அப்பக்கடை நடக்கிறது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2022
பார்வையிட்டோர்: 4,615 
 

ஹாய்… ஹாய். கோழியளும் விடாதுகளாம். இந்த அப்பத்தைச் சுெட்டு ஒப்பேற்றிப்போட்டு ஒருக்கால் கோயிலடிக்கும் போட்டு வரலாமெண்டால்…

வாணை செல்லாச்சி. என்ன அப்பம் வாங்கவோ? கொஞ்சம் இரணை, சுட்டுத்தாறன். இண்டைக்கு எழும்பவும் பிந்திப்போச்சு; கடைசி வென்ளிக்கிழமையாகவும் கிடக் குது; ஒருக்கால் சன்னதி கோயிலுக்கும் போட்டு வர வேணும், பிறகு செல்லாச்சி எப்பிடி உங்கட பாடுகள்.

ஓ நீ சொன்னது மெய்தான். அப்பம் சுட்டு விக்கிறதிலை இப்ப ஒண்டும் அவ்வளவு ஆதாயமில்லை. எனக்கென்ன வீடுகட்ட, கார் வாங்கவே காசு? அண்டாடம் சீவியம் ஓடினால் காணும். அதோடை அப்பம் சுட்டு விக்கிறது எனக்குப் பொழுது போக்காகவும் இருக்கும். மாவும் விலையேறியிட்டுது. தேங்காயும் நாப்பத்தைஞ்சி யாம் விக்கிறாங்கள். இந்த அறாவிலை குடுத்து சாமான் சக்கட்டு வாங்கி எட்டுச் சதத்துக்கு ‘ பாலப்பம்’ விக்கிறது கெட்டித்தனம் தான். உங்கை கடைவழிய வெள்ளையப் பமே பத்துச் சதத்துக்கு விக்கிறாங்கள். சனம் கடையில யெண்டால் கனகாசு குடுத்து வாங்குங்கள், எங்களெட்டை யெண்டால் நொட்டை சொட்டை கதைக்குங்களே ஒழிய காசு கூட ஒழுங்காத் தராதுகள்.

இஞ்சைபார் செல்லாச்சி. அப்ப ஒருக்கால் நாரிப் பிடிப்பெண்டு ஆஸ்பத்திரியிலை போய்ப் படுத்தனான் தானே. அப்ப மகன் வந்து – “அப்பச்சட் டியோடை இருந்து தான் நாரிப்பிடிப்பு வந்தது. இனிமேல் அப்பம் சுடவேண்டாம், நான் மாசாமாசம் அம்பது ரூபா அனுப்புவன்” எண்டு சொன்னவன்.

உங்கை இப்ப கன இளந்தாரிப் பெடியளுக்கும் நாரிப் பிடிப்பு வருகுது. அவங்களெல்லாம் அப்பச்சட்டியோட இருந்தே நாரிப்பிடிப்பு வந்தது. அது ஒரு வயதுக்கும் வாதக்குணத்துக்கும் நாரிப்பிடிப்பு வாற தெண்டு யோசிச் சுப்போட்டு, ஆசுப்பத்திரியாலை வந்த உடனை அப்பச் சட்டியைத் தூக்கினன். அவன் மகனும் சொன்ன மாதிரி இரண்டு மூண்டு மாதம் அம்பது ரூபா அனுப்பினான். அம்பது ரூபா வர வர நாப்பது முப்பது ரூபாவாகக் குறைந்து இப்ப பத்து ரூபாவாக வந்து கொண்டிருக்குது. அதுக்காக நான் அவனைக் குறைசொல்லயில்லை, அவனுக் கும் என்ன கஸ்டமோ – துன்பமோ. பிள்ளை குட்டியள் இப்படித்தான் இருந்தாப்போலை ஒரு உசாரிலை அல்லது பிறத்தியாருக்கு முன்னாலை ஐயாவுக்கு நூறு ரூபா அனுப்புவன் எண்டு சொல்லுங்கள். ஆனால் அப்பிடி அனுப்புற தெண்டால் என்ன இலேசான அலுவலே? அல்லது அது வருமெண்டு பார்த்துக் கொண்டிருக்கிறது தான் தாய் தகப்பனுக்கு வடிவே?

எனக்கென்ன – அப்பக்கடை பிழையில்லாமல் நடக்குது. நான் ஏன் அவையிவைக்குப் பயப்பட வேணும்? எனக் கொரு புருஷன் முருகாத்தை , அவரும் முந்தி மேசன் மாரோடை போய் உழைச்சுக்கிழைச்சுத் திண்டுகொண்டி ருந்தவர். பேந்து இவன் பொடியன் மாசம் மாசம் கொஞ் சக் காசு அனுப்பத் தொடங்கின உடனை உழைப்பை விட்டிட்டார். அவன் அனுப்பிற காசுக்கு இரண்டு மூண்டு நாளைக்கு வடிவாகச் சமைச்சுத் திண்டிட்டு பிறகு அங் காலை இஞ்சாலை ஆலாய்ப் பறக்கிறது. முருகாத்தை யின்ரை சீவியம் இப்பிடி ஓடுது.

இல்லைச் செல்லாச்சி, அப்பக்கடை நடக்கிறபடியால் அவையிவையின்ர கையைப் பாராமல் என்ர சீவியம் ஓடுது.

மனிசராகப் பிறந்ததுகள் நோய் நொடி வந்து பாயிலை படுக்கு மட்டும் ஏதாவது தொழில் செய்து கொண்டிருக்க வேணும். அப்பத்தான் மற்றவைக்குப் பயப்பிடாமல் எங்கடை விருப்பப்படி வாழலாம்.

பார்த்தியே பார்த்தியே, செல்லாச்சி. தொழில் செய்ய வேணுமெண்டதுக்காக – “எல்லாரும் அப்பம் சுட்டால் ஆர் வாங்கிறது?” எண்டு கேட்கிறாய். நான் அப்பம் சுட்டாப்போலை எவ்லாரும் அப்பம் சுடவேணுமே? ஒவ் வொருத்தரும் ஒவ் வொண்டைச் செய்யிறது தானே , சீதவன் சந்தைக்கப் போகுது. கொடிகாமச் சந்தையிலையும் சாவகச்சேரிச் சந்தையிலையும் விக்கிறதை வாங்கிக் கொண்டு வந்து உடுப்பிட்டிச் சந்தையிலை விக்கிறதிலை தானே அதுகள் ஏழெட்டுப்பேர் சீலிக்குதுகள், பொன்னர் கீரைக்கட்டுத் தூக்கித்தானே மருமகனுக்கு லொறி வாங்கினதும் – மகளுக்கு நகை நட்டு செய்ததும் – இராசம்மா கிழங்கு அவிச்சு ஓடியல் காயப்போட்டுத்தானே மாளிகை மாதிரி ஒரு வீடு கட்டினவள்.

எதுக்கும் ஒரு முயற்சி வேணும். அல்லது ஒண்டும் செய்ய முடியாது. “ஒரு காரியத்தைச் செய்வன் செய்வன்” எண்டு முருகாத்தை மாதிரிச் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. செய்து காட்ட வேணும். அதுக்கு நடக்கக்கூடிய காரியமாக ஓரளவு யோசிச்சுச் செய்ய வேணும். லாபமோ நட்டமோ கொஞ்ச நாளைக்குச் செய்ய வேணும். எடுத்த உடனே என்னெண்டு லாபநட்டம் சொல்லுறது. இஞ்சை நானும் அப்பக்கடை தொடங்கின உடனை இரண்டு மூண்டு ரூபா வியாபாரம் தானே. இப்பவெல்லோ ஏழெட்டு ரூபாவுக்குப் பிழையில்லாமல் நடக்குது.

“ஒரு முழத்துண்டு காணியிலை என்னத்தை வைச்சுப் பயிர் செய்யிற” தெண்டு முருகாத்தை கேட்கிறார். அவன் வேலுப்பிள்ளைக்கும் எங்களளவு காணி தானே. அந்தக் காணியிலை வடிவான கொட்டிலும் கட்டி, கிணறும் வெட்டி, நாலைஞ்சு வாழைக்குட்டியும் வைச்சான். “நாலைஞ்சு வாழைக்குட்டியாலை என்ன வரப்போகுது?” எண்டு கேட்டதுக்கு.

“வெள்ளிக்கிழமை சாப்பிடுறதுக்குப்இலையெண்டாலும் வெட்டலாம்” எண்டான். அந்த நாலைஞ்சு வாழைக் குட்டி நாப்பது அம்பதாயிட்டுது. ஒரு கிழமைக்கு இரண்டு (மூன்று வாழைக்குலை விக்கிறான். தின்னவேலி யிலை வாங்கிவைச்ச ஒட்டு மாங்கண்டும் நல்லாய்க் காய்க்குது. நல்ல ருசியெண்டபடியால் தானே மகாலிங்கம் கொழும்புக்கு வாங்கிக்கொண்டு போறவன். மகாலிங்கத்தின்ரை குணத்துக்கேற்ற மாதிரி நல்ல பெண்சாதியும், பெரிய வீடும், வடிவான காரும். ஓ ஒவ்வொருத்தருக்கும் அவை யவையின்ர குணத்துக்குத் தக்க மாதிரித்தான் உத்தியோ சங்களும் பெண்சாதியும் வந்து அமையிறது.

இப்பவெல்லோ உதுகள் காசுக்கும் வடிவுக்கும் கலி யாணம் முடிக்கிறதுகள். உங்கை காசுக்கும் வடிவுக்கும் கலியாணம் முடிச்ச ஆக்களின்ர பொட்டுக்கேடு எங்களுக்குக் தெரியாதே? அப்புலிங்கத்தின்ர பெடிச்சிக்கு அச்சு வேலியிலிருந்து பணக்கார மாப்பிள்ளையொண்டு கொண்டு வந்தினம். அவன் பெரிய பணக்காரனாம். கொழும்பிலை உத்கியோகம், நாலைஞ்சு வீடு; இரண்டு கார் எண்டு எல்லோருக்கும் புழுகிக்கொண்டு திரிஞ்சினம். அது போதாதெண்டு அப்புலிங்கமாக்களும் இரண்டு லட்சம் ரூபா சீதனமாகக் குடுத் தினம். கடைசியாகக் கண்டதென்ன? அவன் மூண்டு மாதத்திலை பெட்டையை விட்டிட்டு ஓடி யிட்டான். காசையும், காரையும் பாத்தினமேயொழிய வேறையொண்டையும் பார்க்கயில்லை.

ஏன்? சின்னத்தம்பியின்ரை பெடியனும் வடிவான பெம்பிளையெண்டுதானே ஒரு நேர்ஸ் பெட்டையைக் கூட்டிக்கொண்டு வந்தவன். அவளும் அவனை விட்டிட்டுப் போயிட்டாள். வடிவு – காசு எல்லாம் பாக்கத்தான் வேணும். ஓரளவுக்குப் பாக்க வேணும்.

செல்லாச்சி கொஞ்சம் இரணை. இந்தா இந்தத் தேத்தண்ணியைக் குடி. இஞ்சை சட்டம்பியாருடைய பொடியனும் வந்திட்டுது. பள்ளிக்குடம் போறதுகளை முதல் விட்டிட்டு உனக்குச் சுட்டுத்தாறன்.

சீதனம் வாங்கக் கூடாதெண்டு சொல்லயில்லை. தாய் தேப்பனிட்டை வசதியிருந்து மனமொத்துத் தந்தால் வாங்கலாம். “பத்தாயிரம் வேணும் பதினையாயிரம் வேணும்” எண்டு நாண்டு கொண்டு நிண்டால் அவை பின்ரை வாழ்க்கை உருப்படாது.

உத்தியோககாரர் எடுக்கிற குறைஞ்ச சக்பளத்திலை வாழேலாது தான். எங்கடை மூத்தவளின்ரை மகன் சுதா கொழும்பிலை ஒரு கட்டு மட்டாகச் செலவு செய்து, வீட் டையும் நூறு நூற்றம்பது அனுப்பிக் கொண்டிருந்தான். அவள் தாயும் இஞ்சினை ஒறுத்து உலவிச்சு சீட்டுப் பிடிச்சு அதை எடுத்து பெட்டையின்ர கலியாணத்தை முடிச்சாள். சுதாவுக்கும் இப்ப பேச்சுக்கால் நடக்குதாம். கலியாணம் முடிச்சால் கொழும்பிலை நா நூறு ஐனூறு எண்டு அச் சவாரம் கட்டி ஒரு வீடு எடுக்கவேணும். கதிரை மேசை யெண்டு சாமான் வாங்க – நகை நட்டுச் செய்ய எப்பிடி யெண்டு போனாலும் ஒரு பத்தாயிரமெண்டாலும் வேண் டாமே? அவனும் உழைச்சதை யெல்லாம் தாயட்டையும் சகோதரியட்டையும் குடுத்திட்டான். ஓரிடத்துக்குப் போற தெண்டால் சீதனம் வாங்கத்தான் வேணும். அவனுக்கு ஒரு நல்ல காலமிருந்து பணச்கார இடம் சந்திச்சால் சீதனத்தைக் கூடக் குறைய வாங்கலாம். என்னை மாதிரி உன்னை மாதிரி ஒரு வறுமைப்பட்ட குடும்பத்திலை சம் பந்தம் செய்யிறதெண்டால் என்ன மாதிரி கரைச்சல் படுத்தி சீதனம் வாங்கிறது? கிடைச்சதை வைச்சுக் கொண்டு மட்டு மட்டாக வாழுறதுதான்.

“உதார்… உதாலை போறது? ஓ…” சுதாவோ… கொழும்பாலை வந்திட்டான் போலை கிடக்குது …அவனுக்கு நூறு வயதடி செல்லாச்சி. அவனைப் பற்றிக் கதைக்க வந்திட்டான்.

ஓ அவர் இப்ப வளர்ந்து பெரிய மாப்பிள்ளையாகி யிட்டார். என்னோடை கதைக்க வெட்கம். இஞ்சினை வந்த நேரம் போனநேரம் ‘என்னணை ஆச்சி’ எண்டொரு சொல்லு. வந்து அஞ்சாறு நாள் நிண்டு ஊர் உலாத்துவன். போகைக்குள்ளை மட்டும் வந்து ”போட்டுவாறன் ஆச்சி” எண்டு சொல்லுவன். அவனுக்கு நான் தானே கதிர்காமம், நயினாதீவு, திருக்கேதீஸ்வரம் எல்லாம் கூட்டிக்கொண்டு போய்க் காட்டினது.

“என்னடி உமா? இவளைத் தெரியுமே செல்லாச்சி? மருமேன் ராசர்ர மூத்தமகள் உமா இவள் தான்.

சுதா அண்ணை வந்திருக்கிறாராம். அப்பம் வாங்கி வரட்டாமோடி? ஏன் அவையளுக்கென்ன வந்து கேக்குறதுக்கு? அவன் கொழும்பிலை உத்தியோகமெண்டால் இந்த லீட்டை வாக்கூடாதே?

பாரடி செல்லாச்சி குமரனுக்கு காற்சட்டை சேட்டுப் போட்ட உடனை கிழவியோடை கதைக்க வெக்கமாம். அவள் மூத்தவளின்ர மகனைத்தான் சொல்லுறன். அப்பம் வாங்கியரச் சொல்லி உமாவை அனுப்பியிருச்கி றாளுகள் உமா இஞ்சை அப்பமுமில்லை ஒண்டுமில்லை யெண்டு போய்ச் சொல்லடி.

“அப்பத்துக்குக் காசு தருகினமோ?” இஞ்சை அப்பம் விக்கிறதில்லையெண்டு சொல்லடி. காசாம் காசு. அவை யின்ர காசு ஆருக்கு வேணும்? உவளுகள் எப்ப காசைக் கண்டவளுகள்?

உங்கை காசு வைச்சுக்கொண்டு துள்ளினவை எல்லாம் எப்பிடி இருக்கினமெண்டு தெரியும். காசு கொஞ்சம் கிடைச்ச உடனை அவள் பொன்னியும் வள்ளியும் குதிச்ச குதியென்ன! ஆடின ஆட்டமென்ன! இண்டைக்கு என்ன நிலையிலை இருக்கினம்? இதெல்லாம் சுவாமி யெல்லே எழுதி வைச்சிருப்பார்?

அவள் பொன்னிக்கு அப்பவும் சொன்னனான், சீட்டைக் கீட்டைப் பிடிச்சுக் காசு சேர்க்க வேணுமெண்டு. கேட்டாளுகளே? இப்ப அங்காலை ஒரு நூறு இஞ்சாலை ஒரு அம்பது எண்டு ஓடியோடித் திரியினம். கையிலை வர யிக்கிள்ளை நாலுகாசு சேர்த்தெல்லே வைக்கவேணும். அல்லது அவர் முருகாத்தை மாதிரி பெரிய மீனும் முழுத்தேங்காயும் வாங்கித் திண்டிட்டு, அடுத்தநாள் “அவை ஒரு தேத்தண்ணி தருவினமோ” இவை ஒரெப்பன் சோறு தருவினமோ” எண்டு கை நீட்டிக்கொண்டு திரியிறதே, சீ, வெட்கம் கெட்ட வாழ்க்கை.

“உமா கோவிச்சுக் கொண்டு போறாளோ?” போகட்ம். உவைக்கென்ன நான் பயமோ? முருகாத்தை வேணு மெண்டால் பயப்பிடட்டும். அவையட்டை சோத்துக்கும் தேத்தண்ணிக்கும் போற படியால் முருகாத்தை பயப்படுவர். எனக்கென்ன பயம்? என்ர அப்பக்கடை நடக்கிறவரைக் கும் நான் ஏன் அவையிவையட்டைப் போகப் போறன்.

செல்லாச்சி கதையோடை கதையாக உன்ரை கடைசிப் பெடியனுக்கும் நேரகாலத்தோடை ஒரு கலியாணத்தை முடிச்சு வைச்சிடு. அது நல்லது. ஏன் தெரியுமோ? இந்தக் காலம் எந்த நேரம் என்ன நடக்குமெண்டு தெரியாது பிள்ளையளுக்குப் பசி வந்த உடனே இடியப்பமோ புட்டோ கொடுக்கிறம். இல்லையெண்டால் கடைவழிய போய் கண்டதைக் கிண்டதைத் தின்னுங்கள். கலியாணமும் அதுமாதிரித்தான். நாங்களாகப் பார்த்து ஒவ்வொண்டையும் முடிச்சி வைக்காட்டி, அதுகள் சாதி சமயம் பாராமல் ஒவ்வொண்டைக் கொளுவின பிறகு கவலைப்படக்கூடாது.

எனக்கும் மூத்தவளின்ர கலியாணம் ஒரு பிரச்சினையில்லாமல் முடிஞ்சுது. இரண்டாவது பெட்டை நல்லம்மாவை முத்துராசு பாக்க வந்தபோது “என்ன தருவியள்?” எண்டு கேட்டுது மனிசன். “ஒரு பெம்பிளைதான் தருவம்” எண்டு சொல்லி நல்லம்மாவைக் குடுத்தனாங்கள். நாலு பரப்புக் காணியோடை மூண்டாவது பெட்டையைறைவர் ராசாவுக்கு முடிச்கக் குடுத்தன்.

அப்ப செல்லாச்சி நீ இந்தா… அப்பத்தைக் கொண்டு போ. நான் இவன் சுதாவுக்கு அப்பத்தைக் குடுத்திட்டு வாறன். என்ன இருந்தாலும் மூத்தவளின்ரை மகன் எல்லே. அவன் என்னோடை கதையாட்டி எனக்கென்ன? கோபத்திலை அப்பத்துக்கு வந்த உமாவையும் ஏசிப் போட்டன்.

“இந்தாடா தம்பி சுதா. இந்தா அப்பம். உனக் கெண்டு சட்டியப்பமும் சுட்டுவைச்சிருக்கிறன். நீ இப்ப கொழும்புக்குப் போன பிறகு என்னோடை கதைக்க வெக்கம் என்ன? நான் சொன்னதை மனதிலை வைச் சிருக்காதை. நாங்கள் கிழடு கட்டைகள். சாகப் போற னாங்கள். நீங்கள் சந்தோஷமாயிருக்க வேணும்.”

“என்னைப் பற்றிக் கேக்கிறியே?”

“ஓ ..என்ரை அப்பக்கடை பிழையில்லாமல் நடக்குது. அப்பக்கடை நடக்கிற வரைக்கும் என்ரை சீவியமும் நல்லாப் போகும். நான் வாறன் கோயிலுக்குப் போக வேணும்.

– ‘தினகரன்’ – 1976 – நிர்வாணம் (சிறுகதை) – பதிப்பு: ஒக்டோபர் 1991 – புனித செபத்தியார் அச்சகம், மட்டக்களப்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *