செட்டியாரும் காகமும்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 2,227 
 

செட்டியாரின் கடையிலே தெரியாமல் ஒரு வடையை எடுத்துக்கொண்டு போனது காகம்.

மரத்தில் இருந்துகொண்டே அதைத் தின்னத் தொடங்கியபோது ஒரு நரி பார்த்துவிட்டது.

நரி – “காக்கா காக்கா – உன் குரல் எவ்வளவு அழகாக – இனிமையாக இருக்கிறது, ஒரு பாட்டுப் பாடேன்” என்றது.

காகம் அதை நம்பி,

வாய்திறந்து – கா கா என்றது.

உடனே மூக்கிலிருந்த வடை விழவே – அதை நரி எடுத்துக்கொண்டு ஓடிவிட்டது. காகம் ஏமாந்தது –

இது கேட்ட என் பேத்தி –

“தாத்தா – உங்க காலத்து காக்கா கதை அது. இந்தக் காலத்து காகம் –

நரி பாடச் சொன்னபோது, வடையை காலில் வைத்துக்கொண்டு காகா – என்று பாடியது. நரி ‘உன் பாட்டு நன்றாக இருக்கிறது. ஒரு ஆட்டம் (டான்சு) ஆடு’ – என்றது. உடனே காகம்.

வடையை மூக்கில் வைத்துக்கொண்டு (டான்சு) ஆட்டம் ஆடியது.

அதுகண்ட நரி, மறுபடியும், ‘’ஏ. காக்கா – உன் பாட்டும் ஆட்டமும் நன்றாக இருக்குது. ஆனால் கொஞ்சம் பாடிக் கொண்டே ஆடு’’ என்று கேட்டது. அதற்குக் காகம், சற்று நிதானித்து, வடையை முழுதும் தின்றபின்பு, காகா என்று கத்திப் பாடியும்,

தாதை என்று ஆடிக் காட்டியும், பறந்து ஓடிப் போய்விட்டது. .

– என்று பேத்தி கூறவே, நான் இது நவீன காலத்துக் காக்கைக் கதை போலும் – என்றேன்.

இது பழங்காலக் காக்கை, நரியை மட்டும் பொறுத்த தல்ல.

இக்காலத்துக் குழந்தைகளின் அறிவு வளர்ச்சியினையும் நமக்குக் காட்டுகிற கதையாகும்.

– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *