(1975ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“பட்டங்கள் நிலையானவை” என்றார் முதலாம் ஆள்.
“உண்மை, நாங்கள் செத்தாலும் எங்கள் பட்டங்கள் அழியாது போலத்தானிருக்கு” என்றார் மற்றவர்.
“இப்ப பாரும், எப்பவோ ஒரு காலத்தில எழுதினது உண்மைதான்: இப்ப பத்துப் பதினைஞ்சு வருஷமா பேனையைக் கையாலை தொடேல்லை. இன்னும் “எழுத்தாள”னெண்டுதான் சொல்லுறாங்கள்”
“உதென்ன பெரிசு? நான் ஒரு காலத்திலை தொழிலாளியாயிருந்தவன்தான். இப்ப என்ர பட்டறையில எனக்குக் கீழை பத்துப்பேர் வேலை செய்யிறாங்கள். எண்டாலும் இன்னும் என்னைத் “தொழிலாளி” எண்டுதான் சொல்றாங்கள்”
– ‘கடுகு’ குறுங்கதைத் தொகுதி, முதற் பதிப்பு: ஆடி 1975, ஐ.சாந்தன் வெளியீடு, மானிப்பாய்.
– கதை கதையாம்… – தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள் – தொகுப்பு: சு.குணேஸ்வரன், முதற்பதிப்பு: 24.01.2012, இளையகுட்டி அருமைக்கிளி நினைவு வெளியீடு, தொண்டைமானாறு.