தெரிந்து தெளிதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 12, 2022
பார்வையிட்டோர்: 1,064 
 

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருக்குறள் கதைகள்

ஆராய்ந்து நம்புதல்

பரணர் சேரநாட்டை ஆண்ட செங்குட்டுவனைக் கண்டு அவன் நட்பைப் பெற்றார். புலவர் பரந்த சிந்தையும், விரிந்த நோக்கமுங்கொண்டு செங்குட்டு வனைப் பற்றிப் பத்துப் பாடல்கள் பாடிப் பரிசு பெற்றார். சேரன் இக்கவிஞரது குடிப்பிறப்பின் உயர்வையும், குற்றங்களிலிருந்து விலகி, பழி வருமோ என்று பயந்து நடக்கும் நாணமுடைமையும் கண்டு தெளிந்து தன் புதல்வனை இவரிடமே இருந்து கல்வி கற்கும்படி செய்தான்.

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் கட்டே தெளிவு.

குடிப்பிறந்து = உயர்ந்த குலத்தில் பிறந்து
குற்றத்தின் = தவறுகளினின்றும்
நீங்கி = விலகி
வடுப்பரியும் = நமக்குப் பழி வருமோ என்று அஞ்சி நிற்கும்
நாணுடையான் கட்டே = நாணமுடையவன் இடத்திலே
தெளிவு = (அரசனது) நம்பிக்கை (உண்டாக வேண்டும்)

கருத்து: குலப்பிறப்போடு குற்றம் நீங்கிப் பழி வருமோ என அஞ்சும் நாணமுடையவனை அரசன் நம்பக் காடவன்,

கேள்வி: எவற்றை யுடையவன் அரசன் நம்பிக்கைக்கு உரியவன் ஆவான்?

– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *