அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 7வது தளத்தில் அன்றைக்கான விடியல் காதலாய் பூத்தது.
அவள் என்றால் அது அவனும் அவளும்….
அவன் என்றால் அது அவளும் அவனும்…
ஒரு கை ஜன்னல் திறக்க ஒரு அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டிருந்தது. நெற்றிகள் இரண்டும் மெல்ல முட்ட கலைந்த ஓவியத்தின் இரு பகுதிகள் போல இருவரும்…ஒருவரையொருவர் பார்த்தார்கள்.
காதலை எந்த மொழியில் கூறினாலும் காதலே… அதுவும் காதோரம் கிசுகிசுக்கும் உன்னை நான் காதலிக்கிறேன் என்பது பழைய மொழி என்றாலும் ஆதி மொழி. இருவரும் குளித்து வந்தார்கள்.குளிர்ந்து வந்தார்கள். அவன் தேநீர் தயாரித்தான். மாற்றி மாற்றி கொஞ்சலும்.. கெஞ்சலுமாக எச்சிலும் முத்தமுமாக தேநீர் கவிதையானது. அவ்வப்போது உரசிக் கொண்டார்கள். பற்றுதல் நலம் என்று இருக்கலாம்.
அவள் இட்லிக்கு மாவெடுத்து ஊற்றி வைத்தாள். அவன் வீடு கூட்டினான். அப்படியே சட்னிக்கு தேங்காய் துருவினான். கடலையோடு சேர்த்து மிக்சியில் அரைத்தான். துவைக்க வேண்டிய துணிகளை வாஷிங் மெஷினில் போட்டான். அவள் இருவருக்குமான ஆடைகளை இஸ்திரி செய்தாள். மதியத்துக்கான சாதம் ஒரு பக்கம் வெந்து கொண்டிருந்தது. காய்கறி நறுக்கினான் அவன். பொரியல் செய்தாள் அவள். ஷூவுக்கு பாலிஷ் போட்டு விட்டு அவளின் செருப்பையும் துடைத்து வைத்தான் அவன்.
இளையராஜா வீடு முழுக்க காதலை விதைத்துக் கொண்டிருந்தார்.
இடையே அவள் படித்த பிடித்ததை பகிர்ந்து கொண்டாள். அவன் பார்த்ததை பகிர்ந்து கொண்டான். இடையே சில முத்தங்கள்… சில தழுவல்கள். சில மௌனங்கள்.
அழகு கூடுகிறது காதலில் என்றான். ஆயுளும் கூடும் காதலில் என்றாள்.
இருவரும் மதிய உணவை பேக் செய்தும் அவரவர் பையில் வைத்துக் கொண்டு ஜம்மென்று உடை உடுத்தி கதவை பூட்டிக் கொண்டு வெளியேறினார்கள்.
கீழே வாசலில் இருவரும் நிற்க… ஒரு சேர இந்த பக்கமிருந்து அவன் ஐ டி கம்பெனி பஸ்ஸும் அந்த பக்கமிருந்து அவள் வேலை செய்யும் துப்புரவு தொழிலார்கள் வண்டியும் வர… இருவரும் காற்றில் முத்தமிட்டபடியே “பாய் பியூட்டி… டேக் கேர்… யு டூ மை டியர்” என்றபடியே ஏறி சென்றார்கள்.
பகல் நீண்டு கிடந்தது….வாழ்வும் அதன் அர்த்தமும் கூட.
தொடர்புடைய சிறுகதைகள்
குளிரா பனியா வெயிலா மழையா.. இருளா ஒளியா.... எங்கும் எங்கெங்கும் காண காண தூரங்கள்... கண்டு கொள்ள கண்டு கொள்ள அருகாமை. இடைவெளி முழுக்க நிழல்வெளி . நிழல்வெளி சுற்றிலும் நிகழ்கலை.
இருப்பதும் இல்லாமையும் இருந்தும் இல்லாமலும்.. நானொரு நானாக.. யாதொரு தானாக... ...
மேலும் கதையை படிக்க...
கண்ணுக்கெட்டும் தூரம் வரை மணல்வெளிகள்...மணல்வெளிகள் சொல்லும் தத்துவத்தில் ஒட்டாத பாதங்களைக் காண முடியும்....சூரியன் காணாத மணல்வெளிகளில் காற்றின் கண்கள், நற நறத்தே கிடக்கின்றன....மணல்களின் படிமங்களாய் வழுக்கிக் கொண்டே செல்லும்,இரவுகளின் வீரியத்தில் நிழல்கள் தன்னிறம் மாறுவதை ஹைக்கூவாக உணர்ந்த பின் கிடைக்கும் புதுக் ...
மேலும் கதையை படிக்க...
"அவள் எதற்கோ திரும்புவாள்..... நான் எனக்கென்று நினைத்துக் கொள்வேன்..."-இப்படித்தான்.... இந்தக் கதையை நான் ஆரம்பிக்க வேண்டும்.
சரி... இது யார் பற்றிய கதை...? எப்படியும் சுற்றி சுற்றி இவன் நியந்தாவுக்குத்தான் வருவான் என்று நினைத்தீர்களானால் அதுவும் சரியே. ஆனால் அந்த ...
மேலும் கதையை படிக்க...
நீண்ட நாட்களுக்கு பின் என் பெயர் ஜிப்ரான் என்று ஞாபகம் வருகிறது.... நான் எங்கு சென்றேன் என்று நீங்களே யூகிக்கும் மணித்துளிகளை நீங்கள் கடப்பீர்கள்.. எனக்கு கொஞ்சம் மறதி.... கொஞ்சம் அல்ல.... நிறையவே....... சென்றேன்... சென்றேன்.. சென்று கொண்டே இருந்தேன்.... நீண்ட ...
மேலும் கதையை படிக்க...
நேரம்...மாலை 6.30
அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்...
மாலை மயக்கம்.... தயக்கம் உதறிய..... இரவை, இன்னும் சற்று நேரத்தில் பரவச் செய்யும் மாயங்களை ஆங்காங்கே விதைத்துக் கொண்டிருந்தது... காற்றில்லா வெளி எங்கும்... தீர்க்கமற்ற உருவங்களை சுமந்த சப்தம்.... அவர்களின் பெரு மூச்சாகவும்..எதிர் வரும் டென்னிஸ் பந்தை ...
மேலும் கதையை படிக்க...
"இப்ப ஆனந்திய வித்தே தான் ஆகணுமா....?" கலங்கிய குரலில்... ஒரே கேள்வியைத்தான் தான் வேறு வேறு வடிவத்தில் காலையிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
சித்தப்பா தனக்குள் என்னவோ முணங்கிக் கொண்டார். அதில் வேண்டும் வேண்டாம் இடையே நிற்கும் அவரே தேடும் இடைவெளி இருந்தது.
'ஆனந்தீ.........!' என்று ...
மேலும் கதையை படிக்க...
அவன் நடந்து கொண்டிருக்கிறான்...... அவன் எதையோ தேடுகிறான்.... கூட்டம் தாறுமாறாக வருவதும் போவதுமாக.... அந்த சாலை முழுக்க மனித தலைகள்... தானாக மிதந்து செல்வது போல கானலின் காட்சி மினு மினுக்கிறது...
கோவையில்... முக்கிய சாலை.... ஒன்றில்... நடக்கிறான்....
அந்த சாலை தாண்டி.. அடுத்த ...
மேலும் கதையை படிக்க...
முதன் முதலாக காதலை காதலிக்கும் பெண்ணிடம் சொல்வதற்கு பதிலாக அவளின் அப்பாவிடம் சொன்னவன் நானாகத்தான் இருப்பேன்....
அது ஒரு சனிக்கிழமை....
கண்டிப்பாக பள்ளி விடுமுறை... அவள் மட்டும்தான் வீட்டில் இருப்பாள்... அவளின் அப்பா அம்மா இருவரும் வேலைக்கு போய் விடுவார்கள்.. என்பது சமீப காலமாக ...
மேலும் கதையை படிக்க...
நொடிக்கும் குறைவான நேரத்தில், ஆயிரம் மைலுக்கு அப்பால் உள்ள ஒரு மணல் மேட்டில் குடை பிடித்து நடக்க இந்த மனத்தால் முடிகிறது. அடுத்த கணம், என் வீட்டு மொட்டைமாடியில் என்றோ விட்டு சென்ற தோழியுடன் அமர்ந்து கதை பேச முடிகிறது.... ...
மேலும் கதையை படிக்க...
"எங்க அப்பாவுக்கு ஒரு பையன் வேணும்னு ஆசையா இருந்துச்சா.... வேணி அம்மு துர்கான்னு வரிசையா பொட்டையா போச்சா அப்பரம் நான் வேர பொண்ணா போய்ட்டனா... ரொம்ப கசந்துட்டனா......அதா வேம்புன்னு பேர் வெச்சுட்டாங்க.. அப்படி வெச்சா அடுத்து பையனா பொறக்கும்னு எவனோ சொன்னானா.. ...
மேலும் கதையை படிக்க...
இருள்வெளியின் ஒளி துவாரம்
ஒரு ஊதா பூ நிறம் கூடுகிறது
அருமை …