆமாம்! விளக்குகிறேன். உனது இந்தத் தேரின் மேலே என்ன இருக்கிறதென்று தெரி யுமா? சகல வல்லமையும் பொருந்திய ஸ்ரீஆஞ்ச நேயரின் கொடி. அவரது பலம் என்ன… பராக் கிரமம் என்ன? அவர் இந்தத் தேரில் இறங்கி நம்மைக் காத்து வருகிறார். மேலும் உலகைக் காக்கும் பரந்தாமனான நான், வில் வித்தையில் நிகரற்றவனான நீ… இப்படி மூன்று பேர் இதில் உள்ளோம். ஆனால், இதையெல்லாம் மீறி ஓர் அம்பின் மூலம் தேரை ஓரடி நகர்த்தி விட்டான் கர்ணன். அதனால் உண்மையில் அவன்தான் பெருமைக்குரியவன்!’’
கண்ணனின் விளக்கம் கேட்டு அர்ஜுனனின் தலை வெட்கத்தால் கவிழ்ந்தது.
\
தொடர்புடைய சிறுகதைகள்
மகாபாரதப் போர் முடிந்தது. பாண்டவர் வெற்றி பெற... கௌரவர்கள் அடியோடு அழிந்தனர். போர் புரிவதும், பகைவனைக் கொல்வதும் க்ஷத்திரிய தருமமாக இருப்பினும், சகோதரர்கள் மற்றும் உறவினர்களைக் கொன்று கிடைத்த பதவியும் செல்வமும் தனக்குத் தேவையில்லை என்று மனம் கலங்கினார் தருமர்.
எனவே தன் ...
மேலும் கதையை படிக்க...
தூய்மையான கங்கை ஆறு. அதிகாலைப் பொழுது. பறவைகளது குரல். கரையில், பசுக் கன்றுகள், தாய்ப் பசுக்களை அழைக்கும் ஒலி. பதில் குரல் கொடுக்கும் பசுக்கள். இந்தச் சூழலில், இறைவனை தியானித்தபடி இடுப்பளவு நீரில் நின்ற கௌதம முனிவர், கதிரவனை நோக்கிக் கரம் ...
மேலும் கதையை படிக்க...
கானகம் ஒன்றில் ஒரு துறவி வாழ்ந்து வந்தார். முக்காலமும் அறிந்தவர் அவர். ஒரு நாள் திருமகள் அவர் முன் தோன்றினாள்.
‘‘மகனே... முற்பிறவியில் நீ செய்த புண்ணியங்களின் பலனாக, சிறிது காலம் நான் உன்னுடன் தங்கி இருக்க வேண்டியது நியதி. என் அனுக்கிரகத்தால் ...
மேலும் கதையை படிக்க...
மகாபாரதப் போரில் பலசாலியான கர்ணன் வீழ்ந்துவிட, கௌரவர்கள் தோல்வியைத் தழுவினர். பாண்டவர்கள் பாசறையில் வெற்றிக் கொண்டாட்டம். எல்லை மீறிய உற்சாகம். குதூகலத்தில் பாண்டவர்கள் திளைத்திருந்தனர். ஆனால், ஸ்ரீகிருஷ்ண பரமாத் மாவின் முகத்தில் மட்டும் சோகத்தின் சாயல். பாண்டவர்கள் திகைத்தனர். அர்ஜுனன் அவரை ...
மேலும் கதையை படிக்க...
கலை வளமும் கடவுள் பக்தியும் கொண்ட மிதிலை நகரை ஜனக மகாராஜா நீதிநெறி தவறாமல் ஆட்சி புரிந்தார். ஜனகர் கல்வி கேள்விகளில் தேர்ந்த மேதை. ஞானப் பண்டிதரான இவர், தம் பிரஜைகளிடம் ஏற்றத் தாழ்வு பாராமல், சரிசமமாக பாவித்தவர். இருப்பினும் ஜனகர், ...
மேலும் கதையை படிக்க...
அது அழகான ஒரு நந்தவனம். அதன் நடுவே பசுமையான புல் தரை மீது அமர்ந்து, மலர் தொடுத்துக் கொண்டி ருந்தாள் அழகான இளம் பெண் ஒருத்தி. அவள் ஒரு தேவதாசிப் பெண். பெயர் லீலாவதி. அவள், ‘நாரத முனிவரின் அம்சம்’ எனப்படும் ...
மேலும் கதையை படிக்க...
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும் அவர்களால், ‘கோயில்’ என்று சிறப்பிக்கப் படுவதுமான திருவரங்கம்.
பணியரங்கப் பெரும்பாயற் பரஞ்சுடரை யாங்காண
அணியரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார்...
என்று கவிச் சக்ரவர்த்தி கம்பரால் போற்றப்பட்ட புராதனப் பதி. ‘அரிதுயில்’ செய்யும் அரங்கன் எழுந்தருளி இருக்கும் அந்த அற்புதப் பதி, ...
மேலும் கதையை படிக்க...
யோகத்தில் ஆழ்ந்திருந்தார் மாண்டவ்ய முனிவர். அப்போது அந்த வனத்துக்கு வந்த படை வீரர்கள் சிலர், முனிவரை நெருங்கினர்.
அவர்களின் தலைவன், ''முனிவரே... கொள்ளைக்காரர்கள் சிலர், இந்த வழியாக வந்தார்களா?'' என்று கேட்டான்.
முனிவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. எரிச்சலுற்ற படைத் தலைவன், ''முனிவரே, ...
மேலும் கதையை படிக்க...
ஏழை மற்றும் எளியவர்களிடம் கருணை கொண்டு தான& தர்மங்கள் வழங்குவதில் பேர் பெற்றவர் பஞ்சபாண்டவர்களில் மூத்தவரான தருமர். இதனால் அவர் மனதில், ‘தர்மம் செய்வதில் தனக்கு இணை யாருமே இல்லை!’ என்கிற கர்வம் படியத் தொடங்கியது. தருமரின் உள்ளத்தில் படிந்த இந்தக் ...
மேலும் கதையை படிக்க...
பிரம்மதேசத்தின் மன்னர், நீதிநெறி தவறாதவர். அறம் உரைக்கும் அமைச்சர்கள் மற்றும் ஞானவான் களான ஆன்றோர்கள் பலரது வழிகாட்டுதலுடன் செம்மையாக ஆட்சி புரிந்த மன்னருக்கு, நீண்ட காலமாக ஒரு சந்தேகம்.
'வனத்தில் வசிக்கும் தவ சீலர்களான மகரிஷி கள், தனது சந்தேகத்தைத் தீர்த்து வைப்பார்கள்!' ...
மேலும் கதையை படிக்க...
அமைச்சர் ஆகும் தகுதி எவருக்கு இருக்கிறது?
உயிருக்கு போராடிய கர்ணனிடம் தங்கம் கேட்ட கிருஷ்ண பரமாத்மா!
ஜனகரை சந்தேகித்த முனிவர்!
பொற்காப்பைத் திருடினாரா புரந்தரதாசர்?
காதலியின் கண்களை விட அழகான கண்கள் உண்டா?
தங்கக் கிண்ணத்தை வீசி எறியுங்கள்!
ஆத்மாவை அறிய முயன்ற அரசன்!
Nice story