ஒரு பேனாதான் சார் கேட்டேன்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 21, 2019
பார்வையிட்டோர்: 63,922 
 

எக்ஸ்கூயூஸ் மீ ப்ளீஸ் கொஞ்சம் பேனா தரமுடியுமா? இந்த பார்மை பில்லப் பண்ணிட்டு கொடுத்திடறேன்

சார் பாத்தா படிச்சவராட்டம் இருக்கறீங்க, வரும்போது பேனா கொண்டு வர மாட்டீங்களா?

சார் பேனா கேட்டா தர முடியும், இல்லை முடியாது அப்படீன்னு சொல்லுங்க, இதுக்கு எதுக்கு படிச்சிருக்கியா இல்லையா அப்படீன்னு கேட்கணும்.

பின்ன எப்படி கேக்கணும்கறீங்க? பாங்குக்கு வர்றொமுன்னு தெரியுதுல்ல, அப்பவே பாக்கெட்டுல பேனாவை எடுத்து சொருகி வச்சுக்க தெரியணும் இல்லை.

சாரி மறந்துட்டேன்

இப்படி சொல்லி எல்லாம் தப்பிச்சுக்குங்க.

இதுல தப்பிக்கறதுக்கு என்ன இருக்குது, நீ பேனாவே கொடுக்க வேணாம்யா, ஆளை விடு !

அதெப்படி பேனா கேக்கும்போது “சார்” அப்படீன்னு மரியாதையா கேக்க தெரியுது, முடியாதுன்ன்னு சொன்ன உடனே நீ, வா, போன்னு மரியாதை குறையுது.

ஐயா, நண்பர், சார், போதுங்களா மரியாதை. உங்க கிட்ட தெரியாம பேனா கேட்டுட்டேன், விட்டுடுங்க, நான் பக்கத்துல யார் கிட்டேயாவது வாங்கிக்கறேன்.

அப்பவும் ஓசியில தான் பேனா வாங்குனம்னுதான நினைக்கிறீங்க, போய் பேனா வாங்கிட்டு வந்து எழுதணும்னு தோண மாட்டேங்குது இல்லை உங்களுக்கு.

கொஞ்சம் என்னை விடறீங்களா, எனக்கு பேனாவும் வேணாம், ஒண்ணும் வேணாம், அவசரமா போகனும்,

நில்லுங்க சார், பேனா கேட்டீங்க, நான் கொடுக்கலை,என்ன பண்ணனும், வீட்டுக்கு போயோ, இல்லை கடையில வாங்கியோ பேனா வாங்கிட்டு வந்து எழுதணுமில்லை, அதை விட்டுட்டு ஒண்ணும் வேணாமுன்னுட்டு ஓடறதா?

ஐயா சாமி, தெரியாம உங்கிட்ட வந்து பேனா கேட்டுட்டேன், இன்னைக்கு முழிச்ச முழி சரியில்லை,

நீங்க பேனா கொண்டு வராத்துக்கு உங்க விதியை காரணம் சொல்லாதீங்க, அது உங்க மறதி குணம், இல்லை பொறுப்பில்லாத்தனம்

யோவ் என்னய்யா பெறுப்பில்லை, அப்படீன்னு பேசிகிட்டிருக்க… !

தம்பி சும்மா துள்ளாதீங்க, உங்க வயசு என்ன? என் வயசு என்ன? நீங்க மட்டும் என்னை வா,போ, அப்படீன்னு பேசலையா?

நான் எப்பயா உன்னை வா, போன்னு பேசினேன்?

கொஞ்சம் முன்னாடிதான பேசுனீங்க.

வேண்டாயா, அதுதான் பேனாவும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாங்கறனே, இப்ப ஆளை விட்டா போதும் நிம்மதியா போயிடுவயா !

தாராளமா போங்க தம்பி, நானா உங்களை தடுத்து நிறுத்திகிட்டு இருக்கேன், ஏதோ பேனா கேட்டீங்களேன்னு உங்களுக்கு கொஞ்சம் நல்லது சொல்லாமேன்னு நினைச்சேன்.

ஏய்யா நீ நல்லது நினைச்சா இப்படி பேசியே கொல்றே, இது ஆண்டவனுக்கே அடுக்காது, காலையிலே வந்து என் உசிரை வாங்கிட்டு இருக்கியேயா?

உசிரை வாங்கறது நானா,இல்லை நீங்களா? சிவனேன்னு எழுதிகிட்டு இருந்தவங்கிட்ட வந்து வம்பை வளர்த்துட்டு, இப்ப நான்தான் உங்களை ரொம்ப கொடுமை படுத்தற மாதிரி பேசறீங்க.

ஐயோ..ஐயோ..என்னை விடுய்யா, நான் போறேன், எனக்கு பேனாவும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம்

அப்பொழுது வேகமாக ஒரு பெண் ஓடி வருகிறாள், வந்தவள், பேனா கேட்டவனை தள்ளிவிட்டு, எதிரில் இருந்த ஆளிடம் சென்று ஏங்க எழுதறதுக்கு பேனா வாங்குனா கொடுக்க தெரியாதா?நான் மறந்துட்டு கொஞ்ச தூரம் போயிட்டு திரும்ப வர்றேன் இந்த பேனாவுக்காக.

ஏன் சார் இந்த மாதிரி பண்ணறீங்க?சட்டென்று அந்த ஆளிடமிருந்து பேனாவை பிடுங்கிக்கொண்டு செல்கிறாள்.

எங்கேயாவது .தூ..தூ என்று சத்தம் கேட்டால் திரும்பி பார்க்காதீர்கள், பேனா கடன் கேட்டவனாக இருக்கலாம், கண்டு கொள்ளாமல் போய் விடுங்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *