கரூர் திருச்சிப் புலவர்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 2,188 
 

இருவரும் மாமன் மைத்துன உறவினர். கரூர்ப் புலவர், மாமன்; திருச்சிப் புலவர், மைத்துனர். கரூர்ப் புலவர் தன் மைத்துனரிடம் ஒரு காரியத்தைச் செய்யச் சொன்னார். திருச்சிப் புலவரோ பிடிவாதமாகச் செய்ய மறுத்துவிட்டார். அவருக்குக் கோபம்.

‘மைத்துனரே, எம் கால்வழியே வருகிற நீரைக் குடிக்கிற உமக்கு இவ்வளவு இருந்தால், எமக்கு எவ்வளவு இருக்கும்’ – என்று நிமிர்ந்து பேசினார்.

இதற்கு மூன்று பொருள் –

கால்வழி நீர்: 1. எம் கால் மிதிபட்டு வருகிற நீர்
2. தாம் குடித்த எச்சில் நீர்
3. கால்வழியே விரும் சிறுநீர்.

சொன்னவரோ பெரியவர்! கேட்டவரோ சிறியவர்! வெட்கப்பட்டார்; வருந்தினார். பெரியவர் ஆயிற்றே என்று அஞ்சினார்.

‘தமிழ் இருக்கும்போது நமக்கு எதற்கு அச்சம்’ என்று பேசத் துணிந்தார்.

‘மாமா, நீரே வந்து எம் காலில் விழுந்தால் – ஏற்றுக் கொள்ளாமல் என்ன செய்வது?’ – என்றார். (நான் தேடிப் போகவில்லை).

ஏதோ, தவறாகப் பேசிவிட்டோம் என்று தாங்கள் வருத்தப்பட்டு, எம் காலில் விழலாமா – அப்படி விழுந்தால், நான் என்ன செய்வது? (நீரே – தண்ணிரே; காலில் வாய்க்காவில்.)

எப்படி மாமன் மைத்துனர்! எப்படி தமிழ்!

– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *