அந்த அலுவலக அறையில் ஏழு பேர் இருந்தனர். நம்மூர்க்காரங்க மூனு பேரும், வெள்ளைக்காரங்க நாலு பேரும். இந்த காம்பினேஷன்லேயே புரிந்திருக்கும் அது ஒரு மென்பொருள் சம்பந்தப்பட்ட அலுவலக மீட்டிங்க் என்று. உங்கள் நம்பிக்கையைத் தகர்க்க விரும்பவில்லை
) அதே தான் !
‘இப்ப என்ன சொல்லிட்டேனு இவ்ளோ கோபப்படறான். திடீர்னு டென்ஷனாகிட்டான்’ என்று நினைத்திருந்தான் மூர்த்தி.
வெள்ளைக்காரர்கள் ஆளாளுக்குப் பார்த்துக் கொண்டனர்.
மூச்சு ஏற இறங்க, காற்றோடு கலந்த குரலில் “அதெல்லாம் முடியாது. அதெப்படி இந்த ப்ரோக்ராம் ஈஸியா தகர்த்திடலாம்னு சொல்றீங்க. இத டிஸைன் பண்ணதே நான் தான். யாரும் உள்ள புகுந்து உடைக்க முடியாது. முடிஞ்சா தகர்த்திக் காட்டுங்க. ஆங்…” என்று சவால் விட்டுக் கொண்டிருந்தான் சரவணன்.
இந்தியர்ளோடு வேலை செய்வது தான் கடினமோ ?! இதே வெள்ளைக்காரர்கள் என்றால், பேசவும் செய்வாங்க, கேட்கவும் செய்வாங்க. தாமரை இலை நீராய் இல்லாமல், நம்ம ஆளுங்க ஏன் இப்படி எல்லாத்தையும் பெர்சனலா சொன்ன மாதிரி எடுத்துக் கொள்கிறார்கள் !
“சாஃப்ட்வேர் என்னிக்கு ரிலீஸ் பண்றோம் !” என்றான் ராபர்ட்.
“ரிலீஸ் டேட் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். மூர்த்தி சொல்வதும் சரி தான், எதுக்கும் இன்னொரு ரௌண்ட் டெஸ்டிங் பண்ணிடுங்க” என்றாள் கேத்தி.
“சரவணன் என்ன பெரிய ஆளா ? அவர் ப்ரோக்ராம்ல சிறு குறை இருக்குனு சொன்னா, தாங்க முடியலையே ! ஒன்னு சரி செய்கிறேன்னு சொல்லனும். இல்லேன்னா நீ சரி பண்ணிக் கொடுனு சொல்லனும். அதவிட்டுட்டு ஏன் இப்படி மீட்டிங்கில் எறிந்து விழணும். நல்ல வேளை ‘நக்கீரன்’ மாதிரி கேத்தி வந்து, தப்பு தப்பு தான்னு சொல்லி காப்பாத்தினாங்க ! ” என்று வெளியே வந்து புலம்பினான் மூர்த்தி தன் நண்பன் அனீஷிடம்.
“இன்னிக்கு நேத்து கதையா. அவன் போக்கிலேயே போவோம். பாரு, நீ கூட தான் பெர்சனலா எடுத்துக்கற … பரவால்ல விடுங்க பாஸு” என்று அனீஷ் மூர்த்தியைத் தேற்றினான்.
***
“ராபர்ட், நீங்க இப்ப தான் இன்டர்ன்ஷிப் முடிச்சிட்டு இங்க சேர்ந்திருக்கீங்க. கத்துக்க வேண்டியது நிறைய இருக்கிறது. ஆனா இந்தப் பசங்க எத்தனை வருஷமா இருக்காங்கனு தெரியுமா ? இவங்க அடிச்சிகறாங்களேனு, தயவு செய்து உள்ளே புகுந்து பஞ்சாயத்து பண்ணலாம் என்று மட்டும் நெனைக்காதீங்க. நல்ல வேளை மீட்டிங்கில் அமைதி காத்தீர்கள்.”
“என்ன இருந்தாலும், ஒரே அலுவலகத்துக்குள்ள இப்படி இவங்க அடிச்சிக்கறது கம்பெனி வளர்ச்சியை பாதிக்கும்” என்றான் ராபர்ட்.
“இந்தியர்கள் எப்பவுமே உணர்ச்சி பூர்வமானவர்கள். அவங்க போக்கிலேயே விட்டு தான் போகணும். கம்பெனியுடைய வளர்ச்சி அவங்களுடைய வளர்ச்சி தான். இதையும் அவங்க கிட்ட சொன்னா, அதுக்கும் அடிச்சிகுவாங்களோ என்னவோ. பரவால்ல விடுங்க பாஸு…” என்று கண்கள் சுருக்கிச் சிரித்து, தன் இளைய தலைமுறையைத் தேற்றினாள் கேத்தி.
தொடர்புடைய சிறுகதைகள்
அடித்துப் பிடித்து வந்து, அந்தக் கடிதத்தைத் தன் கணவன் ராஜுவிடம் காண்பித்தாள் ரேவதி ...
உலகமே வியக்கும் தொலைக்காட்சியில் இருந்து, உலகமே பார்க்கும் ஒரு நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினராக வருமாறு எழுதியிருந்தார்கள் அக்கடிதத்தில்.
"ஏங்க, எத்தனை நாள் அவரு வர்றாரு, இவரு வர்றாரு, நம்மள ...
மேலும் கதையை படிக்க...
"ஆமா, நம்ம ராஜேஷ் எங்க சொல் பேச்சுத் தட்ட மாட்டான்."
...
"என்னது, உங்க மருமக வேளைக்குப் போவேன்னு அடம்பிடிக்கிறாளா ? விட்டுட்டீங்களா ?"
...
"ஆமா...நாப்பதாயிரம், அம்பதாயிரம்னு வருமானத்துக்காகப் பார்த்தா குடும்பம்ல செதஞ்சு போயிடுது.... அதான பார்த்தேன். உங்கள மீறி அவ போயிருவாளா என்ன ?"
...
"ஆமா...மத்த ...
மேலும் கதையை படிக்க...
"எலே ஏகாம்பரம், இன்னிக்கு ரேஷன்ல சீனி போடுறாக தெரியும்ல. வெள்ளன வந்து கார்டையும், காசையும் வாங்கிட்டு போயி, சீனி வாங்கியாந்து ஆத்தா கையில குடுத்துரு" என்றாள் மெடிக்கல் ஷாப்பிலிருந்து செல்வி.
"என்னப்பூ ஏகாம்பரம், கொஞ்ச நாளா சீமைக்கு போயிட்டு வந்து ஆளே மாறி ...
மேலும் கதையை படிக்க...
நீண்டு அகன்ற அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு பருத்த ஆலமரம் போல பரந்து விரிந்து காட்சியளித்தது. பல்வகைப் பறவைகள் அதில் வாசம் செய்தன. மன்னிக்கணும், பல்வகை மனிதர்கள் அதில் வசித்து வந்தார்கள்.
முறையே பணி செய்து, போதுமென ஓய்வு பெற்று, அறுபதைக் கடந்த ஜெகந்நாதனும், ...
மேலும் கதையை படிக்க...
காலை மணி ஏழு பதினைந்து. 'ஜூரோங் ஈஸ்ட்' நோக்கி செல்லும் துரித ரயில் 'புக்கிட் பாத்தோக்' நிலையத்தை அடைந்து, ஊரும் புழு போல ஊர்ந்து நின்றது.
ஆங்காங்கே பேசிக் கொண்டிருந்த கூட்டம் ரயிலை நோக்கித் திரள, பருத்த மேனியரின் வெடித்த சட்டை போல, ...
மேலும் கதையை படிக்க...
பெய்த மழையில் உழுத நிலமாய் சதசதத்துக் கிடந்தது மாட்டுக் கூடம்.
நடுவில் குப்புறக் கிடந்த கூடையை சுவரோரமாய் நகர்த்தினான் பாண்டி. 'கொக் ... கொக்...' என்று கூடை நகர, உள்ளே நாலைந்து கோழிக் குஞ்சுகள்.
ஆத்தாவுக்கு எப்பச் சொன்னாலும் புரியாது. இந்த மாட்டுக் கூடத்துல ...
மேலும் கதையை படிக்க...
எண்ணை வழிந்த முகமும், எடுப்பில்லாத உடையும், வழித்து சீவிய முடியும், கள்ளம் கபடமில்லாத பார்வையுமாய், கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து சில மாதங்களே ஆன செல்லமுத்து வாழ்வில் இப்படி ஒரு ஏகாந்தம் அடிக்கும் என அவனும் எதிர்பார்க்கவில்லை !!!
அவனுடன் வேலை செய்வோருக்கோ, ...
மேலும் கதையை படிக்க...
'நீங்க எல்லாம் எழுத வந்துட்டீங்க' என்பது போல் பார்த்தார் எழுத்தில் மூத்த, வயதில் சிறிய எழுத்தாளர் இனிமைவேந்தன்.
அந்த அறையில் ஒரு பத்து பதினைந்துபேர், இழுத்து விட்ட மெத்தையில் அமர்ந்து ஆளுக்கு ஒரு தலைகாணி போன்ற முன்டில் சாய்ந்தோ, விழுந்தோ அமர்ந்திருந்தனர். சங்க ...
மேலும் கதையை படிக்க...
"என்ன தான் ஒரே ஊர்ல இருந்து வேலை செய்தாலும் நாமெல்லாம் பார்த்து எவ்ளோ நாளாச்சு ? இந்த வீக்கென்ட் நாம எல்லோரும் மீட் பண்ணலாம்" என்று தொலைபேசி, மின்னஞ்சல், டிவிட்டர் என்று கலக்கிக் கொண்டிருந்தனர் கணினியால் இணைந்த நண்பர்கள்.
சனிக்கிழமை, மணி மாலை ...
மேலும் கதையை படிக்க...
"டேய் ரவி அவ விடற லுக்கு நாளுக்கு நாள் தாங்க முடியலடா".
Outlook-ல் pop-ஆன "This evening special Dinner" click செய்து, "எவ அவ" என்று நக்கலுடன் ஆனந்தைப் பார்த்தான் ரவி.
ரவியும், ஆனந்தும் ஒரே அலுவலகத்தில் வேலை (மன்னிக்க) பொட்டி தட்டுபவர்கள். ...
மேலும் கதையை படிக்க...
அடுக்குமாடிக் குடியிருப்பும், அடுத்தடுத்த கட்டிடங்களும்
சென்னைப் பெண்ணும் செல்லமுத்துவும்…
பிடித்ததும் பிடிக்காததும்