“அய்யய்யோ எவ்வளவு இரத்தம்? இது வேணும்னு நான் செய்ததில்லை. அய்யோ, இப்போது நான் என்ன செய்யப் போகிறேன்?” என்று கத்தினான் விஜய்.
கீதாவின் தலையிலிருந்து இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. அவள் கையை வைத்து இரத்தத்தைத் தடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். விஜய் எறிந்த கண்னாடி கிளாஸ் உடைந்து சிதறிக் கிடந்தது.
“கீதா நீ ஏன் நான் குடித்துக் கொண்டிருக்கும் போது வந்து எனக்கு அட்வைஸ்செய்யவேண்டும், போய்விடு” என்றான். அவள் தலையில் வடியும் இரத்தத்தை நிறுத்த, தன் பையிலிருந்து கைத்துண்டை எடுத்து காயம் பட்ட இடத்தை இறுக்கக் கட்டினாள்.
“நேற்றுக் கூட இனி மேல் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் பண்ணினே விஜய். என்னை விரட்டி விரட்டிக் காதலித்து விட்டு, உங்களைத் தவிர இன்னொருவரை நினைத்துப் பார்க்க முடியாது என்ற நிலைக்கு நான் வந்த பிறகு இப்படிக் குடித்து உங்களையே அழித்துக் கொள்கிறீர்களே! இது சரி தானா?”
“கீதா இப்போது விவாதம் பண்ண நேரமில்லை. உன் தலையில் திரும்பவும் இரத்தம் கசிய ஆரம்பித்து விட்டது. சீக்கிரம் டாக்டரிடம் போ.” என்று போதையில் கத்தினான் விஜய். “நீங்கள் குடித்துக் குடித்து உங்களையே அழித்துக் கொள்ளும் போது நான் இரத்தத்தைச் சிந்தியே என்னை அழித்துக் கொள்கிறேன், விஜய்.” அவளும் பதிலுக்குக் கத்தினாள்.
”கீதா நான் உனக்கு ஏற்றவன் இல்லை. நான் ஒருசாக்கடை. நீயோ தூய வான் நிலா. நம் இருவருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. உன்னை மறக்க முடியாமல் தான் நான் குடிக்க ஆரம்பித்தேன். இப்போது நிறுத்த முடியாமல் தவிக்கிறேன். என்னை மறந்துவிடு. யாராவது நல்லவன் ஒருவனை திருமணம் செய்து கொள்.”
“ஏன் விஜய்? ஏன் அப்படி சொல்கிறீர்கள்? என்னிடம் என்ன குறை கண்டீர்கள், விஜய்?
“என் அன்பின் அடைக்கலம் நீ! குறை உன்னிடம் இல்லை. என்னிடம் தான் கண்மணி. நான் மது மயக்கத்தில் தெரியாமல் ஒரு தவறு செய்து விட்டேன். ஒரு பெண்ணைத் தொட்டுப் பழகி விட்டேன்.”
“……………………………”
“கற்பு பெண்களுக்கு மட்டும் தானா? இருவருக்கும் பொது என்று தானே நாம் அடிக்ககடி பேசுவோம். இப்போது நானும் கற்பிழந்தவனே! நான் எப்படி உன் வாழ்க்கைக்குத் துணையாக முடியும்?” என்று அழவே ஆரம்பித்து விட்டான் விஜய்.
“விஜய்! நீங்கள் உண்மையை மறைக்காமல் உங்கள் தவறுக்காக வந்துகிறீர்கள். தண்டிக்க வேண்டும் என்று நினைக்கும் முன் மன்னிக்க முடியுமா என்று தானே பார்க்க வேண்டும். எல்லாவற்றுக்கும் இந்த மது தானே காரணம். இந்த மதுவிலிருந்து நீங்கள் விடுதலைப் பெற்றாலேபோதுமானது.” என்று சொல்லியபடியே அவள் மயங்கி விழ, “நோ… கீதா..நோ நீ வாழ வேண்டும்… நாம் வாழ வேண்டும்” என கத்தினான். தடுமாறிய படியே அவளைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினான்.
தொடர்புடைய சிறுகதைகள்
மருத்துவ மனையில் தேவி கையில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தது. தூக்கமுமில்லாமல் விழிப்புமில்லாமல் ஒரு நிர்மலமான புன்னகையில் படுத்திருந்தாள்.
தீபக் மருத்துவ மனைக்குள் வந்த போது, “டாக்டர். உங்களைப்பார்க்க வேண்டுமெனக் கூப்பிடுகிறார்” என்றாள் வரவேற்பு அறையில் அமர்ந்திருந்த வெண்ணாடை பெண்மணி.
“வாருங்கள் தீபக். எப்படியிருக்கிறீர்கள்” என்றார் டாக்டர் ...
மேலும் கதையை படிக்க...
இமய மலையில் இருந்து சாமியார் திரும்பி வந்திருந்தார். அவரை பார்ப்பதற்காக ஒரு பெரிய கூட்டம் அங்கே காத்துக் கொண்டிருந்தது .
ஒரு நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கொண்டிருந்தனர்.
அவள் அதை பார்த்து மலைத்துப் போனதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை!
இன்னும் வரிசையில் யாரும் வரும் முன், ...
மேலும் கதையை படிக்க...
பொன் அந்தி மாலையும் தென்றல் காற்றை மெதுவாக பூமிக்கு அனுப்பி வெப்பம் குறைந்துள்ளதா என வேவுபார்த்து வர அனுப்பியது. ஆதவன் தன் வேலை நேரம் முடிந்து விட்டதென ‘டாட்டா’ காட்டி விட்டு பூமிக்குள் ஓடி ஒளிய முயற்சி செய்து கொண்டிருந்தது.
தன்னருகே கதிரவன் ...
மேலும் கதையை படிக்க...
விமானத்தில் அமர்ந்ததும் “குளிர்கிறது” என்று சின்னப் பெண் நிதியாவை போர்வையால் போர்த்தி விட்டு பெரியவள் நிவேதிதாவிற்கு தண்ணீர் கொடுத்தபின் தொலைபேசியில் தொடர்புகொண்டு கணவன் சேகருடன் பேசினாள். ”இன்னும் சில நிமிடங்களில் விமானம் புறப்பட்டு விடும். இரண்டரை மணி நேரத்தில் நாங்கள் துபாய் ...
மேலும் கதையை படிக்க...
சாகுலை கண்டிப்பாக நான் சென்னை விமான நிலையத்தில் எதிர் பார்க்கவில்லை. அவன் கடவுச்சீட்டு சரி பார்க்கும் வரிசையில் எனக்கு முன் மூன்றாவது ஆளாக நின்று கொண்டிருந்தான்.
'சத்தம் போட்டுக்கூப்பிடலாமா?' என்று நினைத்தேன். அநாகரீகமாக இருக்கும் என்று உணர்ந்து கொண்டு பின்னால் நின்றவரிடம் “ ...
மேலும் கதையை படிக்க...
உகாண்டா விமான நிலையத்திற்குள் நுழையும் போது கணேசனுக்கு தலையை வலித்தது போல இருந்தது. நேராகப் போய் பிளாஸ்டிக் கப்பில் டீ வாங்கிக் கொண்டு பயணிகளுக்காக போட்டிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
செல்போன் ஒலிக்க, எடுத்துக் கேட்டான். "கணேசன் அம்மா பேசுகிறேன். நாளை மறுநாள் ...
மேலும் கதையை படிக்க...
மதுமிதா அமெரிக்காவிலிருந்து வந்திருந்தாள். சென்னைக்கு வந்தவள் மாமா வீட்டுக்கு திருச்சி அருகிலுள்ள பால்குளம் கிராமத்திற்கு வந்திருந்தாள்.
அவள், அந்த வீட்டுக்கு வந்த பிறகுதான் காஞ்சனாவிற்கு எரிச்சலும், கோபமும் மிகுந்தது. ‘எப்போதும் சாந்தமும், சந்தோஷமும் நிறைந்திருக்கின்ற பெண் காஞ்சனா. ஏன் இப்படி மாறினாள்’ என்று ...
மேலும் கதையை படிக்க...
சித்ரா ஸ்கூல் முடிந்து வந்ததும், முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள். அம்மா மல்லிகா எவ்வளவு சொல்லியும் காபி, டிபன் சாப்பிடாமல், தன் தந்தை திரவியம் வருவதற்காகக் காத்திருந்தாள்.
“சித்ரா, எந்த விஷயமாக இருந்தாலுகம் அப்பா வந்த பிறகு பேசலாம். ஒழுங்கா அடை சாப்பிட்டு ...
மேலும் கதையை படிக்க...
பக்கத்து வீட்டு இளம்பெண் குறிஞ்சி இறந்து போனதாகச் செய்தி வந்த போது அடித்துக் கொண்டு ஓடினான் கணேசன்.
ஓலைக்குடிசையின் குறுக்குக் கம்பில் தூக்குப் போட்டு பிணமாகத் தொங்கினாள். அவளின் அம்மா “ஓ” வென்று அலறித் துடித்து அழுது கொண்டிருந்தாள்.
மரணித்து விட்ட போதும் குறிஞ்சியின் ...
மேலும் கதையை படிக்க...
இரயில் ஓடிக் கொண்டிருக்கிறது… நான் இன்னும் பழைய கனவுகளில் மிதந்து கொண்டிருக்கிறேன். டில்லிக்கு வந்து ஏறக்குறைய பதினைந்து வருடங்களாகி விட்டன. திருமணத்திற்கு ஐந்து வருடங்களுக்கு முன்னாலே மத்திய அரசு நிறுவனத்தின் ஒரு பகுத்திக்கு நேரடியாக மானேஜராக பதவி பெற்று வந்தேன். இங்கேயே ...
மேலும் கதையை படிக்க...
நினைப்பதுவும் நடப்பதுவும்
மறையட்டும் தீயசக்தி மலரட்டும் தீபஒளி