அரிது எது? எளிது எது?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,194 
 

“நீர் வேட்கையுடையோர், கடற்கரையில் நிற்பினும், தனக்குத் தெரிந்தவரிடம்தான் தண்ணீர் கேட்பர். அவ்வாறே பெருஞ் செல்வமுடையோர் எத்தனையோ பேர் இருக்கலாம் ஆயினும் இரவலர் தெரிந்த வள்ளல்களையே நாடி வருவர். அவ்வாறு, உன்னைக் காண வந்தேன்” என்று கானங்கிழானிடம் மோசி கீரனார்
கூறினார்.

“கொடு என்று கேட்பது தான் அரிய செயல் . நீ கொடுத்தாலும் சரி, கொடுக்காவிட்டாலும் சரி. உன் பேராண்மையைப் பாடுவேன். உன் மலையைப் பாடுவேன். பொங்கி விழும் அருவியைப் பாடுவேன். உன் நாட்டைப் பாடுதல் எனக்கு எளிய செயல்.”

– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *