(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
ஒழிபியல்
குடிமை
உயர்குடிப் பிறந்தாரது தன்மை
சோழன் மாவளத்தானும், புலவன் தாமப்பல் கண்ணனும் சொக்கட்டான் விளையாடினார்கள். அவ் விளையாட்டில் புலவன் தான் மேலும் மேலும் தோற் பதைக்கண்டு கட்டங்களில் உள்ள காயை எறித்து மாறிவைத்தான். இதைக்கண்ட சோழன் கோபங் கொண்டு கையிலிருந்த சொக்கட்டான் காயை அவன் முகத்தில் எறிந்தான். எறிந்த காய் முகத்தில் பட்டு இரத்தம் ஒழுகியது. இரத்தத்தைக் கண்ட புலவன், ‘என்னைத் தமிழ்ப் புலவனென்றும், ஆருயிர் நண்பன் என்றும் கருதாது இரத்தம் ஒழுகும்படி நீ எறிந்ததற்கு நான் கோபங் கொள்ளவில்லை; ஏனென்றால் உயர்குடியிற் பிறந்த மக்கள் கோபம் வரும்படியான செயல்களைப் பிறர் செய்தாலும் அவர்கள் கோபிக்கமாட்டார்கள்’ என்ற கருத்தை அறிந்து நான் செய்யவில்லை. நீ செய்ததால் உனது குலப்பிறப்பைப்பற்றி அஞ்சுகிறேன் என்றார். இதைக்கேட்ட சோழன் ‘தான் தன் பிறப்பிற்கே பழி வரும்படியான செயலைச் செய்தேனே” என்று அவர் தாளில் பணிந்து மன்னிப்பு வேண்டினான். இக்கருத்தை உடையது இக்குறள்.
சலம்பற்றிச் சால்பில செய்யார்; மாசற்ற
லம்பற்றி வாழ்தும் என்பார். (69)
மாசு அற்ற = பழிப்பில்லாது வருகின்ற
குலம்பற்றி = குலப்பெருமையோடு பொருந்தி
வாழ்தும் = வாழக்கடவோம்
என்பார் = என்று நினைத்து அவ்விதம் வாழ்பவர்
சலம் பற்றி = (தவறு கண்ட இடத்தும்) கோபத்தை அடைந்து
சால்பு இல = பொருத்தமில்லாத செயல்களை
செய்யார் = செய்யமாட்டார்.
கருத்து: தம் உயர் குடியைக் காக்க விரும்புபவர் இழிந்த தொழிலைச் செய்யார்.
கேள்வி: குலம்பற்றி வாழ்வோம் என்பவர் எதைச் செய்தல் கூடாது?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.