
விபரக்குறிப்பு
இயற்பெயர்: சிவசாமி இராஜசிங்கம்
புனைபெயர்: சுதாராஜ்
கல்வி: பொறியியற் துறை, மொரட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை.
தொடர்புகளுக்கு:
முகவரி: சி.இராஜசிங்கம், (சுதாராஜ்)
சீ கிறெஸ்ட் அபார்ட்மென்ட்,
189/1, 6/1, மகாவித்தியாலய மாவத்த,
கொழும்பு 13, இலங்கை.
S.Rajasingham (Sutharaj)
Seacrest Appartment,
189/1, 6/1, Mahavithyalaya Mawatha,
Colombo 13, Srilanka.
தொலைபேசி: 0094 112380999 (இலங்கை)
தற்போதைய தொலைபேசி தொடர்பு: 00218 913084524 (லிபியா)
E mail: rajsiva50@gmail.com
rajasinghamsivasamy@yahoo.com
படைப்புகள்: (வெளிவந்த நூல்கள்)
சிறுகதைத் தொகுப்பு
- பலாத்காரம் – தமிழ்ப்பணிமனை வெளியீடு -1977
- கொடுத்தல் – சிரித்திரன் பிரசுரம் -1983
(மறுபதிப்பு – மணிமேகலைப்பிரசுரம், சென்னை-2004) - ஒரு நாளில் மறைந்த இரு மாலைப்பொழுதுகள் – மல்லிகைப்பந்தல் வெளியீடு -1989
(மறுபதிப்பு – மணிமேகலைப்பிரசுரம், சென்னை-2004) - தெரியாத பக்கங்கள் – மல்லிகைப்பந்தல் வெளியீடு -1997
(மறுபதிப்பு – மணிமேகலைப்பிரசுரம், சென்னை-2005) - சுதாராஜின் சிறுகதைகள் – தேனுகா பதிப்பக வெளியீடு -2000
- காற்றோடு போதல் – எம். டீ. குணசேன வெளியீடு -2002
(மறுபதிப்பு – மணிமேகலைப்பிரசுரம், சென்னை-2005) - மனித தரிசனங்கள் – மணிமேகலைப்பிரசுரம், சென்னை-2006
- மனைவி மகாத்மியம் – தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடு -2009
- உயிர்க்கசிவு (60 சிறுகதைகள் கொண்ட பெருந்தொகுப்பு)
– நியூ சென்சரி புக் ஹவுஸ் வெளியீடு -சென்னை -2010
நாவல்
- இளமைக் கோலங்கள் – வீரகேசரிப் பிரசுரம் -1981
(மறுபதிப்பு – மணிமேகலைப்பிரசுரம், சென்னை-2005)
சிறுவர் இலக்கியம்
- காட்டில் வாழும் கரடி நாட்டுக்கு வந்த கதை – தேனுகா பதிப்பக வெளியீடு -2001
(அனுசரணை: இலங்கை தேசிய நூல் அபிவிருத்திச் சபை)
(மறுபதிப்பு – மணிமேகலைப்பிரசுரம், சென்னை-2005)
காட்டிலிருந்து நாட்டுக்கு வந்த கரடி – படப்பதிப்பு – இலக்கியன் வெளியீட்டகம் -2010 - பறக்கும் குடை – தேனுகா பதிப்பக வெளியீடு -2002
(அனுசரணை: இலங்கை தேசிய நூல் அபிவிருத்திச் சபை) - கோழி அம்மாவும் மயில்குஞ்சுகளும் – தேனுகா பதிப்பக வெளியீடு -2003
(அனுசரணை: இலங்கை தேசிய நூல் அபிவிருத்திச் சபை) - சுட்டிப்பையனும் கெட்டிக்காரக் குட்டிப்பூனையும்.
-இலங்கை தேசிய கல்வி நிறுவன வெளியீடு -2003
(அனுசரனை: பிருத்தானிய கவுன்சில் & யுனிசெஃப்) - குட்டிவீரர்கள் -றூம் ரு றீட் (Room to Read) வெளியீடு -2009
(மொழிபெயர்ப்பு; சிங்களத்திலிருந்து ஆங்கில மூலம் தமிழுக்கு)
தொகுப்பு நூல்கள்
- மகுடி (சிரித்திரன் சுந்தர் பதில்கள்) – தேனுகா பதிப்பக வெளியீடு -2004
- இலங்கை நாட்டுப்புறப் பாடல்கள் – மணிமேகலைப்பிரசுரம், சென்னை-2005
சிங்கள மொழிபெயர்ப்பு நூல்கள்
- காட்ட தொஸ் பவறமுத (சிறுகதைத் தொகுப்பு) – மல்லிகைப்பந்தல் வெளியீடு -1999
- நொபெனென பெதி (சிறுகதைத் தொகுப்பு) – கர்துறூ பிறகாசயகி -2006
- உத்தமாவி (சிறுகதைத் தொகுப்பு) – தொதென்ன பிரகாசன -2007
- கவிதாகே மல்வத்த (சிறுவர் கதை) – தொதென்ன பிரகாசன -2006
- நகரயட ஆ வலஸ்ஹாமி (சிறுவர் கதை) – தொதென்ன பிரகாசன -2006
கதைகள் சேர்க்கப்பட்டுள்ள ஏனைய நூல்கள்
- A Lankan Mosaic (Translations of Sinhala & Tamil short stories, Edited by : Ashely Halpe, M.A.Nuhman &Rajani Obeyesekara)
- மேற்குறிப்பிட்ட நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு நூல் -‘அசல்வசி அப்பி’
- ‘கலாவ லஸ்ஸனய’ – தமிழ் சிறுகதைகளின் சிங்கள மொழிபெயர்ப்பு நூல், இலங்கை நூல் அபிவிருத்திச் சபையினால் வெளியிடப்பட்டது.
- Smiles from Srilanka (தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளில் வெளியான சிறுவர்கதை நூல்) யப்பானிய Surangani voluntary services அனுசரனையில் வெளியிடப்பட்டது.
விருதுகள்
- கொடுத்தல், (1981- 1988) எட்டு ஆண்டு காலப்பகுதியில் வெளியான சிறந்த சிறுகதைத்தொகுப்புக்கான இலங்கை அரச சாகித்திய விருது.
- இளமைக் கோலங்கள், நாவலுக்கு தமிழ்க் கதைஞர் வட்டம் வழங்கிய தகவம் விருது 1981.
- தெரியாத பக்கங்கள்@ சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விபவி கலாசார மையம் வழங்கிய விருது 1997.
- நொபெனென பெதி, சிறந்த சிங்கள மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புக்கான இலங்கை அரச சாகித்திய விருது 2006.
- மனைவி மகாத்மியம், சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான இலங்கை அரச சாகித்திய விருது 2010. (2) சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான புதிய சிறகுகள் விருது 2010. (3) சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கும் தமிழியல் விருது 2010.
- “அடைக்கலம்“ சிறுகதை ஆனந்தவிகடன் வைர விழா சிறுகதைப் போட்டியில் பிராணிகளிடம் பரிவு எனும் பிரிவில் முதற் பரிசு பெற்றது.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 2010 ஜுன் மாதம் வெளியிட்ட எனது ‘உயிர்க் கசிவு’ எனும் 60 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பில் பின் அட்டையிலுள்ள குறிப்பு:
மனித உணர்வுகளின் மறை பக்கங்களை ஆர்ப்பாட்டமில்லாத தன் எழுத்தினூடாக படம் பிடித்துக் காட்டுகிற படைப்பாளி சுதாராஜ். வாழ்வும் எழுத்தும் சம கோட்டில்தான் பயணப்படவேண்டுமென்பதில் அவதானமாக இருப்பவர். எழுத்து எதையெல்லாம் செய்யுமென்பதற்கு இவர் கொண்டிருக்கிற கருத்துகள் யதார்த்தமானவையும், தரம் வாய்ந்த பேனாக்காரனுக்கு இருக்கவேண்டிய உள முத்திரையுமாகும்.
எழுபதுக்களின் ஆரம்பத்தில் எழுத வந்தவர். நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை உள்ளடக்கிய எட்டு தொகுப்புகள், நான்கு சிறுவர் இலக்கிய நூல்கள், ஒரு நாவல் என சுதாராஜ் படைத்துள்ளவற்றின் பட்டியல் மிக நீளமானது. இந்நூல்கள் யாவும் இந்தியாவில் மறுபதிப்புப் பெற்றுள்ளன. இவரைக் கண்டெடுத்து, உருவாக்கி உயிரூட்டியவர் ‘சிரித்திரன்’ சிவஞானசுந்தரம். அவர்தான் இவரது முதற் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டவர். சுதாராஜின் சில சிறுகதைகள் ஆங்கில மொழியிலும், ஒரு சிறுகதை ரஷ்ய மொழியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. சாஹித்ய மண்டல விருது உட்பட பல விருதுகளைப் பெற்ற இவர் உயிர்கள் யாவற்றையும் நேசிக்கும் மானிடநேயம் மிக்க எழுத்தாளர்.
பொறியியலாளரான இவர் பத்திற்கு மேற்பட்ட நாடுகளில் பணிபுரிந்திருக்கிறார். அங்கெல்லாம் சந்தித்த சில விந்தையான மனிதர்களுடனான அனுபவங்களை மிகை, குறைப்படுத்தாமல் ‘மனித தரிசனங்கள்’ என்ற நூலில் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சுதாராஜ் என்ற படைப்பாளி – செ.யோகநாதன் – 2000
நான் மிகவும் விரும்பிப் படிக்கின்ற படைப்பாளிகளில் ஒருவராக சுதாராஜும் இருக்கின்றார். அண்மையில் அவர் எழுதியுள்ள ஆக்கங்களை முழுமையாகப் படிக்க நேர்ந்தது. நூல் வடிவம் பெறாத கதைகளும், நூல் வடிவம் பெற்ற நான்கு சிறுகதைத் தொகுதிகளுமாகச் சேர்ந்து ஆயிரத்தி ஐந்நூறு பக்கங்கள் வரும். இந்தப் பக்கங்களை முழுமையாகப் படித்து முடிந்ததும் மிகுந்த பிரமிப்பும் மகிழ்ச்சியும் உண்டாயிற்று. இருபது ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘இளமைக் கோலங்கள்’ நாவலும் இந்தப் பக்கங்களுடன் அடங்கும்.
சுதாராஜ் வாழ்வினை மிகப் பரிவோடு பார்க்கின்றவர் என்பது முக்கியமான விஷயம். இதனால் அவர் எழுத்தில் வரும் எவருமே இயல்பான, நேசிப்புக்குரிய மனிதராக இருக்கிறார்கள். நம்மோடு பழகிச் செல்கின்ற இயல்புடை யோராக அவர்களை நாம் தரிசிக்கின்றோம். இவர்கள் மிக யதார்த்தமாக எம்மோடு அறிமுகமாகிறார்கள். இயற்கையையும் சூழலையும், உயிரினங்களையும் நேசிக்கின்ற கலைஞனும், சுதாராஜனிடம் செறிந்திருக்கிறான். இந்த விதமான முழுமையையே சுதாராஜ் என்ற படைப்பாளியின் ஆளுமையாக அவரது கதைகள் நமக்கு கம்பீரத்தோடு அறிமுகம் செய்கின்றன. அவரின் அண்மைக்காலக் கதைகள் நமது துயர்களையெல்லாம் பதிவு செய்ததோடு நில்லாமல், ஆதாரமான நம்பிக்கை வெளிச்சத்தையும் கீற்றுச் சுடரொளியாகப் பெருக்குகின்றன.
சுதாராஜின் நடை வசீகரமானது. உள்ளத்தில் உண்மை ஒளி உண்டானதால் எழுத்திலே இந்த ஒளியும், வசீகரமும் உண்டாயிற்று, சிரித்திரன் சுந்தரே இப்படி வியந்தார் சுதாராஜின் எழுத்துக்குறித்து: ”ஓவியத்தில் துடிப்பில்லா இடங்களை ‘Dead Spots’ என்று கூறுவார்கள். சிறுகதை நாவலிலும் உயிர்த் துடிப்புள்ள சொல்லாட்சி ஆளப்படாத நிலையில் இந்த மையப் புள்ளி ஏற்படலாம். சுதாராஜின் கதைகள் புழுதிச் சொற்களால் புனையப்பட்டவை. ‘பாரதியின் கவிதைகள் வாழும் சொற்களால் வடிக்கப்பட்டவை. ஒரு சொல்லை வெட்டினும் குருதி கொப்புளிக்கும்’, என்கிறார் மகுடியார். சுதாராஜின் படைப்பிற்கு இந்தப் பெருமை உண்டு” இந்த மதிப்பீடு சத்தியமானது.
சுதாராஜை படித்து வியக்கின்ற போதே பல படைப்பாளிகள் நினைவில் வருவார்கள். இலியா எக்ரன் பேர்க், மேரி ஆன் காதரின் போர்ட்டர்,நதீன் கோதிமர், அருந்ததிராய், கு.அழகிரிசாமி, ஆர்.சூடாமணி என்ற தலைசிறந்த படைப்பாளிகள் நினைவில் வருவதற்கு, சுதாராஜின் எழுத்தும் இவர்கள் தொட்ட தளங்களை. கலாபூர்வமாக உணர்வு பூர்வமாக தொட்டு படைப்பாக்கி யுள்ளமையே ஆதார சுருதியான காரணம். இவர்களைப் போன்ற தனித்துவமும் ஆளுமையும் சுதாராஜின் படைப்புலகின் ஆணிவேரென்று உறுதியோடு கூறலாம்.
ஈழத்தமிழ் இலக்கியப் பரப்பில் திறனாய்வுப் போக்கு, வரண்ட பாலை வனம் போலாகிவிட்டது. படிக்காமலும், தேடலின்றியும் எழுதும் திறனாய்வுகள் என்ற மாரீசர்கள், ஆசனங்களில் உட்கார்ந்துள்ள அவல நிலையைப் போக்க வேண்டியுள்ளது.
சுதாராஜ் என்ற சிறந்த கலைஞனின் எனக்குப் பிடித்த கதைகளை தேர்ந்தெடுத்துத் தொகுதி ஆக்கியுள்ளேன். தமிழ் கூறும் நல்லுலகு முழுவதும் இந்தப் படைப்பாளியை முழுமையாக அறிய வேண்டுமென்ற அவாவே, ஆசையே என்னை இந்த முயற்சியில் இறக்கிற்று.
இந்தத் தொகுதியை அழகாக வெளியிடுகின்ற தேனுகா பதிப்பகத்திற்கு என் அன்பும் பாராட்டுகளும்.
செ.யோகநாதன்,
2000.
– சுதாராஜின் சிறுகதைகள், தொகுப்பு: செ.யோகநாதன், முதற்பதிப்பு: 2000, தேனுகா பதிப்பகம், புத்தளம்.