கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 7, 2024
பார்வையிட்டோர்: 2,272 
 
 

எங்கு அனுமார் கோயிலைப் பார்த்தாலும் பக்தியோடு வணங்கிவிட்டு உண்டியலில் காசு போட்டுவிட்டுச் செல்வது பஞ்சவேலுக்கு பழக்கம். சக ஊழியர்கள் அவரை சாமி என்றுதான் அழைப்பர். மிகச்சிறந்த பக்தனாக காட்சி தந்தார். கோயிலுக்காக தாராளமாக செலவிடுவார். பலரும் இவரை தானப்பிரபு என்றும் அழைத்தனர்.

அன்று மாலை தனது அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். அந்தத் தெருவில் கழைக் கூத்தாடி ஒருவன் அனுமார் வேசமிட்டு கூத்துக்காட்டிக் கொண்டு இருந்தான். வேடிக்கைப் பார்த்த பலரும் தன்னால் இயன்ற உதவியைச் செய்தனர்.

“இதெல்லாம் ஏமாற்று வேலை; கோயிலுக்குச் செய்தாலும் புண்ணியம் உண்டு. முனுமுனுத்தவாறு வீட்டுக்குள் நுழைந்தார் பஞ்சவேல். கூத்து முடிந்ததும் அருகில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த கிழவியின் தட்டில் ரெண்டு ரூபாயை போட்டுவிட்டு அடுத்தத் தெருவுக்குப் போனான் கூத்தாடி.

– ஆகஸ்ட் 2006 தாழம்பூ மாத இதழில் வெளியானது.

– முதல் பரிசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2015, இனிய நந்தனம் பதிப்பகம், திருச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *