அந்த நகைச்சுவை பற்றி ஆழமான விசாரணை நடத்தியே ஆக வேண்டும். அவள் இப்படி கூறியிருந்தாள்.
‘சாவதாய் இருந்தால் நான் தான் முதலில், எனக்குப்பின் தான் நீ”
1
சாவதாய் இருந்தால் நான் தான் முதலில்
என்னை பரிதாபமாக கெஞ்சவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் என் நண்பன். அவன் கொடுக்கமாட்டான் என்று தெரிந்துதான் அவனிடம் இதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அவன் சிரித்துக் கொண்டே மறுத்துக் கொண்டிருந்தான். அது எனக்குப் பிடிக்கவில்லை. அவனிடம் எனது குரலை கடுமையாக்கிக் கொண்டு கேட்க ஆரம்பித்தேன். அவன் அப்பொழுதும் மறுத்தான். எனக்கு உண்மையிலேயே கோபம் வந்துவிட்டது. உண்மையில் சட்டையை பிடிக்காத குறை. அவனிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டேன். அவன் சற்று மனம் வெதும்பி போனான். அதன் பின் விளைவுகளைப் பறறி உனக்குத் தெரியுமா என்று வினவினான். எனக்கு அவன் பேச்சை வளர்த்துக் கொண்டே போவது சற்றும் பிடிக்கவில்லை. கோபத்தில் எனக்கு மூச்சு வாங்கியது. பின் என் இருப்பை அவன் புரிந்து கொண்டானோ என்னவோ கொடுத்து விட்டான். நான் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. அவனிடம் இருந்தது அவ்வளவுதானாம்.
அவன் கொடுத்தது – 6 தூக்க மாத்திரைகள்
அவன் பெயர் – சரவணன்
தொழில் – மெடிக்கல் ரெப்
இன்னும் 30 மாத்திரைகளுக்கு என்ன செய்வது என்றுதான் அப்பொழுது புரியவில்லை.
2
அவ்வளவு தெளிவாக கேட்கவில்லையென்றாலும் என் சுயநினைவு தப்புவதற்கு சில கணங்களுக்கு முன் கேட்ட சில வார்த்தைகளை கோர்வைப்படுத்தி கூறிவிடுகிறேன்.
கடவுளே அதை நான் எப்படிக் கூறுவேன், அவர்……… அவர் என் தந்தை, அவர் சென்டிமென்டாக என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அது ஒரு நல்ல காமெடி, சுயநினைவு தப்புவதற்கு முன் என்னை சிரிக்க வைத்து விட்டார். அது….. அந்த வார்த்தைகள், ‘சாவதாய் இருந்தால் எல்லோருக்கும் தூக்க மாத்திரைகளை வாங்கிக் கொடு, எல்லோரும் சேர்ந்து சாகலாம்”
நான் என்ன செய்வது சிரிப்பதைத் தவிர. அவர் அப்படி பேசி நான் கேட்டதே இல்லை. 30 மாத்திரைகளை சேர்ப்பதற்குத்தான் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன், ஒவ்வொரு மெடிக்கல் ஷாப்பிலும் 2 மாத்திரைகளுக்கு மேல் கேட்டால் சந்தேகமாகப் பார்க்கிறார்கள்.
அந்த டாக்டர் என் வயிற்றிலிருந்து மாத்திரைகளை எடுக்கும் முயற்சியில் நான் இன்னொரு முறை செத்துப் போனோன்.
ஐ.சி.யு. வில் இருந்த 3 நாட்களும் இந்த வார்த்தைகள் தான் திரும்ப திரும்ப ஞாபகம் வந்து கொண்டிருந்தது.
‘சாவதாய் இருந்தால் நான் தான் முதலில், எனக்குப் பின்தான் நீ”
நான் மருத்துவமனையில் நிர்வாணமாய் இருந்த சமயத்தில், அவள் இன்னொருவனுடன் முதலிரவில் நிர்வாணமாய் இருந்திருக்கிறாள். என் மனம் விரும்பவதெல்லாம் இக்கதையின் தலைப்பை அவளுடைய கண்ணோட்டத்தில் நிஜமாக்க வேண்டும் என்பது தான்.
தொடர்புடைய சிறுகதைகள்
நான் அவன் கடவாய்ப் பற்கள் வெளியே தெறித்து வந்து விழும் அளவிற்கு ஒரு குத்துவிடுவதற்கு கடுமையாய் யோசித்தேன். 4 அடி நீளமும், 3 இன்ச் விட்டமும் கொண்ட கடினமான கருவேலங்கட்டையால், ஓங்கி அடித்தாலும் உடைந்து விடாத அளவிற்கு கடினமான கைகளைப் பெற்றிருக்கும் ...
மேலும் கதையை படிக்க...
பொதுவாக நமது நாட்டில் அனைவரும் நாளொன்றுக்கு ஒரு முறையாவது மூச்சு பயிற்சி செய்வதுண்டு. எப்பொழுது தெரியுமா? தெருவோர சாக்கடைகளை கடக்கும் பொழுது. அரிசிமாவில் கோலம் போடுவதின் மூலம் எறும்பு போன்ற ஜீவராசிகளுக்கு கூட உணவளித்து பாதுகாக்கும் நாம், பாக்டீரியாக்கள் போன்ற ஒரு ...
மேலும் கதையை படிக்க...
‘ஹலோ”
‘ஹலோ”
‘என்ன பண்ணிகிட்டு இருக்க”
‘தூங்கிகிட்டு இருக்கேன்”
‘காலை 10 மணிக்கு என்ன தூக்கம் வேண்டி கிடக்கு”
‘நைட் ட்யூட்டி பாத்துட்டு வந்தேன் அதான்”
‘ஓ நைட் ட்யூட்டி பாத்தா, காலைல தூங்கணுமா... உனக்கு வெக்கமா இல்ல”
‘இல்ல”
‘என்னை உன்னால சமாளிக்க முடியல்ல”
‘சரியா புரிஞ்சுகிட்ட, வெரிகுட்”
‘உன்னை இப்படித்தான் கல்யாணத்துக்குப் ...
மேலும் கதையை படிக்க...
எல்லாவற்றிற்கும் என் நண்பன் தான் காரணம். நண்பன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். மற்ற நண்பரக்ள் எல்லாம் இவனைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். நான் கேட்டவுடன் எனக்கு ரயிலில் டிக்கெட் புக் செய்து கொடுக்க அவனால் எப்படி முடிந்தது என்று ...
மேலும் கதையை படிக்க...
குபுகுபுவென சூடான ரத்தம் கொப்பளித்துக் கொண்டு வெளியேறியபோது கத்தியானது பாதி தலையைத்தான் வெட்டியிருந்தது. கால்கள் இரண்டும் வெடுக்வெடுக்கென இழுத்துக் கொண்டன. இதயம் இன்னும் நிற்கவில்லை என்றுதான் தோன்றியது. நான் சற்று அருகில் சென்று கவனித்தபோது அவன் இதயத்துடிப்பை நன்றாக கேட்கமுடிந்தது. நான் ...
மேலும் கதையை படிக்க...
நான் ஜனாதிபதியானால் என்கிற தலைப்பில் கட்டுரைப் போட்டி வைத்திருந்தார்கள். ஆனால் இவர்கள் ஏன் போட்டி என்கிற பெயரில் இந்த ஏமாற்று வேலையில் ஈடுபடுகிறார்கள் என்றுதான் புரியவில்லை. அவர்கள் சில பழக்க வழக்கங்களை பாரம்பரியமாக கடைபிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். வெற்றி பெற வேண்டிய ...
மேலும் கதையை படிக்க...
வேகமாக பறந்து வரும் அந்த பொருளைப் பார்த்து திகிலடைவது என்பது எனக்கு சற்று அவமானமாக இருந்தது. எனது வாழ்வில் தான் இதுபோன்ற எத்தனை அனுபவங்களை கடந்து வந்திருக்கிறேன். ஒரு பனங்காட்டு நரி சலசலப்பை கண்டு அஞ்சலாம், ஆனால் ஒரு அரசியல்வாதி தன்னை ...
மேலும் கதையை படிக்க...
நான் டாம்க்ரூஸ் போல் மிக அழகாக தினமும் மீசையை ட்ரிம் செய்து (சிரைத்து) கொண்டு கண்ணாடியில் அப்படியும், இப்படியும் பார்ப்பதற்கு மிக முக்கிய காரணம், என்னை திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணின் தந்தைக்கு என் வயது 34 அல்ல என்பதை ...
மேலும் கதையை படிக்க...
நாயர் டீ கடையில் வந்தமர்ந்தான் கார்த்திக். பேச்சுலர். சென்னையில் வந்து கடந்த 4 மாதங்களாக வேலை தேடிக் கொண்டிருக்கிறான். காலையில் குடிக்கும் அந்த டீ தான் காலை உணவு. நாயர் ஒருத்தர் தான் கடன் கொடுப்பார். அதனால் அவர் விஷத்தைக் கொடுத்தாலும் ...
மேலும் கதையை படிக்க...
‘டிக்கெட் எடுக்க காசில்லன்னா என்ன மயிருக்கு நீயெல்லாம் பஸ்சுல ஏர்ற, வக்கில்லன்னா நடந்து போக வேண்டியதுதான. நான் போற ரூட்டுலன்னு தேடிப்பிடிச்சு வருவிங்களாடா?. தினசரி உன்ன மாதிரி ஆட்களோட போராடுறதே என்னோட பொழப்பா போச்சு. உன்னையெல்லாம் பாத்தாலே தெரியுது. என்னைக்காவது ஏத்தாம ...
மேலும் கதையை படிக்க...
கடவுளே அவனது பாவங்களை மன்னிப்பீராக
99 அல்ல 100 சதவீத முழுத்தோல்வி
ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை