கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: November 30, 2021
பார்வையிட்டோர்: 15,300 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சர்மா கடத்த அரை மணி நேரமாகத் தத்தளித்துக் கொண்டிருந்தார்.

மானேஜர் நல்ல மூடில் இருப்பதாக அவர் அறையிலிருந்து வந்த ‘ஓஹோ …ஹோ..” என்ற சிரிப்பொலி தெரிவித்தது. உள்ளே பேசிக் கொண்டிருக்கும் ஆசாமிகள் வெளியேறியதும் போய் விஷயத்தைச் சொல்லி விடவேண்டும்.

பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு அல்லவா? இத்தனைக்கும் அவர் யார்? எத்தனை வருஷ சர்வீஸ் அவருக்கு நேற்றைக்கு வத்தவனெல்லாம் அவரைக் கிள்ளுக் கீரையாக நினைத்து நடப்பதா?

kalki1980-01-27_0052-picமுக்கியமான ஃபைல்கள் விவகாரமாக அவரை நான்கு முறை தன்மை அலுவலகத்துக்கு அனுப்பியிருந்தார்கள், அந்தப் பயணங்களுக்காக டிராவலிங் அலவன்ஸ் பில்லை ச் சமர்ப்பித்து ஒரு மாதம் ஆகியும் பணம் கைக்கு வந்தபாடில்லை. பில் கிளார்க் ஆபத்பாத்தவனை அணுகியதற்கு அவன், “அதுக்கென்ன சர்மா ஷார், பாஸ் செய்துட்டாப் போவுது. இன்னிக்கு தான் சாப்பாடு கொண்டு வரலை. முனியாண்டிக்குப் போகலாமா?” என்று கேட்டதுதான் சர்மாவுக்குக் கோபம் பிய்த்துக் கொண்டு வரக் காரணம்.

ஆபத்பாந்தவனைப் பற்றி அந்த ஆபீசில் முதுகுக்குப் பின்னாலும் முகத்துக்கு முன்னாலும் நிறையப் பேர் பேசினார்கள், ஆசாமி இரண்டு கையாலும் கூசாமல் கேட்டு வாங்குகிறானாம். ஒவ்வொரு பில்லுக்கும் ரேட் நிர்ணயித்து வைத்திருக்கிறானாம். டி.ஏ. பில், இன்கிரிமென்ட் பில் வகையறாக்களுக்குப் பத்து ரூபாய், லீவு சம்பளத்துக்கு இருபது ரூபாய், பிராவிடென்ட் பண்ட் லொன் பில்லுக்கு முப்பது ரூபாய்… இந்த நிர்ணயிக்கப்பட்ட ‘ரேட்’கள் கூட சம்பத்தப்பட்டவர்களின் தேவை அவசரங்களைப் பொறுத்து அதிகமாகுமாம். இப்போது அவன் சாமாவையே முனியாண்டி ஓட்டலுக்கு அழைக்கிறான். பிரியாணி வாங்கித் தந்தால் பில்லைப் பாஸ் செய்வானாம் – அதுதானே அதற்கு அர்த்தம்!

என்ன அநியாயம்?

மானேஜர் முன் சர்மா நின்றார். ஆபத்பாந்தவன் டி.ஏ. பில்லைப் பாஸ் செய்யத் தம்மிடம் லஞ்சம் கேட்பதாகப் புகார் செய்தார்.

“வாட் தான் சென்ஸ் – கூப்பிடு அந்தப் பில் கிளார்க்கை!” என்று மானேஜர் கத்தினார்.

ஆபத்பாந்தவன் சாதுப் பூனையாய் வந்து கையைக் கட்டிக்கொண்டு பவ்யமாய் நின்றான்.

“ஏன்யா பில் கிளார்க், நீ இவரோட டி.ஏ. பில்லை பாஸ் செய்ய லஞ்சம் கேட்கிறாயாமே, ஈஸ் இட்?”

ஆபத்பாந்தவன் கடகடவென்று சிரித் தான். “ஆமாம் ஸார்.., கேட்டது வாஸ்தவம் தான்”

சர்மா திகைத்துப் போய் அவனைப் பார்த்தார்.

“சர்மா ஸாரைப் பாருங்க ஸா., இன்னிக்குப் புது காட், புது பாண்ட் போட்டுண்டு வத்திருக்கார். அதுக்காக முனியாண்டியில் ஒரு பார்ட்டி, வைக்கணும்கிற அர்த்தத்தில் தமாஷாகக் கேட்டேனே தவிர, டி.ஏ. பில்லுக்காகன்னு நான் சொன்னேனான்னு கேளுங்க ஸார்… நம்ம ஆபீசில் யாராவது புது ஷர்ட் போட்டால் அன்னிக்குக் காப்பி சப்ளை அவருடையதுங்கறது பொதுவா உள்ள பழக்கம் உண்டா இல்லையான்று விசாரியுங்க சார்”

“என்ன மிஸ்டர் சர்மா?” – மானேஜர் சர்மாவைப் பார்த்தார்.

சர்மா மென்று விழுங்கினார். “நான் டி. ஏ. பில் பற்றிக் கேட்கறச்சே இவர் அப்படிக் கேட்டதைப் பார்த்து…”

“சரி சரி. நிறுத்துங்க. இதோ பார் மிஸ்டர் ஆபத்பாந்தவன்! உன் மேல் நிறைய புகார்கள் வந்திருக்கு. இன்னிலேர்த்து பில் செக்ஷனை ராமாச்சாரி பார்க்கட்டும். உன்னை ஸ்டோர்ஸ் செக்ஷனில் போடப் போறேன். பார்க்கலாம். இனிமேலாவது நீ ஒமுங்கா இருக்கியான்னு.”

“நான் ஒழுங்காத்தான் ஸார் இருக்கேன், நீங்க எந்த செக்ஷன் வேணாலும் கொடுங்க ஸார். பொறாமை பிடிச்சவங்க கோள் மூட்டிக்கிட்டும், மொட்டைப் பெட்டிஷன் போட்டுக்கிட்டும் தான் ஸார் இருப்பாங்க. இப்படியே எனக்கு செக்க்ஷன் மாத்தறதாக இருந்தால் நம்ம ஆபீசில் இருக்கிற அத்தனை செக்க்ஷனும் பத்தாது ஸார்…”

“டோன்ட் ஆர்க்யு மிஸ்டர் ஆபத்பாந்தவன்! நீ போகலாம்.”

***

ஆறு மாதங்கள் ஓடின. ஸ்டோர்ஸ் செக்க்ஷனைப் பொறுத்தவரை எந்தப் புகாரும் இல்லை, மானேஜருக்குத் திருப்தி.

அந்தத் திருப்தி குலையும் வண்ணம் தங்கமுத்து வந்து நின்றார்.

“ஸார் மன்னிக்கனும். உங்க நாலெட்ஜுக்குக் கொண்டு வரக் கூடாதுன்னுதான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன், முடியலை, ஸ்டோர்ஸ் செக்கனில் இருக்கிறாரே, மிஸ்டர் ஆபத்பாந்தவன் – அவர் பண்ணும் அட்டகாசம் தாங்க முடியல….”

மானேஜருக்குத் தூக்கி வாரிப் போட்டது. “ஏன் ஸார், என்ன ஆச்சு?” என்று பரபரத்தார்.

“நாங்க உங்க பீங்கான் ஃபாக்டரிக்கு சைனா களே சப்ளை பண்றோம் இல்லையா? அந்த விலைப் பட்டியல்களுக்கு இன்னும் பணம் வரலைன்னு அக்கவுண்ட்ஸ் செக்ஷனில் போய்க் கேட்டபோது அவர்கள், ‘உங்க இன்வாய்ஸே எங்களுக்கு இன்னும் வரவில்லை. ஸ்டோர்ஸ் செக்ஷனில் ஸ்டாக் எண்ட்ரியும், பாஸ் ஆர்டரும் போட்டப்புறம் தான் பேமெண்டுக்கு இங்கே வரும். அங்கே போய்ப் பாருங்க’ன்னு சொன்னங்க, ஸ்டோர்ஸ் செக்ஷனுக்குப் போய்க் கேட்டால், அர்ஜண்டா உங்களுக்கு பில்கள் செட்டில் ஆகணும்னா பர்சஸ்டேஜ் வெட்டுங்கன்னு பச்சையாகவே லஞ்சம் கேட்கிறார் ஸார், அந்த ஆபத்பாந்தவன்.”

மானேஜர் ஆபத்பாந்தவனை வரச் செய்தார். ஸ்டோர்ஸ் கிளார்க் வந்ததும், “இவங்க கம்பெனி பில்களைச் சீக்கிரம் ஆக்ஷன் எடுத்து அக்கவுண்ட்ஸ் செக்ஷனுக்கு டிரான்ஸ்பர் பண்றதுக்கு பர்சண்டேஜ் கேட்டாயாமே வாஸ்தவம் தானா?” என்றார்.

“அப்பட்டமான பொய் ஸார்!” – ஆயிரக்கணக்கான ரூபாய் வரவேண்டியிருக்கு. சீக்கிரம் ஆக்க்ஷன் எடுத்தீங்கன்னு பாசண்டேஜ் தரேன்னு இவர்தான் ஸார் வந்து என் காதைக் கடிச்சார். அதெல்லாம் முடியாதுன்னு நான் கண்டிப்பாக சொன்னேன். அதைத்தான் சார் உங்க கிட்டே வந்து மாற்றிக் கதை கட்டி என் மேல் அபாண்டமாக பழி சுமத்தறார்.”

மானேஜர் தலையைப் பிய்த்துக் கொண்டார். மணியை ஒலித்து ஸ்டெனோவை அழைத்தார். உடனே ஓர் உத்தரவை ‘டிக்டேட்’ செய்தார்.

***

மதிய வேளையில், ‘ஏன் மிஸ்டர் ஆபத்து! உங்கள் பில் செக்ஷனிலிருந்து ஸ்டோர்ஸுக்கு மாத்தினா, இப்போ ஸ்டோர்ஸிலிருந்து கூட மாத்தி டெஸ்பாட்ச் கிளார்க்கா டீப்ரொமோட் பண்ணிட்டாளாமே!… கொஞ்ச நஞ்சம் காசு வர்ற வழியும் குளோஸ் ஆயிடுத்து”

ஆபத்பாந்தவன் சிரித்தான். “எனக்கு அதைப் பத்தி யெல்லாம் கவலையில்லை ஸார். நான் எந்த செஷன்லேயும் தேமேன்று வேலை செய்வேன். டெஸ்பாட்ச் பண்றச்சே முக்கியமான இன்டென்ட், சாங்ஷன் உத்தரவுகள், பேமெண்ட் அட்வைஸ் போன்றவைகளை உடனுக்குடனே டெஸ்பாட் செய்துடுன்னு கம்பெனிக்காரங்க வந்து எங்கிட்டே தானாக லஞ்சம் கொடுப்பாங்க.. நான் தப்பாக விலாசம் எழுதி விட்டால் வேறு எங்காவது போய் முட்டி மோதி அலைஞ்சுக்கிட்டுத் தாமதமா திரும்பி வரக்கூடாதேன்னு பாத்து அவங்க தேடி, வத்து பர்சண்டேஜ் கொடுப்பாங்க. என்னைப் பற்றி எல்லாக் கம்பெனிக்காரர்களுக்கும் தெரியுமே! நான் வேண்டாம் வேண்டாம் னாலும் பணம் கொடுப்பாங்க. பின்னாலேயே மானேஜர் கிட்டப் போய் நான் லஞ்சம் கேட்டதாகப் பொய் சொல்லுவாங்க. என் கவலை இதுக்கு அப்புறம் என்னை மாற்றுவதற்கு நம் ஆபீசில் வேறு செக்ஷன் என்ன இருக்குன்னு மானேஜா கவலைப்படுவாரேங்கிறது தான்!…”

– 27-01-1980

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *