(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
தோன்றும் பொருள்கள் அழியுந்தன்மை
“ஒரு செல்வன் தான் தன் அந்திய காலத்தில் தேடிய செல்வங்களை அறம் செய்யலாம்” என்று சம்பாதித்தவற்றைப் பொன்னாக மாற்றி அவற்றை உருண்டையாகச் செய்து பானையில் பாதுகாப்பாக வைத்திருந்தான். ஒருநாள் திடீர் என்று நாக்கை இழுத்து மேல்விக்குள் கிளம்பியது, அந்நேரத்தில் பேசமுடியாமையால் கையை வளைத்து ‘உருண்டை பொன் இருக்கிறது. எடுத்து வாருங்கள்; அறம் செய்யவேண்டும்” என்று அருகில் இருந்த உறவினர்களிடம் காட்டினான். இவ்வுண்மையறிந்த அவன் மனைவி, புளி உருண்டை வேண்டும் என் கிறார். மருத்துவ அறிஞர். புளியே தொடக் கூடாது என்று சொல்லியுள்ளார். அது இப்போது தொடக்கூடாது என்றாள். இதைக்கேட்டு, ‘நல்லறிவுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே தர்மம் செய்யாது இருந்தோமே’ என்று வருந்தி இறந்தார். இதனால் எந்தக்காலத்தில் இந்தச் சரீரம் நீங்கும் என்பது யாவருக்கும் தெரியாமையால், “யாவரும் நல்லறிவுடன் இருக்கும் போதே நல்ல காரியங்களைச் செய்து முடித்தல் வேண்டும்” என்று வள்ளுவரும் கூறியுள்ளார்.
நாச்செற்று விக்குள் மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.
நாச் செற்று = (வார்த்தை எழாமல்) நாக்கை அடக்கி
விக்குள் = விக்கலானது
மேல்வாராமுன் = மேல் எழுவதற்கு முன்னே
நல்வினை = தர்மகாரியங்களை
மேற்சென்று = விரைந்து
செய்யப்படும் = செய்யப் படுதல் வேண்டும்.
கருத்து: நல்லறிவுடன் வாழும்பொழுதே அறச் செயல்களை விரைந்து செய்தல் வேண்டும்.
கேள்வி: நல்வினையை எப்பொழுது செய்தல் வேண்டும்?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.