கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 10, 2023
பார்வையிட்டோர்: 7,014 
 
 

(1947 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஹென்ரிக் இப்ஸன் 1828 – 1906

ஷேக்ஸ்பியருக்கு சமதையாக உலகம் கொண்டாடும் நாடக சிரேஷ்டர் ஹென்ரிக் இப்ஸன். தர்மத்துக்கு வெற்றியை அளித்தார் ஷேக்ஸ்பியர்: தர்மம் ஏன் வெற்றி பெறவேண்டும் என்ற கேள்வியை எழுப்பியவர் ஹென்ரிக் இப்ஸன். புதுப்பாணியிலே எழும் நாடக சூத்தரத்துக்கு பிதாமகன் இப்ஸன்.

இவர் 1828-ம் வருஷம் நார்வே தேசத்தில் உள்ள ஸ்கீப்ஸ் என்ற இடத்தில் பிறந்தார். இந்த மேதைக்கு பிறந்த நாடு முதலில் இடம் அளிக்கவில்லை, இவரது ஆயுளில் பெரும்பாகம் ஜெர்மனியிலும் இத்தாலியிலும் கழிந்தது. தாய்நாடு திரும்புகையில் பெரும் புகழும் பெற்று உலக நாடக சிரேஷ்டராக திரும்பினார். புகழும் பெயரும் கிடைத்தபின் தாய் நாட்டின் பரிவு என்ற நிழலில் கிரிஸ்டினாவில் வாழ்ந்தார். 1906 மே 23ந்தேதி மரணம். பிரான்ட், பீட்டர்ஜிஸ்ட், கோஸ்ட்ஸ் என்பவை இவரது நாடகங்களில் பிரதானமானவை.)

ராஜ்ய உபாதை (காங்ஸ் எம்னெர்ன்)

நார்வே ராஜ்யத்தை வகிக்க, மணிமுடி தரித்து செங்கோல் ஏந்த, பலர் பாத்யதை கொண்டாடினார்கள். மன்னன் ஹாக்கானை பல சிற்றரசர்கள் ஆதரித்தார்கள். அவனே தமக்கு மன்னன் என் று ராஜ விசுவாசப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். ஸ்கூல் ஓரு சிற்றரசன், ஹாக்கானுடைய சிற்றப்பா. அவ னும் ராஜ்யம் தனக்குத்தான்; தானே பட்டத் துக்கு உரிமையுள்ளவன் என்று போட்டியிட்டான். பல வருஷங்களாகவே ஸ்கூல் மனசில், தனக்கே (ராஜ்யத்துக்கு நியாயமான உரிமையுண்டு என்ற நினைப்பு. முதல் முதல் எர்லிங் ஸ்டீயன் வீக்கை, ஸ்லிட்டங் வம்சத்தினர் தேர்ந்தெடுத்தபோதே, அந்த ஆசை வேர் விட்டது. ஆனால் அவனுக்கு ஸ்லிட்டங் வம்சத் தினரை எதிர்த்துக்கொள்ள பயம். ஸ்டீய்ன் வீக் ஆட்சிக்குப் பிறகு ரிப்பங் வம்சத்தினர் பட்டத் துக்கு வந்தார்கள். குத்தார்ம் அரசனானான். அவன் சாகும்வரை ஸ்கூல் காத்திருந்தான். குத்தார்முக்கு சாக்காடு வந்தது. ஆனால் பட்டம் ஸ்கூலுடைய அண்ணனுக்கு வந்தது; அண்ணன் இன்ஜி பார்ட்ஸன் நோயாளி. வியாதிமுற்ற முற்ற ஸ்கூலுக்கு நம்பிக்கையும் முற்றியது. இன்ஜி சாகும்பொழுது மனைவி கருவுற்றிருந் தாள். ஸ்கூலுடைய ஆசைக்கும் அரசுக்கு மிடையே அந்தக் குழந்தை தடுத்து நின்றது.

அந்தக் குழந்தையையே அரசனாக ஒரு சிற்றரசுக் கோஷ்டி ஏற்றது. அந்தக் குழந்தைதான் ஹாக்கான். ஹாக்கான் சார்பாக ஸ்கூல் கிறிது காலம் ஆட்சி புரிந்தான். ஹாக்கான் பருவம் எய்தி ஆட்சியை வகிக்கும் காலம் வந்தது. நார்வேயில் ஓரு சம்பிரதாயம். சம்பிரதாயம். கிற்றரசர்கள் எல்லாம் ஏகோபித்து யாரை மகாராஜாவாக ஏற்கிறார்களோ, அவர்களுக்கே பட்டம் கிடைக் கும். பாத்தியதை பலமும் சிற்றரசு சம்மதமும் வேண்டும். ஸ்கூலும் அவனுடைய சகாக்களும் ஹாக்கான் பட்டத்துக்கு வருவதை எதிர்த்தனர். பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில், நார்வே ராஜ்யம், கத்தி முனையால் பாத்திய தையை உறுதிப்படுத்தும் சிற்றரசுக்கும் பல் குமைந்த கொலைக்களமாகிக் கிடந்தது. கிறிஸ் துவப் பாதிரிமார் மடாலயங்கள் இந்தக் குளறு படிக்கு ஆதரவு கொடுத்து வளர்த்தது. பரலோக சாவியை தம் கையில் வைத்திருக்கின்றன என பாவிக்கப்பட்ட மடாலயங்கள், இகலோக மன்னர்களின் சிண்டுகளையும் தம் கைவசம் கொண்டு, முடிசூடா மன்னர்களாக ஆட்சிபுரிய முயன்ற தேசத்திலே கிருஸ்துவ தர்மத்தின் பிரதான மட்ாலயம் ஆஸ்லோ நகரிலிருப்பதா கும். அதன் தலைவராகவும் மன்னர்களின் பிரதான குருவாகவும் இருந்தவர் பிஷப் நிக்கோ லாஸ். சிற்றரசர்களை ஒன்றுசேரவிடாமல் அவர் களது மனசில் ஆசைத் தீயை கிளப்பி, ஆதரவு என்ற ஆகுதி வார்த்து, முட்டி மோதிக்கொண்டு தம் காலடியில் கிடக்கும்படி செய்தார். ஹாக் கான் கட்சியா, அவன் வேண்டுமானால் அக்னிப் பரிட்சையால், தன் பாத்தியதையை நிரூபிக் கட்டுமே” என்றார்.

“சரி, ஹாக்கான் தொலைந்தான், நெருப்பா வது தப்புவதாவது என்று மனப்பால் குடிக்கிறான் ஸ்கூல்.

பழுக்கக் காய்ச்சிய இரும்பை ஹாக்கானு டைய தாயார் கையில் ஏந்த வேண்டுமாம். நெருப்பின் நாக்கு தாயின் கையை தீண்டாது ஒதுங்கினால், அரசுரிமை அவனுக்கு அவனுக்கு உண்டு. தாய் இங்கா அக்னிப்பரிட்சைக்கு உடன்படுகிறாள். அக்னியும் அவளைச்சுடவில்லை.ஹாக்கான் இறந்த மன்னனுடைய புத்திரன் என்பதில் சந்தேக மில்லை.-அது அவனுக்கு ராஜ்யத்தின் மீது. பாத்யதை கொண்டாட மட்டும் உரிமை கொடுக்கிறதாம்; ராஜ்யத்தை கொடுக்கவில்லை யாம். அவளைப்போல் சம பாத்யதை உடைய வம்சங்கள் பலவுண்டாம்.

சிற்றரசுச் சபை கூட்டி முடிவாக யாரை ராஜாவாக்குவது என்பதை தீர்மானிப்பது என்று முடிவு கட்டப்படுகிறது. ஹாக்கான் வாலிபன், தீரன், அழகன்: சீர்குலைந்து கிடக்கும் தேசத்தை ஒரு ஆட்சிக்குட்படுத்தி, ஒழுங்கு படுத்தவேண்டும் என்பதுதான் ஒரே ஆசை. தேர்தலுக்கும் சம்மதிக்கிறான். ஸ்கூலுக்கும் மற்ற வம்சங்களுக்கும் எதிராக இவனுக்கே ஆட்சிகிடைக்கிறது.

ஹாக்கான் தாராளபுத்தியுடையவன்.தேசம் ஒன்றுபட்டு சமாதானமாவதே அவன் ஆசை. எதிரியாக நிற்கும் ஸ்கூலை உறவினனாக்கி, பகைமையை அளிக்க விரும்பினான். ஸ்கூலுக்கு. ஒரு மகள் உண்டு. அவள் பெயர் மார்கெரட். ஏற்கனவேதான் ஒருத்திமீது ஆசை வைத்திருந் தும், தேசத்துக்காக அந்தக் காதலை ஒதுக்கி, மார்கெரட்டை மணந்து கொள்ளுகிறான். பாசம் மிகுந்தவர் பக்கத்திலிருந்தால் உறுதி பிறழும் என்று தாயையும் தனி இடத்துக்கு அனுப்பு கிறான். கலியாணப் பந்தல் பிரிக்குமுன்பே கலகத் தீயும் கனிய ஆரம்பிக்கிறது. ஹாக்கா னுக்கு எதிராக கலகம் செய்து செய்து வந்த ஒரு சிற்றரசனுக்கு ஸ்கூல் ஒரு கடிதம் அனுப்புகிறான். முத்திரையிட மன்னனுடைய முத்திரை மோதி ரத்தையும் உபயோகிக்கிறான். இந்தச் செய்தி காதில் எட்டியதும் கோபத்துடன் புகுந்து, ஹாக்கான் விவகாரத்தை விசாரிக்கிறான். ஸ்கூலும் படபடப்பாக எதிர்க்க முத்திரை மோதிரம் அவன் வசமிருந்து வாங்கப்படுகிறது.

இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்கிறார் பூஜ்யர் நிக்கலாஸ்.. ஹாக்கான் ஜனனம் அவன் பிறந்து ஒரு வருஷம் வரை இரகசியமாக காப்பாற்றப்பட்டு வந்தது. போட்டி வம்சம் சிசுவைக் கொன்றுவிடுமோ என்று இரகசியமாக ஒரு பாதிரியார் வீட்டில் சென்று பெற்றெடுத்து அதை அவர் வசமே விட்டு வந்தாள். பாதிரியாருக்கு ரகசியச் சுமை தாள வில்லை, மடத்தின் அதிபதியான குருவிடம் ஆத்மார்த்தமாக யோசனை கேட்டார். குரு குழந்தைகளை மாற்றி ராஜ குழந்தைக்குப் பதிலாக, வேற்றுக் குழந்தையைக் கொடுத்து விடும்படி யோசனை சொன்னார்…… இப்படியாக ஸ்கூல் காதில் பிஷப் நிக்கலால் சந்தேகவித்தை விதைத்தார்.

அப்பொழுது ஹாக்கான் ராஜபரம்பரை யைச்சேர்ந்தவன் அல்லவா?” என்று ஆவலுடன் கேட்டான் ஸ்கூல்.

“பாதிரி சொன்ன யோசனைப்படி நடந் தானோ என்னமோ ; சம்பவம் நடந்த பிறகு தன்னைப் பயந்து நாட்டை விட்டு ஓடிவிட்டான். ஆனால் சாகும்பொழுது நடந்த விவரம் முழுவ தையும் எனக்கு எழுதி அனுப்பினான் ” என்றார் பிஷப்.

“அந்தக் கடிதம்…?” என்று கேட்டான் ஸ்கூல்.

அதைத் தேடிக்கண்டுபிடித்தாக வேண்டும்” என்று துடிக்கிறான் ஸ்கூல்.

“அந்தக் கடிதம ஹாக்கான் தான் உண்மை யானவாரிசு என் பதை ஊர்ஜிதப்படுத்தினால்…?”

“ஆசையை அவித்து அடங்கி வாழ்வேன்” என்கிறான் ஸ்கூல்.

“அவனுக்கு பாத்தியதை இல்லாவிட்டாலோ?””

“அப்படியானால் அவன் எனக்கு ராஜ்யத் தைக் கொடுக்கவேண்டும். அவன் எங்கு ஓடினாலும், எந்த மாதாக் கோவிலில் தஞ்சம் புகுந்தாலும், துறத்திப்பிடிப்பேன்”…என்கிறான் ஸ்கூல்.

“என்ன செய்தால் என்ன? அவன் தலை யில் அல்லவா கிரீடம் இருக்கும்?” என்று கேட்கிறார் பிஷப்.

“என் வாளைக்கொண்டு கிரீடத்தை பெயர்த்துத் தள்ளுவேன்?”

“தலையில் உறுதியாக இருந்தாலோ?”

“கடவுளோ சாத்தானோ – யார் துணையேனும் கிடைக்கட்டும்? கிரீடத்துடன் தலையைக் கொய்துவிடுவேன் ” என்று சொல்லி விட்டு போகிறான்.

2

பிஷப் நிக்கலாஸுக்கு காலன் வந்துவிட் டான்.உயிர் அங்கோ இங்கோ என்று ஊசலாடுகிறது. வாழ்விலே செய்த வேலை பூர்த்தியாக வில்லை. விஷ வித்தை பூர்ணமாக உழுது பயிரிட வில்லை. அதற்கு முன் காலன் வந்துவிட்டான். வைத்தியன் கைவிட்டு விட்டான். உடம்பு நைந்துவிட்டது. நிற்கவும் ஜீவனில்லை. அவரு டைய ஆத்மா நல்ல கதியடைவதற்காக, பாபங் கள் மன்னிக்கப் பெறுவதற்காக பெறுவதற்காக கோவிலில் ஓயாத பிரார்த்தனை நடக்கிறது. தூங்கி விழா மல், மந்திரத்தை விழுங்காமல் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று உத்தரவு போடுகிறார். பிஷப்புக்கு அந்திமதசை அனுகிவிட்டது என்று மன்னனுக்கும் ஸ்கூ லுக்கும் ஆள் அனுப்பியாகி விட்டது. மன்னனும் சீக்கிரத்தில் வந்து சேரு வார் என்ற செய்தி வந்துவிட்டது.

பிஷப்புக்கு அவகாசம் குறுகுகிறது; செய்ய வேண்டிய வேலைகளை சீக்கிரம் செய்து முடித்து விட விரும்புகிறார். இந்த உடல் அழிந்துவிட்டால் என்ன? குழப்பத்தையும் கலகத்தையும் சந்தேகத்தையும் செழித்து வளரும்படி செய்ய விஷ வித்துக்களை பயிரிட்டு விட்டுச் சென்றால் யார் தலைதூக்கி நிற்க முடியும். நான் செத்தாலும், யாவரும் என் அடிமைகளாக, என் கைப் பாவைகளாக நான் விரித்த வலையில் சிக்கி உழலுவார்கள். உடம்பில் பலம் இருந்தால் போதுமா ; ரத்தத்தில் பாத்யதை இருந்தால் போதுமா? சிற்றரசர்கள் சம்மதம் பெற்றுவிட்டால் போதுமா? உண்மையில் நார்வே என் காலடியில் கிடக்க வேண்டும். நான் செத்த பின்பும் என் காலடியிலேயே எழுந்திருக்க முடியாமல் கிடக்க வேண்டும்.

இப்படியாக எண்ணமிட்டு காலன் வரவை எதிர்பார்த்து தமது சூழ்ச்சி வலையில் புதுப் பின்னல்களைப் போட்டுக்கொண்டிருந்தார்.

அந்தச்சமயத்தில், இங்கா வருகிறாள். நாட்டைவிட்டு ஓடிப்போன பாதிரி கொடுத்து விட்ட கடிதம், ஹாக்கான் உண்மையான வாரிசா என்பதை தீர்மானிக்கும் கடிதம், அதை எடுத்துக்கொண்டு வருகிறாள். அவளுக்கு அந் தக் கடிதத்தில் என்னவிருக்கிறது என்று தெரி யாது. பிஷப் வசம் கொடுக்கிறாள். மகனை தூரத்திலிருந்து பார்த்துவிட்டுப் போக ஒரு தூண் மறைவில் நிற்கிறாள். மகன்பேரில் அவ் வளவு ஆசை. மகனானாலும் மன்னன் உத்தரவு அல்லவா? மறைந்து நின்றே பார்க்க வேண்டியிருக்கிறது.

இவள் சென்றதும் ஸ்கூல் வந்து சேருகிறான். பிஷப் சாகுமுன் கடிதத்தைக் கண்டு பிடிக்க வேண்டும். என்றுதான் அவனுக்கு ஆவல்.

அவன் ஆசையை வளர்க்கிறார் பிஷப் நிக்க லாஸ். அதை எங்கே கண்டுபிடிக்க முடியும் என்று அவருக்கு தெரிந்துவிட்டதாம்.

“எங்கே. எங்கே.” என்று துடிக்கிறான்று ஸ்கூல்.

“அதிருக்கட்டும். நீ எனக்கு ஒரு காரியம் செய் வாயோ, என் மனசு ஆற வேண்டும். அதோ அந்த மேஜையில் இருக்கிறதே, அந்தக் கடி தத்தை யெடுத்துக்கொள்; எனது வேண்டு கோளை நிறைவேற்றுவாயா ; நிச்சயமாக, அப் படியானால் அந்தக் கடிதத்தில் என்னுடைய எதிரிகளின் பெயர் விவரம் இருக்கிறது; நீ அவர் களை கருவறுத்து வஞ்சம் தீர்க்க வேண்டும்; அப்போதுதான் எனது ஆத்மா சாந்தியடையும்” என்கிறார்.

“ஆகட்டும், ஆகட்டும்” என்று அந்தக் கடிதத்தை கையில் எடுத்துக்கொண்டு சத்தியம் செய்துவிட்டு, “அந்த ரகசியக் கடிதம் அது. எங்கே?” என்று பதைக்கிறான்.

“மன்னன் அதோ வருகிறான்; முதலில் ஜாப்தாவை மறைத்து வைத்துக்கொள்;-அரசே எனது அந்திமக் கிரியைக்கு உம்மை மனமாற வரவேற்கிறேன்” என்று உள்நுழைந்த ஹாக். கானை வரவேற்கிறான்.

மன்னனும் வந்துவிட்டான்; நிக்கலஸோ இப்பவோ, இன்னும் சில வினாடியிலோ; நெருப் பில் கால் வைத்து நிற்பவன்போல் பதைக்கிறான் ஸ்கூல்.

“உயிருள்ளவரை தாங்கள் எனக்கு பலத்த எதிரியாக நின்றீர்; நான் அதையெல்லாம் மன்னிக்கிறேன் ; மறந்து விட்டேன், மரணம் பழைய குரோதங்களை போக்குகிறது” என்கிறான் ஹாக்கான்.

“மன்னன் கருணை. என் ஆத்மா குளிர்ந் தது என்று பாராட்டுகிறார் பிஷப்.

“மன்னிப்பை கோரி அழைப்பதுபோல், ஏன் இதை ஏற்பாடு செய்தீர்கள்?” என்கிறான் ஹாக்கான்.

“ஏற்பாடா? என்ன அது?” என்கிறார் பிஷப்.

“மன்னன் என்னைக் குறிப்பிடுகிறார். நான் இங்கு ஆஸ்லோவுக்குள் காலடி வைத்த இந்த நிமிஷம்வரை தங்கள்வரவு எனக்குத்தெரியாது என்கிறான் ஸ்கூல்.

“நாங்கள் இருவரும் தூரத்தில் இருந்தால் தான் எங்கள் நட்பு தழைக்கும்; ஆகையால், கடவுள் பாதத்தை அடைவீராக என்று பிஷப்பை வாழ்த்திவிட்டு புறப்படுகிறான்.

“மன்னா போகாதே நில்; பிஷப் நிக்கலாஸ் தனது கடைசி வார்த்தையை உச்சரித்து முடிக்குமுன் நீ இந்த அறையைவிட்டு வெளியே போகக்கூடாது” என்கிறார் பிஷப்.

ஹாக்கானுக்கு இது ஏதோ பெரிய சூழ்ச்சி என்ற சந்தேகம். தகுந்த பரிவாரத்துடன் ஏற்பாடாக வந்திருப்பதுபோல் தெரிகிறதே.” என் று உடைவாளில் கை வைக்கிறான்.

“கடவுள் சாட்சியாகச் சொல்லுகிறேன்; எனக்கு ஒன்றுமே தெரியாது” என்று பதில் கொடுக்கிறான் ஸ்கூல்.

“என் வாக்கின் சக்தி உங்களை இங்கிருந்து நகரவிடாது; நான் சாகப்போகிறேன். ஆமாம், சாகத்தான் போகிறேன். நானே சவச்சடங்கில் என்னைப்பற்றி சொல்லவேண்டிய வார்த்தைகளை சொல்லிவிடுகிறேன். ஆமாம், கண் மங்குகிறது. நீங்கள் இருவரும் நிற்பதுகூட தெரியவில்லை. என் வாழ்வில் நடந்தவைகள் யாவும் என் கண் முன் மறுபடியும் நடக்கிறது. அரசே கேள். நான் வாலிபத்தில் அதிகாரத்துக்கு ஆசைப் பட்டேன். உலகத்தைக் கட்டியாள விரும்பி னேன். ஆனால் போர்க்களத்துக்கு துணிந்து செல்ல எனக்கு தெம்பு வரவில்லை. ரத்தத்தைக் கண்டதும் குலை நடுக்கம் எடுத்தது. நான் அரசு பதவி வகித்திருந்தால் தெய்வ சாம்ராஜ்யத்தை பெருக்கி இருப்பேன். ஆனால் என் ஆசைக்கு குறுக்கே தெய்வமே தடுத்துநின்றது. உலகத்தில் எனக்குமேல் பெரியவன் இருப்பதைக்காண எனக்குப் பொறுக்கவில்லை. மனசிலே அதிகார வேட்கையும் காமக் கனலும் வாட்டியது. வாள் முனையில் வெற்றிப்பாதை வகுக்க விரும்பினேன். எனக்கு இப்பொழுது வயது எண்பதுக்கு மேலாகிவிட்டது. ஆனால் இன்னும் மனதில் கொதிப்பு அடங்கவில்லை. பிறப்பிலிருந்தே எனக்கு சக்தி இல்லாது போய்விட்டது. நான் உலகை வெறுத்து மடாலயத்துக்குள் புகுந்த தீற்கு அதுதான் காரணம். பாத்திரியானேன். நான் துறவி. நான் பாதிரி – என்ன வேடிக்கை. நான் வலுவற்றவன், பாதிமனிதன், இருந்தாலும் வாழ்வில் தெம்புடன் பிறந்தவர்கள் செய்ய வேண்டியதை, மேலுரை சக்திகள் என்னிடமும் எதிர்பார்த்தன. கேட்டன• தெய்வத்தின் இப்படிப்பட்ட கோரிக்கைகள் நியாயம் என்று நினைத்த நேரங்களும் உண்டு. தெய்வ ஆக்ஞைக் குப் பயந்து நடுநடுங்கிக்கொண்டுதான் எனது மரணப் படுக்கையில் கிடந்ததும் உண்டு. ஆனால் இப்போது என்மனம் உறுதிப்பட்டுவிட்டது. நான் குற்றவாளியல்ல. எனக்குத் தெம்பைக் கொடுக்காதது யாருடைய குற்றம். அந்தத் தெய்வத்தைக் குற்றம் சாட்டி நிற்கிறேன் நான்…” என்று ஆவேசத்துடன் பேசுகிறார் பிஷப் நிக்கலாஸ்.

‘அந்தக் கடிதம். அத்தக் கடிதம்’ என்று அங்கலாய்க்கிறான் ஸ்கூல்.

“தெய்வத்தை தூற்ற வேண்டாம். பணிந்து பேசும்” என்கிறான் மன்னன்.

‘ஆத்ம பண்பாடு ஒவ்வொருவனுடைய தனி விவகாரம்,மன்னா ஜாக்ரதை. தெய்வமே என்னை எதிர்த்து நின்றதுபோல, சகல சக்திகளையும் ஏந்தி உமக்கு வைரியாக ஒருவன் நிற்கிறான். தலை கழுத்தோடு நிற்கும்வரை அவன் உம்மை எதிர்த்தே போராடுவான். அவனுடன் அதிகா ரத்தை பகிர்ந்துகொள்; நார்வேக்கு இரண்டு அரசர்கள் இருக்கட்டும். இல்லாவிட்டால் கல்ல றையில் எனக்கு நிம்மதி இராது. அலகையா கவந்து உங்களை வாட்டுவேன், மன்னா சம்மதிப்பாயா?”

‘அதிகாரத்தில் நான் ஒரு இம்மிகூட விட மாட்டேன்’ என்கிறான் மன்னன். பணியாளனைக் கூப்பிடுகிறார் பிஷப். எனது ஜீவிய பர்ப மன் னிப்பு பிரார்த்தனை நடந்துவிட்டதா, இன்றைய இரவு நான் இழைக்கக்கூடிய பாபத்துக்கு இன் னும் ஏழு முறை பிரார்த்தனை செய்யச்சொல்’ என்று உத்தரவிடுகிறார் பிஷப்.

மறுபடியும் கடிதத்தை ஞாபகப்படுத்து. கிறான், ஸ்கூல்.

“அந்தக் கடிதப்படி அவனே நியாயமான வார்சானால்…” என்று கேட்கிறார் பிஷப்.

‘பணிந்து அவருக்கு ஆட்பட்டுநடப்பேன்’ என்கிறான். ஸ்கூல்.

‘ஸ்கூல், உன்னைப்போல எனக்கும் மனசு இளகுகிறது…’

‘அந்தக் கடிதம்…….’

‘இரு இரு, விரோதிகளைப் பற்றி நான் ஒரு பட்டியல் கொடுத்தேனே, நீ அதிகாரத்தை விட தயாராக இருப்பதுபோல நானும் என் எதிரிகளை மன்னிக்க ஆசைப்படுகிறேன், அந்தப் பட்டியலை இந்த நெருப்பில் போட்டு விடு’ என்கிறார் பிஷப்.

ஸ்கூல் அந்தப்பட்டியலை நெருப்பில் போட்டு விடுகிறான். ‘இதோ எரிகிறது பாரும். அந்தக் கடிதம். ஆயிரக்கணக்கானோர் வாழ்வு அதிலே சிக்கிக்கிடக்கிறது.’ என்று துடிக்கிறான் ஸ்கூல்.

‘ஆயிரக்கணக்கானோர் வாழ்வு ஐயோ கண் மங்குகிறதே, மூச்சடைக்கிறதே’ என்று ஓலமிடுகிறார் பிஷப்.

‘பிஷப்புக்கு அந்திம தசை நெருங்கிவிட்டது’ என்று கூவுகிறான் மன்னன். பாதிரியாரின் பணியாட்கள் ஓடி வருகின்றனர்.

‘அந்தக் கடிதம்’ என்று பிஷப்பை உலுக்கு கிறான் ஸ்கூல்.

‘இன்னும் ஏழு பிரார்த்தனை வில்லியம்’ என்று கூவுகிறார் பிஷப்.

‘அந்தக் கடிதம். கடிதம்’

பிஷப் நிக்கலாஸ் முகத்தில் சாக்காடு தொட்டுவிட்டது. முகம் பொலி விழக்கிறது. சாக்காட்டுடன் போராடுவதுடன் புன்சிரிப்பு மாறாமல் ‘ஸ்கூல், நீ எரித்ததுதான் அந்தக் கடிதம்’ என்று சொல்லிவிட்டு விழுந்து மடிகிறார்.

‘ஐயோ தெய்வமே,’ என்ற கூப்பாட்டுடன் ஸ்கூல் முகத்தை பொத்திக்கொள்ளுகிறான்.

பிஷப் மாண்டுவிட்டார். அவர் வைத்த நெருப்பு மடியவில்லை.

மடாலய சீடர்கள், பணியாட்கள், சாத்தான் வந்து பிஷப் நிக்கலாஸை இழுத்துக்கொண்டு சென்றுவிட்டதாக சொல்லுகிறார்கள்.

3

மன்னன் ஹாக்கானுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. தொட்ட தொட்ட காரியத்தில் எல்லாம் வெற்றி. வம்சம் மங்காதிருக்க ஆண் குழந்தை, ஸ்கூலுக்கு பொறுக்க முடியவில்லை. கடைசி முறையாக மன்னனிடம் பங்கு கேட்டு சமாதானம் பண்ணிக்கொள்ள முயலுகிறான். சந்திப்பில் இருவருக்குள் பேச்சு வார்த்தைதடிக் கிறது. மன்னனுக்கு நாடு இரண்டு படுவதற்கு விருப்பமில்லை. ஸ்கூலுக்கோ தனக்குமேல் அதி காரம் வகித்து எவரும் இருக்கக்கூடாது என்ற உறுதி.

இரண்டு பேரும் துவந்த யுத்தம் நடத்தி, மிஞ்சுகிறவர்களுக்கு அதிகாரம் மிஞ்சட்டும். என்று கோறுகிறான் ஸ்கூல்.

“மனப்பூர்வமான வார்த்தையா?” என்கிறான் மன்னன்.

“எனது வாழ்வில் வேலைக்காக எனது ஆத்மா கடைத்தேறுவதற்காகத்தான் இதைக் கேட்கிறேன்”

“அப்படியானால் உமது உமது ஆத்மா ஆத்மா கடைத் தேறாது ” என்கிறான் மன்னன்.

“அப்படியானால் சண்டைக்கு தீர்மானமா?” என்று கேட்கிறான் ஸ்கூல்.

“நார்வே மக்களை ஒன்றுபடுத்தி நாட்டை வாழ்வுத் துறைப்படுத்துவது என் ஆசை” என்கிறான் மன்னன்.

“நாட்டு மக்களை ஒன்றுபடுத்துவது; யாவ ருடைய மனசிலும் தாம் யாவரும் ஒன்று என்ற பாவத்தை உண்டுபண்ணுவது! உனக்கு ஏன் இந்த விபரீத புத்தி. அது என் என் ரத்தத்தைச் சாகடிக்கிறது; மன்னா சாத்தான்தான் இந்த நினைப்பை உனக்கு அனுப்பி இருக்க வேண்டும். மார்பில் கவசம்பூண எனக்கு பலம் இருக்கும் வரை அந்த நினைப்பை நிஜமாக்கவிடமாட்டேன்.

“இந்த ஆசையை நினைப்பை தெய்வம் எனக்குத் தந்தது. பக்தன் ஓலாப் பணித்த கிரீடம் என் தலையிலிருக்கும் வரை அதை நடத்தியே தீருவேன்”

“அப்பொழுது அந்தக் கிரீடம் அங்கிருந்து தரையில் புரளவேண்டியதுதான் “

“யாருக்கு அந்த தெம்பு “

“வேறு எவருமில்லாவிட்டால்,நான் நடத்துவேன்”

“நாளைக்கு சபைகூட்டுவித்து, உன்வலுவை வாங்கவேண்டியதுதான்.”

“ஹாக்கான், தெய்வத்தை காமியாதே. என்னைப்படுகுழிப் பக்கத்தில் நெருக்காதே.”

மன்னன் கோபத்தை அடக்கிக்கொண்டு “போய்விட்டு வாருங்கள். வார்த்தை தடித்தது என்பதை இருவரும் மறந்து விடுவோம்” என்கிறான்.

“மறுமுறை சந்திக்கும்போது, வார்த்தை கள் இதற்குமேல் கொதிக்கும்” என்று சொல் லிக்கொண்டே வெளியேறுகிறான்.

ஸ்கூல் சென்று சற்று நேரம் கழித்து ஸ்கூல் கோஷ்டியைச் சேர்ந்த சிற்றரசன் ஒருவன் வருகிறான். ஸ்கூல் கட்சியை வெறுத்து மன்ன னுடன் சேர்ந்துகொள்ள விரும்புகிறான். அதற்கு அவன் சொல்லும் காரணம் ஹாக்கானை திடுக்கிட வைக்கிறது.

அமைதியாக உறங்கிக்கொண்டிருந்த மனைவி மார்க்கெரட்டை தட்டி எழுப்புகிறான்.

‘என்ன?’ என்று கேட்டுக்கொண்டு வெளியே வருகிறான்.

‘இப்பொழுது நார்வேயில் இரண்டு அரசர்கள்?” என்கிறான் ஹாக்கான்.

‘இரண்டு அரசர்கள்-அப்பா எங்கே?’ என்று கேட்கிறாள் மார்கெரட்.

‘கப்பலிலேறி தன்னை அரசன் என்று பிரகடனம் செய்துகொண்டு முடிசூட்டிக்கொள்ள நிடராஸ் நகரை நோக்கிபிரயாணப்பட்டு விட்டார்’ என்கிறான் மன்னன்.

‘தெய்வமே.’ என்று ஏங்கிக்கொண்டு அவன் காலடியில் விழுகிறான்.

‘தேசத்தில் இரண்டு மன்னர்கள்.’

‘ஒன்று என் கணவர், மற்றவன் என் தகப்பன்’ என்று எதிரொலிக்கிறாள் மார்கரெட்.

“நான் என்ன செய்யவேண்டும். நினைத்துப் பார்த்து விவேகத்துடன் யோசனை சொல். நான் மலைப்பாதை வழியாகச் சென்று அவர் முடி சூட்டிக்கொள்ளுவதை தடுக்கட்டுமா? உன் தகப்பனார் நிடராஸுக்குப் போகுமுன் அவரை எப்படிக் கொல்லுவது”.

“ஹாக்கான், ஹாக்கான்.’

‘அவரைக் கொல்லுவதற்கு லேசான தந்திரம் எதுவும் சொல்லேன்?’

‘அவர் என் தகப்பனார் என்பதை அடியோடு மறந்து விட்டீர்களா?’

‘உன் தகப்பன், ஆம். ஆம். அதை மறந்து விட்டேன்; அதற்கு நீ எனன செய்வாய். ஸ்கூல்தான் எனக்கு படு வைரியாகிவிட்டார், தெய்வமே. தெய்வமே என்னை ஏன் இப்படி அடிக்கிறாய். என்னை, பாவம் செய்யாத என்னை. யார் அங்கே இந்த அர்த்த ராத்திரியில் கதவைத் தட்டுகிறது.

‘குளிரில் கிடந்து செத்துமடியும் ஒருத்தி.’ என்று வெளியிலிருந்து ஒரு குரல் கேட்கிறது.

‘அம்மா’ என்று அலறிக்கொண்டு கதவைக் திறக்கிறான், ஹாக்கன்.

‘என் தாய்! மகன் வீட்டு வாசலில் நாய்போல் காத்துக்கிடப்பது?, கடவுள் என்னை தண்டிக்கிறார் என்ற சந்தேகம் வேறு எனக்கு.’

‘ஹாக்கான், குழந்தாய், தெய்வம் உன்னை ரக்ஷிக்குமாக.’

“கடமையில் வழுவாதிருக்க பாசத்தை துறந்தேன். பாசம் தரும் உங்களிருவரையும் என் இதயத்திற்கு வெளியே தாளிட்டேன்!”

“ஹாக்கான்! கடைசியாக உன் இதயத்தில் எனக்கும் இடம் உண்டா?” என்று மகிழ்ச்சியுடன் கேட்கிறாள் மார்க்கரெட்.

அதற்குள் மன்னன் பரிவாரத்திலுள்ள சிற்றரசன் ஸ்கூலின் புரட்சி பற்றிய செய்தியுடன் ஓடி வருகிறான்.

“பதறாதே, நார்வேயில் அரசர் இரண்டு இருந்தாலும் உயர இருப்பவன் ஒருவன் தான். அவன் சிக்கலைத் தீர்த்து வைப்பான் என்று ஆற்றுகிறான் மன்னன்.

4

பிஷப் நிக்கலாஸ் இட்ட தீ நார்வேயில் நன்றாகப் பற்றிக்கொண்டது. பாதிரியார் விரும் பியபடி அவர் உருட்டிவிட்ட விஷம சக்கரத்தின் வேகம் கைக்கடங்காதுபோல் சுழல்கிறது. ஸ்கூல் தலையில் கிரீடம் ஏறிவிட்டது. ஆஸ்லோ அரண் மனை அத்தாணி மண்டபத்தில் கோலாகலம், ஆனால் ஸ்கூல் மனசில் மட்டும் வலுவு குடியேற வில்லை. அடிக்கடி மனசிலே சந்தேகம். தன் பணத்தைப்பற்றி நம்பிக்கை குறைவு. “நம்ப முடியாதது நடந்துவிட்டது. ஹாக்கான் தோற் றான், நான் வென்று விட்டேன்; வெற்றியின் சாயையில் அந்தரங்க பீதி ஒளிந்து கிடக்கிறது. உரிமை பெற்றிருந்தால், வெல்லும் சக்தி அதனு டன் வராது. மனசிலே நோய், நோய். தெய்வமே நியாயம் ஏன் என் கட்சியில் இருக்கக்கூடாது?

தெய்வம் எனக்கு வெற்றியைக் கொடுத்தபோது. நியாயமும் என் கட்சியில்தான் இருக்கிறது. என்பதை உறுதி கூறுவது போலில்லையா ? “நார்வே இதுவரை வெற்றரசாக இருந்தது. இனிமேல், ஜனசக்தியின் சம்மதமும் பலமும் பெற்ற ராஜாங்கமாகிவிடும் ” என்று ஹாக்கான் கர்ஜித்தபோது அரசபதவி அவனுக்கே உரிமைப் பட்டதுபோல என் கண்களுக்குப் பட்டது. ஒருவேளை அவனுடைய விபரீத வார்த்தைகளில் தெய்வ அபிஷ்டம் தொனித்ததோ, தெய்வத்தின் வாக்கை பரப்ப வந்தவனோ அவன் ” இப்படி அல்லாடுகிறது ஸ்கூல் மனம். பக்தன் ஓலாப் விக்கிரகத்தின் முன்பு முடிசூட்டல் நடக்காதது கெட்ட சகுனம் என்று ஜனங்கள் பேசிக் கொள்ளுகிறார்கள் என்ற வார்த்தைவேறு அவனுக்கு பயத்தைக் கொடுக்கிறது.

யுத்தம் நாலா திசையிலும் மூண்டுவிட்டது என்ற செய்தி அடிக்கடி வந்து குவிகிறது. தன் பலம் படிப்படியாக குன்றிவிடுமோ என்று பயப்படுகிறான்.

மனம் அல்லாடிக்கொண்டிருக்கையில்தனது. ஆஸ்தான கவியை கூப்பிட்டழைக்கிறான். ஜட் டாகீர் பிறப்பிலே கவி. அவன் வாக்கில் இசை, தானே வந்து தவழ்ந்து விளையாடும்.

“ஜட்டகீர், நீ எப்படிக் கவியானாய், யாரிடம் பாடக் கற்றுகொண்டாய்?” என்று கேட்கிறான் ஸ்கூல்.

“அரசே, கற்றுக் கவியாக முடியாது” என்கிறான் ஜட்டாகீர்.

“அந்தப் பரிசு உனக்கு எப்படி கிடைத்தது?”

‘எனக்கு துன்பம் என்ற பரிசு கிடைக்தது, என்னைக் கவியாக்கியது.’

‘பாடுவோருக்கு துன்பப் பரிசுதான் தேவையோ?’

‘அரசே எனக்கு அது தேவையாக இருந்தது, சிலருக்கு பக்தி, வேறுசிலருக்கு போகம், மற்றும் சிலருக்கு சந்தேகபுத்தி…’

‘சந்தேக புத்தியுமா?’ என்று ஆச்சர்யப்படுகிறான் ஸ்கூல்.

ஆனால் சந்தேக புத்தியுள்ளவனுக்கு நெஞ்சி லும் புத்தியிலும் திடம் இருக்க வேண்டும்.

‘அதாவது…’

‘அதாவது தனக்குள்ள சந்தேகத்தையே சந்தேகிக்கும் சக்தி.’

‘அப்படியென்றால் மரணம்தான்.’

‘அல்ல’, மரணத்தைவிட படுமோசம். இருளும் ஒளியும் அற்ற கருக்கல்.’

‘ஜட்டாகீர், இன்னும் உன் மனசில் நீ பாடாத பாட்டுக்கள் பல இருக்குமோ?’

‘அரசே பிறக்காத பாட்டுகள் பல உண்டு, அவை ஒவ்வொன்றாய் பிறக்கின்றன’.

‘இருக்கட்டும். நான் உன்னை கொன்று விட் டால், பிறக்காத உனது எண்ணங்கள் உன்னு டன் மடிந்துவிடுமா? என்று கேட்கிறான் ஸ்கூல். ‘அழகான நினைப்பை கொல்லுவது மகாபாவம்.’

‘பாபத்தைப்பற்றி கேட்கவில்லை, முடியுமா?” ‘அரசே, நானறியேன்.’

‘வேறு ஒரு கவி ஓருவன் அழகான கருத்து ஒன்றை உனக்கு சொல்லுகிறான் என்று வைத் துக்கொள்; அவனைக் கென்று அதைத்திருட நீ ஆசைப்படுவாயா?’

‘அரசே, நான் மலடுஅல்ல, எனக்கும் நினை வுக் குழந்தைகள் பலவுண்டு. வேற்றொருவர் குழந்தைக்கு ஆசைப்படும் ஆசைப்படும் அவசியம் எனக்கில்லை’

இம்மாதிரியான கவியின் வார்த்தைகள் எல்லாம் ஸ்கூலுக்கு அவனது திறமை யின்மை யை இடித்துக் காட்டுவன போலிருக்கிறது. சோர்வு வலுக்கிறது. இந்த நிலையில் தனக்கு ஆண் மகவு இல்லாதது பெரும் குறையாக, பலக்குறைவாக மனசை: வாட்டுகிறது. புது

மன்னன் ஸ்கூலுக்கு. முன்பு எப்போதோ தன் ஆசையின் விளைவால் பிறந்த பையன் ஒருவன் எதிர் வருகிறான். நீரில் உயிருக்கு அல்லாடுகிற வன் கை சருகையும் எட்டிப் பிடிக்குமல்லவா? அவனைத் தன் மகனாக பட்டத்து இளவரசாக ஏற்று அவனை ஊன்று கோலாக நம்புகிறான் ஸ்கூல். அவன் பெயர் பீட்டர், தகப்பன் பேரில் மாறாத பக்தி, தகப்பன் சொல்லுவதே வேத வாக்கு, அவன் ஆசையை நிறைவேற்ற செய்யும் எந்தப்பாபமும் புண்ணியமாகத் தோற்றுகிறது அவனுக்கு. தகப்பனாருடைய ஆசையைப் பூர்த்தி செய்ய, பாதிரிகள், மதகுரு முதலியோருடைய சாபங்களையும் பொருட்படுத்தாமல், பக்தன் ஒலாப் விக்கிரகத்தை முதுகில் தூக்கிக்கொண்டு வந்துவிடுகிறான். இந்த அடாத செயலைக்கண்டு ஸ்கூல் மனம் பிரமிக்கிறது. மகனுடை பக்தி ஆவேசத்தைக்கண்டு பயப்படுகிறான். போரின் கொழுந்து நாலா திசையிலும் படர்கிறது. ஸ்கூல் தன்னைச்சுற்றிலும் எரியும் தீயைக்கண்டு பயந்துவிடுகிறான். தன்னால் கொழுந்விட்டு எரி யும் தீயைக் கண்டு நடுநடுங்குகிறான். போரின் போக்கு இவனுடைய நலத்துக்கு மாறாகத் திரும்புகிறது. ஹாக்கான் வெற்றி வீரனாக மோதிப் புடைத்துக்கொண்டு வருகிறான். ஸ்கூல் தேவாலயத்தில் புகுந்து உயிர் தப்ப ஓடுகிறான்.

5

எக்ஸஸீட்டர் கன்னியாஸ்திரிகள் மடத் தில், ஹாக்கான் தன்னுடைய குழந்தையையும் மனைவியையும் அனுப்பிவிட்டு, வெற்றிப் படை யுடன் வெகுண்டு வருகிறான்.

மிரண்டு ஓடிவரும் ஸ்கூலும் அதற்குள். தஞ்சம் புக ஓடி வருகிறான். உள்ளே அவன் மனைவி, மகன், யாவரும் இருக்கின்றனர். வெளி யே வந்து நின்று கதவைத் தட்டுகிறான்.

‘யார் கதவைத் தட்டுகிறது’ என்று கேட் கிறான் மார்க்கெரட்டுடன் துனையாக வந்த மெய்க்காவலன்.

‘ஒரு அரசன்’ என்று குரல் கொடுக்கிறான் ஸ்கூல்.

‘ஸ்கூலா?”

‘மன்னன் ஸ்கூலா?” என்று கேட்கிறாள் மனைவி.

‘அப்பா’ என்று கூப்பிடுகிறாள் மார்கெரட்.

‘கதவைத் திற, கதவைத் திற ‘

“துரோகிகளுக்கு உள்ளே இடமில்லை’ என்கிறான் ராணியின் மெய்க்காவலன்.

“அது என் அப்பா” என்று அலறுகிறாள் ராணி.

“தேவாலயத்தில் இடம் கொடுக்க மறுத் தால் தெய்வசாபம் சேரும்” என்கிறாள் ஸ்கூலினுடைய மனைவி.

“தெய்வத்தின் பெயரால்” என்று கதவு திறக்கப்படுகிறது.

உள்ளே சோர்ந்துவந்த ஸ்கூல், உள்ளம் நொடித்துவிடுகிறான். ஹாக்கான் வந்ததும் மன் னிப்புக் கேட்கவும் தயாராகி விடுகிறான்.

ஸ்கூலுக்கு மனசிலே சோர்வு, காலிலே தளர்ச்சி.

ஸ்கூலின் வார்சு, அரசன் ஹாக்கானுடைய குழந்தையைக் கொன்றுவிட்டால், அவன் வலு ஓடிந்து விடும் என்ற நம்பிக்கையில், அசுரன் போல் தேடி வருகிறான். மதிலேறி உள்ளே நுழைய முயலுகிறான். ஜனக்கும்பல் அவனைப் பார்த்து விடுகிறது. ஓலாப் சிலையைப் பங்கப் படுத்தியவனல்லவோ! ஜனங்கள் கொந்தளித்துக் கொண்டு கொல்ல தயாராகிறார்கள்.

ஆனால் அவன் வெறியனாக குழந்தையைக் கொல்லும் ஏகநோக்கத்துடன் உள்ளே குதித்து விடுகிறான்.

வெளியே ஜனக்கூட்டம், கதவை உடைக்க முயலுகிறது.

வெளியே இவர்களை விரட்டுவதுதான் நல்லது. தஞ்சம் என்று வந்தவனையும், அவனுக் காக உழலும் வெறியனையும் எப்படி தெய்வ மண்ணிலிருந்து போ என்று சொல்லுவது?

ஸ்கூல் திடீரென்று தீர்மானிக்கிறான்.

“கதவைத் திறவுங்கள்; நாங்கள் வெளியே போகிறோம், சிலர் வாழப் பிறந்தவர்கள், சிலர் சாகப் பிறந்தவர்கள், தெய்வம் வழிகாட்டிச் செல்லாத பாதையிலேயே என்மனம் செல்கிறது, அதனால்தான் இன்றுவரை எனக்கு வழி துலங்க வில்லை. மன்னன் ஹாக்கானுக்காக நான் காத் திருக்க மாட்டேன் ” என்று சொல்லிக்கோண்டு வெளியே தனது பட்டத்து இளவரசுடன் செல்லுகிறான்.

வெளியே ஒருநொடி கத்திகளின் சலசலப்பு: அவ்வளவுதான். இருவரும் பிணமாகிவிட்டனர்.

மன்னன் ஹாக்கானும் பிரவேசிக்கிறான்.

“அரசே இனி உனக்கு பகைவர்களில்லை” என்கிறது பல குரல்கள்.

“அவர் உடம்பு என்னை வழி மறிக்கிறது ” என்கிறான் மன்னன்.

“தாண்டிச்செல்ல வேண்டும்”

“தெய்வத்தின் கட்டளை அதுவானால், அப்படியே ஆகட்டும்” என்று தாண்டுகிறான்.

“இனி நார்வேயில் அமைதி, தேசத்தின் படுதுரோகி அதோ உம்காலடியில் கிடக்கிறான்” என்கிறான் ஒரு சிற்றரசன்.

“அப்படியல்ல, அவன் வாழ்வே ஒரு அதிசயம். கடவுள் அவனை தன் சக்களத்தி பிள்ளையாக பாவித்து நடத்தியது.”

– உலக அரங்கு (நாடகக் கதைகள்), ஷேக்ஸ்பியர், தமிழில் தருபவர்: புதுமைப்பித்தன், முதற் பதிப்பு: மார்ச் 1947, ஸ்டார் பிரசுரம், திருச்சினாப்பள்ளி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *