சென்னையிலிருந்து நாகர்கோயிலுக்கு வங்கி மேலாளராக பதவி உயர்வோடு பணிமாற்றம் கிடைத்திருந்தது புருஷோத்தமனுக்கு.
முதல் நாள் வேலைக்குப் போய் வந்ததும், தன் நண்பன் குமாரோடு நாகராஜர் கோயிலுக்குப் புறப்பட்டார். சிரத்தையோடு நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தார்.
என்ன திடீர்னு பக்தி மயம்? பிரமோஷனுக்கு நன்றி சொல்றீயா? இல்ல, சீக்கிரம் சொந்த ஊருக்கு டிரான்ஸ்பர் கிடைக்கணும்னு வேண்டிக்கிறியா..? – நண்பர் குமார் கேட்டார்.
‘இல்ல குமார்! எனக்கு முதல்ல கல்யாணம் பேசினப்ப, அது திடீர்னு நின்னு போனது உனக்கே தெரியும். அப்போ எனக்கு விலாசினிங்கிற ஒரு பொண்ணை நிச்சயம் பண்ணியிருந்தாங்க. ஆனால் அவ, கல்யாணத்துக்கு ஒரு வாரத்திக்கு முன்னால் அவ காதலனோட ஓடிப்போயிட்டா, இந்த ஊர்லதான் அவ செட்டில் ஆனதா கேள்விப்பட்டேன். விலாசினியை நான் எந்த சூழ்நிலையிலயும் பார்த்துடக்கூடாதுன்னுதான் வேண்டிக்கிட்டேன்!
‘தப்பு பண்ணினது அவ…நீ ஏன் அவளைப் பார்க்க பயப்படறே…?
அவ புருஷன் சாதாரண கூலி வேலைதான் செய்யறான். வசதி வாய்ப்பு இல்லாம, வாழ்க்கை ரொம்ப சிரமத்துல போய்க்கிட்டு இருக்கறதா கேள்விப்பட்டேன்.
ஒரு வேளை அவ என்னைப் பார்த்துட்டா, பேசாம இவர கட்டியிருந்திருக்கலாம்னு ஒரு ஃபீலிங் வந்துடக் கூடாது, அது அவ காதலுக்கே களங்கம். அதனால்தான் அப்படி வேண்டிக்கிட்டேன்’ என்றார் புருஷோத்தமன்.
- ஜூன் 2012
தொடர்புடைய சிறுகதைகள்
மயில்சாமி வெளிநாட்டில் இரண்டு வருடம் வேலை செய்துவிட்டு ஊர் வந்தபோது முதல் இரண்டு நாட்கள் தனது உறவுக்காரர்கள் மத்தியில் பெரிதும் மதிக்கப்பட்டான்.
நாட்கள் நகர நகர அவனுக்கு கிடைத்த மரியாதை காற்றில் கரையும் கற்பூரம் போல
கரைந்து போனது. வெளிநாட்டில் கஷ்டப்பட்டு சேமித்த இரண்டு ...
மேலும் கதையை படிக்க...
தொலைபேசி நிலையத்திலிருந்து வந்த கடிதத்தைப் பிரித்து, சென்ற மாத தொலைபேசி கட்டணம் எவ்வளவு என்று பார்த்தபோது ரகுவரனுக்கு மயக்கம் வராத குறையாக இருந்தது. வழக்கமாக எண்ணூறு ருபாய்க்குள் வந்துவிடும் தொலைபேசி கட்டணத்தொகை இந்த முறை மூவாயிரத்தை தாண்டியிருந்தது. சமையலறையிலிருந்து அப்பொழுதுதான் ரகுவரனின் ...
மேலும் கதையை படிக்க...
அந்த குடிசையின் ஒற்றை அறையில் பனைஓலைப்பாயில் பிணமாகப் படுத்திருந்த தனது கணவனின் தலையை தனது மடியில் வைத்து ஓலமிட்டு அழ ஆரம்பித்தாள் மரியா. அவளுக்குத் துணையாக மூத்த மகள் செவிலியும், இளையவள் ராசாத்தியும் அழுதுகொண்டிருந்தார்கள். ஐந்து வயது கடைசி மகன் எரிந்துகொண்டிருந்த் ...
மேலும் கதையை படிக்க...
ரஞ்சித் தனது மனைவியோடு பஸ் நிலையத்தில் நின்றிருந்தான்.
பக்கத்தில் நின்றிருந்த ஒருவன், அவன் தண்ணீர் குடிப்பதைப் பார்த்து, அவன் அருகில் வந்தான்.
“குடிக்க கொஞ்சம் தண்ணி தர்றீங்களா?’ ரஞ்சித் அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு பாட்டிலை தந்தான். அவன் மிச்சமிருந்த தண்ணீரில் பாதியைக் குடித்துவிட்டு ...
மேலும் கதையை படிக்க...
சடையன்குழி சகாயமாதா கோவில் திருப்பலி முடிந்து கூட்டத்தோடு கலந்து வெளியேறிய ஆக்னஸ் மேரியை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் சகாயம். அவனது பார்வை தன்னை ஊடுருவதை உணர்ந்து ஆக்னெஸ் தலை தாழ்த்தி சாலையின் ஓரம் தனது அக்கா மகளோடு நடக்க ஆரம்பித்தாள்.
சூரியன் ...
மேலும் கதையை படிக்க...
வீட்டு சுவரில் மாட்டியிருந்த ஓலைப்பெட்டியை பார்த்ததும் ஆச்சரியப்பட்டு, அதை எடுத்து தரும்படி தனது தாத்தா மகாலிங்கத்திடம் கேட்டான் இளமதியன்.
மகாலிங்கம் எடுத்து தந்தார். தாத்தா… இது மாதிரி புதுசு எனக்கு வாங்கி குடுங்க தாத்தா… ஆர்வமாய் கேட்டான் இளமதியன்.
இது இப்போ கிடைக்கிறதில்லப்பா… அந்த ...
மேலும் கதையை படிக்க...
அலுவலக விஷயமாக சென்னை சென்றுவிட்டு அமெரிக்காவுக்குத் திரும்பி வந்த சரவணன் அழைப்பு மணியை அடித்தபோது ஒடிச்சென்று கதவைத் திறந்து அவன் கரம் பற்றி வீட்டுக்குள் அழைத்து வரவேண்டும் என்ற ஆசை அவன் தாயார் தங்கம்மையின் மனதில் எழுந்து அடங்கியது.
அதற்கு முன்பாகவே அவனது ...
மேலும் கதையை படிக்க...
சிறுமி ஜெலினாவிடம் பத்து ரூபாய் நோட்டைக் கொடுத்து பக்கத்து கடைக்குச் சென்று வாஷிங் சோப்பும் ஷாம்பும் வாங்கி வரும்படி சொன்னாள் அவளது தாய் ஜமுனா.
சரிம்மா! என்றபடியே உற்சாகமாய் கடையை நோக்கி நடந்தாள். கடைக்காரரிடம் வாஷிங்சோப்பும் ஷாம்புவும் கேட்டு வாங்கிவிட்டு பத்து ரூபாய் ...
மேலும் கதையை படிக்க...
எளிமையான கல்யாண நிகழ்ச்சி. தீபக்கும் அவன் மனைவி தன்யாவும் மணமக்களை வாழ்த்திவிட்டு, மொய் எழுதும் இடத்திற்கு வந்தார்கள்.
"என்னங்க... வசதியில்லாத குடும்பம். கஷ்டப்பட்டு கல்யாணத்தை நடத்தறாங்க. ஒரு ரெண்டாயிரம் ரூபா மொய் எழுதிடுங்க, கவுரவமா இருக்கும்!"
"இல்ல தன்யா! வெறும் இருநூறு ரூபாதான் என் ...
மேலும் கதையை படிக்க...
இரண்டு நாள் கழித்து பெண்ணை தனியாக சந்தித்துப் பேசிய சுந்தர், ஒரு முடிவுக்கு வந்தான்.
‘‘சாரிப்பா... இந்தப் பொண்ணு வேண்டாம்!’’
‘‘டேய்... அன்னிக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்ன? அதுவும் இல்லாம 40 பவுன் நகையும் ஐந்து லட்சம் ரொக்கமும் தர்றதா சொன்னாங்க. அப்புறம் ...
மேலும் கதையை படிக்க...
மகன் தந்தைக்காற்றும் உதவி
காத்திருந்து காத்திருந்து