ஐ. சண்முகலிங்கம் (பிறப்பு ஆகஸ்டு 1, 1946, குப்பிழான், யாழ்ப்பாணம்) குப்பிழான் ஐ. சண்முகம் என்ற பெயரில் எழுதும் ஈழத்து எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைப்பட்டம் பெற்ற இவர் ஓர் ஆசிரியர். சிறுகதையாசிரியராக கவனம் பெற்ற சண்முகன் இசை, சினிமா, ஓவியம் போன்றவற்றிலும் ஈடுபாடுடையவர். அலையின் ஆரம்ப ஆசிரியர் குழுவில் இடம்பெற்றவர்.
இவரது நூல்கள்
கோடுகளும் கோலங்களும் (சிறுகதைகள் – 1976)
பதிப்பு விபரம்
அலை வெளியீடு 6. மத்திய மேற்குத் தெரு. குருநகர் ,
யாழ்ப்பாணம். அலை வெளியீடு – 2
மார்கழி 1976
விலை : ரூபா 4- 50சாதாரணங்களும் அசாதாரணங்களும் (சிறுகதைகள் – 1982)
பதிப்பு விபரம்
சாதாரணங்களும் அசாதாரணங்களும். குப்பிழான் ஐ.சண்முகன். சென்னை 60001;
நர்மதா பதிப்பகம், 10, சோமசுந்தரம் தெரு, தி.நகர், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1983. (சென்னை 600017: தமிழோசை அச்சகம்). 212 பக்கம்
நூல்விபரம்இளைஞர்கள் பற்றிய ஓர் அழகியல்வாதியின் அகவயரீதியான பார்வையுடன் கூடிய கதைகளை எழுதியிருக்கும் ஆசிரியர் பெரும்பாலானவற்றில் இளைஞர்களின் மன அவலங்கள் அவர்களால் வெளிப்படுத்தி உணர்த்திக்காட்ட முடியாத சோகங்கள், எதிர்பார்ப்புகள் இவற்றினால் அவர்களிடையே எழும் நடைமுறைகளுக்கு ஒத்துப்போகாத பிடிப்பற்ற தன்மை இவற்றை ஆழ்ந்த அழகுணர்ச்சியுடன் சித்திரித்துள்ளார். கோடுகளும் கோலங்களும் என்ற அலை வெளியீடான சிறுகதைத் தொகுப்பின் மூலம் இலக்கிய உலகின் அவதானிப்புக்்கு உள்ளான சண்முகன், அலை ஆசிரியர் குழுவில் ஒருவருமாவார்.- அறிமுகங்கள் விமர்சனங்கள் குறிப்புக்கள் (2003)
நிறைவில் …….
வாழ்வின் தேடல்களில், காத்திருப்பு களில் அவ்வப்போது என் சிந்தையில் கிளர்ந்த உணர்வுகளின் – தவிப்புகளின் – தரிசனங்களின் கோலங்களே என் கதைகள். இந்தக் கதைகளை ஒருசேர உங்கள் முன் வைக்கும்போது, உங்கள் மனங்களில் எவ்வித முற்சார்புகளையும் ஏற்ற வேண்டாமென்று பட்டது. அதனால் தான் இந்த என் கதைகளை நீங்கள் அனுபவித்த பின், அந்த நிறைவில் உங்களைச் சந்திக்கலாம் என எண்ணினேன். எதுவித வழிகாட்டலுமின்றியே இந்தக் கதைகளின் ஆத்மாவை நீங்கள் தொட்டிருப்பீர்கள் தானே! புகைவண்டிகளில் பயணம் செய்திருப்பீர்கள் – மலைகளினதும், நதிகளி னதும், பூஞ்சோலைகளினதும் அழகை இரசித் திருப்பீர்கள். காலை, மாலை , இயற்கைக் காட்சி களில் மனதைப் பறி கொடுத்திருப்பீர்கள். மாறி வரும் உலகின், மனித மனங்களின் உணர்ச்சிக் கோலங்களைக் கண்டு வியந்திருப் பீர்கள். அழகு இலயிப்பு’த் தான் இந்தக்கதை களின் உள்ளார்த்தம் என்று நீங்கள் சொல்லக் கூடும். அப்படிச் சொன்னால், நான் அதை மறுக்கப் போவதில்லைத்தான்.
இந்த என் கதைகளை நூலுருவம் ஆக்கும் எண்ணம் அவை பிறந்த காலத்திலிருந்தே எனக்கு இருந்தாலும் – என் திருமணத்தின் பின் துணைவியினதும், உறவினர்களினதும். நண்பர்களினதும் இடையறாத் தூண்டுதலினாலேயே (உண்மையில் நான் சரியான சோம்பேறி ) இப்போது கைகூடிற்று. இந்தத் தொகுப்பை ‘இந்த அளவிலேயே ‘ கொண்டுவர வேண்டு மென்ற பொருளாதார நிர்ப்பந்தத்தினால், என் நல்ல கதை சிலவற்றை இதில் சேர்க்க முடியாதும் தவிர்க்க வேண்டியதாயிற்று.
இந்தச் சந்தர்ப்பத்தில், என் கதைகளை இனங்கண்டு அவற்றைப் பிரசுரித்த வீரகேசரி . மல்லிகை, ஈழநாடு, சிரித்திரன், அஞ்சலி , இளம் பிறை, கற்பகம் , மங்கை, அலை ஆகிய இதழ்களின் ஆசிரியர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டவன். என் கதையொன்றின் ஆகாஷிப்பில் தொடர்பு கொண்டு, தொடர்ந்த என் கலை வாழ்வில் என்னை வளப்படுத்தியவரும், இந் நால் உருவாக்கத்தின் முழு உழைப்பாளனு மான நண்பன் அ. யேசுராசாவிற்கு சம்பிரதாய பூர்வமாக நன்றி சொல்லக் கூச்சப்படுகிறேன். மிகக் குறுகிய காலத்தில் நூலின் முகப்போவி யத்தை வரைந்து உதவிய ஓவிய நண்பருக்கும், அச்சுத் தொழிலாள நண்பர்க்கும் நன்றிகள்.
குப்பிழான் ஐ.சண்முகன்
“மாணிக்க வளவு’
கரணவாய் தெற்கு.
கரவெட்டி,
எனது சிறுகதைகளை பதிவிட்டமை அறிந்து மகிழ்கின்றேன். நன்றி கூறுகின்றேன்,”கோடுகளும் கோலங்களில்”உள்ள கதைகளையும், எனது மற்ற கதைகளையும் நீங்கள் தளத்தில் இடம் பெறச் செய்யலாம். நன்றிகள்.
வணக்கம் ஐயா, உங்களுடைய கதைகளை சிறுகதைகள் தளத்தில் பதிவேற்ற அனுமதித்தற்கு மிக்க நன்றி.