கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 1,703 
 

வெள்ளம் ஆற்றில் கரைபுரண்டு ஒடும்போது, அதில் அடித்துச் செல்லப்பட்ட நரி ஒன்று, “ஐயோ உலகம் போச்சு, உலகம் போச்சு’ என்று சத்தமிட்டுக் கொண்டே போனது.

கரையின் அருகிலிருந்த ஒரு குடியானவன் அது கேட்டு ‘ஐயோ, பாவம்’ என்று இரங்கி நீந்திப் போய் நரியைப் பிடித்துக் கரை சேர்த்துக் காப்பாற்றிய பிறகு கேட்டான். ‘உலகத்துக்கு என்ன ஆபத்து?” என்று.

அதற்கு நரி சொன்னது, ‘ஆமாம் நீ என்னைத் தூக்காவிட்டால் நான் இறந்திருப்பேன். எனக்கு உலகம் போச்சு அல்லவா? அதனால்தான் அப்படிக் கூவினேன்’ என்றது.

அதுகேட்ட குடியானவன். ஒரு தனிமனிதன் தன் நலம் கருதி எப்படிச் சமயத்திற்குத் தகுந்தாற்போல் பேசுவானோ, அப்படிப் பேசி தன் காரியத்தை சாதித்துக் கொண்டதே இந்தப் பொல்லாத நரி என்று மனதுக்குள் எண்ணி வியந்துகொண்டே சென்றான்.

– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

விடியல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2023

சோதனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2023

யார் முதல்வன்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)