கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,900 
 

பேகன் இருக்கின்றானே, அவன் யாரைப் போன்றவன் என்று கேளுங்கள்: மழையைப் போன்றவன் என்று நான் சொல்கிறேன் என்றார் பரணர்.

மழை சில பேருக்கு மட்டும் பெய்யுமோ? பெய்யாது! அது, வற்றிய குளத்தில், வயலில், உவர் நிலத்தில் எங்கும் பெய்யும்! அது போன்றே, பேகன் கேட்போர்க்கெல்லாம் கேட்டபடி தருவான்…அது, கொடைத்திறம் அல்ல வென்பீர்…ஆனால் அவன் படைத்திறம் தெரியுமோ?

கால் முடப்பட்டோர், கண்ணற்றோர், கிழவர், அஞ்சும் பேடியர் ஆகியோரிடம் போர்க்குச் செல்லான். கூற்றிடம், பகையிடம் போர் செய்யக் குதித்தோடுவான்.

கொடைத் திறன் அது! படைத் திறன் இது!

– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)