காதல் – சாதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 21, 2020
பார்வையிட்டோர்: 8,607 
 

மூன்று வருடங்கள் கழித்து கலைவாணி கல்லூரி படிப்பை முடித்து விட்டு, தன் ஊரான மேட்டுப்பாளையம் வருகிறாள். அதனால் அவள் அப்பா ரயில்வே ஸ்டேசன்லில் காத்திருக்கிறார்.

கோயம்புத்தூர் ரயில் சற்று நேரத்தில் மேட்டுப்பாளைத்திற்கு வரும் என்று அறிவித்தனர்.

அங்கு இருந்த டிவியில், “சாமூத்திரிக்காப் பட்டு சர்வ லட்ஷணம் படைத்தது. உங்கள் சென்னை சில்க்ஸ்யில்” என்ற விளம்பரம் ஓடிக்கொண்டு இருந்தது. அதைப் பார்த்ததும், தன் மனதில் மகளின் கல்யாணம் எண்ணம் ஓடியது.

ரயில் வந்தது. தன் மகள் இரண்டு பேக்களை எடுத்துக்கொண்டு வந்தாள். அவள் தன் அப்பாவை தூரத்தில் இருந்து, பார்த்தாள்.

அப்பா அருகே வர வர மகிழ்ச்சியோடு நெருங்கி வந்தாள்.

அப்பா, “வா ம்மா மதுரையில் இருந்த வர, அங்க ரயில் கெடச்சுசா? என்றார்.

“ம்ம் பா, மதுரையில 7 மணிக்கு டிரையின் ஏயிட்ட, கோவை வந்து, மேட்டுப்பாளையம் டிரைண்யில் வந்துட்ட, அம்மா எங்கப்பா வரல? என்று கேட்டாள் கலைவாணி.

அப்பா, “ம்ம் அம்மா, வீட்டுல உனக்காக சமைக்கிறார், சரி வா போலாம்”.

காரில் இருவரும் வீட்டிற்கு வருகிறார்கள்.

கலைவாணி இப்படியே மூன்று மாதம் வீட்டில் இருக்கிறாள்.

அவள் மனதில் குழப்பமும், பயமும் இருந்தது. சில நேரம் சந்தோஷமாக இருக்கிறாள், சில நேரம் ரூம்யை விட்டு வெளியே வரமால் போனைப் பார்த்துக் கொண்டு இருக்கிறாள்.

ஒருநாள் அப்பாவைப் பார்க்க வீட்டிற்க்கு இரண்டு பெரியவர்கள் வந்தார்கள்.

அவர்கள் வந்த விஷயம் கலைவாணி கல்யாணத்த பத்தி பேசத் தான், கலைவாணி இந்த செய்தியை உள்ளே இருந்து கேட்டாள். கண்களில் சிறிது கண்ணீர் வருகிறது.

அப்பா “சரிங்க, நா வீட்டுல கலந்து பேசிட்டு உங்களுக்கு நல்ல முடிவா சொல்லறன்னு” சொல்லி அனுப்பி விட்டார்.

இரண்டு நாள் கழித்து கலைவாணியின் அம்மா,அப்பா இருவரும் வெளியே சென்று விட்டனர்.

அப்போது கலைவாணி வீட்டிற்குள் ரூம்யைப் பூட்டி வைத்து விட்டு உள்ளே இருந்தாள்.

அவள் தோழி ஜெயந்தி கதவை தட்டும் போது, அவள் அங்கு உள்ளே தூக்கு மாட்டிக்கொண்டு இருந்தாள்.

கண்ணாடி வழியாக பார்த்து, அதிர்ச்சியில் வீட்டின் பின்புறம் சென்று வீட்டிற்குள் சென்றாள்.

பிறகு கலைவாணியைக் காப்பாற்றிவிட்டாள்.

அப்போது ஜெயந்தி கேள்விக் கேட்கிறாள்.

ஜெயந்தி, “ஏண்டி உனக்கு என்ன ஆச்சு, தற்கொலை பன்னிக்கற அளவுக்கு நீ பெரிய ஆளு ஆயிட்டல, அப்படி என்ன உனக்கு கஷ்டம்? என்று கேட்கிறாள்.

கலைவாணி, “எனக்கு எந்த கஷ்டமும் இல்ல டி, என்னல தா எல்லாருக்கும் கஷ்டம் அத நா சாகற? என்று அழுது சொல்கிறாள்.

ஜெயந்தி, “உன்னால யாருக்கும் இங்க கஷ்டம் இல்ல, நீ என்ன சொன்னாலும் கேட்கற அப்பா அம்மா இருக்கறாங்க, நீ ஆசைப்பட்டத பன்றாங்க யாருக்கும் இந்த காலத்துல இப்படி ஒரு அப்பா அம்மா கிடைக்க மாட்டங்க? இப்ப நீ உண்மைய சொல்ல ல நீ தூக்கு மாட்டுனத உங்க அப்பா அம்மா கிட்ட சொல்லிருவ? என்று மிரட்டுகிறாள்.

கலைவாணி, “நா காலேஜ் படிக்கும் போது, என் கிளாஸ்ல அசோக்ன்னு ஒரு பையன லவ் பன்னுன, அவனும் என்ன லவ் பன்னுனான். நா காலேஜ் முடிக்கும் போது அவன் எங்கிட்ட, நீ ஊருக்கு போ, நா மூன்று மாசத்துல அங்க வந்து பொண்ணு கேக்கற, அதுக்குல்ல நா நல்ல வேலைக்கு சேர்ந்துட்டு வரன்னு சொன்ன, ஆனா? என்று கூறி அழுகிறாள்.

ஜெயந்தி, “என்ன ஆனா”? சொல்லு டீ என்கிறாள்.

கலைவாணி, “ அவனுக்கு போன் பன்னாலும் எடுக்கல, மெஜேஜ் பன்னாலும் ரிப்பேல இல்ல, அவனால, நா சாப்படக் கூட முடியல, அவன் சொன்ன டைம்மும் முடிஞ்ச்சு, அவன் மெஜேஜ்க்காக போன் பாத்து பாத்து கண்ணும் போச்சு, என்னோட அறிவு எல்லா போய் குழம்பி இருக்க, நைட் வந்த தூக்கம் இல்ல ஒரே பயமா இருக்கு, எனக்கு சாக பயம் இல்லை ஆன நா செத்தா, அடுத்த பிறவிலயாது அவன் கூட சேருவானான்னு தா பயம் டீ” ன்னு சொல்லி அழுகிறாள்.

ஜெயந்தி, “சரி நீ அவங்க மொபல் நம்பர் தா நா பேசர” ன்னு சொல்லி போன எடுக்கற,

போன் செய்கிறாள்.

ரிங் போகிறது.

அட்டண் ஆகிவிட்டது.

ஜெயந்தி ,பதற்றத்துடன், “ஹாலோ நா கலைவாணி தோழி ஜெயந்தி பேசற, என்று கூறி எல்லா உண்மையையும் சொல்கிறாள்.

அதற்கு அவர் “நா நாளைக்கு அவ ஊருக்கு வரன்னு சொல்லுங்க, பொண்ணு கேட்க, அப்படியே லவ் யூ ன்னு சொல்லிருங்க,” என்று அவர் போன்யில் சொன்னபடியே சொல்கிறாள்.

நற்றிணை 397, அம்மூவனார்

தோளும் அழியும் நாளும்

சென்றென,

நீள் இடை அத்தம் நோக்கி வாள்

அற்றுக்

கண்ணும் காட்சி தெளவினை

என் நீத்து

அறிவும் மயங்கி பிறிது

ஆகின்றே,

நோயும் பெருகும்

மாலையும் வந்தன்று,

யாங்கு ஆகுவென் கொல்

யானே? ஈங்கோ

சாதல் அஞ்சேன் அஞ்சுவல்

ஆயின்

மறக்குவேன் கொல் என்

காதலன் எனவே.

கரு: அன்று மட்டுமல்ல, இன்றும் தலைவி தன் தலைவனுக்காக, காத்துக் கொண்டு தான் இருக்கிறாள். இன்றும் எல்லா தலைவியும், தோழியிடம் தான், தலைவனின் பிரிவு வருத்ததைக் கூறுகிறாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *