திறனாய்வுப் போட்டி – 30.04.2021

 

திறனாய்வுப் போட்டி முடிவுகள்

வணக்கம்

திறனாய்வுப் போட்டி முடிவுகள் இத்துடன் இணைத்திருக்கின்றேன். 14 நாடுகளில் இருந்து பங்குபற்றி இருந்தார்கள். பல போட்டியாளர்கள் எனது சிறுகதைகளை தங்கள் இணையத்தளதில் படித்தாகக் குறிப்பிட்டிருந்தார்கள். ‘ஒரு அப்பா ஒரு மகள் ஒரு கடிதம்’ சிறுகதையை இதுவரை 224,610 வாசகர்கள் வாசித்திருப்பதாக ஒரு போட்டியாளர் சுட்டிக் காட்டியிருந்தார்..

தங்கள் ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்புடன்
குரு அரவிந்தன்

……………………………………………………………………………………..

குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய
திறனாய்வுப் போட்டி 2021 முடிவுகள்.

1வது பரிசு: 25,000 இலங்கை ரூபாய்கள்
நரேஸ் நியூட்டன். த. கழுபோவிலை, கொழும்பு, இலங்கை
2வது பரிசு: 20,000 இலங்கை ரூபாய்கள்
சிவனேஸ் ரஞ்சிதா. கெக்கிராவ, இலங்கை
3வது பரிசு: 15,000 இலங்கை ரூபாய்கள்
முருகேஷ். மு. வந்தவாசி, தமிழ்நாடு
4வது பரிசு: 10,000 இலங்கை ரூபாய்கள்
ஸ்ரீகந்தநேஷன்.ஆ.பெ. யாழ்ப்பாணம், இலங்கை
5வது பரிசு: 7,500 இலங்கை ரூபாய்கள்
சுப்ரபாரதிமணியன்.ப. திருப்பூர், தமிழ்நாடு

15 பாராட்டுப் பரிசுகள் தலா 5,000 இலங்கை ரூபாய்கள்.
பெயர்கள் அகர வரிசையில் இருக்கின்றன.

அனுராதா பாக்கியராஜா. வெள்ளவத்தை, இலங்கை.
முனைவர் சகோ. ஜா. அருள் சுனிலா. பெரியகுளம், தேனி, தமிழ்நாடு.
மு. இப்றாகீம் பாத்திமா றுஸ்தா. காத்தான்குடி, இலங்கை.
கிறகறி பஞ்சரத்தினம் வேதநாயகம். வார்விக்ஷயர், றக்பி, ஐக்கியஇராச்சியம்.
மணி. க. மேற்கு மாம்பலம், சென்னை- 600 033. தமிழ்நாடு.
மேகநாதன். பெ. போடி நாயக்கனூர், தேனி மாவட்டம், தமிழ்நாடு.
முஹம்மது ஹனிபா முஹம்மது ஷர்பான். ஓட்டமாவடி, இலங்கை.
நளாயினி நந்தகுமார். மெல்பேர்ன், அவுஸ்ரேலியா.
பூமணி. க. செஞ்சி தாலுகா, விழுப்புரம், தமிழ்நாடு.
பூர்ணிமா. ச. நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு.
பர்வின் பானு. எஸ். தேனாம்பேட்டை, சென்னை, தமிழ்நாடு.
துடுப்பதி ரகுநாதன் டி. எஸ். கோயமுத்தூர்-36 தமிழ்நாடு.
சக்திதாசன் கனகசபாபதி. 4390 VIPPEROD. டென்மார்க்.
சரளா முருகையன். பென்சினர் காலனி, திருச்சி-23 தமிழ்நாடு.
தங்கராசா செல்வகுமார். குப்பிழான் தெற்கு, யாழ்ப்பாணம், இலங்கை.

இளையதலைமுறை மாணவ, மாணவிகளுக்கான
10 பாராட்டுப் பரிசுகள் தலா 5000 இலங்கை ரூபாய்கள்.
பெயர்கள் அகரவரிசையில் இருக்கின்றன.

அருச்சனா சித்திவினாயகம். ரொறன்ரோ கனடா.
தேவரூபா நாகராஜ். வடுகப்பட்டி, தமிழ்நாடு.
கிருத்திக்கா. எஸ். முனிச்சாலை, மதுரை தமிழ்நாடு.
மோனிஷா நாகராஜ். வடுகப்பட்டி, தமிழ்நாடு.
நிறோஜினி வரதராஜன். வரணி வடக்கு, இலங்கை.
றுவிங்கா ஸ்ரீ. மிசசாகா, கனடா.
சக்தயா சாம்பவி முகுந்தன். ஸ்காபரோ, கனடா.
ஸ்ரீசங்கர் அருநோதன். மட்டக்களப்பு, இலங்கை.
திவாணி கந்தசாமி. தவசிக்குளம். வவுனியா, இலங்கை.
றிசா ஜேசுதாசன் ரொறன்ரோ, கனடா.

சர்வதேச ரீதியாகக் கனடாவில் இருந்து நடந்த முதலாவது திறனாய்வுப் போட்டி – 2021 இல் பங்கு பற்றிய அனைவருக்கும் நன்றி. 14 நாடுகளில் இருந்து தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திறனாய்வுக் கட்டுரைகள் வந்திருந்தன. இறுதிச் சுற்றில் சிந்தனைப்பூக்கள் எஸ். பத்மநாதன், எழுத்தாளர் கே. எஸ். சுதாகர், கவிஞர் சரேஸ் அகணி ஆகியோர் நடுவர்களாகக் கடமையாற்றினார்கள். நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

பரிசு பெற்றவர்களுக்குக் காலக்கிரமத்தில் பரிசுத்தொகை அனுப்பி வைக்கப்பபடும். இந்தப் போட்டியை நடத்த அனுமதி தந்த எழுத்தாளர் குரு அரவிந்தன் அண்ணாவிற்கும், நடுவர்களுக்கும், மிகவும் ஆர்வத்தோடு போட்டியில் பங்கு பற்றியவர்களுக்கும் வாசகர்வட்டத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அடுத்த வருடம் இதே போன்ற ஒரு போட்டியில் மீண்டும் சந்திப்போம். தயாராக இருங்கள், நன்றி.
மேலதிக விபரங்களுக்கு:

https://kurunovelstory.blogspot.com/
https://canadiantamilsliterature.blogspot.com/
http://tamilaram.blogspot.com/

சுலோச்சனா அருண்
செயலாளர், குரு அரவிந்தன் வாசகர் வட்டம்.
Kuru Aravinthan Fanclub

——————————————————————————

முதல் 3 பரிசுகள் பெற்ற கட்டுரைகளை இத்துடன் இணைத்திருக்கின்றேன். சிறுகதைத் திறனாய்வுக் கட்டுரை எப்படி எழுதலாம் என்பதற்கு இவை உதாரணமாக இருக்கும் என நினைக்கின்றேன்.விரும்பினால் பிரசுரிக்கலாம். அன்புடன், குரு அரவிந்தன்.

சிறுகதைத் திறனாய்வுக் கட்டுரை

——————————————————————————

25-5-2021 அன்று முடிவுகள் வெளிவர இருக்கின்றன. முடிவுகள் இங்கே வெளியிடப்படும் – குரு அரவிந்தன்

எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்தும் திறனாய்வுப் போட்டி

1,10,000 ரூபாய் பரிசுகள்

இலக்கிய உலகில் புகழ் பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் 50வது ஆண்டு நிறைவான தமிழ் இலக்கிய சேவையைப் பாராட்டும் முகமாகவும், வாசிப்பு, எழுத்துப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கமாகவும் நடக்கும் உலகளாவிய நாவல், சிறுகதை திறனாய்வுப் போட்டி ஒன்றை எழுத்தாளர் குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்தவுள்ளது. பரிசு பெறும் எழுத்தாளர்களுக்காகப் 13 பரிசுகள், மொத்தம் இலங்கை நாணயம் 1,10,000 ரூபாய்கள், பரிசுகள் இலங்கை நாணயத்தில் வழங்கப்படும்.

  • முதலாம் பரிசு (இலங்கை ரூபாய்கள்): ரூ.25,000
  • இரண்டாவது பரிசு (இலங்கை ரூபாய்கள்): ரூ.20,000
  • மூன்றாவது பரிசு (இலங்கை ரூபாய்கள்): ரூ.15,000
  • 10 பாராட்டுப் பரிசுகள் (1நபருக்கு இலங்கை ரூபாய்கள்): ரூ.5,000
  • பாராட்டுப் பரிசுகள் (10) மொத்தத்தொகை: ரூ.50,000/

குரு அரவிந்தன் அவர்களின் படைப்புக்களுக்கானத் திறனாய்வுப் போட்டி, குறைந்தது 2 புதினங்கள் அல்லது 4 சிறுகதைகள் பற்றி உங்களின் கருத்துரைகளைத் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் 4 பக்கங்களுக்குள் அல்லது 1,500 சொற்களுக்கு மேற்படாமல் யூனிக்கோட் மற்றும் வேர்ட் (Unicode and Word) அச்சுப்பிரதியாக அனுப்பவும். மாணவ, மாணவிகளாயின் தனியாகக் குறிப்பிடவும். வயது வரம்பு இல்லை . ஒருவர் ஒரு கட்டுரை மட்டுமே அனுப்பலாம். பரிசுபெற்ற கட்டுரைகளைத் திருத்தி நூலாக வெளியிடும் உரிமை வாசகர் வட்டத்திற்குரியது.

மின்னஞ்சல் வழியாக ஆங்கிலத்தில் உங்களின் முழுப்பெயர், தெளிவான அஞ்சல் முகவரி, மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண் விவரங்களோடு அனுப்பவேண்டும். உங்கள் திறனாய்வு எமக்குக் கிடைக்க வேண்டிய கடைசி நாள் : 30.04.2021 போட்டி முடிவுகள் 2021 மே மாதம் 24ஆம் திகதி இணையத்தில் வெளியிடப்படும்.

மின்னஞ்சல்: kurufanclub@gmail.com
இணையம்: https://kurunovelstory.blogspot.com, https://canadiantamilsliterature.blogspot.com

Kuru-Contest-Nandavanam-2021

குரு அரவிந்தனின் ‘தங்கையின் அழகிய சிநேகிதி’ சிறுகதை நூல் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும். விலை ரூ.200 +91 94432 84823

kurufanclub@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *