‘ம்ஹூம்… இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அடக்கிக்கொண்டு கிடப்பது! இனிமேல் சத்தியமாக முடியாது.’ மனோகர் தூங்க முடியாமல் அவஸ்தைப்பட்டான். ‘இனிமேல் நைட் பத்து மணிக்கு மேல் டி.வி-யே பார்க்கக் கூடாது. பலான பாட்டுங்களாப் பார்த்து அவஸ்தை ஆயிடுது.’
மனோகர் 27, கன்னி கழியாத பையன். சென்னையில் பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை. கை நிறையக் காசு. ஊரில் அப்பா-அம்மா. வார இறுதியில் பீர். தினமும் ஒரு கிங்ஸ் பாக்கெட். இதைத் தவிர பெரிய தப்புத்தண்டா ஏதும் இல்லை. கொஞ்ச நாளாகத்தான் அந்த எண்ணம் வந்தது. ‘கன்னி கழிஞ்சுட்டா என்ன?’
இன்டர்நெட்டை மேய்ந்தான். தூக்கம் வராத பொழுதுகளில் இணையமே துணை. இரவுகளில் இவன் பார்ப்பது பெரும்பாலும் ‘பலான’ சைட்டுகள். மேய்ந்துகொண்டே இருந்தபோது, திடீரென அந்தப் பக்கம் திறந்தது. ‘ஓரிரவுக்குப் பெண் வேண்டுமா?’ மனோகர் அவசரம் அவசரமாக அந்தப் பக்கத்தை ஆராய்ந்தான். ஓர் அலைபேசித் தொடர்பு எண் அளிக்கப்பட்டிருந்தது.
”ஹலோ! நான் மனோகர் பேசுறேங்க. இன்டர்நெட்டில் இந்த நம்பரைப் பார்த்தேன்!”
”உடனே வாங்க” என்று காதில் தேன் ஊற்றிய குரல், பெசன்ட் நகரின் ஒரு அட்ரஸைச் சொன்னது.
”வந்துங்க… எவ்ளோ அமௌன்ட்னு..?”
”ப்ளீஸ் கம் ஃபாஸ்ட்.”
முதல் அனுபவம். யாரையும் ஆலோசிக்கும் மனநிலையில் இல்லை. பைக்கை எடுத்துக்கொண்டு நேராக பெசன்ட் நகர் போனான். அவள் சொன்ன அபார்ட்மென்ட் நவநாகரிகமாக இருந்தது. ‘இங்கு கூடவா கால்கேர்ள் இருப்பாள்?’
13பி. காலிங்பெல்லை அழுத்தினான். கதவைத் திறந்தவள் கேட் வின்ஸ்லெட் மாதிரி இருந்தாள். ”வந்துங்க…” – உளற ஆரம்பித்தவனின் உதடுகளை அழுத்தமாகப் பொத்தினாள், தன் உதடுகளால்.
விடியும் வரை என்ன நேர்ந்தது என்றே மனோகருக்குத் தெரியவில்லை. றெக்கை கட்டி வானத்தில் பறப்பதைப் போல உணர்ந்தான். அவளே அவனைக் குலுக்கி எழுப்பினாள். ”எவ்வளவு?” என்று தயக்கமாக பர்ஸைத் திறந்துகொண்டே கேட்டான்…
”வாரத்துக்கு ஒருத்தருக்கு இலவசம். இந்த வார இலவசம் உங்களுக்கு!” – பதில் சொல்லிவிட்டு, வாசல் வரை இழுத்து வந்து வெளியே தள்ளினாள். அவசர மாகக் கதவைப் பூட்டினாள்.
படிகளில் உற்சாகமாக இறங்கினான். பைக்கை ஸ்டார்ட் செய்தான். பாக்கெட்டை அனிச்சையாகத் தொட்டுப் பார்க்க, பர்ஸ் மிஸ்ஸிங். கையில் எடுத்த பர்ஸை பெட் மீதே வைத்தது நினைவுக்கு வந்தது. ”ஐயையோ… பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கிறதே? கிரெடிட் கார்ட்ஸ் வேற…”
திரும்ப அவசரமாக ஓடினான். படிக்கட்டில் ஓட அவகாசம் இல்லை. லிஃப்ட்டுக்குள் நுழைந்தான். ”எத்தனையாவது ஃப்ளோர் சார்?” லிஃப்ட் ஆபரேட்டர் விடியற்காலையிலேயே பட்டையெல்லாம் அடித்து பக்திப் பரவசமாக இருந்தார்.
”13-க்குப் போப்பா.”
”என்ன சார் விளையாடறீங்களா? இந்த அபார்ட் மென்ட்டுல மொத்தம் இருக்கிறதே 12 ஃப்ளோர்தான் சார்!”
- 06-05-09
தொடர்புடைய சிறுகதைகள்
டமாரு கொமாரை உங்களுக்கு தெரியுமா? டமாரு கொமாரு மயிலாப்பூர் பல்லாக்கு மாநகரில் வாழும் சாமானியத் தமிழன். சாயங்காலம் ஆறரை மணிக்கு மேல் பட்டினப்பாக்கம் டாஸ்மாக்குக்கு புனித யாத்திரை சென்று வந்தவுடன் 'தமிளு' அவன் நாவில் கொஞ்சி வெளையாடும். லஸ் கார்னர் கேசவன் ...
மேலும் கதையை படிக்க...
“என்னடா முனீஸு அருவாளும், ஆடுமா எங்கே ஊர்வலம்?”
“போட்டுத் தள்ளிட்டு பிரியாணி செஞ்சி தின்ன வேண்டியதுதான்!”
“அடப்பாவி. புள்ளை மாதிரி வளர்த்த ஆட்டை ஏண்டா போட்டுத்தள்ளுறே?”
“ஒனக்கு விஷயமே தெரியாதா சேகரு? இன்னைக்கு தேதி 09.09.09. நைட்டு சரியா 09.09 மணிக்கு ஒலகம் அழிஞ்சிப்பூடுமாம். நம்மோட ...
மேலும் கதையை படிக்க...
எச்சரிக்கை : இப்பதிவின் தலைப்பை யாரும் எம்.ஜி.ஆர் பாணியில் படித்துத் தொலைத்துவிட வேண்டாம்.
பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. அப்போது +2 படித்துக் கொண்டிருந்ததாக நினைவு. எங்கள் வீடு மெயின்ரோட்டில் இருந்து சிறிய சந்துக்குள் அமைந்திருந்தது. மெயின்ரோட்டில் எங்கள் வீட்டுக்கு முன்பாக ...
மேலும் கதையை படிக்க...
“இயற்கையை பழிக்காதேடா பாவி..” அப்பா அடிக்கடி சொல்வார்.
அடிவானம் கறுக்கும்போதே எங்களுக்கெல்லாம் அடிவயிற்றில் அச்சம் எழும். தூறல் விழ ஆரம்பித்தாலே ‘எழவெடுத்த மழை’ என்று இயல்பாக எங்கள் உதடுகள் உச்சரிக்கும். அப்பாவுக்கு கண்மூடித்தனமாக கோபம் வரும்.
நாங்கள் மழையை வசைபாடும்போதெல்லாம், அவர்தான் மழைக்கு வக்காலத்து ...
மேலும் கதையை படிக்க...
"அம்மா! ராமு புதுசா பேட் வாங்கியிருக்கான். அவன் கூட கிரவுண்டுக்கு வெளையாட போறேம்மா"
"கிருஷ்ணா ஒழுங்கா சமர்த்தா போய் படுத்து தூங்கு. லீவு வந்தாலே போதுமே. வெய்யில்ல சுத்த கிளம்பிடுவியே"
"அம்மா. ப்ளீஸ்மா ஹோம் ஒர்க் எல்லாம் சமர்த்தா முடிச்சிட்டேம்மா. ப்ளீஸ்மா."
"சொன்னா கேட்க மாட்டே. ...
மேலும் கதையை படிக்க...
கிருஷ்ணன் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பான். நாகேஷைப் போல ஒல்லியான வெடவெட தேகம். நிற்கும்போது கூட ஏதாவது சாய்மானம் அவனுக்கு தேவைப்படும். துறுதுறுவென்று எதையாவது செய்து கொண்டிருப்பான். கையையும், காலையும் வெச்சுக்கிட்டு சும்மாவே இருக்கமாட்டியாடா என்று அவனை கேட்போம். இரவு ...
மேலும் கதையை படிக்க...
”சிலுக்கலூர்பேட்டை!”
பேரைக் கேட்டதுமே சும்மா கிர்ர்னுன்னு இருக்குல்லே?
முதன்முதலாக இப்பேட்டை குறித்த அறிதலை பகவதி என்ற தோழர் வாயிலாக அறிந்துகொண்டேன். அவர் ஒரு அச்சக முதலாளி. எங்களது டிசைனிங் சென்டருக்கு கஸ்டமராக வருவார். அச்சகத் தொழிலில் நேரம் காலமோ, ஓய்வோ கிடைப்பதரிது. ஆனால் இவரோ ...
மேலும் கதையை படிக்க...
வண்ணத்துப்பூச்சி நிரம்பவும் குழம்பியிருந்தாள். ரோபோட்களால் நிர்வகிக்கப்படும் உலகின் சிறப்பு பிரஜை அவள். கி.பி. 2108ல் மனிதர்கள் என்ற பெயரில் வாழும் உயிரினங்கள் அனைத்துமே சிறப்புப் பிரஜைகளாக சிறப்புச் சலுகைகளோடு வாழ்ந்து வந்தார்கள். 2050ஆம் ஆண்டு வாக்கில் உயிர்கொல்லி ஆயுதங்களால் நாடுகள் தங்களுக்குள் ...
மேலும் கதையை படிக்க...
"நான் ஒண்ணாவது படிக்கறப்பவே அவன் பிரச்சினை ஆரம்பிச்சிடிச்சி. நான் எந்த கலர் டிரஸ் போடுறனோ அதே கலர்லே அவனும் டிரஸ் பண்ணுவான். நான் எதுவெல்லாம் வாங்குறனோ அதுவெல்லாம் அவனும் அடம்பிடிச்சி வாங்குவான். என்னோட பக்கத்து வீட்டு பையன் என்கிறதாலே நான் என்னவெல்லாம் ...
மேலும் கதையை படிக்க...
அலுவலகத் தோழி வீட்டிலிருந்து எடுத்து வந்த கிளையை வைத்து பதியன் போட்டுக் கொண்டிருந்தேன். பதினைந்து ரூபாய்க்கு சாலையில் கடை போட்டு விற்கிறான். ஏனோ ரோஜாச்செடியை மட்டும் காசுகொடுத்து வாங்கி வைப்பதில் எனக்கு விருப்பமில்லை. மஞ்சள் ரோஜா என்று சொல்லி விற்பான். பூக்கும்போது ...
மேலும் கதையை படிக்க...
ஓட்டம்னா ஓட்டம், அப்படி ஒரு ஓட்டம்!
அசோகர் கல்வெட்டு Story Nalla Irunchu..
சூப்பர் ஸ்டோரீஸ்
super
நல்ல கதை…ஊகிக்க முடியாத திருப்பம்….