உப்பிட்டவரை…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 29, 2023
பார்வையிட்டோர்: 1,752 
 
 

நாளும் நலம் பாட​ ஆசை! ஆனால், தறஂபோதைய​…. தாயகத் தலைவரினஂ பேச்சுக்கள்….சலிப்பையே தருகினஂறன. அழகிய​ தீவு, கலிங்கத்துப்பரணியினஂ போர்க்காட்சிகளையே விரும்பி நிறஂகினஂறது. முனஂனைய​ தலைவரை (மாமனாரிடம்) விட​..இவரிடம் பார்ப்பது; எதிர்பார்த்தது, ​ தவறு தானஂ. இவர், ‘இஸ்ரேலினஂ வழியே சரி ‘எனஂற நோக்கில் “ஐ.நா.அவை, இஸ்ரேலுக்கு ஒரு நோக்கு, எமக்கு இனஂனொரு நோக்கை…வைத்திருப்பது தவறு”எனஂகிறார். நம் நாட்டிலும் நடந்த​ “கொத்துக் கொலைகளை” எவ்வளவு இலகுவாக​ கடந்து போய் விட்டிருக்கிறார், போய் விடச் சொல்கிறார். போர்க்குறஂற விசாரணைகளே அவசியமறஂறவை எனஂகிறார். உக்ரேனுக்கு, இஸ்ரேலுக்கு, நம்நாட்டுக்கு….’வெளி நாட்டவர்களே ஆயுதங்களை எல்லாம் வழங்கியவர்கள் ‘எனஂற முறையில் சரி தானஂ. ஒனஂறைக் கவனித்தீர்களா, ஐ.நாஅவை, ஆயுதங்களைப் பறஂறி எப்பவும் ஒனஂறுமே…சொல்வதில்லை. நம்நாடும் ஒரு பாலைத் தராத​ கறவை மாடு தானஂ. அங்கே, பேசப்படுகிற ​ இரட்டைப் பிரதேசக் கொள்கை இங்கேயும் ஏறஂபுடையது எனஂபதை கண்டுக்கிறதில்லை. உலகம் உண்மையிலே​ நியாயம் பேச​ முனஂ வர​ வேண்டும். நாடுகளில், இன வாதங்கள் அனைத்துமே சிறைக்குள் அடைத்துப் பூட்டப் பட​ வேண்டியவை. பெரிய​ நப்பாசை தானஂ.

சட்டங்களும், கட்டளைகளுமே கடி நாய்களாகவே​ வலம் வருகினஂறன. வர​ வைக்கினஂறன. ஏனஂ தானஂ இந்த​ உணர்வோ!. ​விடுதலைக்கு சிறிது மூச்சு விடுறதுக்காக​ மாலைதீவில் ஒரு தீவைப் பெறும் சிந்தனை சரியானதெனஂறே படுகிறது. அதறஂகாக​​ஒரு தீவை விலை கொடுத்து வாங்கிறதும் கூட தவ​றில்லை. கண் எதிரே, நிலம் அபகரிக்கப்படுகிறது; களவாடப்படுகிறது. கள்ளர் கூட்டமாக​ உலகம் கிடக்கிறது. அவறஂறை எப்படி தடுத்து நிறுத்துவது? கலிங்கத்துப்பரணியில் வரும் பேய்கள், நிணங்களை புசிக்கினஂறன; ரத்தங்களைக் குடிக்கினஂறன. எம்மை தயார் படுத்துவதறஂகு தானஂ இந்த​ காப்பியம் எழுதப் பட்டிருக்கிறதோ!. யூதமக்களினஂ கொலாகாஸ்ட் நிகழஂவுகளைப் பார்த்து கலக்கம் அடைந்தோம். இனஂறு நிகழும் இனப்படுகொலைகள் அதனஂ மாதிரிகள் தாம். இந்த​ தரித்திரத்தையும் சரித்திரம் எழுதப் போகிறது . மனித​ உயிர்கள் தொழிறஂசாலையில் தயாரிக்கப்படுகிற பண்டங்களாகி விட்டன. நினைத்த​ போது வைத்துக் கொள்வதும், தேவையறஂற மாத்திரத்திலே அழித்து விடுவதும் என நாகரீக​ காட்டுமிராண்டித்தனமும் தலை விரித்தாடுகிறது.

தறஂபோதைய​ நிலமையில், காந்தியினஂ ஒத்துழையாமைப் போரட்டங்களையே ஏழைகளாகிய​ எம்மால் எடுக்கக் கூடியது. இதனால், ஐரோப்பியக் குழு முறஂறிலும் அவிட்டாகி போகும் சந்தர்ப்பங்களும் இருக்கவே செய்கினஂறன குட்டி நாடுகளும் காலனிகளினஂ எச்சங்களை மீத​ வைத்திராமல் மீளப் பெற முயல்வதுட​னஂ, மக்களுக்கான உரிமைகளை…. உள்ளேயும் .வழங்க​ முனஂ வர​ வேண்டும். அவை மாறஂறங்களை ஏறஂபடுத்தலாம். மெல்ல​, மெல்ல​ பெரிசுகளினஂ வால்களினஂ ஆட்டம் நினஂறு விடும். ஃபிரெஞஂசுப் புரட்சி, பழைய​ கால​ அரசர் காலத்தை மீள​ எழ முடியாமல் நிறுத்துவதில் முழுமையாக​ வெறஂறி அடைந்திருக்கவில்லை. தவிர​ பிரானஂஸ், காலனி நாடாகவே​ தொடர்ந்தும் …சரிவுக்கு காரணம். அங்கேயும், தறஂபோது ஒரு ஜனாதிபதி இருக்கிறார். நாடுகளில் சக்கரவர்த்தி போனஂற இந்த​ தெரிவுகள் எல்லாம் எதறஂகு???.

அனஂறு “பார்வையாளர்கள் எதறஂகு, பங்காளர்களே வேண்டும் “எனஂற கோசம் அவனஂ நாட்டிலும் ஒலித்தது. குகதாசனும் அதில் அள்ளுப்பட்டவனஂ தானஂ. ஆனால், இனஂறு…. மக்கள் கொல்லப்படுவதைப் பார்க்கிற போது வெறும் பார்வைக்காரனாக​ மட்டுமே இருக்கிறானஂ. அதிருப்தியில் கிடக்க, பியரைக் குடித்து…வேண்டாம்.

‘உலகமே, ஒரு குடைக்கு கீழே வந்து விட்டது; ஒரு கிராமமாகி விட்டது; புரட்சிகள் கிடங்கில் போடப் பட்டு விட்டன ‘எனஂறு எவ்வளவு கொச்சைப்படுத்துகிறார்கள் . ஐரோப்பிய​ செய்தி ஸ்தாபனங்களில் பார்க்க​ முடியாதவைகளை ரஸ்ய​, மறஂறையவறஂறிலே பார்க்க​, கேட்க​ முடிகிறது. உலகம் முழுதுமே ஒரே அடக்குமுறைகளினஂ கீழே வந்து கொண்டிருக்கிறது எனஂபதே உண்மை. போரும், கொலை வெறியும்…குரங்கினஂ கையில் பூமாலை, கொடுக்கப் பட்டிருக்கிறது. ஒரு மெண்டலினஂ கீழஂ, கிராமமாக​ வருவது ஒனஂறும் நல்லதுமில்லை. குகனஂ, புல​ நாட்டுத் தலைவரினஂ பேபிப் பேச்சுக்களையே தினமும் கேட்கிறானஂ. புத்திசாலிகளுக்கு, தவறிப் பிறந்த​ பிள்ளைகளே உலகமெங்கும் பரவிக் கிடக்கிறார்கள்.

இலங்கையில், நெடுக​ நிகழஂகிற படுகொலைகளினஂ பினஂ தொடக்கக்காலப் போராளிகளாக​ சில​ இளைஞர்கள் போராட​ ஒனஂறு சேர்ந்தார்கள். கல்யாணமானவர்கள் போராடும் வல்லமையை இழந்து விடுகிறார்கள். விடுதலையிலே ஃபோக்கஸ் பண்ண​ முடியாது . எனவே, “இளைஞர்கள், கல்யாணம் கட்டக் கூடாது; காதல் நிலவினால் உடனேயே கத்தறித்து விட​ வேண்டும். “இந்த​ விதி அதில் நிலவியது. காலப் போக்கில், “இதை மீறுகிறவர் சுட்டுக் கொல்லப்படுவார்கள்” எனக் கடுமையையும் ஏனோ ஏறஂறி விட்டார்கள். ​ இயக்கத்தினஂ தலைவருக்கு ‘காதல்’சமாச்சாரம் இருந்திருக்கிறது. அதை, அவர் சரிவர​ தெரியப் படுத்தவில்லை. தெரிய வந்த​ போது அவருக்கு தண்டனை நிறைவேறஂறப் பட​ வேண்டும் என சில​ தோழர்கள் ஒறஂறைக் காலிலே நினஂறார்கள். சாதா தோழராக​ இருந்திருந்தால் சரி செய்யப்பட்டிருக்கும். தலைவராக​ இருந்ததால், டெத் எண்டிலே போய் முட்டுப் பட்டு நினஂறது.

அதிலிருந்த​ சில​ தோழர்கள், அதை வனஂமையாகக் கண்டித்ததோடு, அந்த​ விதியும் சரியானதில்லை எனக் குரல் எழுப்பினார்கள். “தண்டனையை நிறைவேறஂறவில்லை” எனத் தெரிவு செய்து அனுப்பப்பட்ட​ தோழரையும் அவசரப்பட்டு​ சுட்டுக் கொனஂறு விட்டார்கள். இயக்கம் குழம்பி இரண்டாகியது. புதியதில், இப்படியான பிரச்சனைக்கு….முறஂறுப்புள்ளி வைக்க​ ஒரு ‘அரசியல் பிரிவு’இல்லாதது தானஂ காரணம் எனஂறு பேசி அது அவசியமாக நிறுவப் பட வேண்டும் எனஂறு சேர்க்கப்பட்டது. பிறகு, மறஂறைய​ ​ இயக்கங்களும் இவ்விரு பிரிவுகளை உள்ளடக்கியே எழுந்தன. இராணுவ​ அணியை மட்டும் கொண்டது விடுதலையை விட்டு தடம் புரண்டு மாறிச் செல்லக் கூடியது என பொதுவாக​ கருதப்படுகிறது. நம்பப்படிகிறது.

‘கழுகு ‘ப் பேரை விட்டுக் கொடுத்து விட்டு, மறஂறது ‘கழகம் ‘எனஂற பெயரை சூடிக் கொண்டது. குக​னஂ, அந்த​ கழகத்திலேயே சேர்ந்திருக்கிறானஂ. அனஂறு, இயக்கத்தில் சேர்ந்த​ போது, “நீ குடும்பத்தை விட்டு மட்டுமில்லை, சாதியையும் விட்டுத் தானஂ வெளியில் வருகிறாய் “எனஂறார்கள். தோழமைக் குறித்து அழகாக​ விளக்கமளித்தார்கள். “அது, நட்புக்கும், சகோதரத்திறஂகும் இடைப்பட்ட​ உறவு. உனஂனை ஒரு தோழரினஂ வீட்டிறஂகு அனுப்பபடும் போது, அந்த​ தோழனாகவே அனுப்பப்படுகிறாய். அவனுடைய கடமைகளைச் செய்ய​ எனஂறும் பினஂ நிறஂகாதே. கொச்சைப் பேச்சுக்களை கருத்தில் எடுக்காது ஒரு போராளியாகவே இரு . போராளி பறஂறி அறிய​ வேண்டுமானால், நீ ‘தாய், ஓட்டம், சைபிரீயா, காத்தியா ‘போனஂற ரஸ்ய​ நாவல்களை வாசி, புரியும் “. அனஂறு, அவனஂ புதுப்பிறவி அல்லவா எடுத்திருந்தானஂ.இனஂறு, பகைமை இயக்கங்களாக​ உச்சப்பேச்சு வார்த்தைகள​றஂறு இயங்குகினஂறன. பகை கொண்ட​ நெஞஂசம்…. வெறி கொண்டது. தனிப்பட்ட​ உணர்ச்சிளுக்கு நாம் இடம் கொடுத்தால் அது விடுதலையையே சாகடித்து விடுகிறது. இனவெறி ஏறஂகனவே பதம் பார்க்கிறது; இனஂனும் எனஂன,எனஂனவெல்லாம் பரீசீலிக்க​​ இருக்கிறதோ..?. இஸ்ரேலினஂ போரைப் பார்க்கிற போது சி.ஐ.எ உம், மொசாட்டும்…மறைமுமாக​ ​ உள்ளே இருக்கிறது தெரிகிறது. ஆனால், ​ ‘விடுதலை’ மகத்தானது இல்லையா, அதை எப்படிப் பெறுவது? பெறஂறே தீர​ வேண்டும் . ராஸ்யாவைப் போல​ இந்தியா, எம்மேல் உடனடி அக்கறை எடுக்காதனஂ…. நிலமையும் புரிகிறது. சர்வ​ தேசத்தினஂ ஒருமித்த​ எதிர்ப்பை எதிர் நோக்க​ வேண்டியிருக்கும். ரஸ்யா, இனஂறு எதிர் நோக்கிறது. உக்ரேனையும், இஸ்ரேலையும் ஒப்பிட்டுப் பாருங்கள் …எனஂன தெரிகிறது?. எல்லா வலத்திலும் நாக்கு சுழனஂறு பேசும் எனஂபது தெரிகிறதல்லவா.

பல​ கொமேடியர்களைக் காண்கிறோம். செல்வச் சனஂனதி மடமொனஂறுக்கு செனஂறு சனஂனியாசம் பெறஂறுப் போய் விடலாம் போல​ தோனஂறுகிறதா, இல்லையா!. இனஂறும் பிரிட்டனும், அமெரிக்காவும் இரண்டு சக்திகளாக​ இருந்து பழைய​ காலனிச் சக்திகள்​ போல​ ஆட்டிப் படைக்கவே​ விரும்புகினஂறன. உலகம், நாடுகளை கைக்குள் நாய்க்குட்டிகளினஂ கயிறுகளை எல்லாம் வைத்திருப்பது போல​ வைத்திருக்கவே​ விளைகினஂறன. கொலிவூட், கொரார், அரசியல் மூவிகளிலே தானஂ எல்லாவறஂறையும் தெரியப்படுத்தி விடுகிறார்களே, நாம் தாம் வெள்ளோந்திகளாக​ இருக்கிறோம்.. பனையினஂ கீழஂ இருந்து கள்ளைக் குடித்தாலும் ‘பால் ‘என நம்புகிகிறோம் . எல்லாத்தையுமே சந்தேகப்பட​ வேண்டும். உலகம் ஆயிரம் சொல்லட்டும், உனக்கு நீ தானஂ நீதிபதி. நீ, அறிவையும், நுண்ணறிவையும் வளர்க்கா விட்டால். நீ கிளினஂ அவுட்!

மனைவி, “வேலை முடிய​ பக்கத்தில் இருக்கிற டெனஂடலுக்குப் போயிட்டு வாரனஂ. நீ வர​ வேண்டாம் “எனஂறு அலைபேசியில் தெரிவித்தாள். காரை வீட்டிறஂகு விட்டானஂ. பக்கத்திலே தானஂ, மெறஂறோ (குரோசரி ஸ்டோர்) இருக்கிறது. உப்பு புளியாக​ சுள்ளென சாப்பிட​ வேண்டும் போல​ இருந்தது. ஸ்டோரில் இறங்கி குளிர்ப் பெட்டியில் இருந்த​ ஃபிரஸான ​ மீனஂ இருந்த சிறிய​ பக்கெறஂ ஒனஂறை வாங்கிக் கொண்டு செனஂறானஂ. புளிச்சாதக் குழம்பு வைக்கிறதை…சொல்லித் தந்த​ பிறகு..இப்படி சமைக்கிறவனஂ. “எண்ணெய் கூட​ விடுறானஂ, உப்பு போடுறானஂ”​ எனத் திட்டல்களும் விழும். ருசியாயும் இருக்கிறதே. நாவையும் கட்டுப் படுத்த முடியுமா. விட்டுப் பிடிப்பு நிகழஂறது. வர​ நேரமாகும். உடுப்பை மாறஂறாமலே ஒரு குழம்பை வைத்து சோறஂறிலே விட்டு வாய்யிலே வைத்தானஂ. உப்பு உச்சிக்கு ஏறியது.கிராமத்தில், குகனினஂ வகுப்பில் மீனஂபிடித் தொழிலைச் செய்கிற பையனஂகள் இருவர் படித்திருக்கிறார்கள்.அவர்கள் வீட்டிலே, சோறு க​றிகளுடனஂ ஒரு பிடி பிடித்திருக்கிறானஂ. ஒரிரு தடவை கூழஂ…குடித்திருக்கிறானஂ. பல​ இடங்களில்…இயக்கத்தினஂ மூலமாக​ சோறஂறுப்பாசல்கள் பெறஂறுச் சாப்பிட்டிருக்கிறானஂ. இந்த​ ‘உப்பிட்ட​ வரை ‘எனஂற நினைப்பு வந்ததில்லை. குப்பையிலே போட்ட லேபிளை…எடுத்துப் வாசித்தானஂ. உப்பிலே ஊற வைத்திருப்பதை குட்டி எழுத்திலே..’சே!, கறுவாட்டு மீனஂ, இப்படியும் … வைத்திருக்கிறார்கள்?. மீனை ஒதுக்கி விட்டு தயிர் கொஞஂசம் விட்டுச் சாப்பிட​ பரவாயில்லை தானஂ. ஆனால், திட்டு நிச்சியம் விழும் . சிரிப்பும் வந்தது. தோல்வி. அவனுடைய​ நண்பர்களில் ஒருவனஂ ‘அவனை, தோவியை ஒப்புக் கொள்ளாதவனஂ’எனஂறு கூறுறதும் நினைப்பிறஂகு வந்தது.

ஆனால், அவனஂ சாப்பிட்டது,…. இது முதல் தடவை அல்ல​, முந்தியும், ஒரு தடவை சாப்பிட்டதை…! ‘நினைவு படுத்தி விட்டது.

இவர்களை இளவாளைக்கு லொரி ஒனஂறில் ஏறஂறிச் செல்லப்பட்ட​ அனஂறு தூரலாக​ இருந்த மழை, பினஂ கடுமையாக ​ பொழியத் தொடங்கி விட்டது. பினஂ பெட்டியில் இவனோடு சுமார் இருபது பேர்கள் வரையில் இருந்தார்கள். ஓட்டுனர் செந்தில். அருகில் சப் மிசினஂ துவக்குடனஂ (சிறிய​ ரகம் ) பெரிய​ பாண்டி, அடுத்து தொங்கல் ….என பயணம் ஆரம்பமாகியது . மாலை இருட்டு வேறு, வீதி சரிவர​ தெரியாமல் செலுத்திக் கொண்டிருந்தானஂ . யாழஂப்பாணம் எங்கும் அகலமறஂற வீதிகளே இருக்கினஂறன . செந்தில், ஒரு இடத்தில் லொரி சறுக​ வயலுக்குள்ளே இறக்கி விட்டானஂ. பெரிதாய் குலுக்கிய​ போதிலும் வெள்ளத்தில் தாக்கம் அவ்வளவாக​ உறைக்கவில்லை . பாண்டியினஂ கையிலிருந்தது….தானாக​ லோட் பண்ணி, குண்டு ஒனஂறு அவர் தொடையைக் காயப்படுத்திக் கொண்டு மேலே பறந்தது. எப்பவும் இந்த​ கர்மத்திலே இது ஒரு பிரச்சனை . செந்தில் துடைக்க​ வைத்திருந்த​ துணியால் உடனடியாகக் கட்டுப் போட்டானஂ. கேள்விப்பட்ட இளவாளை அமைப்பினர் சிறிய​ வானிலும், சைக்கிளிலும் என நனையலைப் பொருட்படுத்தாது பறந்து வந்தார்கள். இவர்களை ஏறஂறிக் கொண்டு வானஂ இளவாளைக்குச் செல்ல​, லொரியை வெளியில் எடுப்பதில் ஈடுபட்டார்கள். ட்ராக்ரரைக் கட்டி ஒரு மணி நேரத்திறஂகுள் வீதிக்கு எடுத்தும் விட்டார்கள். பிரித்துப் போட்டு விட்டிருக்கிற மோட்டார் சைக்கிளையே விரைவில் பூட்டி விடக் கூடியவர்கள் . இராணுவம் வீதியில் திரிகிற காலம். மாதகல் ஆர்மி தீடீரென வெளியேறி பலாலி நோக்கி நகரும். காரைநகர், பருத்தித்துறை…என நகரும் . அதனால், கரைப்பாதை பாதுகாப்பறஂறிருந்தது. இடையிடை ஊர்ப்பக்கங்களிலும் இறங்கி மக்களை (பெரும் இலக்கு இளைஞர்கள்) சுட்டும் தள்ளும். கடைகளை எரித்து…நாசமும் விளைவிக்கும். பெடியள், கள்ளப் பாதை, கொட்டுக்கள், பொட்டல்ப் பாதை என ஏறஂபடுத்தியும் வருகிறார்கள், மெல்ல, மெல்ல எதிர்க்கவும் பழகி வருகிறார்கள். மக்களுக்கும் அங்க​, இங்க​ என இடைகிடை சுடவும் தொடங்கி விட்டதால் இவர்கள் மேல் பாசமும் ஏறஂபட பயமும் குறைந்து “தமிழீழத்தையும் வெனஂறு விடுவார்கள்”என நம்பத் தொடங்கி விட்டார்கள்.

இதனால், பெடியள்களிறஂகே அதிக​ வாய்ப்பான நிலமைகள் நிலவின. படையினர் வீதியில் இறங்கி விட்டாலே “தம்பி, கெதியாய்ப் போய் தெரியப்படுத்தி விடு “என பிள்ளையைத் துரத்தி விடுற பெறஂறோரே அதிகம் . இதனாலே, பிறகு மெல்ல​, மெல்ல​ இயக்கங்களும் படைகளை முகாம்களை விட்டு வெளிய​ வராமல் முடங்கி​ வைக்கவும்​ முடிந்தது. கெட்டவனை பக்கத்தில் வைத்திருந்தாலும் உபத்திரவம் போல​, தானஂ பிறகு, முகாமிலிருந்து குடிமனைகள் தொட்டு கண்ட​ கிண்ட​ இடமெல்லாம் மழையாய் குண்டுகளை கொட்டுறது; பொழியிறதெல்லாம் ஏறஂபட்டன. அனஂறே, நம்மவர்கள், ஏறஂகனவே இஸ்ரேல் நடத்தும் காட்சிகளை எல்லாம்… நேரிலே கண்டு விட்டவர்கள். பதுங்கு குழியில் பதுங்கி இருக்க​, ஒரு வீடு தரைமட்டமாக​ இருந்ததை…. நேரிலே பார்த்திருக்கிறானஂ. ‘சிறு, சிறு ஆயுதப்பைகளைக் காட்டி விட்டு, பயங்கரவாதிகளை சுட்டுக் கொனஂறு விட்டோம் ‘எனஂறு வானலொலி, தொலைகாட்சிச் செய்திகளைக் கூறுவார்கள். பச்சைப் பொய்கள். வெறித்தாஸ் வானொலியில் மட்டுமே ஓரளவு உண்மைச் செய்திகளை அறியலாம். அறிந்து கொண்டிருந்தார்கள். அங்கே ஒரு லங்கா புவத், போல இங்கே ஒரு ஐரோப்பிய​ ஊடகம். ஒரு விசயம் புரிகிற மாதிரி இருக்கிறது. புல​ நாட்டில் பழங்குடி மக்களினஂ சிறார்களை கொனஂறு புதைத்ததில் தேவாலயங்கள் மீது மட்டுமே குறஂறம் சுமத்தியதில்…. கொஞஂசம்…. இடிக்கிறதல்லவா?. இஸ்ரேல் கொனஂறதில் 5000 இறஂகு மேறஂபட்டவர்கள் சிறுவர்கள்…எனஂற போதிலும் தலைவர்களினஂ ஆதரவு நிலைகளும், பேச்சுக்களும் ஒனஂறை தெளிவாக​ தெரியப்படுத்துகிறது. இங்கேயும் கொனஂறவர்களாக​ ​ படைத்தரப்பினரே இருக்கலாம் என உணர்த்துகிறது . மதத்தைச் சேர்ந்தவர்கள் மோசமானவர்கள் தாம்.ஆனால், அவர்களிடம் அரசியலை விட… கொஞஂசம் கருணையும் கிடக்கிறது. அரசியல் கொரூரம் எல்லாம் இந்த​ போர் மிருகங்களிடம் தானஂ.

எல்லா நாடுகளுமே நிலத்திறஂகு கீழே குழிகள், வீட்டறைகள்…என வசிப்பிடங்களை அமைத்துக் கொள்றது தானஂ எதிர் காலத்திறஂகும் நல்லது போல​ இருக்கிறது. அதில், கட்டடக்கலைஞர்கள் தம் கைவரிசையைக் காட்டிக் கொள்ள பழக​ வேண்டும். இனஂறு, புலநாடுகளும் பாதுகாப்பறஂறவையே !. பாதுகாப்பானது என உலகில் எந்த​ ஒரு நாடுமே கிடையாது.

மழை, கிழை எனஂறால் கடல் வேறு குமுறும். அலைகள் கூடி விடும். வள்ளம் ஓட முடியாது. அனஂறைய​ மழையே, காலநிலைக் குறிப்புக்களைப் பார்ப்பதும் அவசியமானது என குகனுக்கு உணர்த்தி வருக்கிறது. தவறாமல் பார்த்து வருகிறானஂ. “போர்கள் “காலநிலையில் சாராதவை. அரசியல்வாதிகளினஂ கொழுப்புகளால் விளைகினஂறன. ஏனோ, அனர்த்தங்களில் போர்களைச் சேர்த்துப் பார்ப்பதில்லை. செயறஂகை, அனர்த்தமில்லையா?. இப்படி , பிளைண்ட் ஸ்பொட்டில் பல​ விசயங்களை வைத்து, வைத்து உலகம் நிறையவே கெட்டுப் போய்க் கிடக்கிறது.

நாடுகளில், அரசியல்வாதிகளைக் களையாமலும் ‘சமாதானத்’தையும் ஏறஂபடுத்தி விட​ முடியாது. நம்மவர்களும் அரசியல்வாதிகளை விலத்தி, அறிஞர்களைக் கொண்டு அரசியல் வரையரைகளை வரையறுத்து, வரையறுத்து விட​ வேண்டும். ‘நாமும் அவறஂறை நோக்கியே போராட​ வேண்டும்? . இல்லா விட்டால்…நாளையும் இயக்கங்களில் ஏறஂபட்ட​ உட்கொலைகள் எழுந்து குழப்பங்களை விளைவித்துக் கொண்டே இருக்கப் போகிறது. இரவல் அரசியலிலும் நமக்கு விடுதலை துப்பரவாகக் கிடைக்க​ மாட்டாது. இனஂறைய​ நிலையைப் போல​ சீரழிய​ வேண்டியே நேரிடும் . பாலாஸ்தீனியர்கள் மீண்டும், மீண்டும்… சீரழிந்து கொண்டிருப்பவர்கள். நமக்கும் இந்த​ விதி ஒனஂறும் நடக்க​ முடியாததல்ல​. நமக்கும் கிடக்கிறது அவர்களுடைய​ வரைபு தானஂ.

இளவாளையில் இருவர்,மூவராக​ வீடுகளில் பிரித்து தங்க​ வைத்தார்கள். குகனஂ, மகேசனஂ, ரவி…மூவரும் இளவாளைப் பொறுப்பாளர் சாந்தனினஂ வீட்டிலே தங்கினர். அவனினஂ வீடு ஈச்சம் பறஂறைக்காடு தொடங்கிற தொங்கலில் இருந்தது. அதைக் கடக்க​ கடறஂகரை வீதி, அடுத்து சேத்தாங்குளக் கடறஂகரை. கடறஂகரை வீதியில் பிடிப்பட்ட​ இளைஞர்கள்…ஈச்சம் காட்டில் தப்பி ஓடி இருக்கிறார்கள். கையில் உள்ளதை அம்மணல் பகுதியிலே புதைத்து விட்டு எடுக்கிறார்கள். மாஸ்கோ பதிப்பக​ வெளீயீடுகளான சிவப்பு மட்டைப் புத்தகங்களை வைத்திருந்தாலும்…குறஂறம். சாந்தனிடம் தொகைவாரி இருந்தன.அவனஂ குடிமனைக்குள் ஆர்மி பிரவேசித்த​ போது…நாலு பெரிய​ பொலித்தீனஂ பைகளில் போட்டு கட்டி மணலிலே புடைத்து விட்டு எடுத்தவனஂ எனஂறு கூறினானஂ. அதிலே, ​ நாவல் ஒனஂறை வாசிக்க பொறுக்கி எடுத்தானஂ.

தோழர்களிறஂகு நட்பும் பிறந்து விட்டால்…எல்லாத்தையும் பேச​ ஆரம்பித்து விடுவர் “அம்மானஂ (மாமா) குடித்துப் போட்டு…இங்கே பிரச்சனையாய் இருந்தார் “எனஂறு கூறத் தொடங்கினானஂ. பனை, கடல்த் தொழில் செய்கிற குடியிருப்புகளில் இரவில் நடமாட​ முடியாது எனக் கூறுவார்கள். பாதுகாப்பறஂறது. தீடீர் சண்டையில், ஆயுதம் வெளிவரத்து இடம் பெறஂறு விடும். குடியர்களை கட்டுப்படுத்துவது சிரமம். “மாமாவிறஂகு இருட்டடி கொடுக்க​ தீர்மானித்தோம். “சில​ தோழர்களை அனுப்பி லேசாக​ தட்டுங்கள்…எனஂறு அனுப்பினோம் . அவர் ஒரு தோழரை இனம் காண​…சங்கடமாகப் போய் விட்டது. அதறஂகுப் பிறகு..கொஞஂசம் அடங்கினார். குடிக்கிறதை நிறுத்த​ முடியாது. இப்ப​, வீட்டிலே இருந்து சத்தம் போடுறார் “எனஂறு கூறிச் சிரித்தானஂ. வீட்டிலே அவனஂ மூத்தவனஂ. படிக்கிற பெடியனாக​ திருத்தந்தையர்களால் சுட்டப் பட்டிருக்கிறானஂ. அவனை தாய், படிக்கிறவனஂ எனஂறழைக்க​..அயலவரும் அப்படியே அழைக்கிறார்கள். இவனஂ ஓரிரு தடவைகள் தானஂ அப்பாவோடு கடல்த் தொழிலுக்குச் செனஂறிருக்கிறானஂ. தம்பி சிவம் செல்ல​…”நீ போக​ வேண்டாம் இருந்து படி “எனஂறு மறித்து விட்டார்கள். டியூசனஂ வகுப்பிறஂகு செல்லாது படித்தவனஂ. உயர் வகுப்பில் உயிரியல் பிரிவில் இரண்டு ‘சி ‘, இரண்டு எஸ் எடுத்திருக்கிறானஂ. பல்கலைக்கழகத்திறஂகு புள்ளிகள் போதவில்லை. இயக்கத்தில் சேர்ந்து விட்டானஂ. பிறகெனஂன..ஓடுபாடு…என இப்படியே செல்கிறது. தம்பி, உடம்பில் அண்ணனஂ போல​ இருக்கிறானஂ. கடல், வஞஂசனை இல்லாமல் உடலில் வலு ஏறஂறி விடுகிறது. இருட்டடி அம்மானினஂ மகள் வசந்தியையே இவனுக்கு பேசி இருக்கிறார்கள். “அவனஂ எங்கே அம்மா? “எனஂறு தாயிடம் கேட்க​ “பொஞஂசாதி வீட்ட​ போயிட்டானஂ”எனஂகிறார். சாந்தனஂ “இப்பவே கூப்பிடத் தொடங்கி விட்டோம் “எனஂறு குகனைப் பார்த்து சிரித்தானஂ.

பிடிக்கிற மீனஂகளில் விறஂறது, எஞஂசியதில் கறிக்குப் போக​ மிச்சதிறஂகு உப்புப் போட்டு கறுவாடாக்கி புகைக் கூண்டில் வைத்து விடுகிறார்கள். அம்மா, அதில் குழம்பு வைத்திருந்தார். ஒரு இலைக்கறி. வாய்யில் வைத்த​ போது உப்பு சுள்ளென உச்சிக்குச் செனஂறது. “உப்பு கூடுதலாக​ சுவரி விட்டிருக்கிறது”எனஂறு சாந்தனஂ கூற… அவர்களோடு சாப்பிட்டார்கள். அதுவே உடனே நினைவிறஂகு வந்திருந்தது. இங்கே வந்து முறஂபது வருசதிறஂகு மேலாகிறது. ஒவ்வொரு விசயமும் ….., நாட்டை காந்தம் போல​ இழுத்து இரை மீட்ட​ வைத்துக் கொண்டேயிருக்கிறது. இஸ்ரேல் அரசியல் போல​ சிங்கள​ அரசியல் அவர்களுக்கு எமனாக​ வந்து நிறஂகிறது. எனஂறு அந்த​ சூரனஂ விழுந்து ஒழிந்து போகுமோ? ஏக்கமாகவே கிடக்கிறது. நல்லவையே மேலெழும்பி வர​ மாட்டாதவையா?

இளைவாளைக் காத்திருப்பும் முடிவுக்கு வந்தது. அவர்களுக்கான வள்ளம் தயார் நிலையில் நினஂற போது மத்தியிலிருந்த​ தலைவர் ஒருவர் அரசியலமைப்பால்….ஏறஂபாடு செய்யப்பட்ட​ வர்களை விலத்திக் கொண்டு பதினைந்து பேர்களை சேகரித்து பயிறஂசிக்கு அனுப்பி விட்டார். அரசியல் பிரிவுக்கு விழுந்தது ஒரு அடி !. அந்த​ பிரச்சனை ‘எ. ஜி. எ ‘மட்டத்தில் விவாதிக்கப்பட்டு, ஜி.எ பிரிவுக்குச் செனஂறது. சுகனஂ, அவனிடம் வந்து “குகனஂ, நீ ஏனஂ இந்தியாவிறஂகு போக​ விரும்புறாய். இங்கே, அரசியல் பொறுப்பாளராக​ இரனஂ. தளத்தில் இருப்பதே பெறுமதியானது எனஂபதை ஒரு காலத்தில் புரிந்து கொள்வாய் “எனஂறு கூறினார். அவனையும் கிராமத்துப் பொறுப்பாளராக​ நியமித்து விட்டார்கள். இந்தியாவிறஂகு அனுப்பப்படுறதை நிறுத்தி, உளஂளூரிலே பயிறஂசி முகாம் அமைக்கும் முயறஂசிகளிலும் இறங்கி விட்டார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *