பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன அகதிகள் கதை
மிஸ்டர் விக்கிரமாதித்தர் மறுபடி முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக் கொண்டு வர, அது அவருக்குச் சொன்ன மூன்றாவது கதையாவது:
‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும்கேளும்! ‘இரண்டாவது உலக மகா யுத்தம், இரண்டாவது உலக மகா யுத்தம்’ என்று ஒரு பயங்கர யுத்தம் இந்தப் பாரிலே நடந்ததுண்டு. அந்த யுத்தம் நடந்து கொண்டிருந்த காலையில் பர்மாவிலிருந்த இந்தியர் பலர் பயந்து போய், இந்த இந்தியா தேசத்தை நாடி அகதிகளாக வந்ததுண்டு, அப்படி வந்தவர்களிலே மூன்று தம்பதியர் ஒரு நாள் இரவு ஒரு செல்வந்தர் வீட்டுக்குச் சென்று, ‘ஐயா, இன்றிரவு இங்கே தங்க எங்களுக்குக் கொஞ்சம் இடம் கொடுப்பீர்களா?’ என்று கேட்க, ‘கொஞ்சம் என்ன, நிறைய உண்டு!’ என்றார் அவர்.
காடு மலையெல்லாம் கால் கடுக்க நடந்து வந்த தம்பதியர் அறுவரும், ‘அப்பாடா, அம்மாடி!’ என்று அமர்ந்து, தங்களைத் தாங்களே ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்க, ‘இந்த உலகத்திலே எந்த சுகத்தை நீங்கள் பெரிய சுகமாக நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டார் செல்வந்தர்.
‘அன்ன சுகமே பெரிய சுகம்!’ என்றார் ஒருவர்.
‘பெண் சுகமே பெரிய சுகம்!’ என்றார் இன்னொருவர்.
‘நித்திரை சுகமே பெரிய சுகம்!’ என்றார் மற்றொருவர்.
‘அப்படியா?’ என்ற செல்வந்தர், ‘அன்ன சுகமே பெரிய சுகம்!’ என்ற தம்பதியருக்கு அறுசுவையோடு அன்னமிடச் சொன்னார்; ‘பெண் சுகமே பெரிய சுகம்!’ என்ற தம்பதியருக்கு ‘மலர் மஞ்சம்’ தயாரித்துக் கொடுக்கச் சொன்னார்; ‘நித்திரை சுகமே பெரிய சுகம்’ என்ற தம்பதியருக்கு ‘இலவம் பஞ்சு மெத்தை’ போடச் சொன்னார். இப்படியாகத்தானே அவரவர்கள் விரும்பியதை அவரவர்களுக்குச் செய்து கொடுத்துவிட்டு, அவர் தூங்கப் போக, நடு இரவில் யாரோ ஒருவர் வந்து அவருடைய அறைக் கதவைத் தட்ட, ‘யார் அது?’ என்று கேட்டுக்கொண்டே வந்து கதவைத் திறந்தார் அவர்.
‘நான்தான்!’ என்றார் வந்தவர்.
‘நான்தான் என்றால்… ?’
‘பெண் சுகமே பெரிய சுகம் என்றேனே, அவன்தான் நான்!’ என்றார் வந்தவர்.
‘ஓ, என்ன விஷயம்?’ என்றார் வீட்டுக்குரியவர்.
‘பசிக்கிறது!’ என்றார் வந்தவர்.
‘அப்படியா? உட்காரும்!’ என்று அவரைச் செல்வந்தர் உட்கார வைக்க, இன்னொருவர் வந்து, ‘நித்திரை சுகமே பெரிய சுகம் என்றேனே, அவன்தான் நான்’ என்றார் தயங்கித் தயங்கி.
‘ஓ, என்ன விஷயம்?’ என்றார் செல்வந்தர்.
‘பசிக்கிறது!’ என்றார் அவர்.
‘அப்படியா? உட்காரும்’ என்று அவரையும் உட்கார வைத்துவிட்டு, ‘இன்னொருவர் எழுந்து வரவில்லையா?’ என்று செல்வந்தர் கேட்க, ‘இல்லை, அவர்தான் குறட்டை விட்டுக் கொண்டு தூங்குகிறாரே!’ என்றனர் இருவரும் வயிற்றெரிச்சலுடன்.
‘ஏன், நீங்கள் தூங்கவில்லையா?’ என்றார் வீட்டுக் குரியவர்.
‘தூக்கம் வந்தால்தானே தூங்க? பசிதான் வயிற்றைக் கிள்ளுகிறதே!’ என்றனர் இருவரும்.
‘உங்கள் பெண் சுகம், நித்திரை சுகமெல்லாம் என்னவாயின?’ என்று செல்வந்தர் கேட்க, ‘அன்ன சுகத்துக்கு அப்பால்தான் அந்த சுகமெல்லாம் என்று இப்போதல்லவா தெரிகிறது எங்களுக்கு?’ என்று இருவரும் சொல்ல, ‘அப்படியா?’ என்று செல்வந்தர் சிரித்து, அவர்களுக்கும் அறுசுவையோடு அன்னமிட, அதை உண்டு அவர்களும் ஆனந்தமாக உறங்கலாயினர் என்றவாறு… என்றவாறு… என்றவாறு…..’
பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘இந்த மூன்று சுகங்களில் எந்த சுகத்தை நீங்கள் பெரிய சுகமாக நினைக்கிறீர்கள்?’ என்று விக்கிரமாதித்தரைக்கேட்க, ‘அன்ன சுகத்தைத்தான்!” என்று விக்கிரமாதித்தர் சொல்ல, பாதாளம் மறுபடியும் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் போய் முருங்கை மரத்தின்மேல் ஏறிக்கொண்டு விட்டது காண்க…. காண்க…. காண்க……
- மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை
தொடர்புடைய சிறுகதைகள்
இருபத்து மூன்றாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் அபரஞ்சி சொன்ன பேயாண்டிச்சாமியார் கதை
"கேளாய், போஜனே! 'மாயாண்டிபுரம், மாயாண்டிபுரம்' என்று ஓர் ஊர் உண்டு. அந்த ஊரிலே ‘பேயாண்டிச் சாமி, பேயாண்டிச்சாமி' என்று ஒரு சாமியார் உண்டு. அந்தச் சாமியார் மக்களோடு மக்களாக வசிக்காமல் ஒரு ...
மேலும் கதையை படிக்க...
கையிலிருந்த மூக்குக் கண்ணாடியைத் துடைத்துக் காதில் மாட்டிக் கொண்டு, சாளரத்துக்குக் கீழே விழுந்து கிடந்த செய்தித்தாளை எடுத்துப் பிரித்தார் சிதம்பரம்.
"இந்தக் கதையைக் கேட்டீர்களா?" என்று அங்கலாய்த்துக் கொண்டே அவரை நோக்கி வந்தாள்.அவருடைய மனைவி சிவகாமி.
"ஊர்க் கதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க உனக்கு நான்தானா ...
மேலும் கதையை படிக்க...
மூன்றாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கோமளம் சொன்ன கோபாலன் கதை
மூன்றாவது நாள் காலை போஜனாகப்பட்டவர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பெருத்துக் கொண்டே வந்த தம் தொந்தியைக் கவலையுடன் தடவிக் கொடுத்தவாறு உட்கார்ந்திருக்க, அதுகாலை யாரோ ஒரு பிச்சைக்காரன் 'என்னைப் பார்த்தீர்களா?’ என்பதுபோல் ...
மேலும் கதையை படிக்க...
“தங்கத்தாலே காப்புப் போட்டுத்
தங்கமே தங்கம் - உனக்குத்
தாலிகட்டப் போறேனே நான்
தங்கமே தங்கம்!”
இந்தப் பாட்டு நந்தபாலனுக்கு நினைவு வந்ததும் அவன் முகத்தில் ஓர் அலாதிக் களை தோன்றி அவனை ஆனந்த சாகரத்தில் ஆழ்த்தியது. அடுத்த கணம் எங்கேயோ பிறந்து வளர்ந்து கடைசியில் கழைக் ...
மேலும் கதையை படிக்க...
முப்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் முல்லை சொன்ன நட்சத்திர வீட்டு நாயின் கதை
"கேளாய், போஜனே! நாய் என்றால் எல்லா நாயும் ஒன்றாகிவிடாது. அதிலும் நட்சத்திர வீட்டு நாய் இருக்கிறதே, அதற்கென்று ஒரு தனி நடை, தனிப் பார்வை, தனிக் குணம் எல்லாம் உண்டு. ...
மேலும் கதையை படிக்க...
மொட்டை மாடியிலே காலை நீட்டிப் போட்டு உட்கார்ந்து, "ஓர் ஊரிலே ஓர் ராஜாவாம்..." என்று ஆரம்பிப்பாள் பாட்டி. அவள் நீட்டி காலில் படுத்தபடி, வானத்திலிலுள்ள நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டே "ம்" என்பான் பேரன்.
"அந்த ராஜா ஒரு நாள் காட்டுக்கு வேட்டையாடப் போனானாம்..."
"ம்"
"அந்தக் ...
மேலும் கதையை படிக்க...
சென்ற வருடம் கைலாசநாதர் கோயிலுக்குச் சென்ற நேயர்கள், அந்தத் தோட்டக்காரக் கிழவனைப் பார்த்திருக்கலாம். அந்த வயோதிகனின் பெயர் காளிமுத்து; வயது அறுபதுக்கு மேலிருக்கும். தளர்ந்து மெலிந்த அவன் சடலத்தில் ஏதோ சஞ்சலம் ஊறிக் கிடந்தது. அந்தச் சஞ்சலத்தின் சாயை, அவனது வாடி ...
மேலும் கதையை படிக்க...
மாதக் கடைசி; தேதி இருபத்து மூன்று; வெள்ளிக்கிழமை; மாலை நேரம்.
கணேசன் காரியாலயத்திலிருந்து மனச்சோர்வுடன் வீட்டுக்குத் திரும்பி வந்தான். அவனுடைய சோர்வுக்குக் காரணம் வேறொன்றுமில்லை; இந்தியாவின் பொருளாதார நிலை திருப்திகரமா யிருப்பதுபோல், அவனுடைய பொருளாதார நிலை திருப்திகரமாக யில்லாமற் போனது தான்
அவனுடைய மனைவி ...
மேலும் கதையை படிக்க...
இருபத்து நான்காவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மனோரஞ்சிதம் சொன்ன கடவுள் கல்லான கதை
"கேளாய், போஜனே! அல்லும் பகலும் அனவரதமும் ‘கடவுளே கதி’ என்று இருந்த ஓர் ஆத்மாவுக்குத் திடீரென்று ஒரு நாள் ஒரு சந்தேகம் பிறந்தது. அந்தச் சந்தேகம் என்ன வென்றால்:
‘மற்ற யுகங்களிலெல்லாம் ...
மேலும் கதையை படிக்க...
சித்திரம் சிற்பம், நடனம், நாட்டியம் முதலிய கலைகளைச் சிலர் தங்கள் குல வித்தையாகக் கொண்டிருக்கிறார்களல்லவா? அதுபோலக் கூலிப் பிழைப்பைத் தன் குல வித்தையாகக் கொண்டிருந்தான் சின்னசாமி. அவன் அப்பன், பாட்டன், அந்தப் பாட்டனுக்குப் பாட்டன் எல்லாம் சீதாராமச் செட்டியாரின் முன்னோர்களிடம் பரம்பரை ...
மேலும் கதையை படிக்க...
இருபத்து மூன்றாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் அபரஞ்சி
மூன்றாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கோமளம்
முப்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் முல்லை
சிறுகதை மன்னன் பெற்ற செல்வம்
இருபத்து நான்காவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மனோரஞ்சிதம்