”பிள்ளை வீட்டுக்காரங்க நேரா மாடிக்குப் போயிட்டாங்க. நானும் உடனடியா அங்கே போறேன். வந்தவங்களக்கு காப்பி கொண்டு வா” என்று பெண்ணிடம் சொல்லிய அம்மா பர்வதம் வேகமாக வாயிற்பக்கம் இருந்த படியேறினாள்.
”மாப்பிள்ளை அளவுக்கு என் பொண்ணு படிக்கலை. ஆனா சமயோசிதமா நடந்துக்குவா” என்று சொன்ன பர்வதம் ஏதோ ஞாபகம் வந்தவளாக,’எத்தனை கப் காபி கொண்டு வரணும்னு சொல்லாமலேயே மேலே வந்துட்டேன்…நான் போய் சொல்லிட்டு வந்துடறேன்” என்று எழுந்தவள், மகள் பாக்கியம் வந்திருந்தவர்களுக்கு சரியாக 6 கப் காபி கொண்டு வந்திருந்ததைக் கண்டு ஆச்சிரியத்தை அடக்கிக் கொண்டாள்!
அதை கூர்மையாக கவனித்தபடி காபியை குடித்த மாப்பிள்ளை கேட்டார்…”நாங்க 6 பேர்தான்னு கரெக்டா எப்படி காபி கொண்டு வந்தீங்க?”
”அது வந்து…வந்து…’ என்று வெட்கித் தயங்கினாள் பாக்கியம்.
”ம்…தயங்காம சொல்லுங்க’ என்றார் மாப்பிள்ளை.
‘வாசல்ல கழட்டிப் போட்டிருந்த செருப்புகளை வைச்சுத்தான் கணிக்க முடிஞ்சது’ என்றாள் மெதுவாக.
”படிப்பு குறைச்சலா இருந்தா என்ன? இந்த மாதிரி சமயோசித புத்திதான் எங்க வியாபாரத்துக்குத் தேவை. அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…பொண்ணையும்தான்!” என்றார் மாப்பிள்ளை.
- எஸ்.ராமன் (3-5-2010)
தொடர்புடைய சிறுகதைகள்
“எங்க அது..? தொலைச்சுட்டு வந்தாச்சா..?”
மிரட்டலான குரலை தொடர்ந்து, இரவில் நடுத்தூக்கத்தில் என் பூத உடல் வேரோடு உலுக்கப்பட்டது.
“அதுழ்ழா.. எழு..?” தூக்க தைரியத்தில் என் பேச்சு அசால்ட்டாக இருந்திருக்கும் போல.
அடுத்த நிமிடம், இடி முழக்கத்துடன் ஒரு பக்கெட் அளவிலான தண்ணீர் என் தலை ...
மேலும் கதையை படிக்க...
‘’உன்னை பெண் பார்க்க வரப் போறவருக்கு நல்ல படிப்பு, கை நிறைய சம்பளம் இருக்கு. உனக்கு மேட்ச் ஆகற மாதிரியே ஸ்மார்ட்டா இருக்காரு. எந்த குழப்பமும் செய்யாம, இவரையாவது ‘சரி’ ன்னு சொல்லுடி’’ என்றாள் மூச்சு விடாம அம்மா.
ம்ம்ம்…வீட்டு வாசலில், பெரிய ...
மேலும் கதையை படிக்க...
“ஃபேக்டரியை என்கிட்ட நீங்க ஒப்படைச்சு ஆறு மாசம் ஆயிடுச்சு. ஆனா, இந்த கால கட்டத்தில, உற்பத்தி குறைஞ்சுக்கிட்டு வருது. அதுக்கான காரணம் என்னன்னு
புரியலை’ என்று எம்.பி.ஏ. படித்து முடித்த மகன் சித்தார்த், தந்தை சதுர்வேதியிடம் தன் ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டான்.
“உற்பத்தியைப் பெருக்க ...
மேலும் கதையை படிக்க...
நாலு வயது மகளோடு பீச்சுக்குப்போய் ஒதுக்குப்புறமாக உட்கார்ந்து, கையிலிருந்த புத்தகத்தைப் பிரித்து படிக்க ஆரம்பித்தேன்.
மகள் முதலில் ஐஸ்கிரீம் வேண்டுமென்று கேட்டாள். ‘தொண்டையில் பூச்சி வந்துவிடும்’ என்று பயமுறுத்தினேன்.
லாலிபாப் கேட்டவளை, ‘வயிற்றில் பூச்சி வந்துவிடும்’ என்று சொல்லி சமாதாப் படுத்தினேன்.
அந்தப் பக்கமாக பலூன்காரர் ...
மேலும் கதையை படிக்க...
“ஆர்டர் கொடுத்து, இருபது நிமிடங்கள் ஆவுது. சர்வர் இன்னும் நான் கேட்டதைக் கொண்டு வரவில்லை.
இந்த மாதிரி சின்னப் பையன்களை வச்சுக்கிட்டு ஓட்டல் நடத்தினால் வர்றவங்க பட்டினியால் சாக வேண்டியதுதான்’
என்று முதலாளியிடம் கோபமாக கத்திவிட்டு எழுந்தார் சக்கரபாணி.
“ஏண்டா சோம்பேறி! அவருக்குப் பின்னாடி ஆர்டர் ...
மேலும் கதையை படிக்க...
பார்வையை மாற்று! – ஒரு பக்க கதை