என் அயலவர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 2, 2024
பார்வையிட்டோர்: 728 
 
 

சிறிய கடலே (நீரே) வேலணையிலிருந்து என் கிராமத்தை, அராலியைப்  பிரிக்கிறது. நீந்திக் கடந்து விடக்கூடிய தூரம் தான். 

முன்பும், அராலித்துறை போக்குவரத்துக்கு வள்ளப்பாதையாக விளங்கி இருக்கிறது. காலனிக்காலத்திலிருந்தே அரசாங்கம் தரைவழிப்பாதை அமைக்கும் திட்டத்தை வைத்திருக்கிறது புங்குடு தீவு (கைவேப்) பாதையின் நீட்சி செயல் வடிவம் பெறவில்லை. கடலில் கல்லைக் கொட்டி பண்ணை வீதி, காரை வீதி, புங்குடுதீவு வீதி போன்றவை என்று அமைக்கப்பட்டன? அப்படி அராலித்துறை வீதி ஏன் அமைக்கப்படவில்லை? விபரம் தெரியவில்லை. பண்ணைப்பாலம் என்கிறார்கள். அங்கே பாலம் ஒன்றும் இல்லை. பாலங்கள் இல்லாது இருப்பதால் தான் இவை வற்றுக்கடலாகிக் கொண்டு செல்கிறதா? அந்த ஃபைலை, மகிந்தாவின் ஆட்சியில் எடுத்து தூசி தட்டி பார்த்திருக்கிறாரோ?… என்று தோன்றுகிறது.

1985 இல் பண்ணை வீதியை, காரைநகர் ஃபெர்ரி பாதையை இலங்கைப்படையினர் மூடி விட வேலணை, புங்டு…நயினை மக்கள் தம்தேவைகள்….வள்ளங்களின் மூலம் அராலித்துறைக்கு வந்து…கல்லுண்டாய் பாதையில் யாழ்ப்பாணத்துக்கு செல்லத் தொடங்கினர். வள்ளம், பெரு வள்ளமாகி, படகுகளாகி…பிறகு, புளட் அமைப்பினால். சிறிய ஃபெர்ரி போன்ற மிதவையும் கூட தயாரிக்கப் பட்டு மிதக்க விடப்பட்டது, அதில், மோட்டர் சைக்கிள்… கறுவாட்டுச்சிப்பம் என கணிசமானளவில் கொண்டுச் செல்வதில் முன்னேற்றம் கண்டவர்கள். மிதவையில் ட்ராக்டர், கார்கள் கூட ஏற்றிச் செல்ல தலைப்பட்டனர். அந்த நேரமே நானும்…இது சிறிய கடல் தான் என்பதை அறிந்தேன். இடைப்பட்ட கடலில் பெரிதும் கழுத்தளவு நீர் உயரம் தான் என்பது என்னையும் ஆச்சரியப்படுத்தியது. பிறகு, அவ்வூரவருக்கு நானும் கொஞ்சம் தெரிந்தவன் ஆனேன்.

அராலித்துறைக் கடலைப்பற்றி..அராலியர், நவாலியர், ஆனைக்கோட்டையயினர்க்கே நன்கு தெரியும். வள்ளப்பாதை கண்டே ஓட வேண்டும். ஓடியபாதை வாய்க்கால் போல நிலத்தில் கீறி இருக்கிறது. அதில் படகுகளைச் செலுத்தினால் சேதமடையாது. வெளியாருக்கு வாய்க்கால் பற்றிய விபரம் துப்பரவாக தெரியாது. முதலில் அராலியரின் சிறிய வள்ளங்கள் மட்டுமே ஓடின. நவாலியரின் பெரியவை வந்தன.இரு வள்ளக்காரர்களும், அடிபட பிரச்சனை உருப்பெற்றது. புலிகள் ” இரு வள்ளத்தாரையும் ஓட வேண்டாம் ” என்று நிறுத்தி விட, தோழர்கள் நாம் அவர்கள் வள்ளத்தில் மக்களை ஏற்றி, எங்களுக்கு என்ன வள்ளம் ஓடத் தெரியுமா?, கயிறுகளைக் கட்டி இழுத்து அக்கரையிலும், இக்கரையிலும் விட்டு வரத் தொடங்கினோம்.அதில்,இயக்க பிரசன்னம் தொடங்கியது. அதை வெகுண்ட உள்ளங்கள் என்ற நவீனமாக எழுதியிருக்கிறேன். (கணனி) நூலகத்தில் நூல், வேலிகள் என்ற தலைப்பில் இருக்கிறது. நீங்கள் வாசிக்கலாம். மறஂறைய இயக்கங்களும் அரசு தானே. புளட்டும், புலி ஆதரவாளர்களுமே முழுதாக படகோட்டத்தை நடத்தியதாகப் படுகிறது…எல்லாவற்றிலுமே ஆதரவாளர், தோழர், என இரு பிரிவுகள் இருக்கின்றன. புலிகள், சமூகப்பிரச்சனைகளில் எதிலும் நேரடியாக, தலையை நுழையாது விலகி நினஂறு ஆதரவாளர்களிடம் விட்டு விடுவது வழக்கம் . ஆரம்பத்தில் இருந்தே… இது தான் அவ்வியக்கத்தின் நடைமுறை படைத்தரப்பு, மீன்பிடி தடைகளை ஏற்படுத்தியதால் வேலையற்றிருந்தவர் பலருக்கு உழைப்பு இல்லை….பிரச்சனைப்பட மாட்டார்களா? அவர்களும் ஒய்வில் கிடந்த தமது பைபர் கிளாஸ் படகுகளை ட்ராக்டரில் கட்டி இங்கே கொண்டு வந்தார்கள். அரசுக்குப் பதிலாக இயக்கங்கள் இருந்தன. டெலோவை புலிகள் அடித்த போது ‘நிறைய கிழக்குத் தோழர்களை கொன்று விட்டார்கள் ‘ என்ற விமர்சனம் இருந்தது. அதோடு அவசியமற்று ஆதரவாளர்களையும் கொன்று விட்டார்கள் என்ற கோபமும் இருந்தது. இஸ்ரேல், ஹாமாஸ் ஆதரவாளரான மக்களை அளவுக்கதிகமாக கொன்று கொண்டிருக்கிறார்கள். இது பெருங்குற்றம். இலங்கை, ஆதரவாளரான மக்களைக் கொன்று விட்டு போர்க்குற்றவாளியாக மாட்டுப் பட்டு நிற்கிறது.

‘ தெய்வம் நின்று கொல்லும் ‘ என்பது நம்பிக்கை. அது தான் இனி நடைபெற இருக்கிற சுபகாரியம்.

எந்த கதைக்கும் ஒரு முடிவு இருக்க வேண்டுமல்லவா. அது இது தான்.மனித உரிமை அமைப்பின் குரல், ” நாலு வயசு சிறுவர் தொட்டு சரணடைந்தவர்க்கு என்ன நடந்தது என்பதை இலங்கையரசு,இன்னமும்…சொல்லவில்லை ” என்று உரத்து ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. யூதர்களைக் கொன்ற ஜேர்மனியருக்கெதிராக ஒலித்தது போல, ஒட்டு மொத்த இலங்கைச் சிங்களவருக்கும் எதிராகவும் ஒலிக்கிற குரல். உலகம் ஒரு செவிட்டு பிறவி தானே. எழுந்தாலும் உடனே கேட்டு விடுவதில்லை. தொடக்கத்தில், சிலவேளை கேளாதது போல​ பாசாங்கு செய்யும். கேட்டாலும் கூட​ ஒரு காதில் வாங்கி மறுகாதால் விட்டு விடுவதாக​ இருக்கும். இப்படி பலவித​ நடிப்பைக் காட்டும். 
  
ஒரு கிழமைப் புரட்சிய​ர்கள். குண்டை வெடிக்க​ வைப்பர், வெளிய​ தனிய​​வரும் இராணுவத்தினர்…இலக்காவார்கள். உடன்டியாக சுட்டுக் கொல்லப்படுவர். இப்படி, ஒரு தாம் தூம் ஒன்றை நிச்சியமாக​ எதிர்பார்க்கலாம். மற்றைய இயக்கங்கள் மேல் புலிகள் உடனடியாக பாயவில்லை. வழக்கத்திற்கு மாறானது. பள்ளிப்பிரார்தனக் கூடத்தில் கீதம் பாடும் புதிய​ (சந்ததி) பிறவிகளுக்கு…இயக்கமே புரியப் போவதில்லை, இதெல்லாம் எங்கே புரியப் போகிறது?. 

பிறகு பைபர்கிளாஸ் படகுகள் மட்டுமே ஓடின. பைபர் படகுகளிற்கு நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டன. ஏர்கள் உடைந்தன. கற்கள் கிழித்து கீழ், பக்க பகுதிகளில் சேதங்கள் கணிசமாயின. செலவும்…பயமுறுத்தன….ஓட்டமுமில்லை, வேலையுமில்லை, எனவே அவ்விடத்தவரையும் சேர்க்க வேண்டிய கட்டாயம் நேரிட்டது. படகிற்கு இருவர் தான் ஓட்டுனர். ஒருமாதிரி சேர்த்து கொண்டு ஓடின. 

கிட்டத்தட்ட 8 மாதங்கள் வரையில் மினிபஸ்கள் டீசல் புகையில் புளுதி பறக்க ஓடின. அந்த நாட்களில் ஓலை அடைப்புகளில் பல தேத்தண்ணீக்கடைகள் முளைத்தன. பிளாஸ்டிக் டீப்புகளில் (குட்டிபரல்) வைத்து எரிபொருள் விற்றார்கள் . வீதி, அதே பழைய குண்டும் குழி தான். திருத்தப்படவே இல்லை. இரவிலும் மண்ணெண்னெய் விளக்கில் சந்தடிகள் நிலவின. நாம் தெற்கராலி வீடொன்றில் காம் பண்ணி இருந்தோம்.

ஒருநாள், மேலே சுற்றிக் கொண்டு திரியும் கெலியின் பார்வையிலும் பட்டு, மெசின்துவக்கு சுட்டுத் தள்ளியது. நம்ம குண்டுத் தோழர் “நிலத்திலே படுங்கடா” என்று கத்தி படுக்க வைத்தான். இருந்த போதிலும் வர்த்தகர் ஒருத்தரின் மகன் குண்டு பட்டு இறந்து போனான். இன்னொருவருக்கு காயம். 90களிலும் அத்துறையில் சுட்டு பலர் இறந்ததாக கேள்வி. அந்த விபரம் எனக்குத் சரிவர தெரியவில்லை.

புலிகள் புளட்டை தடைசெய்யா விட்டிருந்தால் மேலும் இன்னும் சில காலம் நம் கடல்ப் புறாக்கள் ( படகுகள்) ஓடி இருக்கும். புளட்டிலும், உட்கொலைகள் வெளிப்பட்டு உட் தள,வெளித்தள மாநாடுகள் என்றெல்லாம் நடந்து கொண்டிருந்தன. தளத்தில் வேறு போதிய ஆயுதமில்லை. ஆயுதம் சேர்க்க மோட்டர்பைக் கடத்தல்…இந்தியாவில் விற்றல் என அமைப்புக்கள் பீறிட்டுக் (மீறல்களுடன் செயல்பட்டுக்) கொண்டும் இருந்தன. இப்படி விடுதலையில் நிறைய புதிய​ப் பாடங்கள் வேறு படிக்க வேண்டி இருந்தன.

புலிகள், சுடத் தொடங்கியதில் இயக்கங்களின் ஆயுள் வெகுவாக சுருங்கிப் போய் விட்டது, நாமெல்லாம் கனவு நிலைக்குத் தள்ளப்பட்டோம். எவரும் ஒருமுறை தான் வாழ்கிறான். நமக்கு பக்கத்தில் இருப்பவரோடும் போராடித் தான் கிடக்க​ வேண்டும் என்றால் இது என்ன வாழ்வு?. தூரத்தில் இருப்பவரோடு வாழும் வரையில் போராட வேண்டும். நாம் எதைத் தெரிந்தோமோ, அதில் உறுதியாக நின்றிருக்க வேண்டும்.புலிகள் மட்டுமில்லை எல்லா இயக்கங்களும் பயிற்சியின் போது உறுதி மொழி எடுத்துக் கொண்டு தானிருந்தன. உட்கொலைகள் நிகழவும் ஒருவேளை, அது தான் காரணமாக இருந்திருக்கலாம். விடுதலைக்கு எதிரானவர்களை ஓரேயடியாக​ துரோகி என்ற வரையறுப்பு செய்து விடுகிறோம். நாம் உறுதியை பிழையாய் எழுதிக் கொண்டிருந்ததாகப் படுகிறது. சரியாய் எழுதிக் கொள்ளவில்லை.எழுத்தாளச் சிங்கங்களே, ஒவ்வொரு சிறு விசயமும் எம்மை தலைகுப்புற வீழ்த்திக் கொண்டிருக்கிறது. எழுத்தை, வரைபடத்தை சரிவர எழுதுங்கள். வருபவர்களுக்கு…. இலகுவாக இருக்கும். எதையும் விற்கிறதோ, தாரை வார்த்துக் கொடுக்கிறதோ எம் இலட்சியமில்லை. இலக்கை அடையும் வரையில் இழப்பு இருந்து கொண்டே இருக்கும். காலனியிலிருந்து விடுதலை கிடைத்த போது அதை தமது விடுதலையாய் எடுத்துக் கொண்ட சிங்களவரின் பரிசக்கேட்டைத் தான் இன்று நாம் பார்க்கிறோம்.

இன்று, நாம் அனைவருமே…. புதுப் பிரச்சனையாய் வீதிகளாலும், பஞ்சத்தினாலும் செத்துக் கொண்டிருக்கிறோம். அபிவிருத்தியடைந்த​…நாடுகளில் சதா வீடுகள் எரிந்து செத்துக் கொண்டிருப்பார்கள். அக்னித்தகனம். நம்நாடுகளில் வீதி விபத்துகள். முந்தி என்றால் இராணுவத்துடன் சேர்ந்து,நகரக்காவலரும்…என்னவோ நாட்டைக்காப்பாறுவது போல​ தமிழிளைஞர்களை தினமும் கொன்று கொண்டிருப்பர். வடக்கு கிழக்கு தனிநாடு. ‘ ஏன்?, சுடுதல், படுகொலை, கடை எரிப்புகள், அவசரகால நேரக்கொலைகள் ( கேவ்வுயூ)…நடைபெறுகின்றன​ ‘ என்றே புரியாமல் இருக்கும். குமுதினி, மண்டைதீவு, பஸ்சை நிறுத்தி, இறக்கி வரிசைக்கு நிரையாக​ நிற்க​ வைத்து நிகழ்ந்தேறிய​ படுகொலைகள்….இன்று வரையில் தெரியவில்லை. எங்களுக்கே இந்த​ நிலை என்றால்..புதுக்குஞ்சுகளின்… நிலை, யானைப் பார்த்த​ குருடர் தான். இலங்கையில், நடக்கிறது, நடந்தது…” இனப்படுகொலையே இல்லை ” என​ கையில் சூடத்தை ஏந்தி சிங்களவர் சத்தியமே​ செய்வர். எவன் தான் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கிறான்?. 

இயக்கங்களில் நிகழ்ந்த​ உட்கொலைகளும் உள்ளே வலிக்கவே செய்தன. முஸ்லிம்களும் பேசப் பிரியப்படாத​, விரும்பாத​…கிழக்கில், இனக்கலவரம் போல நிகழ்த்தப்பட்ட​ ஊர்காவல்படைக் கொலைகள். விடுதலையிலேயே இறங்காத​, ‘ கெளரவப்பிரஜை ‘ என்கிற​ சாதி, சடங்கெனத் திகழ்ந்த​ படித்த​ பெடியள் கணிசமாக​ இறந்தது இவர்களால் தான். காணாமல் போனோருடன் இந்த​ அழுகுரலும் உள்ளது. சட்டமும்,ஜனநாயகமும் தன் கடமைகளைச் செய்யாது. நாம் தாம் செய்ய​ வேண்டும்.

பரிகாரத்தில் இறங்காத வரையில் கேள்விகளும், விமர்சனங்களும் என்றுமே இருக்கும், மறைந்து போகாது. புலிகள் எம்மை தடைசெய்த போது,’ இவர்கள் யார் தடை செய்ய? ‘என்ற கோபம் என்னுள் பொங்கியது. வாழ்வில் 2 ம் பாகம் தொடங்கியது. இந்தநேரத்திலே சின்னம்மா எனக்கு சைக்கிள் வாங்க 800 ரூபா தந்தார். நட்பு அவ்விலைக்கு சைக்கிளைத் தர உடன்பட்டது. அவன் நோர்வே செல்ல இருந்தான். தம்பியும் கொழும்பு செல்ல வேண்டியிருந்தது. பெண்களிற்கு லேடீஸ்பைக்கே தேவைப்பட்டது.அவை விலை கூடியவை. இயக்கப்பெட்டைகளும், கம்பஸினருமே அவ்வேளை ஓடியவர்கள். தடை, கிடை…என​ புதிய​ அடக்குமுறைகள். அச்சைக்கிள், நட்பின் வழியிலும், உறவினர்களை தேடியும் அளவெட்டி, மயிலிட்டி, கரவெட்டி, வேலணை…என எல்லா இடங்களிற்கும் ஓடியது. புலிகள், இந்தியனாமியிடம் ஆயுதம் ஒப்படைப்பதையும், சுதுமலையில் பேசுவதையும் கூட​ சென்று பார்த்திருந்தேன். அச்சமயம் புலேந்திரனின் பேச்சு எனக்கு நிரம்ப பிடித்திருந்தது.

ஒரிரு தடவை புலியினர் என்னை மறித்து விசாரித்தனர். சாரமும் சேர்ட்டும் தான் என் தேசிய உடை. என்னுடன் வந்தவர் ” சொந்தக்காரர். வீட்ட வந்திருக்கிறார் ” என்றார். விட்டு விட்டார்கள். சில புலிகள் உர்ரென பார்க்கவும் செய்தார்கள். இந்தியனாமியோட பிரச்சனையில் ஓடுபட்டுக் கொண்டிருந்த பதற்றம். நான் புளட் என்பது அயலவருக்கு மட்டும் தான் தெரியும். இது வேறு இடம். என்னைப் பிடித்து விசாரிக்க​ அவர்களுக்கு நேரமில்லை. நான் பண்ணை வீதியில் நின்ற மெற்றாஸ்ரெஜி மெண்ட் சிப்பாயியிடம் கூட”…இப்படி சொல்கிறார்களே…?” என்று கேட்டிருக்கிறேன். அவர் “நாங்கள் உங்களுக்காகத் தான் வந்திருக்கிறோம். தெரியல்லை” என்றார். பிறகு, அந்த ரெஜிமெண்டையே மாற்றி வேற சிப்பாய்களை இறக்குமதி செய்து விட்டார்கள். அதற்கிடையில் சுழிபுரத்திலே இரண்டு வயசான சிப்பாய்கள் புலிகளிடம் மாட்டுப்பட்டு மாலை போல விடுவிக்கப்பட்டார்கள். மெற்றாஸ்தமிழ். புலிகளையும்…அசைத்திருக்கிறது. இந்த சிங்கள அலுப்புகள், தமிழில்,தமிழ்பகுதியில் மட்டும் பேசி பழகக்கூடியவர்களை பணிக்கு அமர்த்தி இருந்திருந்தால் அரைவாசி வெறுப்புகள் இருந்தே இருக்காது. எல்லாப்பகுதிகளிலுமிருந்து நேர்மை, நியாயம்…. பெருக்கெடுக்கவும் வேண்டும்.

நிலக்கொள்ளையிடும் கும்பலோடு எப்படி பேச முடியும்?. உண்மையிலே, சிங்களம் தீர்வைப் பேசினாலும் கூட…. நம்புவது சிரமாகவே இருக்கிறது. முதலில், தவறு செய்தவர்கள் பட்டியலை தெரிவித்து, தண்டிக்கா விட்டாலும், பொதுப்படையாக மன்னிப்பாவது கேட்க வேண்டும். பிறகு கீலிங்கள் தொடங்கப்பட வேண்டும். சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். இதில் கால் வைக்காமல்… அந்த நாகரீகம் எங்கே செல்கிறது?, எந்த அதிசயங்களும் இந்த மண்ணில் நிகழப் போவதில்லை.

யாழ்ப்பாணத்தில் வேலை இல்லை என்றால்..ஆள் காலி !. நான் இப்படி சொந்தங்கள் மத்தியில் இருக்க வேண்டும் எனஂற ஏக்கம் பிடித்தவன். எனது நண்பனஂ அகிலனஂ இதைப் புரிந்து கொண்டு அவனுடைய உறவினரில் எனஂனம் விசேசம் எனஂறாலும் எனஂனை இழுத்து கொண்டு செல்வான். ஒரளவு படித்தவர்கள்,பரவாயில்லையான வேலையில்…உறவுகளுடனஂ ஈரத்துடனும் ஈர்ப்புடனும் இருந்தார்கள், சரி, பிழையை ஒருபுறம் விட்டு, விட்டு சந்தித்தால் எவருடனும் முகம்பார்த்து உரிமையுடனஂ கதைப்பார்கள். சந்தர்ப்பம் கிடைத்தால் உதவுவர். இடையில் சச்சரவு ஏறஂபட்டு கதைக்காமலும் இருப்பர் மத்தியிலும் கூட இளகியவர்கள் இருப்பார்கள். எதற்காக அவர்களினஂ பிள்ளைகளிடம் சாதிக்கவே மாட்டார்கள். கடனஂ கொடுத்து கொடாமல் இருப்பது நீண்டிருக்கும். ஒரு நேரத்தில்…’ கொடுக்கவேண்டியதில்லை ‘ எனத் தளர்த்தியும் விடுவர். திரும்ப பிழங்குற போது…வனஂமம் இருக்காது.

ஆசிரியரின் காதல் கதையை எதிர்ப்பு, பிரச்சனைகளில் கடைசியில் வெற்றி பெற்ற​ பதின்ம​ வயசு….எழுத்துக்களை வெகுவாக​ ரசிக்கலாம்​. என்னுடைய​ விமர்சனம் வாசிக்கிற உங்களுடைய​ சுவாரசியத்தை எந்த​ விதத்திலும் குறைத்து விடாது.

ஆசிரியர், வரதா வீட்டிலே அவளுடைய அறையிலே அடுகிடையாக இருந்தேனஂ ‘ எனஂகிறார். கிராமத்திலும் , இப்படி பழகிறதை நானும் கேள்விப்பட்டிருக்கிறேனஂ. நீங்களும் அறிவீர்.

நம் ஊரிலே கூட மணமாக முதலே, ” மாப்பிள்ளை வந்திருக்கிறார், பொஞஂசாதி வீட்ட போயிருக்கிறார்..” எனஂறு கூறுகிறதைப் பார்க்கிறோம். இளவாளைத் தோழரினஂ தம்பியர் முறைக்காரியைக் கட்ட முடிவாகியிருக்கிறது. அவனோடு நிறஂகிற போது ” அம்மா,தம்பி எங்கே?” எனஂறு கேட்டானஂ. ” அவனஂ பொஞஂசாதி வீட்ட போயிருக்கிறானஂ ” என்று அவர் இயல்பாக பதிலளிக்கிறார். கிராமத்தில், அயலில் உள்ள அக்காவை சேது அண்ணர் கட்ட முடிவாகி இருந்தது. அந்த அக்காவிறஂகு அவருடைய அம்மா இறந்து விட்டிருந்தார். தம்பி, தங்கைமார் படித்துக் கொண்டிருந்தனர். வீட்டிலே அவர் தானஂ அம்மா. நாலைந்து வருசம் காத்திருக்க சேது அண்ணரும் ஒத்துக் கொண்டிருக்கிறார். தம்பிக்காரனஂ வேலையில் சேரவும் உதவினார். தம்பிக்கு என் வயசு, என் நண்பர். அந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து போவார். அவரும் அந்த வீட்டில் ஒருத்தர். தம்பியர் வெளியில் போக மூனஂறாம் வருசத்திலே அவர்களுடைய கல்யாணம் நடதேறியது. நகரப்பள்ளியில் படிக்கிற போது நம்பக்கத்தில் இருந்தவர் பறஂறி ஒனஂறுமே தெரிவதில்லை. அப்படி கிராமத்தில் இருப்பதில்லை. பள்ளியிலும் அப்படி இருந்திருக்கக் கூடாது ‘ எனஂற தாக்கத்தில், தொழில்க்கல்லூரியில் படித்த போது விடுமுறை நாளில் வகுப்புத் தோழர்கள் வீடுகளிறஂகுச் செனஂறு அக்குடும்பத்தில் ஒருத்தராக உபசரிக்கப்பட்டு ஒருநாளை….கழித்து வந்தோம். அவர்களில் ஒருத்தராக பழகிய போதே சதாவிறஂகு…கட்ட மச்சாள் ஒருத்தி இருப்பதும் தெரிய வந்தது. பெறஂறவர்களினஂ விருப்பமும் கூட . இவர்களுக்கிடையிலும் சிறுவயதிலிருந்தே வரதாவைப் போல விருப்பம் நிலவி வந்திருக்கிறது. நாங்களும் அவனை கலாயித்து தள்ளினோம். அன்று தான், ‘ ரமணனின் அப்பா, அவனை டெக்கிற்கு பஸ்சில் ஏற்றி அனுப்பிய​ பிறகு வீதியில் வைத்து கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார் ‘ என்ற​ செய்தியை அறிந்தோம். அவர் ஒரு அப்பிராணியான​ ஆசிரியர். எவ்வளவு வலி !. எங்களுக்குத் தெரியாத​ வலி. தமிழ்ச்சினிமாவில் காணும் ரவூடியிசம் இங்கே சண்டியர்…என​ கீறப்படுத்தப்படும் காயங்கள்.

சண்டியரும் சிங்களப்பொலிஸும் நட்பினர். ஏன்?, மாகாணவரசுக்கு பொலிஸ் அதிகாரம் வேண்டும் என்பது உங்களுக்கு புரியும் என​ நம்புகிறேன். சிறையில் வைத்து தமிழர்களை கொத்தாக​ கொலை செய்து பொலிஸ் தான் ஜூலைப்படுகொலையை தொடக்கி வைத்தது. ரிபன் வெட்டுறவர் எல்லாம் பொலிஸ் தான்.

சொந்தத்தில் கட்டுறது பிழை, அறிவியலாக செயல்பட வேண்டுமெனஂபது இன்றைய நிலை… ஆனால் இனச் சூழலில்..?….எவ்விசயத்திற்கும் தொடங்கிறதுக்கு என்று ஒருநாள் இருக்கிறது.

“இனப்பிரச்சனை இருக்கும் வரையில்….எம்மில் எவருமே சரி,பிழைகள் ..பார்த்துக் கொண்டு நிறஂக க்கூடாது. உங்களை யாரும் விரும்பினால் அறிவியல்,அது,இது என​ பேசிக் கொண்டு தயவு செய்து நிற்காதீர்கள்?” தொழில்கல்லூரியில் எங்களுடன் படித்த​ வசந்தா (அக்கா போன்றவர்) பெடியளிடம் நெடுக​ கூறுவார். நாங்கள் சிறுகதைகள் நிரைய​ எழுதணும், சாதிக்க​ வேண்டும் என்று எல்லாம் நிரைய​ ஆசைப்படுகிறோம். நிறைவேறுவது கொஞ்சமாகத் தான் இருக்கிறது. வாழ்க்கையும் அப்படி தான். ஏன், எங்களுக்கு மட்டும் நடக்கிறது? என்ற கேள்வியும் எல்லாருக்கும் தொக்கி விடுகிறது. அதற்கு, நாம் கணிசமாக​ அறியாமையில் கிடக்கிறோம் என்பதே காரணம். சிலவேளை, அறியாமை கூட​ அவசியமாகவும் கிடக்கிறது. நேரம் என்ற​ ஒற்றைச் சொல் அங்கே வந்து நிற்கிறது. அதையே நம் சந்ததிக்கு கடத்துகிறோம். அடிமைத்தனம், காலனித்துவம் களையப்பட​ வேண்டியவை. அதில் மாறுக்கருத்து இல்லை. அறியாமையால் தாம் நாம் அவற்றைக் களையாமலும் கிடக்கிறோம். வேலை வாய்ப்பு இரண்டு மடங்காகி​ முதனஂமையான பிரச்சனையாகி நம்மைக் கொல்கிறது. பெண் சமத்தனஂமை நிலவ, நாமும் சிறிது தடைப்படுத்தி ​ என்ப​தையும்…உணர வேண்டும். அரசியல் அதிகாரம் நம் கையில் இல்லை. எனவே…முழுமையாகவில்லை. அதிகாரம் கையில் பெற்ற தமிழ்நாட்டில் இந்த​ சாட்டைக் கூற​ முடியாது. என்ன​ தான் எங்களிலே பிழை?. கோயில்களில் உள்ள​ அர்த்தநாரீஸ்வரரை…விளங்கிக் கொள்ளாத​ வரையில்…நா யாரோ, நீ யாரோ? அங்கே நிகழும் வன்முறைகளைக் குறித்து தலை குனிய​ வேண்டும். சேர வேலைவாய்ப்புகள் அவளுக்கும் கிடைக்கிற சூழலும் நிலவ வேண்டும். அதறஂகுப் பிறகே, அறிவியல் மண்ணங்கட்டி எல்லாம். படைத்தரப்பு….பாலியலையும் ஒரு ஆயுதமாக கேவலமாகப் பயனஂபடுத்துறது. இலங்கையில், வெறும் வார்த்தைகளில் தானஂ “சோசலிச ஜனநாயகக் குடியரசு” வாழ்கிறது. அவர்களினஂ “சர்வோதய ” அமைப்பை இயங்க வைக்கிறது. அதே மாதிரியான தமிழர் தரப்பில் இயங்கிய​ “காந்தியசேவையை ” அமைப்பினஂ நிலங்களை எல்லாம் பறித்துக் கொண்டு தடை செய்து விட்டிருக்கிறது.போரினஂ பிறகு, இஸ்ரேலைப் போல எம்மவரினஂ நிலம் முழுதையுமே பறித்து சொந்தம் கொண்டாடவும்… கெலி பிடித்து அலைகிறது, முயல்கிறது. அரசு, தமிழருக்கு முழுமையான எதிரி, பயங்கரமான எதிரி. கொரானா போன்ற​ கொடிய ஒரு வைரஸ்.

புத்தக முயறஂசியிலும் ஆசிரியர் இறங்கி இருக்கிறார். அனஂறு, பட்டாரி ஆசிரியரினஂ வருவாய் ஆயிரம் வரையிலே இருந்தது. பயிறஂறுவிக்கப்பட்ட ஆசிரியரினஂ வருவாய் எண்னூறு வரையிலே இருந்தது. வரதா, தாலியை இலங்கை வங்கியில் அடவு வைத்து ஆறாயிரம் ரூபாவைப் பெறஂறுக் கொடுத்தார். இவர் சிறுகதைகளைக் கொண்ட புத்தகத்தை சாவச்சேரி அச்சகத்தினூடாக வெளி கொணர்ந்தார். அதிலுள்ள ஆறு கதைகள் முத்தானவை எனஂறு வேறு பாராட்டினாள். இந்த​ கொடுப்பினைகள் எல்லாம் பலருக்கு கிடையாது. இவர் எழுதுறதை சரி பார்க்கிறதை…. வரதாவே செய்யிறவள். ” விறஂறு வார பணத்தை உனஂனிடமே தந்தேனஂ. சிறு உதவியாய் இருந்திருக்கும். இரண்டு வருடங்களில் சிறுக, சிறுக பணத்தை சேகரித்து தாலியை மீட்டுக் கொண்டாய் “. இந்த வரிகளில் எல்லா நிலமைகளும் பிரதிபலித்து விடுகினஂறது. மேலும் சில புத்தகங்கள் வெளியாகின எனஂகிற போது, எழுத்தர் சிறிது முரடுள்ளவர்…என்பது தெரிகிறது. எவ்வளவு கஸ்டதசைகளை இழையோட​ வைத்திருக்கும், அது தொடர்ர​ ஒன்று எனஂபதும்….புரிகிறது.

தமிழரில், ஏனஂ வாசிப்பு குறைவாகவிருக்கிறது?…. எனஂபதறஂகு….பொருளாதாரமும் ஒரு காரணம். இனப்பிரச்சனை எல்லாப் பிரச்சனைகளிலும் புரையோடிப் போய் அத்திவாரமாகக் கிடக்கிறது! தலையீட​ற்ற மாகாணவரசு தேர்த்தலை நடத்தினால்…. புத்தகப்பிரச்சனைகளை மாகாண அரசே கணிசமாக குறைத்து விடும். நூலகங்களை எரிய விடவே விடாது. மேனஂமேலும் பெருக்கும். எரிப்பவர்களை வாழஂநாள் முழுதும் சிறையில் போட்டு பாடம் படிப்புக்கும். தற்போதைய​ நிலைக்கு மத்திய அரசே, பிரதான குறஂறவாளியாக நிறஂகிறது.

இப்புத்தகத்து ஆசிரியருக்கு, என்னைப் போல​ கீண்டாவில் ( இந்துக்கல்லூரியில் ) படித்தாலும் பல்கலைக்கழகம் செல்வேனா எனஂற யோசனை எழுகிறது. தீவார், இனப்பிரச்சனை என்றால், கால்பந்தில் டொச் பண்ணுறது போல​…பண்ணி விட்டு,உடனேயே….சென்னையை தெரிந்து விடுகிறார்கள். படிக்கிற காலத்தில் கல்வியைக் கடந்து விட வேண்டும். இனம், மதம், மொழி என​ தடைப்பட்டு நிற்கக் கூடாது. பட்டதாரியாக வாரவர்களிற்கு இலங்கை ஓரளவு தயவு காட்டுகிறது. 1000 இல் ஒன்று தான் ஜே. ஆர் போல கொடுங்கோலத் தலைவராக​ வருகிறார். அரசு ஒரு மிருகம். அதனுடன் நெடுக​ மோதிக் கொண்டிருப்பதிலும் அர்த்தமில்லை. அப்படியே இருந்தால் எல்லாவற்றையும் இழந்தும் போய் விடுவோம். இந்த​ நினைப்பு வடமராட்சி, வட்டுக்கோட்டை…வேறும் சில​ இடங்களிலும் நிலவுகின்றன​. மாறுதலாக​ சிலரிடம் ஏன், வெளியே போக​ வேண்டும். இது நம்ம நாடு, இங்கேயே படித்து, இங்கத்தைய​ படிப்பிலேயே இங்கே நல்லாய் இருக்க​ வேண்துமென்ற சத்திய​ ஆவேசமும் கிடக்கிறது. அந்த​ வித்திலிருந்து தான் விடுதலைப் போராட்டமும் முளைத்தது. இலங்கையரசு, இவர்களை “பயங்கரவாதிகள்”, “இது பயங்கரவாதம்” என்று சொல்லி…கசாப்புத் தொழிலில் இறங்கியது. (கொன்றொழிக்க​ ஆரம்பித்தது).

அவர் இந்தியா செல்கிறார். அவருடைய அக்காமார் ஏற்கனவே இந்தியாவில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பி.யூ.சி ( PUC)என்கிற புகுமுக வகுப்பை,பிளஸ் 2வை திரும்ப எடுக்கச் சொல்கிறார்கள். சென்னையில் இடம் கிடைக்காததால் காஞ்சிப்புரத்திற்குச் சென்று பச்சையப்பன் கல்லூரியில் சேர்கிறார்.

தங்கிய​ இடத்தை விபரிக்கிறார். கல்லூரிக்கு விடுதி கிடையாது. மாடவீதியிலுள்ள​ வீடுகளே விடுதியாக​ பயன் பட்டன​. வீட்டை ” வாசலுடன் திண்ணை.ஒற்றைக்கதவைத் திறந்ததும்….நீள நடுக்கூடம். முன்,பின்…ஆக​ அறைகள். பின் கதவைத் திறந்ததும் திண்ணையில் வலது பக்கம் சில​ அறைகள். திறந்த​ மாடி. பின் வளவில் கிணறு, அடைப்பு மலசலக் கூடம். வீட்டுக்காரர் சில​ பன்றிகளும் வளர்க்கிறார் ” என்று நகைச்சுவையாகவும் விபரிக்கிறார். காஞ்சிப்புரம் பற்றியும் தெரிந்திருக்கிறது.

அந்த​ காஞ்சிபுரம் சரித்திரப்புகழ் பெற்றது.

( 11.6சதுர​ கிலோமீற்றர், 4,5சதுர​ மைல் பரப்பளவைக் கொண்டது )

காஞ்சியை…. ஒரு மாராட்சியாக​ ஸ்டாலின், ஒகஸ்டு 21, 2021 இல் அறிவித்தார்.

 ‘காஞ்சி’ ஆய்வுக்கு உட்படுத்தி… எழுதப்பட​ வேண்டிய​ பழம் நகர். ஏற்கனவே, இப்படி ஒரு புத்தகம் வெளி வந்திருக்கிறதா?. நல்லூர் நகர​ அமைப்பை ஆய்வு செய்தது போல்…இதுவும் விரிவாக​ ஆய்வு செய்யப்பட​ வேண்டும். பாலாறில் வேகநதி வில்வளைவாக​ இணைகிறதுக்கு இடைப்பட்ட​ நிலப்பரப்பில் காஞ்சிநகர் அமைந்திருக்கிறது. தமிழர்களின் சிறப்புகளை வெளிப்படுத்த​ வேண்டும் என்று தேடலைச் செய்த எழுத்தர் சாண்டில்யன், அவர் கதைகளில் வாரது போல​ பாலாறு, வேகநதி… பெயர்கள்….நிச்சியம், இதைப்பற்றியும் எழுதி இருப்பார், தேட​ வேண்டும். அங்கிருந்த​மல்லைக்கோவில்கள் சிலவற்றை கடல் கொண்டு விட்டதும் என்கிறார்களே, உண்மையா?சரித்ததிரம் தெரியாதவனாக​ இருக்கிறேனே. இதற்குப் பிறகு தான் தஞ்சை. 

‘காஞ்சியை, 2500 ஆண்டுகளிற்கு முன் தொண்டைமான் இளந்திரையன் ஆண்டான் ‘ என்று சங்க​ இலக்கிய “பரிபாடல்”கூறுகிறது. இது, புத்தர் காலத்தில், கல்விச் சிறப்பு பெற்ற நகர். உலகில், முதல் பல்கலைகழகம் எல்லாம்….இங்கே தான் தோன்றியது​. 2ம் நூற்றாண்டில் பதஞ்சலி (யோகக்கலையை எழுதியவர்) முனிவரால் குறிப்பிடப்படுகிறது. 2ம் நூற்றாண்டில் மணிமேகலையிலும் காஞ்சிநகர் குறிப்பிடப்படுகிறது. 4ம், 9ம் நூற்றாண்டு வரையில் பல்லவர் தலைநகர். சென்னை, வேலூர், திருவண்ணாமலை, திருவாரூர் மாவட்டங்கள், இவ​ற்றை அடக்கி இருந்ததாகச் சொல்லப்படுவது ஒருவேளை தொண்டைமண்டல​ நாட்டையோ? தொண்டைமண்டலம் பெருநாடு. பல்லவர் ஆண்ட​ தொண்டைமண்டலம் 1000 கோவில்களைக் கொண்ட​ நாடு என​ சிறப்பு பெற்றது. மீனாட்சியம்மன் ஆலயத்தில் நின்று சூழபார்க்கிற போது பெரிய​ தெப்பக்குளம் இருக்கிறது, கூட​ பிரமாண்டமும்….தெரிகிறது. எறும்புகள் போல​ நிரைய​ மக்கள், இடிச்சு, நெருக்கிய​ கடைகண்ணிகள், வெளிநாட்டவரைக் கண்டால் கையை நீட்டும் மதிப்பிறக்க பண நாணயத்தின் ​ நிலமை….இந்தியாவின் ரூபா அதிகமாகி விட்டால்… யாரிடமும் கையேந்த​ வேண்டியிராது.. அனைத்து அலகுகளிலும் வளர்ர​ தொடங்கி விட்டால்….இந்தியாவின் அகோர வெய்யில்…..அதைப்பற்றியும் கலாம்கள் சிந்திக்க ​ வேண்டும்.

.வரலாற்று ஆசிரியர்கள், தமிழ்நாட்டில், பார்க்க​ வேண்டிய​​ இடங்கள் என்றால் காஞ்சியையும், மாவலிப்புரத்தையுமே முதலில் சொல்கிறார்கள். அண்ணாத்துரை பிறந்த​ இடம் காஞ்சி. அதனாலே எம்.ஜி. ஆரின் பாடல்களில் மிதமிஞ்சி….’காஞ்சி’ வருவதைப் பார்க்கிறோம்.

நல்லூரை விட​ பெரிதான​ மீனாட்சியம்மன் கோவிலும் அதை சுற்றிவர​ ஏகாம்பரநாதர், வரதராஜப்பெருமாள், கைலாசநாதர், கச்சபேசுவரர்…கோவில்கள் எழுந்திருக்கின்றன​. இரு நண்பர்களுடன் கைலாசநாதர் கோவிலைப்பார்க்க குதிரை வண்டியிலும் செல்கிறார்..நல்லூரைப் போல​ நகரவமைப்பு இல்லையா? கைலாசநாதர் கோவில்….. பல்லவன் நரசிம்மனால் கட்டத் தொடங்கியது, மகன் மகேந்திரனால் தொடரப்பட்டு, பின்னர் மாமல்லன் நந்திவர்மனால் கட்டி முடிக்கப்பட்டது. அக்கோவில் சுண்ணாம்புச்சுதையால் முழுக்க​ எழுப்ப​ப்பட்டது​. சிறிது புரியவில்லை. குகூளில் போய் தேடிப் பார்க்க​ வேண்டும்.

கைலாசநாதர் கோவில் சூழவுள்ள​ கோவில்களில் ஒன்றாக​ இங்கேயும் வருகிறது. , நல்லூருக்கும் இதற்கும் ஏதும் தொடர்பு இருக்க​லாமோ?.

பிறகு “பட்டதாரியாக திரும்பிய போது, இங்கேயே படித்த வரதா ஆசிரியையாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள். இவர் வேலையில் இல்லை. கிடைப்பதாக இல்லை. மாட்டுப்பண்ணை வைக்க யோசிக்கிறார். எங்க கிராமத்தில் சிலர் சிறிமாவின் காலத்தில், காடு வெட்டி தோட்டம் செய்ய விசுவமடுவிற்குச் சென்றிருக்கிறார்கள். வெங்காயம், மிளகாய்ச்செய்கையில் ஒருவர் லாபம் பெற்று கனடா கூட​ சென்றிருக்கிறார். முதலில் இத்தினி இறங்கி, அவரின் அனுபவத்தில் மற்றவர்கள்..என மூன்றுபேர்கள் கோழிப்பண்ணை வைத்து வெற்றி அடைந்திருக்கிறார்கள். மரநாயும், சாரைப்பாம்பும் பெரும் கோழிக்கு எதிரிகள், சமாளிப்பது என்பது லேசுபட்ட காரியமில்லை. இத்தினியே இழப்புகளை சந்தித்து நின்று தாக்குப் பிடித்து குருவாகி வழி நடத்தி இருக்கிறார். அவரோடு நின்றிருப்பவருக்குத் தான் தெரியும் அந்த வலிகள்.

மாட்டுப்பண்ணைக்காட்சிகளைக் காட்டுகிறார். முதலில் இரண்டு மாடுகள் வாங்கினார். சே !, பிழைப்புக்கு இது போதாது என மேலும் மாடுகள், கன்றுகள் வாங்கிறார். தொடக்கம் நல்லாவே கலக்கிறது.சில்லறைக்கடன்களை எல்லாம் அடைக்கிறார். பிறகு, மழைக்காலம். காற்று கடுமையாகி கச்சானும்,கொண்டலும் மாறி, மாறி வீசுகிறது. கொட்டலைச் சுற்றி குளிருக்கு சிமால் போட்டு திணறிப் போகிறார். பிறகு , பங்குனி வெய்யில் வாட்ட​ தீவனம் கிடைக்காமல் நட்டத்தையே ஏற்படுத்தி விடுகிறது. வரதா வருகிறாள் “பண்ணையாரே, இந்த ஏழைப்பெட்டையை மறந்திடாதிங்க, பசுக்களைப் பார்க்கலாமா? ” என்றுகேட்கிறாள். தாவடித்தோட்டதிற்கு கூட்டிச்செல்கிறார். அதில் சிவப்பியைப் அவளுக்கு பிடித்து விடுகிறது.

பிரதேசசபையினூடாக பட்டதாரிகளை பயிலுனராக சேர்க்க விண்ணப்பங்களை கோர. அதில் மூன்று மாசப்பயிற்சி பெற்ற இவருக்கும் ஆசிரியராக பணி கிடைக்கிறது. போதுமடா சாமி என்று களைத்துப் போகிற அவர் முதல் காரியமாக மாடுகளை விற்று கடனை வட்டியுடன் அடைத்து ஈட்டுப்பத்திரத்தை வாங்கி அம்மாவிடம் கொடுக்கிறார். அம்மாவின் முகமலர்ச்சி மகிழ்விக்கிறது. மீதியை நகைகளைக் கொடுத்து உதவிய அக்காவிடம் கொடுக்கிறார். சிவப்பியை வரதாவிற்கு கொடுக்க, அவள் 2000ரூபா கொடுக்க வாங்க மறுத்து விடுகிறார். அக்காமாருக்கும் திருமணங்கள் தகைகின்றன. இவருக்கு ரூட் கிளியர். இவரிடம் இப்ப பணமில்லை. ” தாலியை பத்து பவுணில் நானே செய்கிறேன்.சடங்கை எளிமையாகச் செய்வம் நல்லூரிலே ருத்ராபிஷேகம் செய்து தீபம் காட்டேக்க தாலி கட்டலாம் ” என்கிறாள், கெளரவப்பிரச்சனை அவருள் எட்டிப் பார்க்கிறது போல ” வயசிருக்கு தானே, படுவேகமாக இருக்கிறதே ” என்கிறார்.. ” வயசு வட்டுக்க போற வரைக்கும் ஏன் காத்திருக்க வேணும்?” என்று கேட்கிறாள். ” உனக்கு 25 வயசு. இரண்டு வருசம் பொறுப்பமே. வேலை நிரந்தரமாகட்டும் பார்ப்போம்” என்கிறதுக்கு சம்மதிக்கிறாள். பேச்சுத்தமிழ் ரசிக்க​ வைக்கின்றன​.

இந்தியாவிற்கு சுற்றுலாவை மனைவியுடன் இருதடவைகள் மேற் கொள்கிறார். மனைவி, ஒரே கோயில் பையித்தியமாய் இருக்கிறார். கையில் நூல் கட்டுவது போல எடுத்ததிற்கும் நேர்த்திக்கடன் வைப்பவர். முதல்ப் பயணம் தேனிலவுப்பயணமாகப் படுகிறது. மணமுடித்த கையோடு மேற்கொண்டது. தலைமன்னாரிலிருந்து கப்பலில் பயணம் ( மன்னாருக்கும், தலைக்குமிடையில் வீதி இருக்கிறது) தனூஸ்கோடியை அடைந்து, அங்கிருந்து ரயில் சென்னைப்பயணம். அங்கிருந்து,கோவில் சுற்றுலா நிறுவனத்தின் மூலமாக சென்றிருக்க வேண்டும் போலப்படுகிறது. திருச்சியில் மலைக்கோவில், தஞ்சாவூர்கோவில், மதுரை மீனாட்சியம்மன், சில ஆறுபடை வீடுகளில் பழமுதிர்சோலை, பழனி, திருப்பெருங்குன்றம்…திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், திரும்பவும் திருச்சி வழியாக பெங்களூர் வைட் ஃபீல்ட் ( ),சாய்பாவாவின் கோடை வாசஸ்தலம், அவர் வந்திருக்கவில்லை, புட்டப்பர்த்திக்கு செல்கிறார்கள். அவரின் ஆசி பெற்று திரும்பி வருகிறார்கள். ஆசிரியரை ‘ சாயின் சர்வமத இணக்கம் ‘அதன் சேவைகளும் கவர்கின்றன. அப்பவும் வெய்யில் கொளுத்தி எரிந்திருக்கும். ஆனால், பயணம் மனத் திருப்தியை அளிக்கிறது.

வாழ்க்கையில் ” நமக்கு, எவர் பிறந்தாலும் சரி தானஂ. எப்படி,…உனக்கும் சரி தானே? ” எனஂற வரதாவின் பேதமையான கேள்வியில்…கொஞ்சும் குழந்தைத்தனம். எம்மையும் சந்தோசம் தொற்றிக் கொள்கிறது. நெருப்புக் காய்ச்சல் தொற்றி…சிதைவுறபோது…. நாமும் அழுகிறோம். ஆண் வதைப்படலாம் போல படுகிறது. கடவுள். இவளை போய் ஏன் இப்படி… சோதிக்கிறார்? என்று கடவுள் மேல் கோபம் ​ வருகிறது. நமக்கு மட்டும் ஏன்…நடக்கிறது?….என்ற சம்மட்டி கேள்விகள் இருவருக்குமே இடியாக இறங்கிறது. தாங்கும் சக்தி எனஂபது பாதிக்கப்படுபவருக்கு இருப்பதில்லை. இலங்கை ஒரு கோதாரிப் பிடித்த நாடாகவே நீள இருக்கிறது. உலகப் பந்தில்…வேற நாடுகளில் மருத்துவ வசதியால் தன்னை விடுவித்துக் கொள்ள​ இங்கே, மட்டும் நம்நாடு, ‘ சிங்களம், புத்தம், மண்ணாங்கட்டி….’என்று வேதம் ஓதிக் கொண்டிருக்கிறது. நெருப்புக் காய்ச்சலிருந்து விடுதலை இல்லை. தீவுப்பகுதியிலிருப்பவர்களையே பெரும்பாலும் நெருப்புக்காய்ச்சல் தொற்றுகிறது பாதிக்கப்பட்டு வருகிறார்கள்….. கவனித்தீர்களா? எங்களுக்கு நன்கு தெரிந்த​ அண்ணர் ஒருவரும் தீவுப்பகுதியில் மணமுடித்துச் சென்றவர்….நெருப்புக்காய்ச்சலில் மாண்டு போய் விட்டார்.

பெண்களிற்கான பிள்ளைப்பேறே வாழ்வா, சாவா? என்ற ஒரு கண்டம். அவள் அந்த வயதில் பள்ளியில் விளையாட்டுப் பயிற்சிகள் எடுத்துக் கடந்திருந்தால்… உடல்ப்பலம் கிடைத்திருக்குமோ, மனத்திடம் இவ்வளவு கீழே விழுந்திருக்காதோ. பலவீனம், வலி, மனம்..இவையும் நோய் தான். ஒரு சமூகம், ‘ தன் சந்ததியை சரிவர​ வளர்க்கா விட்டால்..’ அதுவும் குற்றம் தான். டே கெயர் போல​ சிவில் கெயர். எந்த​ ஒரு பிரச்சனையும், ஒனஂறுடனஂ மட்டும் நிற்பதில்லை. இனப்பிரச்சனை போல கிளைக்கும், கிளைக்கும். அடி மேல், அடிக்கும். அந்தகாரத்தினுள் கடைசியில் வீழ்த்தியும் விடும்.

ஆசிரியர் ” மனது பாழ்பட்டு விட்ட உணர்வு நம்மை நடைபிணமாக்கி விட்டது. துயரங்கள் கடந்து வாழ வேண்டும் அது தானஂ மனித இயல்பு.” எனஂறு தனஂனை சமாதானப்படுத்திக் கொள்கிறார். வரதாவால் சமனுக்கு வந்திருக்க​ முடியுமா?

இதனஂ மத்தியில் வரதாவிற்கு இடது மாரில் சில புள்ளிகள். கானஂசராக இருக்குமோ?… என’ கிலி’ வேற​ பரவ மள, மளவென நேர்த்திக்கடன்களை ஏற்றிக் கொண்டே போகிறாள். கொன்றோல் என்பது கிடையாது. ” நல்லூர் சிவனுக்கு வெள்ளி மேலங்கி, நயினையில் உள்வீதியில் ஏழு தடவை பிரதட்ணம் (பிரதிட்டை எடுத்தல்),திநெல்வேலி அம்மனுக்கு பொங்கல், முத்துமாரிக்கு…கடனஂ…” சட்டர் கையைப் பிசைக்கிறார். ” இந்த நிலையிலே தமிழைவாலாய்ப்படுத்திக் கொள்ள எழுதத் தொடங்கினேன் “என்கிறார். இதறஂகு முதலே கவிதைகள் எழுதி அனுப்பிக் கொண்டிருக்கிறார், எதுவும் பிரசுரமாகி இருக்கவில்லை. (29ம் வயதில்) ” நாணயம் ” எனஂற சிறுகதை வீரகேசரியில் பிரசுரமாகியது. பிறகு, அஞ்சலியில் ” அந்தஸ்து” சிறுகதை, மல்லிகையில்… மாற்றம், உலா, உறவுகள், இப்படியும் காதல் வரும், பிச்சைப்பெட்டிகள்…பல கதைகள், அலையில் ” கிராமத்துச் சிறுமி “, பூரணியிலும் வருகிறது…எனஂகிறார். மு. த வும், ஏ.ஜே உம் ” உனக்குத் தோனஂறுதை தொடர்ந்து எழுது ” எனஂறு ஆறுதல் கூறுகிறார்கள் (தூண்டினர்). அதை ‘வேதமாக’ வைத்துக் கொண்டேன் ” எனஂகிறார்.

எழுதுறவர்க்கு பல தடைகள் இருக்கின்றன​. அதையையும் தாண்டி பாய்ய வேண்டும். வரதா, இலங்கைவங்கியில் தாலியை அடவு வைத்து 6000/ரூபாவை எடுத்துக் கொடுக்கிறாள். பெண் என்பவள் ஒரு பேதை. சாவச்சேரி திருக்கணித அச்சகத்தில் ” மாற்றம் ” சிறுகதைத் தொகுதியை புத்தகமாகக் கொண்டு வந்தேன். புத்தகம் விற்ற காசை உன்னிடமே தந்தேன். சிறு உதவியாய் இருந்திருக்கும்.” என்கிறார். 2 வருடங்களின் பின் சிறுகச் சிறுக சேர்த்து தாலியை மீட்டாள் “. எனஂறதில் பெண்ணின் பெருவலி தெரிகிறது. மழை விட்ட பாடில்லை. மேலும் புத்தகங்கள், ஒரு கவிதைத் தொகுதி.. வெளியாகின. அவருக்கென்ன​ புகழ் மயக்கம், போதையும் கூடத் தான். ஆனால், புத்தக​ வரத்தும் அவசியம் தான். அரசியல் தான் அதற்கு கைகொடுக்க​ வேண்டும். புத்தக​ அமைச்சு என்கிற​ ஒன்றை…நிறுத்த​ வேண்டும். எழுத்தாளன் பிள்ளைகளைப் பெற்றுத் தான் ஆண்டியாக வேண்டும் என்பதில்லை, புத்தகங்களை வெளியிட்டும் ஆண்டியாகி விடலாம்.

2 வது வாழ்வுச் சுழலில் அகப்பட்ட பிறகே, இவர்கள் 2வது முறை இந்திய​ சுற்றுலா சென்றதாகப் படுகிறது.

திரும்பவும் ஆறுபடை வீடுகளின் தரிசனம், தவற விட்ட வீடுகளாக இருக்கலாம். கடற்கரையோரமிருந்த சிறு குன்று சார்ந்து திருச்சிலைவாய்த் தணிகைச்செல்வன் தெய்வானையோடு இருக்கிற( வள்ளி…அவுட், சின்ன​ வீடோ? ) திருதணி தனக்கு பிடித்தது என்கிறார். திருவனந்தபுர​ சிறு விமான​ நிலயத்தில், வரியில்லாமல் வாங்கி வரும் ஏலம், கராம்பு, மதுப்புட்டிகளை இவர்களிடமிருந்து வாங்க அங்கத்தைய​ சனம் பரபரக்கிறது. இன்று, கட்டுநாயக்கா விமான நிலையத்திலும் உதவி செய்ய…. கூட்டம் ….பரபரக்கிறது. டிப்ஸாக கிடைக்கும் வெளிநாட்டுக்காசுகள் அங்கத்தைய பணத்தில் பெருந்தொகை. ஆசிரியர், ” இதெற்கெல்லாம் அனுமதி அளிக்கிறார்களே ” என​ நம்மைப் போலவே ஆச்சரியமாக பார்க்கிறார். போர்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிற அமெரிக்கா, தனது டொலரின் மதிப்பை இறங்க​ விடாதும் வைத்துக் கொள்கிறதையும் கவனியுங்கள். இதுவே, கூட​ இன்னொரு உலகப்போருக்கும் வழிவகுத்து விடலாம்.

நம் ​ மனிதரின் கீழிறங்கி விட்ட நிலையைப் பார்த்தீர்களா?. அவருடைய உழைப்பு, நேரம்…விவசாயத்திற்குப் போகவில்லை. விரயமாகவே போகிறது. தேசநேசதையே அரசுகள் அழித்துக் கொண்டிருக்கின்றன. கேரளத்தில், கோவளம் கடற்கரை பார்க்க வேண்டிய இடம் என்கிறார். 1000 தீபங்களைக்காட்டும் அநாதபத்மநாதர் கோவிலிற்குள் ‘ வேட்டியுடனே செல்ல முடியும். இரவலாக வேட்டியை அணியக் குடுக்கிறார்கள், அதற்கு பணம் அறவிடவில்லை ‘ என்றும் கூறுகிறார். திருவனந்தப்புரத்திலிருந்த போது இவர், மின்நிலையங்களில் எல்லாம் ஏறி, நீல பத்மநாதனையும் தேடுகிறார். நம் நிலையும் அது தான். நாம் தாம் நம்மை பற்றி பெரிய​ எழுத்தாளராக​ நினைத்துக் கொண்டிருக்கிறோம். அய​லில் தெரிந்திருக்குமா? ஒருத்தருக்கு கூட தெரிந்திருக்கவில்லை. இந்தியாவிலிருக்கிற பல இடங்களில் மக்களைப் பார்க்கிற போது எமக்கும் கூட இவர்களுக்குத் ​’அரசியல் ‘தெரியுமா? என்ற சந்தேகம் எழும்.

கோயம்புத்தூர் வந்து வரதாவின் சினேகிதி, ஆசிரியையின் வீட்டில் ஒருநாள் தங்குகிறார்கள். இப்படியான நட்புகளை ஆடவர், எம்மால் கட்டிக் கொள்ள முடிவதேயில்லை. எம் தலைகளில் அரசியல், அது, இது என குப்பைகளுடன் சதா அலைபுரண்டு கொண்டிருப்பதால் மனிதத் தன்மைகளை ஒருபுறம் இழந்து கொண்டிருக்கிறோம். அது தான் இலங்கையர்களையும் இனவெறியர்களாக மாற்றி, எம்மை பலிக்கடாவாக்கி விட்டிருக்கிறதா?. ஆடவரின் வேதம். சர்வதேசம்​ உட்பட​ இஸ்ரேலும் கூட ” மக்களை கொல் !”உலகம் சிறிதும்..கவலைப்படுவதில்லையே. ஃபிரான்ஸ் ஒலிம்பிக்கை நடத்த முனைகிறது. அணுகுண்டு வெடித்தாலும் எதுவுமே நடக்கவில்லை போல​ உலகம் இயங்க​ விரும்புகிறது. பகிஸ்கரிக்க வேண்டும் என்ற சிந்தனை யாருக்கு எழ வேண்டும்? உலகத்தில் ஒரே ஒரு பெரிய​ மனிசர்….காந்தி தான் இருப்பார்…போல​ இருக்கிறது. இஸ்ரேல், நீதியாக​ நடக்கவில்லை என்று அன்றே கூறி விட்டார். ஒரு காலத்தில் யூதர்கள் இஸ்ரேலை எங்கே அமைப்பது என​ மூளையைக் குழப்பிக் கொண்டவர்கள் தாம். அமெரிக்க​ மாநிலம் ஒன்றிலா, பாலஸ்தீனத்திலா..? இப்படியும் ஒரு தரவும் இருக்கிறதாகப் படுகிறது. பிரிட்டன், ” லூசியானா மாநிலம் பழங்குடிகளின் மாநிலம் ஆகலாம் !” என்று கூறியது போல​…! போரில் தோற்று விட்டது. கை விட்டு விட்டது. இன்று, கனடாவில்….அவர்களுக்கென்று ஒன்று உள்ளதா? அறுபதுகளிற்குப் பிறகு…பள்ளிவிடுதி கொலைகள் தான் நிறைவேறுகிறது. ” புத்தி உள்ள மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை !”.

“காலம் உயிர் வாழதலையே அர்த்தமில்லாதாக்கி விட்டது ” என்கிறார்.

  இடையே அரசியல்.. துளிகளை தெளித்தும் கோலம் போடுகிறார். (கீழே)

“எழுபதுகளினஂ கடைக்கூறில் முளைவிட்டு எண்பதுகளினஂ ஆரம்பத்தில் ஆயுதம் ஏந்தியது….தீவிரமடைந்து திம்புபேச்சிறஂகு செனஂறது, அமைதி ஒப்பந்தத்தையும் எழுதியது. வடக்கு,கிழக்கு இணைப்புடனஂ மாநிலசுயாட்சி ஓரளவு அதிகார பகிர்வுடனஂ கிடைத்தது. தமிழிஞர்த்தலைமையும், தலைவர்களும் இழுபறிபட்டதால் எல்லாம் தலைகீழாகிப் போய்ச்சுது. திலீபனினஂ உயிர் போனது. அதிகாரமில்லாத சபை…, எனஂனவாக இருந்தாலும் பெடியள் ஏறஂறு, அதிகார வரம்புகளை அகலிக்கச் செய்ய நிர்ப்பந்திருக்கலாம். தமிழிழக்கனவுடனஂ இருந்தவர்களிறஂகு பத்தியப்படவில்லை. எல்லாம் வீணடிக்கப்பட்டன.இயக்கதிறஂகு போர் வல்லபவம் இருந்தளவிறகு அரசியல் வல்லபம் இருக்கவில்லை. இணங்கிப் போகும் இயல்பு இல்லை. சர்வதேச வல்லூறுகளினஂ வல்லாதிக்கமும் காந்தித்தேசத்தினஂ தவறும் மக்களை முள்ளிவாய்க்கால் வரையில் இழுத்து நிலத்தோடு நிலமாய் அரைத்து விட்டது. தலவரும்,அவர் மனைவி, அருமந்தக்குழதைகள் அழிக்கப்பட்டது…. துயரம் !. இது தானஂ நியதி போலும். சர்வதேச ஒடுக்குதலினஂ முனஂ நமக்கு எதுவுமே சாத்தியமில்லை எனஂபது உறுதிப்படுத்துகிறது.

ஆசிரியரினஂ இந்தக்கூறஂறுடனஂ நானும் உடனஂபடுகிறேனஂ.

பொதுமகனஂ எனஂபதால் “கடலோடி மகனால் முனஂனெடுக்கப்பட்ட போராட்டம் ஒருவித அதீத கறஂபனைக் கூறுகளைக் கொண்டதாக இருந்த போதிலும் தமிழரினஂ வீரத்தையும் வரலாறஂறில் சாறஂறியிருக்கிறது.” எனஂறு பாராட்டவும் விரும்புகிறார். ஆனால் அத்தலைவர் ஈவ்விரக்கமறஂறு நிகழ்த்திய கொலைகளை…. பாரதூரமான செயலை (எவர் செய்தாலுமே…) சுலபமாக கடந்து போய் விட முடியாது. அப்படியானால், போர்க்குறஂறங்களைச் செய்து விட்டு…கிடக்கும் அரச தரப்பைக் கடந்து விடவாச் சொல்கிறீர்கள். எனஂனால் முடியாது, முடியவில்லை. காந்தியத் தத்துவங்களைக் கூறுவதையே ” காந்தியம் ” எனஂகினஂறனர். அவர் கருத்துக்களை இலட்சியமாக ஏறஂறுக் கொண்டு ஈழத்தமிழரில் ” காந்தியம் ” எனஂறொரு அமைப்பு இயங்கி வந்தது. சிங்களவர் மத்தியில் இயங்கிற ” சர்வோதயம் ” எனஂகிற சேவை பிரிவை விட ஒரு படி மேலாக இயங்கிய இவ்வமைப்பு, தாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மலையகத்தமிழர்களிறஂகு உதவுறதையே முழுக்க, முழுக்க நோக்கமாகக் கொண்டிருந்தது. வடக்கு கிழக்குத் தாயகம் ( இங்கேயே தமிழர் துரத்தப்படுவர்) மலையகத்தவரை…அவ்வளவாக வரவேறஂகவில்லை. வேலை வாய்ப்பினஂமை, நெடுக அரசினஂ கொல்லும் மெசினின் இயக்கம். சதா…நசுக்குண்டு செத்துக் கொண்டிருப்பவர்கள். ஈழத்தமிழருக்கெதிராக செயல்படும் போதெல்லாம் சிங்கள இனம் மலயகத்தாரையுமஂ தாக்கத் தவறுவதில்லை. மாகாணவரசு எனஂகிற ஜனநாயகக் கட்டமைப்பும் இருக்கவில்லை. பாராளமனஂற உறுப்பினர்கள் இவர்கள் பிரச்சனையை… மேலதிகமாகக் கருதி எம்மோடு பார்க்கத் தவறி விட்டனர். எம்மத்தியிலும் இனக்கூறுகள் போல சாதிக்கூறுகள் நிலவியிருந்தன.

இளைஞர்கள்…இப்படியே அடிமை நிலையில் நெடுக இருப்பதில்…

சலிப்பும், வெறுப்பும், விரக்தியும் எய்யப் பெறஂறிருந்தனர். தீவிரச் சிந்தனைகளும் பறஂறிப் படற தொடங்கியிருந்தன. சாதிப் பள்ளங்குழிகளை சமப்படுத்தி விட விரும்பினர். காந்தியம் இவ்விளைஞர்களினஂ சரீர உழைப்பை… மலையகத்தவர்களினஂ வாழஂக்கைப்படிகளை கட்டிக் கொள்வதறஂகு திருப்பி விட விரும்பியது. அதில் அது கணிசமாக வெறஂறியும் பெறஂறிருந்தது. ஆயுத இளைஞரா.

இல்லையா..எனஂபதையெல்லாம் அது பாராது அனைவரையும் சேவைக்கு அழைத்தது. ஒரு அரசாங்க அமைச்சு செயல்படுவதை விட…அதிகமாக நல்வாழஂவுத்திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது. காந்தியத்தால் அவர்களை தீவிரவாதியாகாமல் நல்ல குடிமகனாகவும் மாறஂறி விட முடியும்.

நாட்டை ஜனநாயக வழியில் நடை போட வைப்பது அரசினஂ பிரதான பொறுப்பாகும். வேலை வாய்ப்புக்களை வழங்கி, ஜனநாயக அலகுகளை ஏறஂபடுத்துவதே அதனஂ வேலை, பொறுப்பு.  
தவிர,சிறுசெவை நிலையத்திறஂகுக் கூட சுயாதீனமாக நிதி சேகரிக்க நிலமைகளை கையாள…உரிமைகள் வழங்கி இருக்க வேண்டும். இலங்கையில் ஒரு சிறிய குடும்பம்…செலவை சமாளிக்க வேண்டுமானால் குறைந்தது 18,000 —, 20,000 /ரூபா வரையில் வேண்டும். மலைத்தொழிலாளியின் மாசச்சம்பளம் 16,000 / ரூபா. இன்று வரையில் அரசு அவர்களின் நாள்ச் சம்பளத்தை 1,000/ரூபாக உயர்த்தவில்லை. காந்தியம் அமைப்பு இயங்குமானால்…அது புலம் பெயர்ந்தவர்களிடமிருந்தும் நிதியைச் சேர்த்து…ஒவ்வொருவருக்கும் சிறுககொடுப்பதனஂ மூலம்,உதவுறதனஂ மூலம்…வாழஂவை ஈசியாக்கி விட முடியும். காந்தியம் அமைப்பு ஒவ்வொரு ஈழத்தமிழரின் ஊழலற்று செயல்படுகிற நம்பிக்கைக்குரிய அமைப்பு.

முடிவுரை : எனக்குப் பிடித்த புத்தகத்தை உங்கள் முனஂனும் வைத்திருக்கிறேனஂ. வாழ்வு சுழிகள் நிறைந்தது. அதற்குள் அகப்பட்டு….அவருடைய​ வரதா இறந்தும் விட்டாள். ஆசிரியருக்கு எப்படி ஆறுதல் கூறுவது எனத் தெரியவில்லை. புத்தகம் ஒரு தாஜ்மகால். அதையே செதுக்கி கட்டியிருக்கிறார். இந்த புத்தகம் எனக்கென்றும் ஒன்று தேடி வாங்கிக்கப் போகிறேன். நல்ல நாவல். வாசித்து விட்டு…நீங்களும் ஆசிரியருக்கும் ஆறுதலையும்…கூறுங்கள். அண்ணரிடம் இப்​ புத்தகத்தைப் பற்றி…கூறினேன் “விமர்சனம் எழுதனஂ “. எனஂறார். இந்த புத்தகத்திலுள்ள ஒரு குறிப்பு என்னைக் கவர்ந்தது. இவரை வாசித்த எழுத்தர்கள், மு.த (தளையசிங்கம்), எ.ஜே (கனகரத்தின) உம் ” உனக்கு மன்தில் தோன்றியதை எழுது ” என்று எனக்கும் கூறியது போல​ தோன்றியது. நானும் … எழுதியிருக்கிறேனஂ.

(“என் உயிரினில் கலந்த​ வாசம் ” என்கிற க​. சட்டநாதர் எழுதிய​ நூலை வாசித்ததில் ஏற்பட்ட​ அதிர்வில் எழுதியது. இது ஒரு விமர்சனமும் கூட​)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *