பாரிஸ் நகரத்தில் மிக அழகான பெண் ஒருத்தி இருந்தாள். அவளைத்தான் உலகிலேயே மிக விலை உயர்ந்த தாசி என்று சொன்னார்கள். அவளை அடைய, அவளுடன் (சந்தேகமில்லாமல் இன்பமாக) ஒரு மாலைப் பொழுதை கழிப்பதற்கு மிகுந்த பணம் தேவையாக இருந்தது.
நகரத்தின் அருகிலே ஒரு பெரிய மிலிட்டரி காம்ப் இருந்தது. அதில் இருந்த எல்லா ஆண்களின் கனவு அந்தப் பெண்ணுடன் ஒரு தினம்.
அவர்களில் ஒருவன் ஒரு நாள் மாலை மற்றவர் எல்லாரையும் திரளாகக் கூப்பிட்டு இவ்வாறு சொன்னான். “நண்பர்களே! நாம் எல்லோரும் குணத்திலும், உருவத்திலும், மனப்பான்மையிலும் வேறுபட்டவர்களாக இருந்தாலும் நம்மிடம் ஒரு ஆசை மட்டும் பொதுவாக இருக்கிறது. அது மிஸ் —-உடன் ஒரு இரவாவது இன்பமாகக் கழிப்பது. அதற்கேற்ற செல்வம் நம் ஒருவரிடமும் இல்லை. ஆனால் இவ்வளவு பேர் இருக்கிறோம். நாம் எல்லோரும் ஆளுக்கு ஒரு ஃபிராங்க் போட்டு ஒரு நிதி திரட்டுவோம். போட்டவர்கள் பேரை எல்லாம் சீட்டுகளில் எழுதிக் குலுக்கி ஒரு சீட்டு தேர்ந்தெடுப்போம். எவன் பெயர் வருகிறதோ அவன் மற்றவர்களின் பிரதி நிதியாக, திரண்ட பணத்தை எடுத்துக் கொண்டு அவளிடம் சென்று வரட்டும். வந்து தன் அனுபவத்தை மற்றவர்களிடம் சொல்லட்டும்.”
இதற்கு அவர்கள் எல்லோரும் ஒப்புக்கொள்ள, மிகப் பெரிய வசூல் நிதி சேர்ந்தது. எல்லோர் பெயரும் சீட்டுக்களில் எழுதப்பட்டு ஒரு பெரிய ட்ரம்மில் குலுக்கப்பட்டு, ஒரு பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது.
அதிர்ஷ்டம் அடித்தது ஒரு சாதாரண சோல்ஜருக்கு. அவன் அளவிலா ஆனந்தம் அடைந்து சுத்தமாகத் தலை வாரிக் கொண்டு ஷூஸ் பாலிஷ் போட்டுக் கொண்டு தன் மிகச் சிறந்த ஷர்ட் அணிந்து கொண்டு சேகரித்த பணத்தை எடுத்துக் கொண்டு மற்றவர்களின் பொறாமைப் பெருமூச்சுகள் தொடர அந்தப் பெண்ணை நோக்கிச் சென்றான்.
அந்த மிக அழகான பெண்ணுடன் அவன் அந்த மாலை நிஜமான கனவில் மிதந்தான். அவள் சிநேகிதமும், அவள் மென்மையும் அவள் வடிவமும் அவள் உடம்பின் சில்க்கும் அவள் வாசனையும் அவள் இன்பமான பேச்சும் பேச்சுக்குப் பின் மூச்சும்….
கடைசியில் அவளிடமிருந்து விடைபெறுகையில் அந்தப் பெண் அவனை “நீ யார்?” என்று கேட்டாள்.
“ஏன் கேட்கிறாய்?” என்றான்.
என்னைப் பிரபுக்களும் அரச குமாரர்களும்தான் பார்க்க வருவார்கள். உன்னைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை” என்றாள்.
அவன் “நான் ஒரு சாதாரண சோல்ஜர்” என்றான்.
“அப்படியா! உனக்கு இவ்வளவு பணம் எப்படிக் கிடைத்தது? எங்கேயாவது…”
“இல்லை இல்லை” என்று அந்த இளைஞன் தன் காம்ப்பில் நடந்ததை முழுவதும் சொல்லி விட்டான்.
அதைக் கேட்ட அவள் ஆச்சரியப்பட்டாள். “என்னை நினைத்து பல்லாயிரக் கணக்கானவர்கள் உருகுகிறார்களா? என்னிடம் இவ்வளவு பேர் ஆசை வைத்திருக்கிறார்களா? உன் கதை என் நெஞ்சைத் தொடுகிறது… அதற்காக நான் உனக்கு ஒரு பரிசு அளிக்கப் போகிறேன்… மறக்க முடியாத பரிசு… உலகத்திலேயே மிக விலை உயர்ந்த பெண்ணுடன் நீ ஒரு இரவை முழுக்க முழுக்க இலவசமாகவே கழித்தாய் என்று இருக்கட்டும். எனக்கு உன் பணம் வேண்டாம்….”
இவ்வாறு சொல்லி அந்தப் பெண் அவனிடம் அவனுடைய ஒரு ஃபிராங்க்கை திருப்பித் தந்து விட்டாள்!
தொடர்புடைய சிறுகதைகள்
பாரில் நின் பாதமல்லால் பற்றிலேன் பரம மூர்த்தி
- தொண்டரடிப்பொடி
ஒரு காலகட்டத்தில் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் (சாஸ்திரி, பக்தவத்சலம்) இருக்கும்போது இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது தமிழகத்தில். துப்பாக்கிச் சூடு, கடையடைப்பு, ராணுவம் வந்து ரகளை எல்லாம் இருந்தது. ஸ்ரீரங்கத்திலும் ...
மேலும் கதையை படிக்க...
ரயில் பயணத்தின் போது ஏற்படும் அனுபவங்கள் சில மறக்க முடியாதவை. கீழ் வரும் அனுபவத்தைச் சந்தோஷமா, சங்கடமா என்று நீங்களே தீர்மானியுங்கள்.
ஒரு முறை பெங்களூரிலிருந்து சென்னை வரை பிருந்தாவனில் பயணம் செய்தபோது, ஒரு மாமா எதிர் ஸீட்டில் உட்கார்ந்துகொண்டு என்னையே ஐந்து ...
மேலும் கதையை படிக்க...
ஜன்னல் வழியாக ஆதவன் தலையெடுக்கும் முன்னமேயே புல் தரையில் சிறு குழந்தை தவழ்ந்து வருகிறது. களுக்கென்று சிரிக்கிறது. அதனால் நடக்க முடியுமா என்று கவலையாக இருக்கிறது. அதற்குப் பெயர் இருக்கிறது. பறந்து வந்து விளிம்பில் உட்கார்ந்துவிட்டு அறைக்குள் சிற்றடி வைத்து இறங்கி, ...
மேலும் கதையை படிக்க...
கல்லூரியில் இருந்து திரும்பி வருவதற்குள் மழை பலமாகி, கடைசி பர்லாங்கில் ராஜலட்சுமி நனைந்துவிட்டாள். போதாக்குறைக்கு பஸ் ஒன்று உற்சாகமாக சகதியையும் சேற்று நீரையும் அவள் மேல் வாரி இறைத்துவிட, வீட்டு வாசலை அடையும்போது கோபம் மூக்கு நுனியில் துவங்கியிருந்தது. பால்காரன் வரவில்லை. ...
மேலும் கதையை படிக்க...
ஸார்! நான் எஸ்.எஸ்.எல்.ஸி. வரை தான் படிச்சேன். அதற்கப்புறம் படிப்பு ஏறலே. நான் எங்கப்பாவுக்கு இரண்டாவது பையன். என் அண்ணா நல்ல வேலையில் இருக்கான். படிச்சு நெட்டுருப் போட்டு, பரீட்சை எழுதிப் பாஸ் பண்ண எனக்குச் சிரத்தை இல்லை; பொறுமை இல்லை; ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: சுஜாதா.
செய்தி வந்த உடனே பஸ் பிடித்து சேலம் போய்ப் பார்ததால் அப்பா படுக்கையில் உட்கார்ந்திருந்தார்.
“எங்கே வந்தே” என்றார்.
“உனக்கு உடம்பு சரியில்லைன்னு” என்று மழுப்பினேன்.
“நேற்று வரை சரியில்லாமல்தான் இருந்தது. டாக்டர்கள் என்னமோ பண்ணி உட்கார வைத்து விட்டார்கள்.சாப்ட்டியா?”என்றார்” எனக்கு என்ன ...
மேலும் கதையை படிக்க...
ஆர்.சேஷாத்ரிநாதன் என்ற பெயர் எஸ்.எஸ்.எல்.சி. புத்தகத்திலும் பாஸ்போர்ட்டிலும்தான் பயன்படுத்தப்பட்டது. அனைவரும் அவனை சேச்சா என்றுதான் அழைப்போம். சிலசமயம் ராமான்ஜு, சிலசமயம் எல்.பி.டபிள்யு என்று கூப்பிடுவோம். காரணம்1, கணக்கில் மிக கெட்டிக்காரன். 2: எப்போதாவது எங்களுடன் கிரிக்கெட் ஆட வரும்போது எல்.பி.டபிள்யு கொடுத்தால் ...
மேலும் கதையை படிக்க...
மத்தியானம், போர்டு மீட்டிங்கில் தொடரும்போது, துர்காவின் கரிய பெரிய விழிகளின் குறுக்கீட்டால், ஆயாசம் வெளிப்படையாகத் தெரிந்தது. "ஆர் யூ ஆல்ரைட் திவாகர்?" என்று தாராப்பூர்வாலா கேட்டார்.
"ஐ டோண்ட் ஃபீல் வெல்!" மற்ற ரொட்டீன் மேட்டர்களை அவரைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, தன் ...
மேலும் கதையை படிக்க...
‘இன்றிரவு எட்டு ம்ணிக்கு ஷெர்ட்டனில் சந்திக்கலாம். நீல சாரி அணிந்திருப்பேன். மெரூன் பார்ட்ர்’ மனைவி வருவதை கவனித்து சட்டென்று அதன் குறிப்பை கிழித்துப் போட்டான்.
“என்னங்க அது?”
“ஒண்ணுமில்லை ஒரு மீட்டிங்குக்கு சீட்டு அனுப்பி கூப்பிட்டிருக்காங்க. போகணும்.”
“இன்னைக்குமா? தினப்படி மீட்டிங் ஆயிடுத்தே உங்களுக்கு”
“என்ன பண்றது… ...
மேலும் கதையை படிக்க...
மெரீனாவில் கடலருகே அதிகக் கூட்டம் இல்லை. அங்கே இங்கே ஓரிரு தப்பித்த படகுகள். வெயில் காயும் வலை தவிர மனித நடமாட்டம் இல்லை. ஈரம் இன்னும் காயாத மணல் பால் வெண்மை மறந்து பழுப்புக்கு அருகில் இருந்தது. அவசரமால உதித்துவிட்டு அபத்தமாகத் ...
மேலும் கதையை படிக்க...
எப்போதும் போல ஒரு சுஜாதா டச் . நச்.
நல்ல விருந்து .