சதாசிவம் தன் பேத்தியின் எதிர்காலத்தைப் பற்றி பேச மகளிடம் எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
இருபதை நெருங்கிக் கொண்டிருக்கும் பேத்தி தீபிகா தன்னோடு மியூசிக் கிளாஸ் படிக்கும் பரத்தைக் காதலிக்கிறாள்.அது சதாசிவத்தின் மகள் காயத்ரிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.அதனால் மியூசிக் கிளாஸீக்கும் தீபிகாவை தற்போது அனுப்புவதில்லை. அதனால்தான் தாத்தாவிடம் சொல்லி தங்கள் காதலை அம்மாவிற்கு புரிய வைக்க தூது விடுகிறாள் தீபிகா!
காயத்ரி ஆபிஸிலிருந்து வந்தவுடன் மெதுவாக பேச்சை ஆரம்பித்தார் சதாசிவம்
“காயத்ரி! தீபிகா ஒரு பையனை விரும்புகிறாள் .அந்த பையனையே கல்யாணம் பண்ணணும்னு சொல்கிறாள்.என்னம்மா செய்யறது?”
“அப்பா இந்த வயசுல அவளுக்கு நல்லது கெட்டது எப்படிப்பா தெரியும்?. சொன்னா கேட்கமாட்டேங்கிறா! அதுவும் அந்த பையனைப் பற்றி விசாரிச்சுட்டேன். நல்ல பையன் கிடையாது. நீங்களாவது சொல்லுங்கப்பா”
“எப்படிம்மா சொல்றது?! இதையேதான் இருபது வருஷத்துக்கு முன்னாடி நீ காதலிக்கும் போது நான் சொன்னேன்.அப்ப நீ கேட்கல. ஒரே வருஷத்துல நீ அவனை டைவர்ஸ் பண்ணிட்டே ! அதே மாதிரி தாம்மா அவ பிடிவாதம் பிடிக்கிறாள்”
சதாசிவம் பேச பேச, கண்கலங்கி தலைகுனிந்தாள் காயத்ரி
தொடர்புடைய சிறுகதைகள்
அந்த. வக்கீல் ஆபிஸில் காத்திருந்தேன்.வக்கீல் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.அவர் போன பிறகு வக்கீலுக்கு எதிரே உள்ள சேரில் அமர்ந்தேன்.
"சொல்லுங்க சார் என்ன விஷயம்?"
என்றார் வக்கீல்.அவருக்கு வயது அறுபத்தைந்துக்குள் இருக்கும்.கிட்டத்தட்ட என் வயது தான்.
"சார் எனக்கு இரண்டு மகன்கள்.கல்யாணமாகி சென்னையில் குடும்பத்தோடு இருக்கிறார்கள்.நானும் ...
மேலும் கதையை படிக்க...
தயாளன் எனக்கு ஷேர் மார்க்கெட் டிரேடிங் செய்யும் போது பழக்கம்.
சமீப காலமாய் அவரைப் பார்க்க முடிவதில்லை.ஷேர் மார்கட் பற்றி சரியாக தெரியாமல் இன்ட்டிரா டிரேட் செய்து நன்றாக சம்பாதிக்கலாம் என்று ஆசைப் பட்டு,நிறைய கடன் வாங்கி தற்போது சிக்கலில் இருப்பதாக கேள்விப் ...
மேலும் கதையை படிக்க...
ராகுல்,அவன் மனைவி தீபா,குட்டிப் பாப்போவோடு அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார்கள்.எங்கள் கம்பெனியிலிருந்து அவனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
சொல்ல முடியாது அங்கேயே செட்டில் ஆவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
அவனுக்கு வாழ்த்துக்கள் சொல்வதற்காக அவன் வீட்டிற்கு சென்றோம்.
" ஸாரி சார்! நாங்க யு.எஸ். போக வேண்டாம்னு ...
மேலும் கதையை படிக்க...
நமச்சிவாயம் ஆசிரியர் கடந்த பத்து நாட்களாக நடைப்பயிற்சிக்கு வரவில்லை. இன்றுதான் வந்திருக்கிறார்.அவர் பையனுக்கு திருமணம்.அதனால்தான் வரவில்லை.
ஆனால் எங்களுக்கு யாருக்குமே அழைப்பில்லை.அவர் நல்ல சம்பளம் வாங்குகிறார்.பையனும் ஐ.டி. கம்பெனியில் நன்றாக சம்பாதிக்கிறான்.ஆனாலும் இந்த கல்யாணத்தை மிக எளிமையாக நடத்தி இருக்கிறார் .
கோவிலில் திருமணம்.அருகில் ...
மேலும் கதையை படிக்க...
ராகவன் சார் ரிட்டயர்டு ஆகி அடுத்த நாளே இரண்டு கம்யூட்டர்,ஒரு ஜெராக்ஸ் மிஷினுடன் மெயின் ரோட்டில் அந்தக் கடையை ஆரம்பிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.அவருடைய பக்கத்து ஆபிஸில் வேலை செய்யும் நானும் எதிர்பார்க்கவில்லை!
அவர் அரசாங்க வேலையில் இருக்கும் போதே மிகவும் சின்சியரானவர் ...
மேலும் கதையை படிக்க...
கார் ரிப்பேராக இருப்பதால் டாக்சிக்கு போன் செய்துவிட்டு அப்பார்ட்மென்ட் வாசலில் காத்திருந்தேன்.
சே! இந்த நகர வாழ்க்கை வர வர எரிச்சலூட்டுகிறது.காலை எழுந்ததில் இருந்து ஒரே பரபரப்பு! மனைவி கவிதாவுக்கும் டென்சன். பாப்பாவை ஸ்கூலுக்குத் தயார் செய்ய வேண்டும்.
எனக்கு மதிய சாப்பாடு ,காலை ...
மேலும் கதையை படிக்க...
அக்கா போன் சேய்தாள்!
" நந்தினி! எங்க வீடு வரைக்கும் வந்துட்டு போகிறாயா? மனசு சரி இல்லை! நீ வந்து பேசிட்டு போனா கொஞ்சம் ஆறுதலாய் இருக்கும்!"
அக்கா இப்படித்தான் சின்ன விஷயத்துக்கெல்லாம் பயப்படுவாள்.
தன் ஒரே பையன் வினோத்தை கல்லூரி ஹாஸ்டலில் சேர்த்த இந்த ...
மேலும் கதையை படிக்க...
சென்னையிலிருந்து என்னை தர்மபுரிக்கு டிரான்ஸ்பர் செய்திருக்கிறார்கள்.
இன்னும் மனைவி சுமதி குழந்தைகளை அழைத்து வரவில்லை. ஒரு நல்ல வீடு பார்த்து அழைத்து வர வேண்டும்.
சில வீடுகள் பார்த்ததில் இரண்டு வீடு எனக்கு பிடித்திருக்கிறது.ஒரே மாதிரியான வசதிகள் கொண்ட அதில் ஒன்றை தேர்வு செய்ய ...
மேலும் கதையை படிக்க...
யாரை நம்புவது? – ஒரு பக்க கதை
பூர்வீக வீடு – ஒரு பக்க கதை
வெளிநாட்டு வாழ்கை – ஒரு பக்க கதை
எளிமையான திருமணம் – ஒரு பக்க கதை
அந்த ரகசியம் – ஒரு பக்க கதை
பிடித்த வேலை – ஒரு பக்க கதை
நல்ல விஷயங்கள் – ஒரு பக்க கதை
வாடகை வீடு! – ஒரு பக்க கதை