கௌசல்யாவை திருமணம் செய்துகொண்ட தசரதன் தன் மனதில் தீர்மானித்தான்: ’ஒருத்திக்கு ஒருவன் என்றே வாழுவேன், மற்றொருபெண்ணை மனதில்கூட நினைக்கமாட்டேன்’ என்று உறுதி எடுத்துவிட்டான். ஆனால் ராமனைப் பெற்றவுடன் கௌசல்யா இறந்துவிடவே கௌசல்யாவின் தந்தையே வற்புறுத்தி கேதகியை (இரண்டாம் மகளை) மணமுடித்து வைத்தார். அவளுக்கு பரதன் பிறந்தான்.
மூன்றாம் மகள் சுமத்திரையும் திருமணமாகி புகுந்தவீடு போனாள். அவளுக்கு இரட்டைப் பிள்ளைகள் பிறந்தபோது அவளும் இறந்துவிடவே எல்லாப் பிள்ளைகளும் தசரதன் கேதகியிடமே வளர்ந்தார்கள்.
தசரதனின் முன்னோர்களுடைய ஆஸ்தியான அந்தவீடு எப்போதும் ரிப்பேராகி தொந்தரவு வருகிறது என்று தசரதன் அதைவிற்றுவிட்டு வாடகை வீட்டிற்கு குடிபோக எண்ணினான்.ஆனால் கேதகிக்கு விருப்பமில்லை. ராமன் நன்றாக படித்து ஸாப்ட்வேர் இஞ்சினீயராகிஅமெரிக்காபோனான், தசரதனுக்கு விருப்பமே இல்லை.
பரதனுக்கு படிப்பே வரவில்லை அதனால் வீட்டை அவனுக்கு எழுதிவிடு என்று கேதகி வற்புறுத்தினாள். தசரதனுக்கு இஷ்டமில்லை தாயில்லாப்பிள்ளை ராமன் தன் சொந்த முயற்சியில் சம்பாதிக்கிறான். பரதன் படிக்கவுமில்லை வேறு எந்த வேலை செய்யவும் முயற்சியும் செய்யவில்லை. தாயின் ஆதரவும் இருக்கிறது என்று மனம் நொந்து ராமன் போன பிறகு தசரதன் படுத்த படுக்கையானான். ஆஸ்துமா தொந்தரவும் உண்டு.
லக்ஷ்மணன் சத்ருக்கான் படிப்பு முடிந்து வேலை கிடைத்து எல்லாருக்குமே திருமணம் நடந்தது லக்ஷ்மணன் தன் மனைவியின் பட்டப்படிப்பு முடியும் வளர இந்தியாவில்இருக்கட்டும் என்று விட்டுவிட்டுதான் ராமனுடன் அமெரிக்கா போனாள். சீதாவும் கம்ப்யூட்டர் கற்றிருந்ததால் உடனே வேலைகிடைத்துவிட்டது. அவர்கள் சம்பாதித்து பணம்அனுப்ப அனுப்ப கேதகி தன் வீட்டை புதுமாடலாக்கி கார்வாங்கி என்று தன் சொந்த செலவுகளை இஷ்டம் போல கவனித்தாள். தன் கையாலாகாத நிலைமையை எண்ணி தசரதன் பேசுவதைக்கூட நிறுத்திவிட்டார்.
வேலை விஷயமாக ராமனுக்கு வேறு ஒரு இடம் போகவேண்டி இருந்தபோது ராமன் லக்ஷ்மணனிடம் வீட்டை கவனித்துக்கொள்ளச்சொல்லி சீதையையும் ஒப்படைத்து விட்டுப் போனான். ஆபீஸ் போகும்போதும் வரும்போதும் சீதாவை கவனித்துவந்த ராவணன், லக்ஷ்மணன் இண்டர்நெட்டில் கவனமாயிருந்த சமயம் சீதாவை கடத்திப் போய்விட்டான்.
அங்கு ராமன் காத்திருப்பதாக ராமனின் குரலை பதிவு செய்துவந்து காட்டி சீதாவை
ஏமாற்றி ஒரு காட்டு குகையில் அடைத்துவைத்தான் ராமன் வந்த போது விவரங்கள்
தெரிந்ததும் இருவரும் தவித்துப்போளினார்கள். உடனே ஒரு டிடெக்டிவ் உதவியுடன் சீதையைக் கண்டுபிடித்து ராவணனை சிறையில் அடைத்தனர்.
சீதா ’போதும் நமக்கு அமெரிக்காவாழ்வு என்று அழுதபோது’ எல்லாருமே இந்தியா கிளம்பினார்கள். தசரதனுக்கு பேசமுடியாமல் நாக்கு இழுத்துவிட்டது பிள்ளையைப்
பார்த்து கண்ணீர் வடித்தார் கேதகியே வருந்தி ”பதினான்கு வருடம் பிரிந்திருந்தோம்
இனி நாம் கூட்டாக வாழுவோம்”, என்று சொன்னது தசரதனுக்கு தேனாக ஒலித்தது. ராமன் “எனக்கு அயோத்தியில் வேலை கிடைத்திருக்கிறது நான் சீதையுடன் அங்கு போகிறேன்.அடிக்கடி வருவேன். கவலைப்படாதீர்கள்’’ என்றான்.
மறுபடி தசரதன் அழுதான். எனக்கு ஏன் சாவு வரமாட்டேனென்கிறது? தசரத மகாராஜா ராமன் பிரியும்போது உயிரைவிட்டார் என்பதுபோல நானும் போகமுடியவில்லையே என்று வருந்தினான்.
- 29 ஜூலை, 2012
தொடர்புடைய சிறுகதைகள்
நான் வீட்டை விட்டுக் கிளம்பி பத்துநாட்கள் ஆகிவிட்டன. புறப்படும்போது வித்யா திரும்பத்திரும்பச் சொன்னாள். ”இரண்டு தோசை சாப்பிட்டுவிட்டுப் போங்கள்” என்றாள். என் வேலைகளின் நடுவில் நேரமேயில்லை. அதனால் எனக்கு எந்தச் சிற்றுண்டி சாப்பிடும்போதும் என் வித்யாவின் தோசையே மனதில் நின்றது.
கண்ணன் பாட்டில் ...
மேலும் கதையை படிக்க...
பரசுவால் நீலு பேசும் ஒரு வார்த்தைளை பொறுத்துக் கொள்ளவோ மன்னிக்கவோ முடியவே இல்லை. கோபித்து கொள்ளவோ தடுக்கவோ தைரியமுமில்லை. அவளுடைய பேச்சுக்குப் பேச்சு அதை கேட்க நேர்ந்தது. மனம் திடுக்கிட்டு பதறுகிறது. ஆனால் அதற்கு ஒரு காரணமிருந்தது. அவன் சிறுவயதிலேயே யாரோ ...
மேலும் கதையை படிக்க...
கணேசனின் தந்தை இறந்தபின் அவனுக்கு முன்னோர்கள் கடன் செய்வதில் சிரத்தைஅதிகம் ஏற்பட்டது. அம்மாவுக்கும் ரொம்ப திருப்தி. கருப்பு எள்ளு, பலாமூசு, வாழைத்தண்டு, என்று தேடித்தேடி வாங்கிவருவாள். நல்ல வெண்ணெயை வாங்கி காய்ச்சி ஹோமங்களுக்கும் சமையல் சாப்பாட்டுக்கும் பக்ஷணங்களுக்கும் வைப்பான். நுனிவாழைஇலை வாங்கி ...
மேலும் கதையை படிக்க...
மாடி வராண்டாவில் பளபளவென்று உடையணிந்தபடி பட்டாம்பூச்சிபோல் நின்றிருந்த ஸஹானாவை கீழே இருந்து அர்ஜுன் கூப்பிட்டான். “ஸஹானா” என்று ராகத்துடன்! உடனே, “ஹாய்!” என்று கையசைத்துச் சிரித்தாள் ஸஹானா.
“ஆச்சு, மணி நாலடிச்சாச்சு. கிளம்பிட்டா ராணி! இனிமே இருட்டினாத்தான் உள்ளே நுழைவாள்”, என்று அம்மா ...
மேலும் கதையை படிக்க...
ஒரு முக்கியமான வைபவத்திற்காக இரண்டு நாட்கள் நாங்கள் சென்னை போய் வந்தவுடன் என் மாமியார் ஒரே புலம்பல். மொலு மொலுவேன்று பொரிந்து தள்ளினார். “இங்கே பாரு சுசீலா, இப்படி முன்னே பின்னே பழக்கமில்லாத புது எடத்துல என்னத் தனியா விட்டுட்டு இனிமே ...
மேலும் கதையை படிக்க...
அப்போது எனக்கு பத்தொன்பது வயது. மாலாவுக்கு ஒன்றரை வயது. அவள் என்
தங்கைகளுடன் என் பிறந்த வீட்டிலேயே தானிருப்பாள். என்னைத் தேடவே மாட்டாள்.
மின்விளக்குவசதிகூட இல்லாத அந்த வீட்டில் நாங்கள் குடியிருந்தோம். பதினெட்டு
ரூபாய் வாடகை; ஒரே மாதம் அட்வான்ஸ். ஒரு பெரிய அறை, ஒரு ...
மேலும் கதையை படிக்க...
பாகீரதியிடம் தெருக்கோடி வீட்டு பையன் ஓடி வந்து, “உங்க வீட்டுக்குபுதுசா ஒருத்தர் வந்திருக்காரில்லயா? அவரை போலீஸ் பிடிச்சுண்டு ஜீப்புலே அழைச்சுண்டு போனா. நான் ஸ்கூலுக்கு போறபோது பார்த்தேன்” என்றபோது பாகி “ஐயையோ, புதுப்பையன் கன்னடமும் தெரியாது. இங்கிலீசும் பேசத்தெரியாது. எங்கே போய் ...
மேலும் கதையை படிக்க...
சைதன்யனும் சைத்ராவும் காதலர்கள். அவன் தன் தங்கையின் திரு மணத்திற்காகவும் அவள் தன்னுடைய அக்காவின் கல்யாணத்திற் காகவும் காத்திருக்க வேண்டிவந்தது. மூன்றுவருடங்களும் ஓடிவிட் டன. இவர்களுடைய திருமணப்பேச்சு வந்தபோது இருகுடும்பங்க ளும் சற்று முறைத்துக்கொண்டன. பிறகு, காலத்திற்குத் தக்கபடி அடுத்ததலைமுறையின் நல்வாழ்வுகருதி ...
மேலும் கதையை படிக்க...
பிருந்தா என்று பெயரிட்டதாலோ என்னவோ அவளுக்கு துளசி என்றால் ரொம்பவும் பிடிக்கும். சிறு வயது முதலே துளசிச் செடி வைத்து நீர் ஊற்றி கோலங்கள் போட்டு விளக்கேற்றி தோத்திரம் படித்து பிரதக்ஷினம் நமஸ்காரம் என்று பெரியவர்கள் போல சிரத்தையுடன் செய்வாள்.
திருமணமாயிற்று. புருஷன் ...
மேலும் கதையை படிக்க...
நந்தகுமார் கல்லூரி மாணவன். பெற்றோருக்குக் கடைசி மகன். செல்லப்பிள்ளை. நல்ல வசதியுள்ள குடும்பம். தாயார் அவனுக்கும் மணமுடிக்க ஆசைப்பட்டாள். உறவுமுறையில் ஒரு செல்வந்தரின் மகள் இருந்தாள். அந்தப் பெண் இந்துமதியை மணம் செய்விக்க முயற்சி செய்தாள். நந்தகுமாரின் அக்கா, தங்கைகள் இந்துமதியின் ...
மேலும் கதையை படிக்க...
மஹாளயத்தில் பொன்னம்மா யார்?
நேற்றைய நினைவுகள் கதை தான்